உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று லிபிய கடலோரமாக மூழ்கியதில் குறைந்தபட்சம் 650 பேராவது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. குடியேற்றக்காரர்கள் ஐரோப்பாவுக்கு கடல் கடக்கும் நடவடிக்கையில் மிக அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இது என்று ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் உறுதி செய்துள்ளது. 20 கப்பல்களும், ஒரு விமானமும் பங்கெடுக்கும் மீட்பு நடவடிக்கையை இத்தாலில் ஒருங்கிணைக்கின்றது. இதுவரை 50 பேர் மாத்திரம் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மீன்பிடிப் படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற்காக, அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150419_li…
-
- 0 replies
- 277 views
-
-
மேற்கு அவுஸ்திரேலியா விலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சாதாரண அளவைவிட 10 மடங்கு பெரிதான கோல்ட்பிஷ் ரக மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கோல்ட் பிஷ், "கொய்" போன்ற மீன்களை அவற்றின் உரிமையாளர்கள் நீர்நிலைகளில் விட்டுச்சென்ற நிலையில் இம்மீன்கள் பிரமாண்டமாக வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாதாரணமாக 100 கிராம் எடையில் காணப்படும் கோல்ட் பிஷ் ரக மீன்கள் 2 கிலோகிராம் அளவுக்கு வளர்ந்த நிலையில் பிடிக்கப்பட்டுள்ளன. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கொய் ரக மீன்கள் 8 கிலோகிராம் அளவுக்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டன. ஆனால், இம்மீன்களில் அபரிமித வளர்ச்சி குறித்து சூழலியல் …
-
- 1 reply
- 426 views
-
-
பொலிசார் அதிரடி சோதனைகளை நடத்தி ஆட்களைக் கைதுசெய்துள்ளனர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டில் அங்கு 18 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மெல்பர்னில் வரிசையாக பல அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இவரது கைது வந்துள்ளது. இரண்டாவதாக வேறொரு இளைஞர் மீதும் இப்படியான குற்றச்சாட்டு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரக் கடைசியில் ஆஸ்திரேலியாவில் யுத்தத்தில் இறந்தவர்கள் நினைவுகூரப்படும் 'அன்சாக்[' தினத்தன்று பொலிசாரை இலக்குவைத்து தாக்கத் திட்டமிட்டதாக இந்த இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சென்ற ஆண்டு பொலிஸ்காரர்கள் இருவரைக் கத்தியால் குத்தியதை அடுத்து…
-
- 0 replies
- 231 views
-
-
பிரித்தானியாவின் களத்தில் இலங்கைப் பெண். April 17, 201511:11 pm இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது. கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை உலகில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நாடாகும். அந்த வகையில் இலங்கை யுவதி ஒருவர் பிரித்தானியாவில் முன்னணி அரசியல் வாதியாக காணப்படுவது இலங்கையின் கௌரவத்தை மேலும் ஒருபடி உயர்த்துவதாக காணப்படுகிறது. சமலி பெனாண்டோ, 1973 ஆண்டு பிறந்த இவருக்கு தற்பொழுது 36 வயதாகிறது. அவரது தாய் வனீதா பெனாண்டோ ( தாதி ), தந்தை சுமல் பெனாண்டோ (சட்டத்தரணி) சமலி பெனாண்டோ தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அதேவேளை, இம்முறை இடம்பெறவுள்ள பாரா…
-
- 6 replies
- 1.2k views
-
-
அரை நூற்றாண்டு காலத்தில் இடம்பெற்ற அமெரிக்க மற்றும் கியூபத் தலைவர்களின் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தையும், அதன் பின்னணிகளும் குறித்த பார்வை .
-
- 2 replies
- 350 views
-
-
நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்! வெடிகுண்டு மிரட்டல்: விமானம் அவசரமாக தரையிறக்கம் [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 11:55.25 மு.ப GMT ] இந்தோனேஷியாவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் எப் 16 ரக போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்த போது திடீரென தீப்பிடித்து, கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக சுதாரித்து கொண்ட விமான பாரசூட்டின் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார், இதில் அவருக்கு சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டது. எப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்க அரசால் இந்தோனேஷியாவுக்கு வழங்கப்பட்டது குறிப்…
-
- 0 replies
- 328 views
-
-
கனடாவில் மனம் உருகி பிரார்த்தனை: சீக்கியர்களை பாராட்டிய மோடி (வீடியோ இணைப்பு) [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 07:54.34 மு.ப GMT ] கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி குருத்வாரா சென்று பிரார்த்தனை செய்தார். கனடாவிற்கு 3 நாள் பயணிமாக சென்ற மோடி, இன்று வான்குவரில்(Vancouver) உள்ள சீக்கயர்களின் குருத்வாராவுக்கு ரொறன்ரோவில்(Toronto) இருந்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் உடன் சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி தலையில் துணி கட்டி பிரார்த்தனை செய்தனர். பின்னர் கனடாவில் வாழும் சீக்கியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது என அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் பேசினார். இதனைதொடர்ந்து க…
-
- 0 replies
- 402 views
-
-
கனடாவிற்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் அவர்களை வரவேற்ற ரொறன்ரோவில் 25 ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஈழத்தமிழர்களின் வீணைக்கச்சேரியும், பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது. அது போன்றே மோடி தனது விஜயத்தின் போது மேற்கொண்ட ஓரேயொரு தனிப்பட்ட சந்திப்பாக புரோக்கிரசிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் பதவிக்கான வேட்பாளர் பற்றிக் பிரவுனுடைய ஆதரவாளர்களைச் சந்தித்த நிகழ்வு இடம்பெற்றது. பற்றிக் பிரவுனுடைய நிகழ்விலும், இந்தியர்களிற்கு சமமாக தமிழர்கள் கலந்து கொண்டதுடன் மோடியுடன் கைலாகு கொடுத்து தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈழத்தமிழர்களின் மீதான கரிசனைக்கு தமிழரொருவர் நன்றி தெரிவித்த போது தனது நன்றியறிதலையும் மோடி அவர்கள் பகிர்ந்து கொண்டார். தனது நிகழ்வில் கலந்து கொண்ட த…
-
- 5 replies
- 521 views
-
-
அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்க பணியாளர்களுக்கு எதிராகவும், தெற்காசியர்கள் குறிப்பாக இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அதன் முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது: நான் அமெரிக்காவை சேர்ந்தவன் ஸ்டீவன் ஹெல்ட், டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.அமெரிக்காவில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம்பேர் தெற்காசியர்கள், குறிப்பாக பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். அங்குள்ள நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுத்தல் மற்றும் பதவி உயர்வு, வேலை நீக்கம் ஆகியவற்றில் தெற்காசியர்கள் அல்லாதவர்களு…
-
- 1 reply
- 839 views
-
-
HOUSTON- ரெக்சசில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பெண் ஒருவர் ஐந்து பெண் குழந்தைகளை பிரசவித்ததாக வைத்தியசாலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பிறந்த முதலாவது பெண் ஐம்பிறவிகள் இவர்களென தெரிவிக்கப் பட்டது. Danielle Busby என்ற இப்பெண் அறுவைச் சிகிச்கை மூலம் இக்குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவரது கணவர் அடம் மற்றும் மூத்த மகள் பிளேய்க் இருவரும் ஒலிவியா மாரி, அவா லேன், ஹேசல் கிறேஸ், பாக்கர் கேற் மற்றும் றிலி பேஜ்ஸ் ஆகிய ஐவரையும் இந்த உலகத்திற்கு வரவேற்றனர். இவர்கள் பிரசவ காலத்திற்கு முன்பாக 28-வாரங்களில் ஒரு டசினிற்கும் மேற்பட்ட மருத்துவர்களின் உதவியுடன் பிறந்துள்ளனர். அமெரிக்காவின் முதலாவது பெண் ஐம்பிறவிகள் இவர்கள் என வைத்தியர்கள் தெரிவித்தனர் . - See more at: http://…
-
- 0 replies
- 266 views
-
-
ஒட்டாவா: இந்தியர்களுக்கு கனடா சென்ற பின் விசா வாங்கும் வசதியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியர்களுக்கு இந்த வசதியை அளிக்கும் 51வது நாடாக கனடா இணைந்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை மோடி மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப் பயணத்தின் இறுதியாக கனடா சென்றுள்ள மோடி, ஒட்டவா நகரில் அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கையெழுத்தானது. அதன் பின் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட, மனிதநேயத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒன்றி…
-
- 2 replies
- 495 views
-
-
ரோம்: லிபியாவில் இருந்து இத்தாலிக்கு சென்று கொண்டிருந்த படகில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அகதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. இதில், படகிலிருந்து 12 கிறிஸ்தவர்களைக் கடலில் தள்ளிக் கொலை செய்ததாக 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகள் கையில் சிக்கி தவிக்கும் லிபியாவில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், அகதிகளாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். அந்தவகையில், கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நோக்கி 100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. மத்திய தரைக்கடலின் வட பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, அந்த படகில் இருந்த ஐவரிகோஸ்ட்,மாலி மற்றும் செனேகல் நாட்டை 15 பேர், 12 கிறிஸ்தவர்களை வலுக்கட்டாயமாக கடலி…
-
- 2 replies
- 511 views
-
-
Asiana plane skids off runway at Hiroshima, Japan http://www.bbc.com/news/world-asia-32313599?OCID=fbasia ஸ்....... இது ரகசியம்;புதிய தகவல் ஒன்று விமானக் கட்டுப்பாட்டை வேறு யாரோ இடை மறித்து தவறான தகவல் வழங்குகிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.பிரான்ஸில் நடந்த லுfவ்தான்ஸா விபத்திற்கு இந்த கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன
-
- 2 replies
- 387 views
-
-
ஜகார்த்தா: விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, 122 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேஷிய விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தோனேஷியாவின் அம்பன் விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் பதிக் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம் ஜகர்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம், அவசரமாக மகசார் விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர். பின்னர் விமானம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தகவல் தவறானது என தெரிய வந…
-
- 0 replies
- 304 views
-
-
மும்பாயிலிருந்து – இங்கிலாந்து நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 1942 ஆம் ஆண்டு ஜேர்மன் டொபிடோ தாக்குதல்களில் சேதமடைந்த சிட்டி ஒப் கய்ரோ கப்பலில் இருந்த 50 மில்லியன் டொலர் பெறுமதியான வெள்ளி காசுகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 100 டொன் அளவிலான குறித்த வெள்ளிக் காசு தொகை கடலுக்கு அடியில் உள்ள கப்பலில் இருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட வெள்ளிக்காசுகள் உருக்கப்பட்டு பிரித்தானிய அரச நாணய சுற்றோட்டத்துடன் சேர்க்கப்பட்ட போதும், அந்த சம்பவத்தை வெளிப்படுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்த சூழ்நிலையின் போது நிதிப் பற்றாக்குறை காரணமாக வெள்ளிக் காசுகள் இந்தியாவிலிருந்…
-
- 2 replies
- 559 views
-
-
இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி, மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று மாலை கனடா ஒடாவா வந்தடைந்தார்.கடந்த 42 வருடங்களின் பின்னர் இந்திய பிரதம மந்திரி ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரு தரப்புப் பயணம் என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியப் பிரதம மந்திரியின் பயணத்தின்போது, பாதுகாப்பு, வணிகம், சுற்றுச் சூழல் என்பன உட்படப் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளன.நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி ஒடாவா விமான நிலையத்தில் வரவேற்றார். நாளைய தினம் அவர் பிரதம மந்திரி ஹாப்பரைச் சந்திக்கவுள்ளர். ரொறன்றோ, வன்கூவர் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்யும் மோடி கனடாவில் உள்ள 1.2 மில்லியன் இந்திய வம்சாவளியினரில் சிலரையும் சந்திப்பார். அதேவேளை, அவருக்கு எதிராக ஆர…
-
- 1 reply
- 360 views
-
-
குர்கான்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விமான விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொல்லப்பட்டார் என அவரது முன்னாள் பாதுகாவலர் (வயது 93) ஜக்ராம் யாதவ் தெரிவித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால் இன்று வரை நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. என…
-
- 3 replies
- 493 views
-
-
திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து திருப்பதி செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் திருப்பதி வனப்பகுதியில் ஆந்திரா போலீசாரால் 20 தமிழக தொழிலாளர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட என்கவுண்டர் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம் உருவானது. ஆந்திர போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் தாக்கப்பட்டன. ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றன. கிட்டத்தட்ட நான்கு நாட்கள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. பின்னர், போலீசாரின் ப…
-
- 1 reply
- 366 views
-
-
இந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும் மருந்துகள் உட்பட 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், மருந்துகளின் விலை அபரிதமாக உயர்ந்து, இந்தியா மட்டுமின்றி இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 200 நாடுகளில் வசிக்கும் ஏழை எள…
-
- 0 replies
- 499 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்ட ‘ஈக்விலர்’ என்ற நிறுவனம் அந்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலில், தொழில் நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த வருவாய் 84.3 மில்லியன் டாலராக உள்ளது (522 கோடி ரூபாய்). மொத்த வருவாய் என்பது சம்பளம், போனஸ், நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு என்று அனைத்தையும் சேர்த்து நிறுவனத்திடமிருந்து அவர் பெறும் வருவாய் ஆகும். சென்ற வருடம் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த, ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செய…
-
- 0 replies
- 560 views
-
-
போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா APR 16, 2015 | 9:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங், “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் க…
-
- 2 replies
- 530 views
-
-
சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார். நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது என்றார். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து…
-
- 1 reply
- 326 views
-
-
தீவிரவாதத்திற்கு ஏதிராக உலகநாடுகள் ஒன்றுபட்டு போரிட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கனடாவில் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கனடா சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே ஆவார். ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. விமான நிலையத்தில் அவரை கனடா ராணுவ மந்திரி ஜேசன் கென்னடி, சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான மந்திரி எட் பாஸ்ட், கனடாவுக்கான இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஏராளமான இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கனடா பிரதமர் ஸ்…
-
- 0 replies
- 203 views
-
-
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா. விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. கென்யாவில் மூன்று... இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட…
-
- 3 replies
- 548 views
-
-
பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதாக அமெரிக்கா அறிவிப்பு! [Wednesday 2015-04-15 20:00] கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு இடம்பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்…
-
- 2 replies
- 360 views
-