Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெங்களூரு: ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து நாளை பெங்களூருவில் தாக்குதல் நடத்துவோம் என டுவிட்டர் வாயிலாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுமார் 50க்கும் அதிகமான பொதுமக்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஹோட்டலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடி ஏற்றப் பட்டுள்ளது. ஏற்கனவே 5 பேர் தப்பி வந்து விட்ட சூழலில், தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள மீதமுள்ள பொதுமக்களை மீட்க போலீசார் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உறுதி செய்துள்ளார். இதற்கிடையே கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் எம்.என்.டி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்த ம…

  2. வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் திருமண மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறயுள்ளார். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு. மணப்பெண் புவனேஸ்வரி மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டார…

  3. ஆந்திராவில் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முனைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து எப்படி தண்டிக்கிறார்களென பாருங்கள்.. https://www.facebook.com/photo.php?v=634403429960661&set=vb.202067876527554&type=2&theater இக்காணொளி பெங்களூருவை மையமாகக் கொண்ட நியூஸ்9 சானலில் ஒளிபரப்பப்பட்டது.. Source: news9 FB. https://www.facebook.com/photo.php?v=634403429960661&set=vb.202067876527554&type=2&theater

  4. ஹீத்தர் சோ கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து இறங்கச் செய்யப்பட்டமை குறித்து அந்த நிறுவன விமான சிப்பந்தி ஒருவர் முதல் தடவையாக பேசியுள்ளார். விமானத்தில் கொறிப்பதற்காக மகதமியா பருப்புகளை வழங்குவது வழக்கம். பொதுவாகவே வேர்க்கடலை, முந்திரிகை, மகதமியா போன்றவற்றை விமான பயணத்தில் பரிமாறும் போது அவை கொட்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை ஒரு பையில் போட்டு வழங்குவது வழக்கம். ஆனால், தட்டில் அல்லாமல் ஒரு பையில் இட்டு அவற்றை தனக்கு பரிமாறியதற்காக கொரியன் ஏர் விமான நிறுவனத்தில் முன்பு மூத்த நிறைவேற்று அதிகாரியாகவும் முன்பு இருந்த அந்த நிறுவனத்தின் தலைவரின் மகளான ஹீத்தர் சோ என்பவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள…

  5. சுந்தரவனப் பகுதியில் ஆற்றில் மூழ்கிய கப்பல் உலகின் மிகப் பெரிய சுரபுன்னைக் காடுகளான சுந்தரவனக் காடுகளினூடாகப் பாயும் ஆறு ஒன்றில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து அச்சங்கள் ஏற்பட்டிருப்பதாக பங்களாதேஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். கப்பல் பணியாளர்களில் ஒருவர் காணவில்லை; அவர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 3,50,000 லிட்டர்கள் எண்ணெயைத் தாங்கிவந்த இந்த கலம் மூழ்கியிருப்பது அப்பகுதிய்ல் இருக்கும் ஆற்று டால்பின்கள் , மீன் மற்றும் பிற நீர் வாழ் உயிரினங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக வனத் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். சுந்தரவனக்காடுகள் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே பரவிக்கிட…

  6. நியூசிலாந்தைப் பொறுத்தவரை ‘அட அப்படியா’ தகவல்கள் நிறைய உண்டு. நமக்குத் தெரிந்த சில விஷயங்களைக்கூட நாம் சட்டென்று நியூசிலாந்துடன் தொடர்புபடுத்திப் பார்க்காமல் இருந்திருப்போம். எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்த இருவரில் ஒருவரான எட்மண்ட் ஹில்லாரி நியூசிலாந்தைச் சேர்ந்தவர்.மற்ற எந்த நாடுகளையும்விட அதிக அளவில் பென்குவின்களைக் கொண்டது நியூசிலாந்து. நியூசிலாந்தின் மிகப் பிரபல நகரமான ஆக்லாந்து வசிப்பதற்கு மிகவும் ஏற்ற நகரம். அதாவது குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கை வாழ முடியும். அங்குள்ள மூன்று குடும்பங்களில் ஒன்று என்கிற அளவில் படகுகள் உள்ளன. தன்பாலின திருமணத்தை நியூசிலாந்து சட்டபூர்வமாக ஏற்றிருக்கிறது. சுமார் 26,000 வருடங்களுக்குமுன் ஒரு மிகப் பெரிய எரிமலை நியூசிலாந்து பகுதிய…

  7. இதே அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான் அன்று எம்மை வயது குறைந்த சிறுவர்களை படையில் இணைத்தார்கள், இவர்கள் பயங்கரவாதிகள் என்று நாளுக்கு நூறு முறை கண்டித்து தங்கள் ஊடகங்களில் கூச்சலிட்டு விட்டு , இன்று அதே சர்வதேசம் தான் இந்த சிறுவனின் உரிமைக்கு விளம்பரம் கொடுக்கின்றன . https://www.facebook.com/video/video.php?v=10152454926092217 "Now is not the time for school." This teenage Yazidi boy says he has taken up arms to protect his family from Islamic State militants. Months after thousands of Iraqi Yezidis escaped from Mount Sinjar, BBC News talks to civilians still trapped on the mountain: http://bbc.in/16eIkrP

  8. தற்போது ரோம் வந்திருக்கும் திபேத்தியர்களின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை போப் பிரான்ஸிஸ் சந்திக்கப்போவதில்லை என்று வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது. போப் பிரான்ஸிஸை சந்திக்க தலாய் லாமா விருப்பம் தெரிவித்து சந்திப்பொன்றைக் கோரியிருந்தார். சீனாவுடன் தற்போது நிலவும் "நுட்பமான நிலைமை" காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கன் தெரிவித்திருக்கிறது. தலாய் லாமா மீது போப் பெருமதிப்பு வைத்திருக்கிறார் என்றாலும் இந்த முடிவு "தெளிவாகவே புரியக்கூடிய காரணங்களுக்காக" எடுக்கப்பட்டிருப்பதாக வாட்டிக்கனுக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்தார். போப் பிரான்ஸிஸை சந்திக்க முடியாமல் போனது குறித்து தான் "ஏமாற்றமடைவதாக" தெரிவித்த தலாய் லாமா, ஆனால் தன்னால் ஏதும் சிக்கல்கள் ஏற்படுவதை த…

  9. பெங்களூரு: டிவிட்டர் மூலம் ஐ எஸ் அமைப்பை நடத்தியதாக கைதான பெங்களூரு ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த வாலிபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்த பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். உலகின் மற்ற நாடுகளிலும் தங்கள் இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கும் முயற்சிகளில் ஐ.எஸ். அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களது இந்த திட்டத்துக்கு டிவிட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிவிட்டர் இணையதளத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காகப் பல கணக்குகள் …

  10. ரியடி ஜெனிரோ: ராணுவ சர்வாதிகார ஆட்சியில், தான் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பிரேசில் பெண் ஜனாதிபதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில், 1964ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக்காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை, ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர். இந்நிலையில் மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலில் அதிபராக இடதுசாரி கொள்கையுடைய தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய அதிபர் தில்மா ரூசெப்…

  11. ஸ்வான்சிக் தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம்-- தொழில் நுட்பப் பிரச்ச்னைகள் கணினி பிரச்சனையினால் நேற்று பிரிட்டன் வான்பரப்பில் பாதிப்படைந்த விமானப் போக்குவரத்து இன்று சனிக்கிழமை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பின. ஆனால் பிரிட்டனின் முக்கிய சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோவில் 40 சதவீத விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை தேசிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட கணினிச் சிக்கல் ஒன்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாடெங்கிலும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலைமை ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று என்று பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிக் மக்லாவ்லின் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஸ்வான்சிக்கி…

  12. லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141212_london_airspace_closed

  13. அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியைச் சேர்ந்த சுமார் 1,50,000 மக்கள் பனி, கடும் மழை மற்றும் காற்றோடு வீசி வரும் வலுவான புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த புயல் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் கடும் சீற்றத்துடன் வீசி வருகிறது. புதன்கிழமை மாலை மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் தொடங்கிய இந்தப் புயல் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவின் காரணமாக சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் 240 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்ளூர் நாளிதழ் தெரிவித்தது. கடந்த ஆறு வருடங்கள் இல்லாத அளவுக்கு ஹவாயிலிருந்து அமெரிக்க மேற்கு கடற்கரை நோக்கி பனிக்காற்றோடு வீசும் இந்தப்புயல் …

  14. லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லண்டன் வான்பரப்பு கணிணி கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுஐரோப்பாவில் விமானப் போக்குவரத்தின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த யூரோ கண்ட்ரோல் இணையத்தளத்தில் இந்…

  15. லக்னோ உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ’தரம் ஜக்ரன் சமிதி’ என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத் தின் பல இடங்களில் வினியோகிக்கப்பட்டது. அதில் இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்க்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், செல்போன் எண்ணும் இருந் தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் ’சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந் தது. இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத…

  16. பிபிசி 2014 ஆம் ஆண்டிற்கான மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பிபிசி ஆண்டுதோறும் மிகவும் வியப்பளிக்கக்கூடிய விமானப் புகைப்படங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அந்த ஆண்டிற்கான சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியா, நயகரா வீழ்ச்சி உள்ளிட்ட புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பிரஞ்சு பொலினீசியாவில் உள்ள பவளத் தோட்டம்... ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரம்... இந்தியாவின் பதேக்பூரில் உள்ள சிக்ரி கோவில்... பாக்கிஸ்தானின் காரகோரத்தில் உள்ள பால்டோரோ பனியாறு இங்கிலாந்தின் பிரைட்டனில் ஒரு சூரிய அஸ்தமனத்தின் போது... கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் சிறுவர்கள் விளையாட தயா…

  17. புதுடெல்லி, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயை தேச பக்தர் என பாரதீய ஜனதா எம்.பி. புகழ்ந்து பேசிய சர்ச்சையால், டெல்லி மேல்–சபையில் அமளி ஏற்பட்டது. கோட்சேவுக்கு புகழாரம் மராட்டிய மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி., சாக்ஷி மகாராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘‘கோட்சே வேதனைக்குள்ளான ஒரு மனிதர். அவர் தவறுதலாக சில காரியங்களை செய்திருக்கலாம். ஆனால் அவர் தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்’’ என கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்தப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. உடனே அவர், ‘‘கோட்சேயை நான் தேசபக்தராக பார்க்கவில்லை. நான் ஏதாவது தவறாக கூறி இருக்கலாம்’’ என …

  18. எஸ்பல்காம்ப்: ஜெர்மனியில் உள்ள எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அப்பகுதியில் உள்ள இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களின் இந்த எதிர்ப்புக்கு கிறிஸ்தவர்களும் யூதர்களும் புத்த மதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, நவேதாவில் உள்ள ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்சின் பாஸ்டர் மறைதிரு. ரிச்சர்டு எல்.ஸ்மித் இது குறித்து கூறுகையில், சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம் பொறிக்கப்பட்டது தங்கள் மத உணர்வை பாதிப்பதாக உள்ளதென இந்துக்கள் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு நான் ஆதரவளிக்கிறேன். இவ்வாறு இந்து கடவுளின் பெயரையோ படத்தையோ சூதாட்டத்தில் பயன்படுத்துவது பொருத்தமற்ற செயல். எனவே, இந்த சூதாட்ட விடுதியின…

  19. சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை. கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர். இந்த பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவியை பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த திருமண ஏற்பாடுகளுக்காக இந்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டாலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார். இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்க…

  20. பிரியாங்காவின் படத்திற்கு கீழ் இருந்த வாசகத்தை படிக்கவே பெரிதுபடுத்தினேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பிரபு சவுகான் விளக்கம் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரபு சவுகான் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா காந்தியின் புகைப்படமும் பிரபு சவுகானின் செல்போனில் இருந்தது. அந்த புகைப்படத்தை அவர் பெரிதுபடுத்தியும் பார்த்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. தனது செல்போனில் பெரிதுபடுத்தி பார்த்த சம்ப…

  21. அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும் போது, யோகாவின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார். இதை தொடர்ந்து, வரும் ஆண்டு முதல் ஜூன் 21&ம் தேதி சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மன அழுத் தங்களை போக்குவதற்கு உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாக யோகா சனம் பயன்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தங்கள் அகல்வதுடன், பல்வேறு உடல் உபாதைகளும் நீங்குகின்றன. அத்துடன், அவர்கள் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது. இந்தியாவில் பின்பற்றப்படும் இத்தகைய யோகாசன சிறப்புகள்குறித்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்த…

  22. புதுடெல்லி, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் இந்திய வருகை இருநாடுகள் இடையிலான நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - ரஷியா நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 15–வது உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உயர்மட்டக்குழுவினருடன் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முதலில் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக்குழு மட்டத்திலும் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுகிறார். ரஷியா அதிபர் புதினை இன்…

  23. ஓஸ்லோ: பாகிஸ்தானுக்கு பிரதமர் ஆகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என நோபல் பரிசு பெற்ற மலாலா கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக போராடி வருபவர் கைலாஷ் சத்யார்த்தி. அதேபோல், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஏற்கனவே தெர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா இன்று நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பெண் கல்விக்காக குரல் கொடுத்ததால் மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் என்பது குறிப்பிட…

  24. வாஷிங்டன்: விசாரணைக்காக கைது செய்யப்பட்ட ஆப்கன் கைதிகளை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, பயங்கரமான கொடூரங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செனட் புலனாய்வு குழு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் அல் கய்தா பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக சிஐஏ மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செனட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது. அதில், விசாரணைக்காக கொடுமையான வழிமுறைகள் கையாளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. விசாரிக்கப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் வெற்றி என்று கூறப்படுவதற்கும் எந்தவிதமான தொடர்பும…

  25. ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மதுநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாறியுள்ளனர். இந்து மதத்துக்கு மாறியவர்களின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தர்மா ஜாக்ரான் சம்னவா விபாக் என்ற முன்னணி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேஸ்வர் சிங் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு மாதமும் ஆயிரம் குடும்பங்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ50 லட்சம் செலவு செய்யப்பட்டு வருகிறது. உத்தரப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.