Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

  2. யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் - கடத்தல்காரர்களின் புதிய உத்திகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யானை தந்தங்களை ஆபரணங்களாக மாற்றி கடத்தல்காரர்கள் ஏற்றுமதி செய்கின்றனர் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் நிருபர், பிபிசி உலக சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் யானையின் தந்தங்கள் பவுடராக மாறுகிறது, காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு கூழாக்கப்படுகிறது, பாம்புகள் உருளைக் கிழங்கு சிப்ஸ் கேன்களில் அடுக்கி வைக்கப்படுகின்றன. காட்டுயிர் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் சில கடத்தல் நுட்பங்கள் இவை. இதை அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் வெளிய…

  3. 01 JUL, 2024 | 09:22 PM அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளிற்கு குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு தொடர்பான முக்கிய அதிகாரங்கள் தொடர்பில் விடுபாட்டுரிமை உள்ளது என அமெரிக்க உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்சிகளின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆறுகென்சவேர்ட்டிவ் நீதிபதிகள் விடுபாட்டுரிமையுள்ளது என தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் ஜனாதிபதிகள் தனிப்பட்டரீதியில் எடுத்த நடவடிக்கைகளிற்கு வழக்கு தொடர்வதில் எந்த விடுபாட்டுரிமையும் இல்லை என ந…

  4. 01 JUL, 2024 | 09:01 PM தென்கொரிய தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் ஒன்றுமோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கார்கள் மீது மோதிய பின்னர் குறிப்பிட்ட கார் பொதுமக்கள் மீது மோதியுள்ளது. 60 வயது நபர் ஒருவரே குறிப்பிட்ட காரை செலுத்தியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/187434

  5. பிரான்ஸில் வெடித்தது கலவரம்! பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊ…

  6. Published By: RAJEEBAN 01 JUL, 2024 | 12:16 PM விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்திய 13 வயது சிறுவனை அமெரிக்க பொலிஸார் சுட்டுக்கொல்வதை காண்பிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பொலிஸாருக்கு விளையாட்டு துப்பாக்கியை காண்பித்த 13 வயது சிறுவனை நியுயோர்க் பொலிஸார் சுட்டுக்கொல்லும் வீடியோ அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மான்ஹட்டனிலிருந்து வடமேற்கில் உள்ள உட்டிகா நகரின் பொலிஸார் ஆயுதமுனையில் கொள்ளை தொடர்பில் இரண்டு இளைஞர்களை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தடுத்துநிறுத்தப்பட்ட இரண்டுசிறுவர்களும் சந்தேகநபரின் சாயல் கொண்டவனாக காணப்பட்டனர் என தகவல்கள் வெ…

  7. தொடர் தற்கொலை தாக்குதல்: நைஜீரியாவில் பயங்கரம் damithJuly 1, 2024 நைஜீரியாவில் (Nigeria) நடந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவமானது நேற்றுமுன்தினம்(29)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் பெண் தற்கொலை குண்டுதாரிகளால் குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழந்துள்ளதாக போர்னோ மாநில அவசர முக…

  8. பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் நாளை உள்ளூர் நேரடி இரவு 9 மணிக்கு ஜோர்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர். இத்தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதன்ப…

  9. போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்! உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது “ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெறத் தொடங்கவேண்டும்” எனவும் “நேட்டோவில் சேருவதற்கான திட்டங்களை உக்ரேன் கைவிடவேண்டும்” எனவும் அவர் தனது நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டால், உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதாகவும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்குறுதியளித்துள்ளார். உக்ரேன் – ரஷ்ய போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமா…

  10. படக்குறிப்பு,ஜான் (70) மற்றும் எல்ஸ் (71) இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், லிண்டா பிரஸ்லி பதவி, பிபிசி செய்தியாளர் 30 ஜூன் 2024, 10:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இந்த கட்டுரையில் மரணம் குறித்த விவரணைகள் உள்ளன. அவை சிலரைச் சங்கடப்படுத்தலாம்.] தம்பதிகளான எல்ஸ் மற்றும் ஜான் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜூன் மாதத்தின் துவக்கத்தில், அவர்களுக்கு இரு மருத்துவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் கொடிய மருந்தை கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக இறந்தனர். நெதர்லாந்தில், இதனை இரட்டை கருணைக்கொலை (duo-euthanasia) என…

  11. பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை ஜூலியான் அசாஞ்ச் வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன…

  12. 29 JUN, 2024 | 12:05 PM (ஆர்.சேதுராமன்) ரஷ்யாவின் செய்மதியொன்று துண்டுகளாக உடைந்து சிதறியதால், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, விண்வெளி ஓடங்களுக்குள் புகுந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என அமெரிக்க விண்வெளி முகவரகங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி ரஷ்ய செய்மதி ஏற்கெனவே செயலிழந்திருந்தது எனவும், கடந்த புதன்கிழமை அது 100க்கும் அதிகமான துண்டுகளாக உடைந்ததாகவும் அமெரிக்க விண்வெளி கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. RESURS-P1 எனும் இச்செய்மதி செயலிழந்துவிட்டதாக 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்மதியே இவ்வாறு உடைந்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. …

  13. Published By: RAJEEBAN 19 JUN, 2024 | 11:29 AM ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான முழுமையான யுத்தம் குறித்து இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் இராணுவ சிவில் கட்டமைப்புகளை காண்பிக்கும் வீடியோக்களை ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையே ஹெஸ்புல்லா அமைப்பு வெளியிட்டுள்ளது. நாங்கள் ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் லெபானிற்கும் எதிரான விளையாட்டின் விதிமுறைகளை மாற்றும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றோம் என இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். முழுமையான யுத்தமொன்றில் ஹெஸ்புல்லா அமைப்பு முழுமையாக அழிக்கப…

  14. 27 JUN, 2024 | 10:08 AM பொலிவியாவில் சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியில் ஈடுபட்ட இராணுவீரர்கள் தலைநகர் லா பாஸில் உள்ள அரண்மணை மீது தாக்குதலை மேற்கொண்ட சில மணிநேரத்தின் பின்னர் சதிப்புரட்சி குழுவின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சதிப்புரட்சி முயற்சியை தொடர்ந்து தலைநகரில் அரசாங்கத்தின் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள முரிலோ சதுக்கத்தில் கவச வாகனங்களுடன் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டனர் - பின்னர் அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை மீண்டும் மறுசீரமைக்க விரும்புவதாக கிளர்ச்சி குழுவின் தலைவரான ஜெனரல் ஜூவான் ஜோஸ் ச…

  15. கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று கல்வி கற்க வேண்டும் என விரும்பும் இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது கனடா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை தான். குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்…

  16. Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 01:09 PM உக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக ரஸ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்போதைய இராணுவ பிரதானிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பின் போது உக்ரைனின் சிவில் உட்கட்டமைப்பு மற்றும் மின்நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்காகவே ரஸ்ய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சொய்குவும் மற்றும் பாதுகாப்பு பிரதானி வலெரி ஜெராசிமோவும் பொதுமக்கள் இலக்குகளை தாக்கியமை, பொதுமக்களிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியமை, சேதப்படுத்தியமை…

  17. நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல் கடந்தவருடம் அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் அமைப்பினால் இஸ்ரேலினுள் நடத்தப்பட்ட தாக்குதலின்போது பணயக கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் நேற்று விடுவித்திருக்கிறது. இஸ்ரேலிய விசேட படைகளும், பொலீஸாரும் இணைந்தே இந்த மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறார்கள். பலஸ்த்தீன அகதிகள் முகாம் ஒன்று அமைந்திருக்கும் நஸ்ரெயிட் பகுதியின் இரு வேறு மறைவிடங்களின்மேல் இஸ்ரேலிய படைகள் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போதே இந்த நான்கு இஸ்ரேலியர்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். விசேட படைகள் இப்பகுதிக்குள் நுழையுமுன் இப்பகுதி மீது மிகக் கடுமையான ரொக்கெட் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. …

  18. உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை! அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளி…

  19. இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி - பொருளாதார தடைகள், இனப்படுகொலை இடம்பெற்றதை அங்கீகரிப்பது சாத்தியமில்லை : கென்சவேர்ட்டிவ் கட்சி Published By: RAJEEBAN 24 JUN, 2024 | 05:00 PM tamil guardian பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன்…

  20. காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக சேவ் தி சில்ட்ரன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. 4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை. யுத்…

  21. பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்! பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் ” குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்க…

  22. இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை adminJune 22, 2024 சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா ஆகியோா் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணிக்மர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்யுமாறு மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்யும் அதேவேளை வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்க…

  23. Published By: RAJEEBAN 23 JUN, 2024 | 11:49 AM பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்விடுத்த வேண்டுகோளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் நிராகரித்துள்ளது. இதன்படி விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் பாராளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  24. இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். சவூதியில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். மக்காவில் அல் ஹராம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 922 ஆக அதிகரித்…

  25. கட்டுரை தகவல் எழுதியவர், ஹென்ரி ஆஸ்டியர்&ஸ்டீவ் ரோசென்பெர்க் பதவி, பிபிசி நியூஸ், லண்டன்&மாஸ்கோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தான் குடியரசில் (Republic of Dagestan) காவல் துறையினர் மீதும், தேவாலயங்கள், யூத வழிபாட்டுத் தலங்களிலும் (synagogues) நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள், ரஷ்ய மரபுவழித் திருச்சபையின் (Orthodox church) பெந்தகொஸ்ட் திருவிழாவின்போது, டெர்பென்ட் மற்றும் மகச்கலா ஆகிய நகரங்களைக் குறிவைத்தனர். இத்தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த குறைந்தது 15 பேர், ஒரு பாதிரியார், மற்றும் ஒரு பாதுகாவலர் ஆகியோர் உயிரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.