உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துத் தகவல் தர தொலைபேசி எண்ணை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆரம்பித்துள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இதேபோன்ற எண்ணை தாங்கள் எப்போதோ மக்களுக்கு வழங்கி விட்டதாக ம.பி. பாஜக முதல்வர் சிவ்ராஜ் செளகான் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். லஞ்சம் வாங்கும், ஊழல் புரியும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கலாம். அவர்களை மக்களே கையும் களவுமாகப் பிடிக்க தாங்கள் ஆலோசனை வழங்குவோம் என்று ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஹெல்ப்லைன் இப்போது டெல்லி மக்களிடையே பிரபலமாகி விட்டது. தொலைபேசி அழைப்புகள் குவிந்து வருகின்றன. இந்த …
-
- 0 replies
- 399 views
-
-
சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவில்லை. அமெரிக்கா கடந்த 2013 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தனது புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி இறுக்குமதி 3.5 டிரில்லயன் என்ற அளவில் இருந்தது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. 1000 பில்லியன்கள் சேர்ந்தது ஒரு டிரில்லியனாகும். சீனப் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில ஐயப்பாடுகள் இருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங…
-
- 0 replies
- 401 views
-
-
பாரதீய ஜனதா கட்சி ஆம் ஆத்மியை தீவிர சவாலாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சாதாரணமாக எடுக்க வேண்டாம் என்று பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதாவுக்கு கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-09-BJP-must-take-the-AAP-challenge-seriously-Mohan-Bhagwat
-
- 5 replies
- 468 views
-
-
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என காங்., துணை தலைவர் ராகுல் இன்று தெரிவித்துளளார். இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் மக்கள் கருத்துக்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விரைவில் வேட்பாளர் பட்டியில் இறுதி செய்யப்படும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1993473.ece
-
- 0 replies
- 336 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை பெங்களூர் வருகிறார். காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 250 பேருக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணிக்கு இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல் குறித்தும் அவர் ஆலோசிக்கிறார். http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%…
-
- 0 replies
- 372 views
-
-
கியூபாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவானது. ஹவானா கிழக்குப் பகுதி மற்றும் ப்ளோரிடா பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. http://www.dinamani.com/latest_news/2014/01/10/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95/article1993186.ece
-
- 1 reply
- 420 views
-
-
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடியும், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கும் பாஜகவில் சேர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார். நரேந்திர மோடிக்கு ஓட்டு: வியாழக்கிழமை, தனது ட்விட்டர் பக்கத்தில்: "எனக்கு இந்திய தேசத்தின் நலனே பிரதானம். மத்தியில் நிலையான, ஸ்திரமான, பொறுப்பான நல்லாட்சி அமைய வேண்டும். அந்த வகையில் ஒரு வாக்களராக எனது ஓட்டு நரேந்திர மோடிக்குத் தான்" என கிரண் பேடி அவரது கருத்தை வெளியிட்டிருந்தார். காங்கிரசுக்கு எதிரான போராட்டம்: இன்றும் அவர் மோடியை ஆதரித்து பேசியுள்ளார். நாட்டை வழிநடத்திச் சென்று நிலையான ஆட்சி செலுத்தும் தகுதி உடைய நபரை ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் போராட்டம் முழுக்க முழுக்க காங்…
-
- 0 replies
- 259 views
-
-
டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் சுறுசுறுப்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டிவரும் கெஜ்ரிவால் இம்முகாமின…
-
- 0 replies
- 321 views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராராபர்ட் வதேரா டெல்லி புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். நேற்று அவர்ஆக்ரா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பின்னால் ஒரு மாருதி கார் வந்தது. அந்த கார் ராபர்ட் வதேராவின் காரை மிக வேகமாக முந்திச் சென்றது. இதனால் ராபர் வதேராவுக்கு பாதுகப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் வதேராவின் காரை மிந்தி கார் குறித்து வயர்லெஸ்சில் போலீசாருக்கு தகவ்ல் கொடுத்தனர் . அந்த மாருதி காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரை தொழில் அதிபர் சவுரப் ரஸ்டோகி என்பவர் ஓட்டிவந்தார். வதேராவின் காரை மிகவும் அபாயகரமான முறையில் முந்தியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிப்…
-
- 0 replies
- 354 views
-
-
நிலையான அரசை நரேந்திர மோடியால் கொடுக்க முடியும் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதல் மந்திரியும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் நிலையான அரசை கொடுக்க முடியும் என்று தனது டுவிட்டர் இணைய தளத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரேவின் உதவியாளருமான கிரண் பேடி கூறியுள்ளார். மோடியால் பொறுப்புள்ள மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கம் அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஓட்டு நரேந்திர மோடிக்கே என்று கிரண் பேடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-10-Kiran-Bedi-Openly-Endorses-Narendra-Modi
-
- 0 replies
- 336 views
-
-
வடகிழக்கு மாநிலங்களில் சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ""சீனாவுடன் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கிழக்குப் பகுதிகளுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.எம்.எஸ். ராய் அமைச்சரிடம் விளக்கினார். எல்லையில் மிக உயரமான மலைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் எடுத்துரைக்கப்பட்டது'' என்று தெரிவித்தனர். http://…
-
- 0 replies
- 346 views
-
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பல்வேறு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசி நாள் கூட்டத்தில் மட்டும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட…
-
- 0 replies
- 379 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களின் சந்திப்பு குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை. சாதாரண சந்திப்பே என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-10-Rahul-Gandhi-meets-Manmohan-Singh
-
- 1 reply
- 319 views
-
-
ஊழலை ஓழிக்க ஜன்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை உண்ணா விரதம் இருந்தார். தற்போது டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது மாநிலத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் டெல்லி சட்டசபையில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. லோக்பால் மசோதா தாயாரிப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புற வளர்ச்சிதுறை, சட்டம் மற்றும் நிதித்துறை செயலாளர், பிரபல வக்கீல் ராகுல் மெக்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஒன்றிணைந்து சுதந்திரமாக செயல்பட்டு லோக் பால் மசோதாவை தயாரிப்பார்கள் என்று அறி…
-
- 0 replies
- 320 views
-
-
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவுசாம்பி என்ற இடத்தில் அவரது வீடும், கட்சி அலுவலகமும் உள்ளது. கட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் இந்து ரக்ஷாதள் அமைப்பினர் தாக்கினார்கள். இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச மாநில அரசு முன் வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மறுத்து விட்டார். http://www.maalaimalar.com/2014/01/10141153/z-Security-Arvind-Kejriwal-rej.html
-
- 0 replies
- 352 views
-
-
சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத்துக்கு எதிராக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை மேற்கத்திய நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிரியாவின் அலெப்போ நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி சிரியா விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சிரியா அரசு அந்நாட்டு மக்கள் மீது நடத்தி வரும் கொடூரமான தாக்குதல் குறித்து பிரிட்டன் தயாரித்த வரைவு அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர் நாடுகள் முன் செவ்வாய்க்கிழமை இரவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு ரஷியா…
-
- 1 reply
- 532 views
-
-
ஆந்திராவை பிரிந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் ‘‘ஆந்திர மறு சீரமைப்பு மசோதா’’ மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மீதான விவாதம் நடத்த முடியாதபடி உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டு வருவதால் சட்டசபை நடவடிக்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நேற்று ஐதராபாத் வந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவை பிரிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. 2014–ம் ஆண்டு நடக்கும் பாராளு மன்ற தேர்தலுக்கு முன் ஆந்திராவில் 2 மாநிலம் ஏற்பட்டு விடும் என்று நம்புகிறேன். 2 மாநிலத்துக்கும் தனித்தனியாக தேர்தல் நடக்கும். தெலுங்கானா மசோதா …
-
- 0 replies
- 321 views
-
-
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிப்பதாக கடந்த அக்டோபர் 3-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதையடுத்து வெளியே வந்தார். பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார். இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்ற அவருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தயங்கினார். எனினும், பீகாரில் காங்கிரஸ் ஓட்டு வங்கியை வலுப்படுத்த ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அவசியம் என்பதை மூத்த தலைவர்கள் வலியுறுத்…
-
- 0 replies
- 292 views
-
-
கடந்த ஓராண்டுக்கு முன் பா.ஜனதா கட்சியிலிருந்து விலகி கே.ஜே.பி கட்சியை தொடங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று தனது கட்சியை மீண்டும் பா.ஜனதாவுடன் இணைத்துக்கொண்டார். பெங்களூர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த இணைப்பு விழாவில் எடியூரப்பா பேசியதாவது:- கட்சியிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்தது தவறு என்றும், நடந்ததை மறந்து நடப்பவை நல்லவையாக நடக்க பாடுவோம். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் நமது வியூகம் அமையவேண்டும். கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் போகும்படி கட்சி அளிக்கும் பணியை செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கடந்த ஒரு வாரத்திற்…
-
- 1 reply
- 333 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான குழுவை கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை நியமித்துள்ளார். தமிழகத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், உறுப்பினராக சுபாங்கர் சர்கார், மாநிலப் பொறுப்பாளரும், பொதுச் செயலருமான முகுல் வாஸ்னிக், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே. கோபிநாத் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் குலாம் நபி ஆசாத் தலைவராகவும், சுபாங்கர் சர்கார், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் பிரதேச கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்ப…
-
- 0 replies
- 389 views
-
-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காளர்களை கவரும் யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு புகழை உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்திய என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் ரூ. 500 கோடி ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளது என்று செய்தி வெளியானது. மேலும் இந்த நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்கும். ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும…
-
- 3 replies
- 469 views
-
-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலில் பிரியங்கா தீவிரமாக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், சோனியா போட்டியிடும் ரேபரேலி மற்றும் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதிகளை பிரியங்கா கவனித்து வருவதால், இந்த தொகுதிகளில் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரப்பணிகள் குறித்தும், வருகிற தேர்தலில் ராகுல், சோனியா ஆகியோரின் பிரசார திட்டங்கள் குறித்தும் மட்டுமே கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தநிலையில் நேற்று சோனியா காந்தியை டெல்லியில் பிரியங்கா சந்தித்து பேசினார். பின்னர் சோனியா காந்தி த…
-
- 2 replies
- 418 views
-
-
டெல்லி முதல் மந்திரியாக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மகாராஷ்டிராவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷடிர மாநில தலைவரான அஞ்சலி டமானியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை போட்டியிட செய்ய கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 73 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 600 பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தற்போது மகார…
-
- 0 replies
- 380 views
-
-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த சின்னம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நைதிக் கட்சிக்கு உரியது என, அக்கட்சி புகார் கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த சந்திர பூசன் பாண்டே என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். ‘உத்தரபிரதேசத்தில் கடந்த 2012–ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் நைதிக் கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே விண்ணப்பித்திருந்த நிலையில், சட்ட விரோதமாக ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிப…
-
- 0 replies
- 336 views
-
-
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித்தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நடந்தது. பின்னர் தன்னிடம் சோனியா காந்தி, இந்த மாதத்தில் மீண்டும் உங்களை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறேன் என்று கூறியதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் கூட்டணி இந்த முறை நிச்சயம் ஏற்படும் என்று நான் முழு உறுதியுடன் கூறுகிறேன். அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் மதவாத சக்திக்கு எதிராக ஒன்றாக இருக்கிறோம் என்று லாலு பிரசாத் கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை லாலு பிரசாத் யாதவ் டெல்லி…
-
- 0 replies
- 310 views
-