உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சிங்கம் போல இருக்கும் திபெத்திய நாய் சீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் இருந்து பார்கும்போது சிங்கத்தைப் போலத் தோன்றும், இனப்பெருக்கத்துக்காக வேறு ஒரு இடத்துக்கு அந்த ஆண் சிங்கம் அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில், ஊழியர் ஒருவர் வளர்த்த இந்த நாய் வைக்கப்பட்டதாக அந்த மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/gl…
-
- 10 replies
- 1.8k views
-
-
பான்கிமூன்: இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா சமரசம் செய்யும் இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதேவேளையில், பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொள்வது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இதனை பாராட்டி வரவேற்கிறேன் ' என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் அரசியல்ரீதியாக தலையிடப் போவதில்லை. இரு நாட்டு அரசுகளின் கையில் தான் தீர்வு உள்ள…
-
- 4 replies
- 388 views
-
-
மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது 700 புள்ளிகள் வரை சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியானது பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை காலை முதலே சரிவில் இருந்த போதும் பிற்பகலில் 700 புள்ளிகள் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் பங்குகள் 4.7%, ஹெச்.டி.எப்.சி பங்குகள் 5.8%, அளவிலும் சரிசை சந்தித்தன. மேலும் பேங்க் ஆப் பரோடா வங்கி பங்குகள் 8.2%, யெஸ் பேங்க் பங்குகள் 7.9%, ஆக்சிஸ் பே…
-
- 1 reply
- 750 views
-
-
சென்னை: ராஜ்யசபா திமுக எம்.பிக்களின் தலைவர் பதவி கனிமொழிக்கு வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் க. அன்பழன, ராஜ்யசபா தலைவர் அன்சாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் . ராஜ்யசபாவில் தி.மு.க. சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி. ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர். ராஜ்யசபா தி.மு.க. தலைவராக இருந்த திருச்சி சிவா பதவி ஜூன் மாதம் முடிவடைந்ததால் அப்பதவி காலியாக உள்ளது. இதனையடுத்து கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க. எம்.பி.க்களுக்கான தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கடிதத்தை தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு அனுப்பி வைத்துள்ளார். http://tamil.oneindia.in/news/2013/08/14/tamilnadu-kanimozhi-is-dm…
-
- 4 replies
- 472 views
-
-
பல தளங்களில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை சிங்கப்பூர் Thursday, August 15th, 2013 பிரதமர் லீ சியன் லூங், வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஆற்றவிருக் கும் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையைப் பல தளங்களில் கேட்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிவழிகளில் நேரடியாக இடம்பெறும்.www.pmo.gov.sg எனும் பிரதமர் அலுவலகம் மற்றும் www.reach.gov.sg/ndrsg எனும் ‘ரீச்’ கருத்து சேகரிப்புப் பிரிவு ஆகியவற் றின் இணைய தளங்களில் பிரதமரின் உரையைப் பார்க்கலாம். http://tamilmurasu.com.sg/story/27674
-
- 0 replies
- 444 views
-
-
அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/15/world-nearly-300-killed-egypt-clashes-pm-defends-crackdown-181264.html
-
- 0 replies
- 343 views
-
-
டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாகிஸ்தான் உணர…
-
- 0 replies
- 354 views
-
-
இம்பால்/கவுகாத்தி: நாடுமுழுவதும் 67 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. சேதம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை. இதேபோல அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த ஷிராங் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. சேதம் அதிகமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும் தலைநகர் இம்பாலில் 3 இடங்களிலும், தவ்பால்…
-
- 0 replies
- 373 views
-
-
அபுஜா: நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம் கட்ட தலைவன் மொமொடு பாமா. இவனது தலைக்கு 1.55 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது நைஜீரிய அரசு. இந்திய மதிப்பில் இது சுமார் 96 லட்சம் ஆகும். நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை இஸ்லாமிய சட்ட திட்டப்படி ஆட்சி நடக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள். இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் இவர்களது போராட்டத்தில் சிக்கி, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், போர்னோ மாநி…
-
- 0 replies
- 329 views
-
-
சிங்கப்பூர் நாட்டின் மிக உயரிய விருதான தெமாசெக் விருது (Order of Temasek) அந்நாட்டின் 6 வது அதிபராக இருந்த திரு S.R. நாதன் (செல்லப்பன் ராம நாதன்) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ( This award was last given to former Chief Justice Yong Pung How in 1999).திரு நாதன் சிங்கப்பூரின் அதிபராக இருந்ததற்கு மட்டும் இவ்விருது வழங்கப்படவில்லை, மாறாக பொதுச் சேவையில் தமது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டு நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக திரு நாதனுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர் 1999 மற்றும் 2005 ஆகிய இரண்டு முறையும் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவ…
-
- 4 replies
- 627 views
-
-
இன்று ஹிந்தியச் சுதந்திர தினமாம், அடுத்தவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான உயிர்களை அணு அணுவாய் துடிதுடிக்க அழித்த கொடியவர்களின் சுதந்திர தினமாம். இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்......... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY https://www.facebook.com/lingamvisva?hc_location=stream https://www.facebook.com/lingamvisva?hc_location=stream
-
- 7 replies
- 879 views
-
-
எகிப்த்தில் உஸ்னி முபாரக் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னர் சனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியமைத்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான மொர்ஸி அண்மையில் இராணுவச் சதிப் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தெரிந்ததே. அவர் பதவிகவிழ்க்கப்பட்டது செல்லாதென்றும், மறைமுக இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மொர்ஸி அவர்களை விடுதலை செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கடுமையான மறியல்ப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை நாம் அறிந்த செய்தி. இவ்வாறான போராட்டங்களின் ஒரு படியாக கைரோவிலும் மற்றும் புறநகர்ப் பகுதியொன்றிலும் நகரப்பகுதியை ஆக்கிரமித்து முகாமிட்டு நீண்டநாட்களாக மொர்சி ஆதரவாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்கள…
-
- 1 reply
- 455 views
-
-
இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்களைக் காணவில்லை!! மும்பை: நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது. தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்க…
-
- 27 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகாயா பகுதியின் அமைந்துள்ள மகாபோதி விகாரை பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்து பூசகரான அருப் பிரக்மாச்சாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர், இந்த நபர் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தகாயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் இந்திய பொ…
-
- 0 replies
- 299 views
-
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கருகி பலியாகினர். அந்த பகுதியில் இருந்து 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது நூசா டெங்காரா மாகாணம். இங்கு பலாவூ தீவின் மைய பகுதியில் ரொகடென்டா எரிமலை உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே இந்த எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக அதன் நெருப்பு குழம்புகள் வெடித்து சிதறின. எரிமலையில் இருந்து நெருப்பு கற்கள் சிதறியதில் அருகில் இருந்த கடற்கரை கிராமமான ரோகிரோலேவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரை பகுதியில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் நெருப்பு கற்கள் பட்டதில் சம்பவ இடத்திலேயே உ…
-
- 1 reply
- 444 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் 2 கட்சி எம்.பி.க்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும், நரேந்திர மோடிக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பாரி கார்டினர், இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் காமன்ஸ் அவையில் நவீன இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துமாறு மோடியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சைலேஷ் வாராவும், காமன்ஸ் அவையில் உரை நிகழ்த்த நரேந்திர மோடிக்கு அழைப்புக் கடிதம் அனுப்…
-
- 4 replies
- 437 views
-
-
விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துப் பரிசோதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய விளையட்டு வீரர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார். இது பல மட்டங்களில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தொடரோட்ட வீரர்கள். அதிலும் குறிப்பாக பளுதூக்கும் வீரர்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினாலும், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று, இந்திய பளுதூக்கும் சம்மேளனம் கூறுகிறது. சிறிய அளவில் பயன்படுத்தினாலும், கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன. பளுதூக்கும் வீரர்கள் பெரு…
-
- 0 replies
- 363 views
-
-
விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து அவரது ஆதரவாளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள்,இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25).இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயில் உள்ள நோபல் பரிசு அறக்…
-
- 0 replies
- 336 views
-
-
எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதிபர் மொஹமத் மோர்ஸியின் ஆதரவாளர்களால் அமைக்கப்பட்டுள்ள போராட்ட முகாம்களை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. அங்குள்ள ராபா அல் அடாவியா பள்ளிவாசலுக்கு வெளியே இருக்கும் ஒரு போராட்ட முகாமுக்கு அருகிலிருக்கும் பிபிசியின் செய்தியாளர் ஒருவர் அங்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்படுவதாக கூறுகிறார். அங்கு வீதிகளில் டயர்கள் எரிக்கப்படுகின்றன, வான் வெளியில் ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன. போரட்டம் நடைபெற்ற மற்றொரு இடமான அல் நஹ்டா சதுக்கத்தில் இருந்தவர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய …
-
- 0 replies
- 501 views
-
-
சென்னை: லண்டனில் நடக்கும் சர்வதேச பட விழாவில் பாலா இயக்கிய பரதேசி படம் எட்டு பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ‘சேது' துவங்கி ‘பரதேசி' வரை ஆறு படங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்' படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ' என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி' படத்தை பாலா உருவாக்கினார். கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழ…
-
- 0 replies
- 431 views
-
-
மணிலா: தமிழக மழையை உள்வாங்கிக் கொள்கிறது தென்சீனக் கடல் புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார். அவர் சொன்ன புயல் தற்போது தென் சீனாவையும் பிலிப்பைன்ஸையும் பதம் பார்த்து வருகிறது. தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் இதுவரை இல்லாத அளவு மழை தென் சீனப் பகுதியிலும் பிலிப்பைன்ஸிலும் பதிவாகி இருக்கிறதாம். கொட்டும் கனமழையால் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளன. கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில்தான் பிலிப்பைன்ஸை பெரும் புயல் …
-
- 0 replies
- 309 views
-
-
பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் அரசியல்: கலைஞர் கருணாநிதி : https://twitter.com/kalaignar89 செய்தி ஆசிரியர்கள்: என் ராம் (ஹிந்து) - https://twitter.com/nramind நடிகர்கள்: சிலம்பரசன் : https://twitter.com/iam_STR மாதவன் : https://twitter.com/ActorMadhavan சரத்குமார் : https://twitter.com/realsarathkumar பார்த்தீபன் : https://twitter.com/rparthiepan அரவிந்த்சாமி : https://twitter.com/thearvindswami அதர்வா முரளி : https://twitter.com/Atharvaamurali ஜெயம் ரவி : https://twitter.com/actor_jayamravi ஜீவா : https://twitter.com/Actorjiiva தனுஷ் : https://twitter.com/dhanushkraja நடிகைகள்: ஹன்சிகா : https://twitter.com/ihansika நமீதா : https://…
-
- 0 replies
- 508 views
-
-
நட்புறவை புதுப்பிக்க புதிதாக பேச்சுவார்த்தை தொடங்குவோம்: இந்தியாவிற்கு ஷெரீப் அழைப்பு இஸ்லாமாபாத், ஆக. 13- இந்திய எல்லைக்குள் அதிகாலை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபத்தில் 5 வீரர்களை சுட்டுக்கொன்றனர். அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து எல்லையில் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். இதனால், எல்லையில் ஒரு வாரத்திற்கு மேலாக பதட்டம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இரு நாடுகளும் சுதந்திரத் தினத்தை கொண்டாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய பாகிஸ்தான் நட்புறவை மீண்டும் புதிதாக தொடங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை செய்தி நிறுவனம்…
-
- 0 replies
- 349 views
-
-
இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிப்பூர் ஐக்கிய கமிட்டியினர் கூறுகையில், மியான்மருடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாமல் எல்லை வேலி அமைப்பதால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மியான்மருக்குள் போகக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் எல்லை வேலி அமைக்கும் பணியை உடனே நிறுத்தி இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இதனிடையே மோரேவில் அமைக்கப்பட்டு வரும் எல்லை வேலியை க…
-
- 0 replies
- 403 views
-
-
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக தரப்பில் திடீரென மனுத்தாக்கல் செய்யப்பட்டு தங்களையும் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு பல முட்டுக்கட்டைகளைத் தாண்டி இறுதிக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் சார்பாக திமுக எம்.பி. டி.எம். செல்வகணபதி ஒரு மனுவை பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் இந்த வ…
-
- 0 replies
- 255 views
-