உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப்படைகள் அடுத்த ஆண்டு விலகும்போது, தாங்கள் அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்ற முயலமாட்டோம் என்று ஆப்கன் தாலிபானின் தலைவர் முல்லா முகமது ஒமார் கூறியிருக்கிறார். முஸ்லீம் பண்டிகையான ஈத் பெருநாளுக்கு முன்னதாக விடுத்த அறிக்கை ஒன்றில், இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கும் அரசு ஒன்றை உருவாக்குவதற்கு ஆப்கானிய மக்களுடன் ஒரு புரிந்துணர்வை தாலிபான்கள் எட்ட முயல்வார்கள் என்றார் ஒமார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களைப் பற்றி தனது வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்திய ஒமார், இது ஒரு காலத்தை வீணடிக்கும் செயல் என்றார். முல்லா ஒமார், 2001ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு…
-
- 0 replies
- 345 views
-
-
டெல்லி: ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உரிமை கோரி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக பேசிய முலாயம்சிங், எல்லைகளில் சீனாவின் ஊடுருவல்கள் மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் பலியாகும் சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? என்பதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவரிக்க வேண்டும். சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் நம்பக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி தொடர்ந்து சீனா இந்திய பகுதிக்குள் ஊடுருவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் த…
-
- 1 reply
- 522 views
-
-
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அமளிக்கிடையே லோக்சபாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, எல்லையில் பாகிஸ்தானின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக…
-
- 1 reply
- 249 views
-
-
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில்.. பாகிஸ்தான் elite commandos இந்திய எல்லைக்குள் ஊடுருவி நடத்திய பதுங்கித் தாக்குதலில் வீதி உலா வந்த 5 இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இப்படி இந்தியப் படைகளை அடிக்கடி வேட்டையாடி வரும் நிலையிலும் கையாலாகாத இந்தியா எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி தப்பித்துக் கொள்கிறது..! இவர்களின் வீரமெல்லாம்.. அப்பாவி.. ஈழத்தமிழர்களை சிங்களவனோடு சேர்ந்து நின்று கொல்வதில் தான். பிரதான செய்தி இங்கு: Kashmir: Five Indian soldiers 'killed in shooting' Five Indian soldiers have been shot dead in Indian-administered Jammu and Kashmir, the chief minister of the disputed region says. http://www.bbc.co.uk/news/world-asia-ind…
-
- 10 replies
- 665 views
-
-
காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியை சீன ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் புதிய பிரச்னை உருவாகி பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன எல்லையில் வடக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 2 சோதனைச் சாவடிகள் இடையே இந்திய ராணுவத்தினர் திரங்காஎன்ற பெயரில் ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ரோந்துப் பணியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், சீனா அந்த வழியில் ஒரு கண்காணிப்பு கோபுரத்தை அமைத்துள்ளது. இந்திய ராணுவத்தினர் ரோந்து வரும்போது அவர்களை சீன ராணுவத்தினர் இடைமறித்து, அது தங்களுடைய பகுதி என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த ஏப்ர…
-
- 6 replies
- 470 views
-
-
நேதாஜி பற்றிய ஆச்சரிய தகவல் நேதாஜியின் மரணம் குறித்த விஷயங்களை சேகரித்து வைத்திருப்பவரும், அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளருமான தேவப்பிரதா பிஸ்வாஸ் சமீபத்தில் புதுச்சேரி வந்திருந்தார். அவருடன், மாநிலங்களவை உறுப்பினரான பரூண் முகர்ஜியும் இருந்தார். பிஸ்வாஸும் முகர்ஜியும் நேதாஜி பற்றிய மர்மங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். ''நேதாஜியின் மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?'' ''ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான் தலைநகர் தாய்பேய் விமான நிலையத்திலோ, அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை. எப்படியென்றால், நேதாஜி மரணம் குறித்து இந்திய அரசால் அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண …
-
- 7 replies
- 7.1k views
-
-
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம். நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன. சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனா…
-
- 0 replies
- 444 views
-
-
திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில் 4411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4 334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார் லாஸ பாங்டா ஸிக…
-
- 1 reply
- 510 views
-
-
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம். இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர். நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க மு…
-
- 7 replies
- 560 views
-
-
பிரேசில் சிறையில் கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தை அடக்கும் முயற்சியில் போலீசாரால் கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 25 போலீசாருக்கு 624 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ளது சாவோ பவுலோஸ் என்ற ஜெயில். இங்கு 1992-ம் ஆண்டு கைதிகள் இடையே பயங்கர கலவரம் உண்டானது. கலவரத்தை அடக்க போலீசார் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தக் கலவரத்தில் சுமார் 111 கைதிகள் பரிதாபமாக பலியானார்கள். அவர்களில் 52 கைதிகள் போலீசாரின் குண்டடியில் பலியானவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே, போலீசார் மிகவும் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்ற வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 366 views
-
-
பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவை தங்கள் கட்சியில் வந்து சேருமாறு ஐக்கிய ஜனதாதளம் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து சத்ருகன் சின்ஹா மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தெரிவித்தது. மேலும் அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தின் கதவுகள் சத்ருகன் சின்ஹாவுக்காக எப்பொழுதும் திறந்திருக்கும் என்று நிதிஷ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். சத்ருகன் ஐக்கிய ஜனதாதளத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சேரலாம். அவ்வாறு வந்தால் அ…
-
- 0 replies
- 325 views
-
-
மீண்டும் வருவார் ****************** மூன்று முறை பிரதமர் பதவியை வகித்துள்ள ஒரு தலைவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது இத்தாலி நீதிமன்றம். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக சிலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றங்களுக்கு பெயர் பெற்ற நாடு இத்தாலி. மாஃபியா என்ற சொல் உருவானதே அங்குதான். ஆர்கனைஸ்ட் க்ரைம் என்ற பதத்துக்கு இலக்கணம் எழுதிய குற்றக் குடும்பங்கள் திளைத்த சமூகம் அது. பூ வியாபாரம் முதல் கப்பல் போக்குவரத்து, ஆயுத விற்பனை வரையில் அனைத்து தொழில்களும் மாஃபியா விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்தன. ஆட்சி அரசியலும் நீதிமன்றமும்கூட விதிவிலக்கு அல்ல என்று பலர் நம்பினர். அத்தகைய தடங்கள் கொண்ட நாட்டில் வரி மோசடி செய்த முன்னா…
-
- 5 replies
- 701 views
-
-
மலேசியாவில் நேற்று படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 40 பேர் காணாமல்போயுள்ளனர். இந்தோனேஷியாவில் அகதிகளாக இருந்தவர்களே அந்த படகில் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான படகில் 44 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பின் 4 பேர் மட்டும் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது - http://www.thinakkathir.com/?p=51563#sthash.nJKm9Lfp.dpuf
-
- 0 replies
- 288 views
-
-
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கியதால் ஆந்திராவில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதை எதிர்த்து எஞ்சிய ஆந்திர பிரதேச எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரும் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸின் எதிர்காலமே அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இது பற்றி கூறுகையில், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவு மிகவும் துயரமானது என்பதை மாநில பொறுப்பாளர் திக்விஜய்சிங்கிடம் தெரிவித்துவிட்டேன். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் காங்கிரஸில் பிறந்தவன்.. …
-
- 12 replies
- 881 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், பாண்டிச்சேரி முதலமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்களே இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94807/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 378 views
-
-
ஆப்கானிஸ்தானின் ஜலதாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் நங்ஹரார் மாகாண தலைநகரமான ஜலதாபாத்தில் இன்று காலை இந்திய தூதரகம் அருகே தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். இருப்பினும் தூதரகத்துக்கோ தூதரகத்தில் பணியாற்றிய இந்தியர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜலதாபாத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.oneindia.in/news/2013/08/03/world-suicide-blast-outside-india…
-
- 0 replies
- 363 views
-
-
ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற புதிய அதிபர் மற்றும் பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப்.கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே , ஜனநாயக மாற்றத்துக்காண இயக்கம் (எம்.டி.சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் டிஸ்வான்கிரை உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 210 தொகுதிகளுக்கான வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபர் முகாபேயின் ஷானு பி.எப். கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தகவலை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆனால் இம் முடிவை எதிர்க்க…
-
- 4 replies
- 599 views
-
-
தமிழ் இனத்தை வீழ்த்தியவன் சிலை இப்போது வீழ்த்தப்பட்டது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தது மட்டுமில்லாமல் அந்த சிலையை தரதரவென்று சாலையில் இழுத்து வந்தார்கள் பாருங்கள் போராட்டக்காரர்கள், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தமிழர்கள் நாம் வணங்குவோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்ட போது அவர்களை துரத்தி துரத்தி அடித்த காங்கிரஸ் குண்டர்கள் இப்போது நினைவுக்கு வருகின்றனர். இந்த குண்டர்கள் இப்போது ஆந்திரா சென்று அங்குள்ள போராளிகளை அடிப்பார்களா ? நிச்சயம் மாட்டார்கள். காரணம் தமிழன் மட்டுமே இங்கு அடிவாங்குவான். திருப்பி அடிக்க மாட்டான் என்ற தைரியம் காங்கிரஸ் களவாணிகளுக்கு. இப்படியே தமிழினம் இருக்காது நாளை தமிழகத்திலும் ராஜீவ் சிலை உடைக்கப்ப…
-
- 13 replies
- 1.1k views
-
-
இணைய தளங்களின் போட்டி காரணமாக தமது தளத்தினை எத்தனைபேர் பார்க்கின்றார்கள் எண்ணிக்கையினை தளத்தின் முன்பாகவோ அல்லது எத்தனை பேர் ஒன்லைனில் நிற்கிறார்கள் என்றோ காட்டுவார்கள். இந்த எண்ணிக்கையினை தொழில் நுட்பரீதியாகவும், இணைய கண்காணிப்பாளர்களுக்கு பணம் கொடுத்தும் தமது வாடிக்கையாளர்களைக் கூட்டி காட்டுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். ஆனால் சமூக தளங்களில் கூட இந்த விடயம் கள்ல சந்தை வரை வந்துள்ளது. எடுத்துக் காட்டாக முக நூல் [பேஸ்புக்] இல் லைக் பண்ணுவதும் அதன் எண்ணிக்கையினை டிஸ்பிளேய் பண்ணிக் காட்டுவதும் இப்போது இணைய சந்தையில் அதிகமாக வலம் வருகின்றது. தமது கருத்தினை, செய்தியினை, விளம்பரத்தினை எத்தனை பேர் விரும்புகின்றனர் என்பதனை காட்டுவதே இதன் நோக்கம். ஆனால் இந்த லைக…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவின் கடற்பகுதிக்குளு செல்லும் தமிழக கடற்தொழிலாளர் படகுகளை சீனாவின் சட்லையிட் உதவியுடன் கண்காணிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா ஈடுபட்டுள்ளது. சிறீலங்கா கடற்படையினரின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இராமேஸ்வரம் முதல் கோடியாக்கரை வரையுள்ள கடற்பகுதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன சிறீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட ஆழம்குறைந்த கச்சதீவு பகுதிக்கு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்,றால் பிடிக்கும் ஆசையில் சென்று வருகின்றார்கள். இதனால் எல்லை தாண்டிசெல்லும் கடற்தொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காகின்றார்க…
-
- 3 replies
- 581 views
-
-
டெல்லி: இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் வரும் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே தங்கள் நாட்டில் கட்டப்பட்ட போர்க்கப்பல்களை வைத்துள்ளன. இந்நிலையில் இந்தியா ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர்க்கப்பலை உள்நாட்டில் கட்டியுள்ளது. முதன் முதலாக உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பல் வரும் 12ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த அறிமுக விழா கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் இடத்தில் நடக்கிறது. 40,000 டன் எடையுள்ள இந்த கப்பலை இந்திய கடற்படையின் டிசைன் அமைப்பு வடிவமைத்துள்ளது. கப்பலில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படுகிறது. கப்பலில் தரையில் இருந்து வான…
-
- 3 replies
- 738 views
-
-
இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சுஜாதா சிங், அண்டை நாடுகளுடனான நட்புறவை வளர்ப்பதே தனது முதல் பணி எனவும், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.புதுதில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான நல்லுறவை வளர்ப்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. அதற்கு வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இல்லாத சூழல் அமையவேண்டியது கட்டாயமாகிறது. 2011-ல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. தற்போது பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்திருக்கிறது. அந்த அரசுடன் விட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடருவோம்.அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதற்கே மு…
-
- 2 replies
- 390 views
-
-
ஸ்நோடனுக்கு தஞ்சம் வழங்கியது ரஷ்யா எட்வர்ட் ஸ்நோடனின் கடவுச் சீட்டு அமெரிக்காவிலிருந்து தலைமறைவான அந்நாட்டின் உளவுத்துறையின் செயல்திட்டத்தை அம்பலப்படுத்தியதாக கூறப்படும் எட்வர்ட் ஸ்நோடனுக்கு ரஷ்யாவில் தஞ்சம் கிடைத்துள்ளது. அவரது தஞ்சக் கோரிக்கைக்கான ரஷ்ய அரசின் ஆவணங்களைப் பெற்றபிறகு, இதுவரை மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த ஸ்நோடன் அங்கிருந்து வெளியேறினார். ஊடகங்களின் பார்வையில் படாமல், ஸ்நோடன் விமான நிலயத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறிச் சென்றதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அவர் எவ்வளவு நாட்கள் ரஷ்யாவில் இருப்பார் என்பது குறித்தோ, எங்கு சென்றார் என்பது குறித்தோ தகவல்களில்லை. ஆனால் அவர் பாதுகாப்பான இடத்திற்கு செல்கிறார் என்று அவரது வழக்கறிஞர் க…
-
- 2 replies
- 532 views
-
-
திருச்சி காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு தமிழகத்தை இரண்டாகப் பிரித்து சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்றும்,மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் என்றும் தமிழ்நாட்டைப் பிரிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான அன்பரசு கூறியுள்ளார். இதே போலத்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனும் கூறி வருகின்றனர். தெலுங்கானா பிறப்பதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்றவை கருத்து தெரிவித்ததில்லை. இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பரசு தமிழகத்தைப் பிரிக்க …
-
- 7 replies
- 678 views
-
-
சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படவுலகின் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வோடு சேர்த்து இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது பிலிம்சேம்பர். இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் மற்றும் தென்னிந்தியாவின் நான்கு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, தேதிகளில் அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நட…
-
- 1 reply
- 525 views
-