உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை 11 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சீனா கடந்த 2007 முதல் 2011ஆம் ஆண்டு வரை, சுமார் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களைப் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த 2012 மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் சீனாவின் ஆயுத ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும். சீனப் பாதுகாப்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்கின்றன. அவை பெரும்பாலும் ஆசிய, மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக…
-
- 0 replies
- 339 views
-
-
ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடைய…
-
- 0 replies
- 307 views
-
-
Auto Trader print edition to stop as focus shifts to digital Trader Media Group, publisher of Auto Trader, will print the final edition of its magazine in June as it moves to become an online digital business. The last edition of its magazines, including Auto Trader, Top Marques, Truck and Plant, Van Trader and Farm Trader, will be published on June 28. The titles will continue online. The company, which is jointly owned by Guardian Media Group and private equity firm Apax Partners, said the decision to stop the print editions "marks the culmination" of its strategy to "migrate all its activities to digital platforms". Zillah Byng Maddick, Interim chief …
-
- 0 replies
- 448 views
-
-
ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…
-
- 0 replies
- 395 views
-
-
வெள்ளைமுடியை கருப்பு முடியாக்கவல்ல புதிய மருந்தை கண்டுபிடித்திருப்பதாக ஐக்கியராஜ்ஜியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்களின் குழு தெரிவித்திருக்கிறது. பேராசிரியை கரின் ஸ்கல்ரூய்டர் தலைமையிலான மருத்துவ ஆய்வாளர்களின் குழு, மனிதர்களின் தலைமுடியின் நரையை மருந்து மூலம் தடுக்க முடியும் என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முடி தனது இயற்கை வண்ணத்தை இழப்பதற்கான காரணம் என்ன என்று தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக ஹைட்ரொஜென் பெராக்ஸைடு வேதிப்பொருள் மனிதர்களின் முடியில் படிவதனால், மனிதர்களின் முடி தமது இயற்கை வண்ணத்தை இழந்து வெண்மையாக மாறுகின்றன. இந்த நடைமுறையை மருத்துவ ஆய்வாளர்கள் ஆக்ஸிட…
-
- 7 replies
- 3.7k views
-
-
ஜூலைக்குள் இந்தியாவின் முக்கிய இடங்களில் தாக்குவோம் என மிரட்டல்! கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ´அல் ஜிஹாத்´ என பெயரிடப்பட்டுள்ள லெட்டர் பேர்டில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் நகலை கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மும்பை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அல் ஜிஹாத் என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லாததால் ஏற்கனவே இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என மும்பை…
-
- 0 replies
- 452 views
-
-
இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது. லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது. இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகம…
-
- 0 replies
- 627 views
-
-
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மூன்று பெண்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் அமெரிக்க மாநிலமான ஒஹையோவின் க்ளீவ்லாண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 16வது வயதில் காணாமல் போன அமாண்டா பெர்ரி என்ற பெண் இந்த வீட்டிலிருந்து பக்கத்து வீட்டார் ஒருவரின் உதவியுடன் தப்பித்து, பின்னர் இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்கு சொன்ன பின்னர்தான் இது அம்பலத்துக்கு வந்தது. 50 வயதுகளில் இருக்கும் மூன்று சகோதரர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜீனா டிஜீசஸ் என்ற பெண் , 204ம் ஆண்டு , அவரது 14வது வயதில், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது …
-
- 4 replies
- 1.4k views
-
-
புதுடெல்லி: பிறந்த குழந்தைகள் ஆண்டுதோறும் தெற்காசியாவில் 4 லட்சம் பேர் இறப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. உலக அளவில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 29 சதவீதமாக உள்ளது. 186 நாடுகளில் உள்ள உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் தெற்காசியாவில் உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 40 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டு தோறும் 28 ஆயிரம் மற்றும் 60 ஆயிரமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=14601
-
- 0 replies
- 571 views
-
-
பங்களாதேஷில் ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, பங்களாதேஷில் அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா தலைமையில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஹிபாசத்-இ-இஸ்லாம் என்று புதிய அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. மதத்தை அவதிக்கும் நாத்திகர்களை தூக்கில் போட வேண்டும். அதற்கு வகை செய்யும் மத அவமதிப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ”டாக்கா முற்றுகை” என்ற போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டாக்காவில் 5 லட்சம் ஆதரவாளர்கள் குவி…
-
- 0 replies
- 355 views
-
-
செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன? ______ செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா? ______ செய்தி: திருப்பதி ஏழுமல…
-
- 0 replies
- 1.3k views
-
-
லெபனான் தீவிரவாதிகளுக்கு சிரியா ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் புகார் கூறிவந்தது. இதை தடுக்கும் விதமாக சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 2 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் வீசிய குண்டு டமாஸ்கஸ் நகரை அதிர வைத்தது. அங்குள்ள ராணுவ முகாம், ஆயுதக்கிடங்கு மற்றும் போர் விமான பிரிவு ஆகிய 3 இடங்களை குறி வைத்து வீசப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவை சேர்ந்த 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆனால் இந்த தகவலை சிரியா வெளியிடவில்லை. எனினும் இந்த தாக்குதல் குறித்து ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கிடையே சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் மோதல் போக்கை கைவிட்டு அமைதி காக்கவேண்டும் என…
-
- 0 replies
- 493 views
-
-
மும்பை மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை, மும்பை நகர போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோல்கட்டாவில் உள்ள அமெரிக்க மையம் மற்றும் தூதரக அதிகாரிக்கு வந்த மர்ம கடிதத்தில் ஜூலை 21ம் தேதியன்று மும்பை மற்றும் கோல்கட்டாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் தலைப்பில் அல்-ஜிகாத் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது பெயரா அல்லது இயக்கத்தின் பெயரா என தெரியவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அமெரிக்கர்கள் தூதரகத்தை காலி செய்துள்ளனர். இதனால் ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில…
-
- 0 replies
- 385 views
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்றிரவு திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயினால் சுமார் 120 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட காடு முற்றிலுமாக அழிந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். காட்டுப் பகுதிக்கு அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அங்குள்ள பண்ணைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குதிரைகள் தீயின் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறி துடித்தன. காற்றின் வேகம் அதிகமாயிருப்பதால், லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு வடமேற்கே உள்ள வெண்டுரா மாவட்டத்தின் அருகில் உள்ள காடுகளிலும், பள்ளத்தாக்குகளில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அருகிலுள்ள இரண்டு ஊரில் உள்ள வீடுகள் தீக்கிரையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சானல் தீவி…
-
- 0 replies
- 440 views
-
-
லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீனப் படையினர் தமது நிலைகளில் இருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு நிலவிய பதட்டம் தணிய ஆரம்பித்துள்ளது. கடல் மட்டத்துக்கு 17 ஆயிரம் அடி உயரத்தில் இமாலய பனிப் பாலைவனப் பகுதியான டவுலட் பெக் ஒட்லி என்ற இடத்தில், சீன துருப்புக்கள் மூன்று வாரம் முன்பு அத்துமீறி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சீனத் துருப்புக்கள் அங்கே தற்காலிக முகாம்களையும் அமைத்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த ஒரு படையணியை சீனத் துருப்புக்களின் முகாமருகே இந்தியா நிலை நிறுத்தியது. இந்த முறுகல் நிலை போரை தோற்றுவித்துவிடுமோ என்ற அச்சங்கள் நிலவிவந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமையன்று இ…
-
- 10 replies
- 690 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர். பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்துள…
-
- 1 reply
- 376 views
-
-
மலேசியாவில் மீண்டும் தேசிய முன்னணி தலைமையிலான ஆட்சி அமைகிறது. மிகவும் பரபரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில் மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் பிரதமர் நஜீப் ரசாக் தலைமியிலான தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 112 இடங்களை அக்கட்சி வென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசிய நேரம் நள்ளிரவு 2 மணி நிலவரப்படி ஆளும் கூட்டணி 119 இடங்களிலும் எதிர்தரப்பு 69 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசியக் கூட்டணி 140 இடங்களிலும், எதிர்தரப்பான மக்கள் கூட்டணி 82 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் இம்முறை ஆளும் கூட்டணி கடந்த தேர்தலை விட கணிசமான அளவில் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றுள்ளன. எத…
-
- 0 replies
- 409 views
-
-
கேள்வி 1: நம் நிலத்தில் உள்ள தண்ணீரை எடுத்து பாட்டிலில்அடைத்து நமக்கே விற்கும் உரிமை எப்படி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கிறது ? கேள்வி 2: தண்ணீர் வியாபாரம் செய்யும் முதலைகளை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன ? டாஸ்மார்க் நடத்தும் அரசு குடி தண்ணீர் விற்பனையை செய்வதில்லை ஏன் ? கேள்வி 3: வருங்காலத்தில் தண்ணீர் பிரச்சனை எப்படி உருவெடுக்கும் ? - தளபதி பிரபு _____________________________________________ அன்புள்ள தளபதி பிரபு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது சமூகக் கடமை என்பது தான் இதுகாறும் இருந்து வந்த பொதுக் கருத்து. ஆனால், தற்போது அப்படி ஒரு கடமையை அரசு சுமக்கத் தேவையில்லை என்கிற கருத்து முதலாளித்துவ அறிஞர்களால் உருவாக்கப்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 19 வயதான ஷோக்கர் சர்னயேவ்வை விசாரணை செய்தபோது, இந்த வெடிகுண்டுகளை அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர் என்ற தகவல் கிடைத்திருப்பதாக, தெரியவருகிறது. வெடிகுண்டுகள் அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்கப் பட்டிருந்தால், உயிர் சேதம் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியிருந்தும், ஏன் அதற்கு முன்னர் மராதன் ஓட்டத்தின்போது வெடிக்க வைக்கப்பட்டன? ஆர்வக் கோளாறுதானாம்! அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வெடிக்க வைக்க வெடிகுண்டுகளை தயாரித்தவர்களுக்கு, ‘இன்ப அதிர்ச்சி’யாக, வெடிகுண்டுகள் சீக்கிரமே தயாராகி விட்டனவாம். இதனால், ஆர்வக் கோளாறில் அவற்றை முதலிலேயே வெட…
-
- 0 replies
- 428 views
-
-
சிரியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று இஸ்ரேலிய போர் விமானங்களால் தாக்கி அழிக்கப்பட்டது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை சிரியாவோ, இஸ்ரேலோ உறுதி செய்யவில்லை. பென்டகனும் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏ.பி. செய்தி ஏஜென்சி, ராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் அமெரிக்காவில் பங்கு ஏதும் கிடையாது எனவும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த வேர்ஹவுஸ் ஒன்றே அதிகாலையில் தாக்கப்பட்டது என்றும் இன்று காலை குறிப்பிட்டது. அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் டிவி சேனல், “இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியா வான் பகுதிமேல் பறந்து தாக்கினவா, அல்லது சிரியா எல்லைக்கு வெளியே இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை” என்கிறது…
-
- 0 replies
- 461 views
-
-
மன்மோகன் சிங்கால் டெல்லியில் எதுவும் பேசமுடியாது: முதல்வர் நரேந்திர மோடி [ டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கால், எதுவும் பேச முடியாது. டில்லியை விட்டு வெளியே வரும் போது மட்டுமே அவரால் பேச முடியும். அதனால் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடகாவில் வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக நேற்று இறுதிக் கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்தது. பெல்காமில் நடைபெற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கால், டில்லியில் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல. டில்லியை விட்டு, வெளியே வரும் போது பேசுவார். அதுவ…
-
- 1 reply
- 355 views
-
-
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது. வெயில் கொடுமையால் வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், மைசூர் மாவட்டம் பிரியபட்ணா தொகுதியில் பா.ஜ வேட்பாளர் திடீரென இறந்ததால், அங்கு தேர்தல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 223 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் காங்கிரஸ் 224, பா.ஜ 222, கர்நாடக ஜனதா கட்சி 209, மதச்சார்பற்ற ஜனதா தளம் 222, பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 188 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 30 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இத்தனை அணிகள் போட்டியிட்டாலும், காங்கிரசுக்கும், பா.ஜ.வுக்கும் இடையேதான் பலப்பரீட்சை நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான பாஜவுக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ ஏற்கவில்லை. இதையடுத்து தனது தரப்பு நியாயத்தை விளக்கிய ராசா, இது தொடர்பாக பி.சி.சாக்கோவுக்கு விளக்கம் அனுப்பினார். அதில், பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் தொலைதொடர்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இந்த விளக்கத்தை கூட்டுக்குழு அறிக்கையில் சேர்க்க வ…
-
- 0 replies
- 275 views
-
-
லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்து கண்ணாமூச்சி காட்டும் சீனாவுக்கு, ஈரான் நாட்டில் ஆப்பு வைத்திருக்கிறது இந்தியா. அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தலைநகர் டெஹரானில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது முக்கியத்துவம் வாய்ந்த சாபகார் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஆர்வமாக இருப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல், சீனாவுக்கு எதிராக வெளியுறவுக் கொள்கையில் இந்தியா அடைந்துள்ள வெற்றியாக கருதப்படுகிறது. சீனாவின் முத்து மாலை திட்டத்தின் படி, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு…
-
- 0 replies
- 795 views
-
-
3 மே, 2013 இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சிறை ஒன்றில் இருந்த பாகிஸ்தானிய கைதி ஒருவர் மீது சக கைதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் உத்தரவிட்ட மறுதினம், சனவுல்லா ஹக் என்னும் இந்த பாகிஸ்தானிய கைதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய சிறைக் கைதிகளால் தாக்கப்பட்ட நிலையில் ஒரு இந்திய கைதியான சரப்ஜித் சிங் வியாழனன்று மரணமானார். உளவுபார்த்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரது கிராமத்தில் அவரது இறுதி நி…
-
- 1 reply
- 339 views
-