Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அப்சல்குரு தூக்குக்கு பழிவாங்குவோம்: லஷ்கர் மிரட்டல்! மும்பை: அப்சல்குருவுக்கு தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்கு பழிவாங்க தாக்குதல் நடத்துவோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல்குரு நேற்று காலை தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதற்காக பழிக்கு பழி வாங்க இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா என்பவர் பத்திரிகை அலுவலகம் ஒன்றை தொடர்பு கொண்டு இந்த மிரட்டலை விடுத்துள்ளார். "அப்சல்குருவை தூக்கிலிட்டதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.பழிக்குப…

  2. நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: பா.ஜ. தகவல் ஹைதராபாத்: வருகிற அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ஹைதரபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மழைக்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்து முடிவு செய்யலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதால் மக்களுக்கு ஆதரவான பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம்.சில மசோதாக்களை நிறைவேற்றலாம்.ஆனால் மக்களுக்கான சலுகைகளை வழங்க மத்திய அரசிடம் …

  3. அலகாபாத்: உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பாலம் ஒன்று விழுந்து நொறுங்கியதால், பயணிகளிடையே பீதி உண்டாகி கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகா கும்பமேளாவுக்காக குவிந்த கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், அலகாபாத்தில் இன்று இரவு இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. http://news.vikatan.com/?nid=12379

  4. ஒரு வழியா கருணாநிதிக்கு நன்றி கூறினார் ராகுல் கருணாநிதியின் வாழ்த்துக்கு, ஒரு வழியாக நன்றி தெரிவித்துள்ளார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல். தி.மு.க.,வினர் கிளப்பிய பெரும் சர்ச்சைகளுக்குப் பின், நன்றி கடிதத்தை, கருணாநிதிக்கு, ராகுல் அனுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாடு, ஜனவரி மாதம், 18, 19 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில், கட்சியின் துணைத் தலைவராக, ராகுல் அறிவிக்கப்பட்டார். இதற்கு, வாழ்த்துத் தெரிவித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜன., 19ம் தேதி, ராகுலுக்கு கடிதம் எழுதினார். சந்திப்பதை, ராகுல் தவிர்க்கிறார்? வாழ்த்துக் கடிதம் அனுப்பி, 20 நாள்களுக்கு மேலாகியும், அதற்கு ராகுல் நன்றி தெரிவிக்கவில்லை. தமிழகம் வரும்போது,…

  5. கும்ப மேளா ‘3 கோடி’ பக்தர்கள் புனித நீராடுகின்றனர் இந்தியாவில் மஹா கும்ப மேளா பண்டிகையின் முக்கிய நீராடல் தினமான ஞாயிறன்று கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் மூன்று கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6 நீராடல் நிகழ்வுகளைக் கொண்ட மஹா கும்ப மேளா நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய மனித ஒன்று கூடல் என்று வர்ணிக்கப்படுகிறது.கும்ப மேளா ஆரம்பமான ஜனவரி 14ஆம் தேதியன்று 80 லட்சத்துக்கும் அதிகமானோர் நன்னீராடினார்கள். புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் பாவங்கள் கழியும் என்றும் விமோச்சனம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற இந்த மஹா கும்ப மேளா ஜனவரியிலும் பிப்ரவரியிலுமாக 55 நாட்கள் காலத்து…

  6. தலிபான் தற்கொலைப்படை தலைவர் சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கந்தகார் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெய்வண்ட் மாவட்டத்தில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது அப்துல் பகி என்ற தலிபான் தீவிரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.ருஜி என்ற பெயராலும் அறியப்பட்ட இவன், கந்தகார், உருஸ்கன், ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் இயங்கி வரும் தலிபான் தற்கொலை படைகளின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்த தலிபான் தற்கொலை படையினரை ஏவியவன் அப்துல் பகி என ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் கூறியுள்ளனர…

  7. நீங்கள் கனடிய குடியுரிமை பெற்றவராக இருப்பின் வேறு நாட்டுக் குடியுரிமையுடன் இருக்கக் கூடாது. அப்படி இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் இறங்குவோரின் கனடியக் குடியுரிமை விரைவில் பறிக்கப்படுவதற்கான ஆபத்தும் உள்ளது. இதற்கான தனி நபர் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவாதம் ஒன்றும் இரு நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றில் நடந்துள்ளது. அப்போது பேசிய ஜேசன் கென்னி பல்கேரியா உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் இரட்டைக் குடியுரிமையை கையில் வைத்துக் கொண்டு கனடாவை அச்சுறுத்தும் வகையிலும் , நாட்டிற்கு அவப்பெயர் தேடித் தரும் வகையிலும் நடந்து கொள்வதாகக் கூறினார் எனவே இரட்டைக் குடியுரிமையை வைத்துக் கொண்டு தீவிரவா…

  8. ஒவ்வொரு வருடங்களையும் ஒவ்வொரு விலங்கினங்களைக் கொண்டு அழைக்கும் சீனர்கள் பிறக்கவுள்ள புத்தாண்டை பாம்பு வருடமாக அழைக்கின்றனர். சீனர்களின் நம்பிக்கைப்படி பாம்பு என்பது நெருப்பை குறிக்கிறதாம். ஆகையால் அதிக சக்தியை அளிக்கவுள்ளதாம். ஆனால் அதே நேரம் இதற்கு எதிர்மறையான பண்புகளையும் தர இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதைவிட பொருளாதார நிலையில் வளர்ச்சியும் மந்தமும் இருக்குமென கூறுகின்றனர். மேலும் ஆசிய கண்டத்தில் இயற்கை பேரழிவுகள், பாதிப்புக்கள் ஏற்படலாம் என பண்டைய சீனக் கலை நிபுணர்கள் கணித்துள்ளனர். எதுவாகிலும் சீனா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் சீனர்களுடன் ஏனைய மக்களும் பிறக்கப்போகும் புத்தாண்டை மகிழ்ச்சியாக உற்சாகத்துடன் வரவேற்க தயாராகிவருகின்றனர். http://www.4tam…

    • 5 replies
    • 499 views
  9. டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்! டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ: கேள்வி 1: நாடாளுமன்றம் தாக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே அரசும் போலீசும் நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று …

  10. இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காளில் 146,000 அப்பாவிப்பொது மக்களை பொசுக்கி தள்ளிய போது தான் கூட்டு வைத்திருந்த மத்திய அரசை தட்டி கேடக மறுத்துவிட்டு என்றோ ஓய்ந்து போய்விட்ட சகோர யுத்தம் என்ற நொண்ட்டிச்சாட்டில் தூங்கிய கருணாநிதி , தனது குடும்ப சண்டையை மூடி மறைக்க அடுத்தகட்டமாக, ஈழத்தமிழர் விவகாரம் சம்பந்தமாக அமெரிக்காவினதை விட இன்னொரு பிரேரணையை இந்தியா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரவேண்டும் என்று கேட்டதற்காக, ஜெயலைத்தாமீது பாயந்திருக்கிறார். செய்தி: ஈழத்தமிழர் விடயத்தில் காலம் கடந்து நாடகம் ஆடுகின்றார் ஜெயலலிதா - கருணாநிதி குற்றச்சாட்டு! [saturday, 2013-02-09 23:02:35] இலங்கைத் தமிழர்கள் மீது தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன…

    • 2 replies
    • 540 views
  11. டெல்லியைப் போல தென்னாப்பிரிக்காவில் பாலியல் வன்முறை: தொடர் போராட்டம் கேப் டவுன்: தென் ஆப்பிரிக்காவில் 17 வயது பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் கொடூர மறைவுக்கு நீதி கேட்டு மக்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். வெஸ்டர்ன் கேப் (Western Cape) பகுதியில் உள்ள ப்ரெடஸ்டார்ப் (Bredasdorp) சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். கட்டுமான பணியிடம் ஒன்றில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அந்த பெண், தனது நிலைக்கு காரணமான…

  12. மிகப் பெரிய பனிப்புயலால் நகரமே வெள்ளை துணியால் மூடப்பட்டது போல காட்சியளிக்கிறது. வீடுகளுக்கு முன் பலமணிநேர பனி பெய்துள்ளதால், வீடுகளில் வசிக்கும் அனைவரும் அதிக நேரம் செலவிட்டு தங்கள் வீட்டிற்கு முன் உள்ள பனிக்குவியலை அகற்றினார்கள். அனைத்துபள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுள்ளன, அதனால் குழைந்தைகள் அனைவரும் வீடிற்கு முன் உள்ள பனிக்குவியலில் விழுந்து விளையாடி மகிழ்ந்தனர். வீடுகளுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மூடியபடி பனி பொழிந்திருந்தது. கடந்தஇரண்டு வருடங்களாக பொய்த்து போன பனிப்பொழிவு இந்த வருடம் வட்டியுடன் முதலையும் சேர்த்து இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. குறைந்தது 25 முதல் 40 செ.மீ பனி பொழியும் என எதிர்பார்க்கப் படுகிறது. …

  13. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்! சீமான் உண்ணாவிரதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வருகிற 27ஆம் திகதி தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் புதுவையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருந்தனர். இதற்கு புதுவை பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வேண்டி நாம் தமிழர் கட்சியினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 4ஆம் திகதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், நாம் தமிழர் கட்சியினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சீமான் நேற்று இர…

  14. பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் தாக்குதல் : 7 பயங்கரவாதிகள் சாவு பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய குண்டு வீச்சில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.வடமேற்கு பாகிஸ்தானில் வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில், பாபர் கர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு குண்டுகளை வீசித் தாக்கியது. இதில் அந்த வீடு தரைமட்டமானதாகவும் அதில் இருந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.இத்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வானொலி கூறியது. தாக்குதல் நடைபெற்ற பகுதி, தலிபான் மற்றும் அல்காய்தா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செ…

  15. உலகின் தங்கம் தயாரிக்கும் நாடுகளில் சீனா தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. தங்கத்தை வாங்கும் நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது 2012 ஆம் ஆண்டின் நிலவரப்படி சீனாவின் தங்கம் உற்பத்தி கடந்த ஆண்டை விட 11.66 சதவீகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி சுமார் 403 டன் தங்கத்தை உற்பத்தி சீனா உற்பத்தி செய்கிறது. சீன கோல்ட் கூட்டமைப்பின் அறிக்கைப்படி 1949 ஆண்டைவிட இந்த ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி நூறு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது சீனாவின் தங்க உற்பத்தி அளவு எ‌ன்பது வெறும் 4.07 டன்னாக இருந்தது. இதன் மூலம் தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தென் ஆப்‌ரிக்காவை விட தங்க உற்பத்தியில் சீனா உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளது. தங்கத்தை வாங…

  16. வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது: பான் கி மூன் வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தக் கூடாது. மாறாக, மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் தன் நாட்டு மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய ஐ.நா. முயற்சி செய்கிறது. ஆனால், அந்நாட்டின் அணு ஆயுதச் சோதனை அறிவிப்பு காரணமாக, சர்வதேச நாடுகள் தயக்கம் காட்டுவதால், நிதிப்பங்களிப்பு குறைவாக உள்ளது. எனவே, ஐ.நா. அவசரகால நிவாரண நிதியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் எச்சரிக்கை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில…

  17. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்ட்ட ராஜஸ்தான் சிறுமி கவலைக்கிடம் ராஜஸ்தானில் ஒரு கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி‌யி‌ன் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.ராஜஸ்தானில் உள்ள சிகாரில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 6 பேர் கும்பல் கடத்திச் சென்று கொடூரமாக பலாத்காரம் செய்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, ஜெய்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அடிவயிற்றில் இதுவரை 6 ஆபரேஷன்கள் செய்யப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று மாலை சிற…

  18. நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார் : காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீவிரவாதி அப்சல்குரு இன்று காலை 8 மணிக்கு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை தொடர்ந்து அப்சல் குருவின் மரண தண்டனை இன்று காலை ரகசியமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் 5 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் டெல்லி காவல் துறையை சேர்ந்த 5 போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண்…

  19. முன்னாள் காவல்துறை சகாவை தேடும் காவல்துறை தென் கலிபோர்னியாவில் முன்னால் காவல்துறை ஊழியரை தேடி பல நூறு பேர் ஒரு நாளுக்கும் மேலாக தேடுகின்றார்கள். இவர் மூன்று காவல்துறை ஊழியர்களை சுட்டார், இதில் ஒருவர் இறந்தார். அத்துடன் தந்து காதலியையும் கொண்டுள்ளார். மூன்றாவதாக காவல்துறை தொழில்சங்க தலைவரின் மகளையும் கொன்றுள்ளார். இவருக்கும் காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என கூறப்படுகின்றது. தனது இந்த 'பிசாசு' செயலை விளங்கப்படுத்தி சி.என்.என்.க்கு எழுதியும் உள்ளார். http://www.cnn.com/2013/02/07/us/lapd-attacks/index.html?iref=obinsite

    • 3 replies
    • 517 views
  20. ஒரே ஏவுகணையில், பல இலக்குகளை தாக்கும், நீண்ட தூர, அக்னி-6 ஏவுகணை தயாரிப்பில், இந்திய ராணுவம் மும்முரமாக உள்ளது, என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர், வி.கே.எஸ்.சரஸ்வத் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:அக்னி-5 ஏவுகணை, 5,500 கி.மீ., தாக்குதல் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அந்த ஏவுகணை, கடந்த, ஏப்ரலில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இப்போது, ராணுவ விஞ்ஞானிகள், அக்னி - 6 ஏவுகணை தயாரிப்பில் மும்முரமாக உள்ளனர்.அக்னி-5 ஏவுகணையை விட, இந்த ஏவுகணை, அதிநவீனமானது. அதை விட, அதிக தூரம் பறந்து, இலக்கை தாக்க கூடியது. மேலும், ஒரே ஏவுகணையிலிருந்து, பல இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை வெற்றி பெறுமானால்,…

    • 2 replies
    • 636 views
  21. குஜராத்தில், சமீபத்தில் நடந்த, சட்டசபை தேர்தலின் முடிவுக்கு பின்,அம்மாநில முதல்வர், நரேந்திர மோடி மீதான விவகாரத்தில், புதிய பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம், என, ஜெர்மன் தூதர், மைக்கேல் ஸ்டெயினர் கூறினார். குஜராத்தில், 2002ல், ஏற்பட்ட கலவரத்தில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில், பெரும்பாலானோர், முஸ்லிம்கள். இதையடுத்து, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடியை, அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், தவிர்க்க துவங்கின.அவருடனான, தொடர்புகளையும் துண்டித்தன. இந்நிலையில், சமீபத்தில் நடந்த, குஜராத் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்று, முதல்வரானார். தற்போது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின், பிரதமர் வேட்…

  22. அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு ‌1000க்கும் மேற்பட்ட விமானஙகளின் சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டதன் ‌விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9-110800819.html http://www.cnn.com/2013/02/08/us/northeast-blizzard/index.html?hpt=hp_c1

    • 8 replies
    • 883 views
  23. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை இன்னும் ஓரிரு தினங்களில் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு சக்தித் துறையின் முதன்மை ஆலோசகர் ரவி பூஷன் குரோவர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தொடர் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, முதல் அணு உலை முழு வீச்சில் இயங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அணு உலையின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறிய குரோவெர், அதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கப்படவில்லை என்றார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. http://puthiyathalaimurai.…

  24. டொரண்டோ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி நிலவுவதால், சில பள்ளிகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் சில பள்ளிகள் வகுப்புகளை ரத்து செய்துள்ளன. மேலும் சாலையில் பனி அடர்ந்து காணப்படுவதால், சில பள்ளிகளின் பேருந்துகள் இயக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே டொரண்டோ பகுதிகளில் பல பள்ளிகளின் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. The Catholic and public district school பள்ளி நிர்வாகம், தங்களது அனைத்து பள்ளி பேருந்துகளையும் இன்று ரத்து செய்துள்ளன. ஆனாலும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோலவே York and Durham பகுதி பள்ளியும் மற்றும் Trillium Lakelands District School Board பள்ளி நிர்வாகமும் அறிவிப்பு செய்துள்ளன. University of To…

  25. அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை கிடையாது ஈரான் தலைவர் அயதுல்லா காமெனி உறுதி அமெரிக்காவுடன், அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் தயாராக இல்லை,” என, அந்நாட்டின் தலைவர் , தெரிவித்துள்ளார். ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா, குற்றம்சாட்டி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், “அணு ஆயுதம் தொடர்பான பிரச்னையை தீர்க்க, ஈரான் பேச்சு வார்த்தைக்கு முன் வரவேண்டும்’ என, தெரிவித்திருந்தார்.இது குறித்து, ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறியதாவது:மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவின் திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டன. எனவே,எப்படியாவது வெற்றி பெறும் நோக்கில், அந்நாடு, ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஒருபுறம் துப்பாக்கியை நீட்டிக்கொண்டு, மறுபுறம் பேச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.