Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புளோரன்ஸ் கசே பிரான்சின் வடபகுதிலுள்ள பா து கலே( Pas-de-Calais)மாவட்டத்தில் இருக்கும் பெத்துயின்(Béthune)என்ற ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்த 39வயதுப் பெண். கடந்த 23.01.2013 புதன்கிழமையும் 24.01.2013வியாழக்கிழமையும் அவர் பிரான்சிலுள்ள அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை தன்பக்கம் திருப்பிய ஒருவராக இருந்தார்.பிரான்சிலுள்ள முக்கியமான அனைத்து காட்சி ஊடகங்களிலும் அவரது நேர்காணல்கள் ஒளிபரப்பாகின. பிரான்சின் தற்போதைய அரசுத்தலைவர் பிரான்சுவா ஹொல்லாந்த் முன்னாள் அரசுத்தலைவர் நிக்கோலா சார்க்கோசி முதல் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் என்று அனைத்து தரப்பினரும் அவரைப்பற்றி பேசினார்கள். இத்தனைக்கும் அவர் பிரெஞ்சுக் குடியரசைச் சேர்ந்த ஒரு சராசரிப் பெண்;. ஆனால் அந்நிய நாடொன்றில் ஆபத்…

    • 5 replies
    • 635 views
  2. மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லிக்கு மரண தண்டனை விதிக்க இந்தியா வலியுறுத்தல் மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரன் டேவிட் ஹெட்லிக்கு அமெரிக்க நீதிமன்றம் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததது போதாது, மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப்பை தவிர மற்றவர்கள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இந்த தாக்கு தலுக்கு மூளையாக செயல்பட்டவன் டேவிட…

  3. கடந்த சில வாரங்களாகவே கடும் குளிரால் வாடிய அமீரக மக்கள், நேற்றும், இன்றும் துபாயில் கடும் மூடுபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக அபுதாபி - துபாய் அதிவேக போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருபது விமான சேவைகளும் ரத்தாகியுள்ளது. மூடு பனியில் மூழ்கிய துபாய் நகரின் சில படங்கள் Sheik zayed Road New Etisalat Building Dubai Metro Clock Tower Sky scrappers in Sheik Zayed Road Poor visibility to walk Dubai Creek Near Gold Souq Women in fog Dangerous driving Image Source: Gulf News.

  4. ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா? “அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும் ஆட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் மக்கள் தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந்தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங்களுக்கும் இல்லாவிட்டாலும் பல பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராக செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.” ஆகஸ்ட் 2010ல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவ…

  5. புதுடில்லி :""வரும் லோக்சபா தேர்தலில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி முக்கிய பங்காற்றுவார்,'' என, பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர், ராஜ்நாத் சிங் கூறினார்.இது குறித்து அவர், நேற்று கூறியதாவது:நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தை, அனைத்து துறைகளிலும், மாதிரி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார். மாநில நிர்வாகம் மிக சிறப்பாக உள்ளது; அவரின் புகழ், நாடு முழுதும் பரவியுள் ளது. வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக அவர் முக்கிய பங்காற்றுவார்; அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.கட்காரியை மீண்டும் கட்சி தலைவராக ஆக்க வேண்டும் என, எங்கள் தாய் அமைப்பான, ஆர்.எஸ். எஸ்.,சில் இருந்து எந்த நிர்பந்தமும் வரவில்லை. கட்காரி தொடர்புடைய இடங்களில், சோதனை நடத்தப்பட்டதை மீடியாக்கள் பெரிதாக்கி காட்…

    • 0 replies
    • 330 views
  6. இன்றைய வாழ்க்கை சூழலில் விமானத்தில் பயணிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு ஊர்தியாகும். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம். உலகை நாம் நேரில் காண வழிவகுக்கும் ஒரு போக்குவரத்து. ஆனால் இது எவ்வளவு வசதியானதோ அந்த அளவுக்கு பாதுகாப்பும் இல்லாதது. Jet Airliner Crash Data Evaluation Centre (JACDEC) என்கின்ற ஒரு நிறுவனம் விமான விபத்துகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்து அதன் வருடாந்திர விமானத்துறை பாதுகாப்பு ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது. இந்த ரேங்கிங் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றால் எத்தனை விமானங்கள் சேதமாகின, எத்தனை உயிரிழப்புகள் ஏற்ப்பட்டன என்பதை வைத்தும் (கடந்த 30 வருடங்களில்) மேலும் சில அடிப்படைகளை வைத்தும் வழங்கப்படுகின்றன. அ…

  7. வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்துவந்த கருத்தொன்றை பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது. இன்னம்ரெட்டியார்பட்டி, இந்தியா — தெற்கு இந்தியாவின் அந்த வறிய பகுதியில், தனது மனைவி, பிள்ளைகளோடு உடல்வலுவற்ற தாயை வீட்டில் விட்டுவிட்டு, மைக்கேல் ஒரு துணி நெய்யப்படும் ஆலைக்கு வேலைக்குச் சென்றான். அவன் சில மணி நேரத்தின் பின்பு திரும்பிவந்தபோது அவனுடைய மனைவியினால் நஞ்சு போன்ற நீரம் பருக்கி நஞ்சூட்டி, ‘தாலிக்கூதல்’ என அறியப்படுகின்ற, உள்ளூர் வகையான இரக்கக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது தாயாருடைய உடல் ஒரு நாற்காலிய…

  8. சிங்கப்பூர்: என்னை பிரதமர் வேட்பாளர் என்று திரும்பத் திரும்பத் கூறுவது எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ப.சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு சில மாதங்களாக அடிபட்டு வந்தது. இதற்கு சமீபத்தில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் சிஎன்பிசி டிவி 18தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், எனது அளவு, எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். எனவே நான் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்வி எனக்கு ஆச்சரியமாகவும், வினோதமாகவும் இருக்கிறது. எனது எல்லைக்குட்பட்டு நான் செயல்பட்டு வருகிறேன். …

  9. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி மிக, மிக மோசமாக உள்ளதாக ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஏபிபி நியூஸ்-நீல்சன் நிறுவனம் சார்பில் யார் சிறந்த பிரதமராகலாம் என்றும் அடுத்த பிரமதராகும் தகுதி குறித்தும் ஓர் ஆய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது. இந்த கருத்து கணிப்பு இந்தியாவின் 28 நகரங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. முதல் தகவலாக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. அந்த கூட்டணிக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதிய…

  10. ""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன்…

  11. டேராடூன்: டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். "பிசியோதெரபி' படித்த இந்த மாணவி, கடைசியாக எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிஉள்ளன. இதுதொடர்பாக, மாணவி படித்த, சாய் நிறுவனத்தின் டீன் ஹரீஷ் அரோரா கூறியதாவது: பாலியல் பலாத்காரத்தில் பலியான மாணவி, 2008ம் ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, எச்.என்.பி.கார்வால் பல்கலையின் கீழ் செயல்படும், எங்கள் கல்வி நிறுவனத்தில், பிசியோதெரபி பாட வகுப்பில் சேர்ந்தார். நான்கு ஆண்டு பட்டப்படிப்பான அதில், அவர் கடைசியாக எழுதிய தேர்வில், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து, 73 சத…

  12. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) இன்று (ஜனவரி 25) வெளியாக இருந்த விஸ்வரூபம் படத்திற்கு, இஸ்லாமியர்களின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நாளை (சனிக்கிழமை) உயர்நீதிமன்ற நீதிபதிக்கு விஸ்வரூபம் படம் போட்டு காண்பிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளனவா என்பது பற்றி நீதிபதி ஆய்வு செய்வதற்காக இந்த திரையிடல் நடைபெறுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கும் ஏராளமான காட்சிகள் உள்ளதாகவும், எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இஸ்லாமி…

  13. டெல்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் அனுமதி கட்டணம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. …

  14. சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…

  15. ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…

  16. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) சென்னையில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் புதிய மருத்துவமனையாகப் போகிறது. ஆம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின் போது சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் தமிழக சட்டசபை இயங்கி வந்தது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய கட்டிடத்தில் செயல்பட்ட தலைமை செயலகத்தை, மீண்டும் பழைய ஜார்ஜ் புனித கோட்டைக்கே மாற்றப்பட்டது. மேலும் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்குறிஞர் ஆர…

  17. சென்னை,ஜன.25 (டி.என்.எஸ்) உரத் துறையில் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள அந்தத் துறையின் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமன் மன்மோகன் சிங்கிட வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உரங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிலையாக இருக்கும் வகையில், உரத்துக்கான மானியத்தை அவ்வப்போது மாற்றி நிர்ணயிக்கும் முறையை மத்திய அரசு கடைப்பிடித்து வந்தது. இதனால் உரங்கள் விவசாயிகளுக்கு ஓரளவு நியாயமான விலையில் கிடைத்து வந்தன. 2010 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கொள்கையின்படி, உரங்களுக்…

  18. உலகளாவிய உணவுப் பொருள் ஊக வணிகத்தில் கோல்டமேன் சாக்ஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு $400 மில்லியன் (சுமார் ரூ 2,000 கோடி) லாபம் சம்பாதித்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் பணத்தை கோதுமை, மக்காச் சோளம், காபி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களின் மீதான ஊக வணிகத்தில் ஈடுபடுத்தியதாக கோல்ட்மேன் சாக்ஸின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. “போதுமான உணவு வாங்க முடியாமல் உலகெங்கிலும் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியாக இருக்கும் நிலையில், உணவுப் பொருட்களின் விலை மீது சூதாடி கோல்மேன் சாக்ஸ் அலுவலர்கள் தங்களது போனசை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் உலக முன்னேற்ற இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டீன் ஹெய்க். 1990களில் இறுதியில் தாராளமய கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு உணவுப் பொரு…

    • 0 replies
    • 389 views
  19. சீனாவில், 875 கோடி ரூபாய் அளவுக்கு, 20 வீடுகளை வாங்கி குவித்த, பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. சீனாவில், தனி நபர், பல வீடுகளை வைத்திருக்க தடை உள்ளது. இதை மீறி பலர் ரகசியமாக வீடுகளை கட்டி, வாங்கி வருகின்றனர். சமீபத்தில் அரசு அதிகாரி ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் பெயர்களில், 31 வீடுகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, சீன வங்கி அதிகாரியான கோங் அய்அய், என்ற பெண், ஷான்சி மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், தலைநகர் பீஜிங்கிலும், 20 வீடுகள் கட்டி, வாங்கியுள்ளார். பல்வேறு பெயர்களில் வீடுகளை கட்ட, பதிவுத்துறை அதிகாரிகள், இவருக்கு உதவியுள்ளனர். இணைய தளத்தில் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, கோங் அய்அய், பல இடங்களில் வீடு கட்டியிருப்பது தெரிய வந்…

    • 0 replies
    • 546 views
  20. இங்கிலாந்து நாட்டின் Derbyshire என்ற இடத்தில் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு பயங்கர விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 42 வயது தந்தை ஒருவர் தன்னுடைய 11 வயது மகளுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மனைவி, தனது 9 வயது மகனுடன் இன்னொரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த கார், திடீரென சாலையை விட்டு விலகி, ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து, அருகிலுள்ள ஆற்றில் விழுந்து கவிழ்ந்தது. பின்னால் வந்த அவருடைய மனைவியின் காரும், அதேபோல கட்டுப்பாட்டை இழந்து, அதே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டாவது காரில் வந்த மனைவியும், மகனும் முதல் கார…

    • 0 replies
    • 424 views
  21. சென்னை:""என் குடும்பத்தில், சம்பந்தம் எடுத்துள்ளதால், போலீஸ் அதிகாரி சண்முகராஜேஸ்வரனுக்கு, என்ன விளைவு ஏற்படுமோ...'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். கருணாநிதி கொள்ளு பேத்தியும், சினிமா நடிகராக இருந்த, மு.க.முத்து-சிவகாம சுந்தரியின் பேத்தியும், தொழில் அதிபர் ரங்கநாதன், தேன்மொழி மகளுமான அமுதவல்லிக்கும், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் மகன் சித்தார்த்க்கும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:டில்லியில், எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்பற்று தலைவர்கள் பங்கேற்கின்றனர்; தமிழகத்தில் அந்த நிலை இல்லை.கருணாநிதி வீட்டில் அல்லது அவரது குடும்பத்தார் வீட்டில், இதுபோன்ற, சம்பந்தங்…

    • 0 replies
    • 687 views
  22. நாக்பூர்: தமது நிறுவனங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகளை மிகக் கடுமையாக மிரட்டியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கத்காரி. பாஜகவின் தலைவராக இருந்த கத்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் மீண்டும் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதனால் அவர் தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. ராஜ்நாத்சிங் மீண்டும் தலைவரானார். இந்நிலையில் டெல்லியில் இருந்து நாக்பூர் திரும்பிய கத்காரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கத்காரி, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த அதிகாரிகள் அனைவரும் எங்கே போவார்கள்? ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அந்த அதிகாரிகளை காப்பாற்ற காங்கிரஸ் தலைவ…

    • 0 replies
    • 478 views
  23. சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…

  24. மத்திய உரத்துறையில் மானியம் வழங்குவது தொடர்பான விவகாரத்தை பயன்படுத்தி உர நிறுவனங்களுக்கு லாபம் கிட்டுமாறு முறைகேடு நடத்தி மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தமிழக முதல்வர் ஜெ., திடுக் புகார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி தி.மு.க.,வை சேர்ந்த மத்திய உரத்துதுறை அமைச்சர் அழகிரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வுக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உரத்துறையில் பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. உரங்களை சந்தைக்கு அனுப்புவதில் நடந்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா கூட அதிருப்தி தெரிவித்துள்ளார். மானியம் குறையும் என கருதி தேவையில்லாமல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.