Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கியூபெக் நகரத்திலுள்ள லே சொம்மே இரண்டாந்தரப் பள்ளியில் மூன்று பதின்மப் பருவத்தினர், வகுப்பு நண்பரையும் பள்ளி அவை அதிகாரிகளையும் கொலை செய்யச் சூழ்ச்சி செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்காக ஓர் இரவைச் சிறையில் கழித்தனர். 14, 15 அகவையான இரு இளம் ஆடவரையும், அத்தொடு 16 அகவையான இளம் பெண் ஒருவரையும் காவல்துறையினர் புதன்கிழமை உசாவல் (‘விசாரணை’) செய்தனர். அனைவரும் மாநிலத் தலைநகரத்து ‘லே சொம்மே’ உயர்தரப் பள்ளி மாணவராவர். ஐயுறவானோரை இளைஞர் நயனகத்தில்(court) தோன்றற்கு வியாழனன்று நேரம் (குறி)ஒதுக்கப்பட்டுள்ளது. “கொலை செய்வதற்கு சூழ்ச்சித்திட்டம் போட்டதுவே குற்றச்சாட்டாக இருக்கும்” என்று காவல்துறையது பேசவல்லவரான கதறீன் வியெல்கூறினார். மின்னணுக் கருவிகள் கைப்பற்றப்பட்டு மாணவருடைய ‘லொக…

  2. 'மூச்சு முட்ட' ஆரம்பித்துள்ள சீன பொருளாதார வளர்ச்சி.. 7.8 சதவீதமாக சரிந்தது! Posted by: Chakra Published: Friday, January 18, 2013, 13:23 [iST] பெய்ஜிங்: உலக பொருளாதாரமே நிலைகுலைந்த நிலையிலும் தொடர்ந்து படுவேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சீன பொருளாதாரம் கடந்த 13 ஆண்டுகளில் முதல் முறையாக மூச்சு முட்ட ஆரம்பித்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வந்த சீனாவின் பொருளாதாரம் முதல் முறையாக மிகக் குறைந்த அளவான 7.8 சதவீத வளர்ச்சிக்கு சரிந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 10.4 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2011ல் 9.3 சதவீதமானது. இந் நிலையில் இப்போது மேலும் சரிந்து 7.8 சதவீதத்துக்கு வந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. சீனப் பொருட்களை நம்பித்தான் பல …

    • 10 replies
    • 709 views
  3. பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யும்படி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இந்தவிடயம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, கூறியுள்ளதாவது.... தெற்காசிய கண்டம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் கூட சமீபத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை மிக மிகப்பெரிய ஊழல் குற்…

    • 3 replies
    • 624 views
  4. பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தொடர்புடைய ஊழல் விவகாரத்தை விசாரித்துவந்த போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்லாமாபாத்தில், அவர் தங்கியிருந்த அரச விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் போலிஸ் அதிகாரி கம்ரான் ஃபய்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் நீர் மற்றும் சக்தி வளத்துறை அமைச்சராக இருந்தபோது தற்போதைய பிரதமர் அஷ்ரப் பெருமளவு இலஞ்சம் வாங்கியுள்ளதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ஆனால் பிரதமர் அந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறார். கம்ரான் உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்று …

  5. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தானி…

  6. பர்மாவில் இனப்படுகொலை!!!! Thirumurugan Gandhi added 5 photos. தமிழீழத்திற்கு அடுத்த படியாக ஐ. நாவின் அயோக்கியத்தனம் பர்மா என்கிற மியான்மரில் தேசிய இன விடுதலைக்காக போராடுகின்ற “கச்சின் விடுதலை போராளிகள் மற்றும் மக்கள்” மீது பர்மிய ராணுவம் வான்வெளி தாக்குதலை டிசம்பர் 30லிருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. நாங்கள் 2011 மே மாத கருத்தரங்கில் குறிப்பிட்டதைப் போல தமிழீழத்திற்கு அடுத்தப்படியாக பர்மாவில் இனப்படுகொலை நடக்கு வாய்ப்பு உள்ளது என்கிற அச்சம் ‘கரேன்’ இனக்குழுவிற்கு பதிலாக ‘கச்சின்’ மக்கள் மீது நடக்க ஆரம்பித்துள்ளது. ஐ. நா எப்போதும் போல வாய் பொத்தி மெளனம் காக்கிறது. அங்கேயும் விஜய் நம்பியார் ஐ. நா அதிகாரியாக இருக்கிறார்.. தேசிய இனவிடுதலையை போற்றும் ஆசியாவின் எந்த இயக்கமும் இந்…

  7. அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …

  8. கனடாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களிலிருந்து தற்போது வெந்நீர் ஊற்று பெருகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கிவாய் ஹானஸ் என்ற தேசிய பூங்கா உட்பட நான்கு இடங்களில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள், ஊற்றுக்கு மருத்துவ பண்புகள் இருப்பதாக நம்புகின்றனர். மேலும் சிலர் இந்த ஊற்றில் கடல் உணவை வேக வைத்தும் சாப்பிடுகின்றனர். http://www.canadamirror.com/canada/5054.html

  9. காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை செய்யும் நேரம் வந்து விட்டது: சோனியா Posted Date : 15:35 (18/01/2013)Last updated : 15:35 (18/01/2013) ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி "குழு" வாக செயல்படவில்லை என்றும், இதன் காரணமாகவே பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியில் இல்லாமல் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ள சோனியா காந்தி, கட்சிக்கு சுய பரிசோதனை செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு,ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி துவக்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது, தேர்தல் உத்…

  10. கனடாவுக்குள் சீன நாட்டவர்கள் குடியேறுவதற்கென போலியான திருமணங்களை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் ஏழு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை எல்லைச் சேவைகள் அமைப்புப் பதிவு செய்தது. நான்கு வருட கால விசாரணையின் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. கனடாவில் பிரவேசிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக, பெயரளவில் மட்டுமான திருமணங்களுக்கு ஒவ்வொன்றும் முப்பதாயிரம் முதல் முப்பத்தையாயிரம் டொலர் வரை அறவிடப்பட்டது. போலியான திருமணங்கள் மூலம் கனடாவில் குடிவரவுத் தகுதி பெறுவோரைத் தடுக்கும் வகையில், திருமணம் செய்வதன் மூலம் கனடா வருவோர், அவர்கள் திருமணம் செய்து கொண்டவருடன் இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ வேண்டுமென கனேடிய அரசு கடந்த ஆண்டு விதியை மாற்றியமை குறிப்பிடத்தக்கது. http…

  11. கனடா: ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒரு மாணவி உள்பட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒண்டோரியோவில் உள்ள Mother Teresa Catholic Secondary School என்ற பள்ளியில் ஒரு மாணவியும், மூன்று மாணவர்களும், 357 Magnum handgun உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த காரணத்தால், ஆயுதங்கள் தடை சட்டப்பிரிவுகளின்படி கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது 42 வகையான பிரிவிகளின்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயுதங்களை பள்ளிக்கு எதற்காக கொண்டு வந்தார்கள் என தீவிர விசாரணை நடந்து வருகின்றது. 1. Possession of a Restricted Firearm with Ammunition 2.…

    • 0 replies
    • 435 views
  12. கனடாவில் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில், இளம்பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக 13 வயது மாணவன் ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Peterborough Lakefield Community காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஒண்டோரியோ பள்ளி ஒன்றில் மாலை 3.10 மணிக்கு பெண் அலுவலர் ஒருவர் தனியாக வகுப்பறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த 13 வயது மாணவன் ஒருவன், பெண் அலுவலரின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டான். அலுவரின் புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது. காவல்துறையில் விரைந்து சென்று, பள்ளி மாணவனை கைது செய்தனர். …

    • 0 replies
    • 465 views
  13. பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து 40 மணித்தியாலத்திற்கு கடும் பனிப் பொழிவு அச்சம் காரணமாக மக்களை அவதானமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை கடும் பனிப் பொழிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணியின் பின்னதாக ஆலங்கட்டி மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பாகங்களினதும் வெப்பநிலை பகல் வேளையில் 1 பாகை செல்சியசாகவும் இரவு வேளையில் 5 பாகை செல்சியசாகவும் இருக்கும். பிரித்தா…

  14. துடெல்லி: காவிரியில் 12 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த புதிய மனுவை, உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம், குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் தலைமையில் டெல்லியில் கடந்த 10 ஆம் தேதி நடந்தது. அப்போது,டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்றுவதற்கு 18 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், கர்நாடக அணைகளில் 16 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அது தங்கள் தேவைக்கே போதுமானதல்ல என்றும் கர்நாடகம் வாதிட்டது. இதனை பரிசீலித்த கண்காணி…

  15. பிரதமரைக் கைது செய்ய ஆதாரம் இல்லை ? ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற முடியாதென அந்நாட்டின் உழல் தடுப்புப் பிரிவின் தலைவர் முடிவு எடுத்துள்ளார். இது குறித்த விசாரணையில் அவரை கைது செய்யத் தேவைப்படும் அளவுக்கு ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தேசிய ஊழல் கண்காணிப்புத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பசியா போக்ஹாரி கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் ஆவணங்களை மீளாய்வு செய்ய விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் சர்ச்சைகுரிய மத குருவை, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்த நாடாளு…

  16. சீனாவின் மத்திய பகுதியில் உள்ள, சாங்ஷா என்ற இடத்திலிருந்து, குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, இறைச்சிக்காக, 600க்கும் அதிகமான பூனைகள், 50 மூங்கில் கூடைகளில் அடைத்து எடுத்துச் செல்லப்பட்டன. பூனைகளை சுமந்து சென்ற லாரி, நேற்று, ஒரு இடத்தில் விபத்துக்குள்ளாகி நின்றுவிட்டது. உடனடியாக இந்த லாரியும் மீட்கப்படவில்லை. கூடைகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகள் பல நாட்களாக பட்டினி கிடந்ததால், 100 பூனைகள் இறந்து விட்டன. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள், மீதமுள்ள பூனைகளை மீட்டுள்ளனர். இந்த பூனைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். http://tamil.yahoo.com/600-%E0%AE…

    • 0 replies
    • 462 views
  17. கென்யா நாட்டின் மாகாண தேர்தலில், ஒபாமாவின் சகோதரர் போட்டியிட உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின், தந்தைக்கு, நான்கு மனைவிகள். ஆன் துன்ஹாம் என்பவருக்கு பிறந்தவர் தான், பரக் ஒபாமா.ஒபாமா தந்தையின், மற்றொரு மனைவிக்கு பிறந்தவர், மாலிக் ஒபாமா. கென்யா நாட்டை சேர்ந்த, மாலிக் ஒபாமா, 54, ஒரு அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். சகோதரரை போல, தானும், அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.கென்யாவில், வரும் மார்ச் மாதம், மாகாண தேர்தல் நடக்க உள்ளது. சியாயா மாகாண தேர்தலில், இவர், சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை எதிர்த்து, தற்போதைய கென்ய பிரதமர், ரெய்லா ஒடிங்காவின் சகோதரர், போட்டியிடுகிறார்.அதிபர் ஒபாமாவின் சகோதரர் என்ற அங்கீகாரம் உள்ளதால், இந்த தேர்தலில், தனக்க…

    • 0 replies
    • 322 views
  18. பயிற்சி கட்டணத்தை செலுத்துமாறு இந்திய இராணுவ மேஜருக்கு உத்தரவு வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 21:23 இலங்கைக் காதலியை திருமணம் செய்யவதற்கு விரும்பிய இந்திய இராணுவ மேஜருக்கு பயற்சிக் கட்டணங்களான 16 இலட்சம் ரூபாவினை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மீளப் பெற்றப்பட்டதன் பின்னரே அவருக்கான திருமண சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பெண்ணொருவரை திருமணம் செய்வதற்காக தனது இராணுவ பதவியை ராஜினாமா செய்ய முற்பட்ட இந்திய இராணுவத்தின் மேஜர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் ராஜினாமா கடிதத்தை இராணுவம் ஏற்க மறுத்ததை அடுத்து அவர் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்திய இராணுவத்தின் சமிக்ஞை படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் விகாஸ்…

    • 6 replies
    • 533 views
  19. பங்களாதேசிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்கு கனடாவில் பிறந்த 20 வயதுடைய ஜெரின் மிர் என்ற பெண் இரயிலில் மோதுண்டு இறந்ததாக ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும் தற்போது அது ஒரு கொலையென்ற சந்தேகம் வலுத்துள்ளது. பங்களாதேசிலுள்ள மருத்துவக் கல்லூரியொன்றில் கற்பதற்காக அங்கு சென்று வசித்து வந்த மேற்படி பெண் இரண்டாம் வருடம் கற்றுக் கொண்டிருக்கும் போதே தனது ஆண் துணை நண்பரை அங்கு தேர்வு செய்ததாகவும், தன்னுடன் படிக்கும் ஒரு நண்பி மூலமாக அறிமுகமான மேற்படி ஆண் நண்பர் லண்டனில் கல்வி கற்றபின்னர் பங்களாதேசில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும் இந்த இருவரும் தங்களது உறவை கடந்த செப்டம்பரில் முகப்புத்தகம் மூலம் வெளிப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவரும் இவரது ஆண் நண்…

  20. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக் கலந்து கொண்டார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது உக்ரைன் நாட்டு பெண்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த பெண்கள் திடீரென்று மேலாடைகளை கலைந்து வீசி விட்டு, ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க கோரி கோஷங்களை முழங்கி போராட்டம் நடத்தினர். ஓரின சேர்க்கைக்கு ஆதரவான வாசகங்களையும் உடலில் எழுதியிருந்தனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களை கைது செய்து அழைத்து சென்றனர். மேலாடையின்றி போராட்டம் நடத்தும் பெண்களின் புகைப்படங்கள் மற்றும்…

    • 0 replies
    • 862 views
  21. கோத்தகரி: தமிழகத்தின் உரிமைகளை நீதியின் துணை கொண்டு மீட்டெடுப்போம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 'சபதம்' எடுத்திருக்கிறார். நீலகிரி அருகே கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஏழை, எளிய மக்களின் இதயங்களில் என்றென்றும் நிறைந்து விளங்கும், மாசில்லா மாணிக்கம்; வருடங்கள் கரைந்தாலும் முழு நிலவாய் நிலைத்த புகழ்கொண்ட நிகரில்லா வள்ளல்; மதங்கள் உலவும் மனங்களில் மனிதாபிமானங்களை வளர்த்த மனிதநேயப் பண்பாளர்; எனது அரசியல் ஆசான், கழக நிறுவனத் தலைவர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 96-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று கோத்தகிரியில் நிறுவப்பட்டிருக்கும் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்ததில் எல்லையில்லா ஆனந்தமும் ப…

  22. கே எஃப் சி உணவில் ஈகோலி கிருமி! அதிர்ச்சி தகவல். Jan 15 2013 09:42:23 நோவா ஸகாட்டியா, நியு பரன்ஸ்விக், ஒண்டோரியோ பகுதிகளில் வயிற்றுக் கோளாறு நோய் தீவிரமாக பரவி வருகிறது. அதற்கு அடிப்படை காரணமாக கேஎஃப்சி மற்றும் டாகோ பெல் உணவகங்களில் பறிமாறப்பட்ட லெட்யுஸ் கீரையில் இருந்த ஈகோலி கிருமிதான் என்று சொல்லப்படுகிறது. ‘இந்த மூன்றுப் பகுதிகளிலும் பரவியுள்ள ஈகோலி கிருமிகளுக்கு இதுதான் மூலம் என்று கருதப்படுகிறது’ என்று நோவா ஸாக்ட்டியாவின் துணை மருத்துவ அதிகாரி ஃப்ரான்க் அதார்டன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தன்னிடமுள்ள கிருமி பாதிக்கப்பட்ட லெட்யுஸ் கீரையை அகற்றிவிட்டதாக கேஃப்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது தங்களது உணவகங்களில் பறிமாறப்படும் உணவு வகைகள் பாதுகாப்பானது எ…

  23. சறேயில் செவ்வாய் அதிகாலை துப்பாக்கி வன்முறை மீண்டும் கிளம்பியது. வன்கூவரது புறநகரம் அங்கு நடைபெற்ற அண்மையக் கொலையைப் பதிவு செய்தது. ஆனால் விசாரணை செய்வோர் குழுச்சண்டை பெருகுவதான ஊகத்தைப் புறக்கணித்துள்ளனர். இந்நேரத்தில் அது குறிவைத்த குழு தொடர்பான சூட்டு நிகழ்வாகக் காணப்படுவதாக தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு செவ்வாய் அதிகாலை 2 மணிக்கு வந்து சேர்ந்த சார்ஜென்ற் ஜெனிபர் பவுண்ட் கூறினார். வழமையாக அமைதியாயுள்ள சறே பிறிட்ஜ்வியூ சுற்றுவட்டார பகுதியின் ஒரு சந்து வழியில் காவல்துறைக்குத் தெரிந்தவர் என விவரிக்கப்பட்ட பெயரறியப்படாத தாக்கப்பட்டவர் விழுந்து கிடந்தார். ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் சறேயில் இது நான்காவது இறப்பாகவிருப்பினும் 27 அகவையுள்ள மேன்ஜொற் டிலோனும் வேறு இரு ஆடவரும் இ…

  24. தலைமை சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடந்தால்தான் அந்த கட்சி சிறப்பாக செயல்பட முடியும் என்று துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் ஆசிரியர் சோ பேசினார். துக்ளக் வார இதழின் 43 வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சோ பேசியதாவது, அ.தி.மு.க.வை பொருத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுபடுத்துவது, மத்திய மின் பாதையில் கூடுதல் இடம் ஒதுக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவது, கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழு அளவில் தமிழகத்துக்கு தர மத்திய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை அ.தி.மு.க. அரசு எடு…

  25. ஜப்பானிய All Nippon Airways விமானசேவை நிறுவனத்தின் சேவையில் உள்ள Boeing 787 Dreamliner விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வகை விமானங்கள் அனைத்தையும் சேவையில் இருந்து இடைநிறுத்துவதாக ஜப்பானிய விமான சேவை நிறுவனங்கள் அறிவித்தன. All Nippon Airways விமானம் ஒன்று பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது, பற்றரியில் ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனையடுத்து All Nippon Airways நிறுவனம் 17 டிறீம்லைனர்ஸ் விமானங்களையும், ஜப்பான் எயார்லைன்ஸ் 6 விமானங்களையும் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளன. எண்ணைக் கசிவு, விமானம் செலுத்தும் பகுதியின் யன்னல் கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டமை போன்ற சிக்கல்கள் அண்மைக் காலத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.