உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27027 topics in this forum
-
பயணிகளை நோக்கி.. நடுவிரலைக் காட்டிய, பணிப்பெண்... ரஷ்யாவில் களேபரம்! மாஸ்கோ: ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம் வெளியான காரணத்தால். அந்தப் பெண்ணின் பெயர் தாத்யானா கொஸ்லென்கோ. இவர் ரஷ்ய அரசு நிறுவனமான ஏரோபிளாட் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இவர் தனது விமானத்தில் பணியில் இருந்தபோது பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டுவது போன்ற ஒரு படத்தை ரஷ்ய சமூக வலைத்தளமான கோன்டேக்டேவில் (பேஸ்புக் போன்றது) போட்டிருந்தார். இது காட்டுத் தீ போல பரவி விட்டது. பலர் இதை எடுத்து ட…
-
- 9 replies
- 838 views
-
-
இந்தியாவில் கடந்த 5 வாரங்களில் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ஃப்ளு) தொற்று நோயினால் 94 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் 450க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோய் பரவலுக்கான காரணம் தொடர்பில் சுகாதார நிபுணர்கள் ஆராய்ந்துவருகின்றனர். மோசமான குளிர்காலநிலையே பன்றிக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருகின்றமைக்கு காரணம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சலுக்குக் காரணமான எச்1 என்1 வைரஸ் தொற்று முதன்முதலில் 2009-ம் ஆண்டில் மெக்சிக்கோவிலேயே கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகெங்கிலும் வேகமாக பரவியது. இந்தியாவில் 20…
-
- 1 reply
- 387 views
-
-
வாக்கு வங்கி அரசியல், நாட்டைச் சீரழித்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தில்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் புதன்கிழமை உரையாற்றினார். கல்லூரிக்கு வெளியே தம்மை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொள்ளாமல் மோடி பேசியது: நாட்டில் ஒருவித அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கு எதுவுமே மாறாது என்று மக்கள் கருதுகின்றனர். அனைவரும் திருடர்கள் என்றும் அனைத்துமே வீண் என்றும் அவர்கள் விரக்தியோடு நினைக்கின்றனர். இந்தியாவில் பிறந்ததே சாபக்கேடு என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இளைஞர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு நாட்டை விட்டே வெளியேற விரும்புகின்றனர். ஆனால் எனது எண்ணம், இதற்கு மாறாக இருக்கிறது. நான் ந…
-
- 1 reply
- 474 views
-
-
டெல்லி: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் சுட்டதில் படுகாயமடைந்த போலீஸ்காரரையும், ஹெலிகாப்டர் மற்றும் ஆயுதங்களை விட்டுவிட்டு ஓடிய இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டிமில்வாடாவில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இந்திய விமானப்படையைச் சேர்ந்த 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் டிமில்வாடா வந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது மாவோயிஸ்டுகள் சுட்டதில் 19 குண்டுகள் அதில் பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையில் விழுந்தது. அப்போ…
-
- 5 replies
- 549 views
-
-
அமெரிக்காவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.1,060 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 5 பேர் உள்பட 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியாக இது கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி அடையாள அட்டைகள், ஆவணங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு பெற்றுள்ளனர். வரவுசெலவு விவரங்களையும் போலியாகக் காட்டி, கிரெடிட் கார்டின் செலவு செய்யும் வரம்பையும் அதிகரித்துள்ளனர். இவ்வகையில், 20 கோடி அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.1,063 கோடி) அதிகமாக மோசடி செய்துள்ளனர். பணத்தை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரிமாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க அரசு வழக்குரைஞர் பால் பிஷ்மேன…
-
- 1 reply
- 721 views
-
-
சந்திரசேகர்-ஸ்டாலின் | சந்திரசேகர்-சத்யராஜ்1 | சந்திரசேகர்-சத்யராஜ்2 | சந்திரசேகர்-நந்தனா சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார். வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த…
-
- 0 replies
- 474 views
-
-
ஈரான் ஜனாதிபதி மீது கெய்ரோவில் சப்பாத்து வீச முயன்றவர் கைது கெய்ரோ: எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு விஜயம் செய்திருந்த, ஈரானிய ஜனாதிபதி முகமட் அகமதி நிஜாத் மீது சப்பாத்து வீச முயன்றவரை அவருடைய பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு ‘கோழை’ எனக் கத்திக்கொண்டு சப்பாத்து ஒன்றை ஈரானிய ஜனாதிபதி மீது எறிந்தவரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கும் காட்சியடங்கிய ஒளிநாடா வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவராத போதிலும், சப்பாத்து வீசியவர் ஈரானுக்கு எதிரியானவர் எனவும், சிரிய அரசிற்கு ஆதரவாகச் செயற்படுபவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவருகின்றது. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் பின் முதன்முதலாக ஈரான் ஜனாதிபதியாக முகமட் அகமதி நிஜாத் எகிப்திற்கு …
-
- 1 reply
- 463 views
-
-
உத்திர பிரதேச மாநில அமைச்சர் மேடையில் மாவட்ட பெண் நீதிபதியின் அழகை வர்ணித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தின் காதி மற்றும் கிராமோத்யோக் துறை அமைச்சரான ராஜாராம் பாண்டே அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் சுல்தான்பூரின் மாவட்ட பெண் நீதிபதி தனலட்சுமியின் அழகை வர்ணித்தார். ராஜாராமின் இச்செயல் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. சுல்தான்பூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ராஜாராம் பாண்டே, மாவட்ட நீதிபதி தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர் ராஜாராம், இந்த மாவட்டத்திற்கு ஏற்கனவே ஒரு பெண் மாவட்ட நீதிபதியாக (முன்னாள் மாவட்ட நீதிபதி காமினி சௌஹன்) இருந்தது இம்மாவட்டத்தில் அதிர்ஷ்டம், ஆனால் தற்போதைய மாவட்ட நீதிபதி (தனலட்…
-
- 9 replies
- 865 views
-
-
அலகாபாத்: இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு போன்று பிரபலமானவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி என்று விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார். அலகாபாத் வந்த விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமாக உள்ளார். இந்து சமுதாயத்தின் நலன் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று சில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சிங்கால் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விஸ்வ இந்து பரிசத் தலைவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்ததையடுத்து ச…
-
- 1 reply
- 459 views
-
-
சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…
-
- 4 replies
- 1.5k views
-
-
துனிசியா எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை: அரசுக்கு எதிராக போராட்டம் வெடிப்பு துனிசியா நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர், அவரது வீட்டு வாசலில் வைத்து இன்று புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் படுகொலை என்றே ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இவரது கொலையை அடுத்து நாடு முழுவதிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த துனிசிய ஜனாதிபதி மொன்செஃப் மார்சோகி, தமது வெளிநாட்டு பயணத்தை இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். இன்று இரவு அவர் நாடு வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துனிசியா எதிர்க்கட்சி Unified Democratic Nationalist party தலைவரான சோக்ரி பெலாய்ட்,…
-
- 1 reply
- 302 views
-
-
மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார். பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக,இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை. தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவு…
-
- 6 replies
- 807 views
-
-
சவுதி அரேபியால் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ ஒரு ரகசிய தளத்தை இயக்கி வருவது இப்போது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா, ட்ரோன் எனப்படும் தனது ஆளில்லா வேவு விமானங்களை இயக்கவென்றே சவுதி அரேபியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்காக ஒரு ரகசிய தளத்தை சி ஐ ஏ இயக்கி வருகிறது. இந்த வசதி குறித்து அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியும் என்றாலும், இது குறித்து அவை இதுவரை செய்தி வெளியிடவில்லை. ஏமனில் இருக்கும் அல் கையீதா உறுப்பினர்களை தாக்கிக் கொல்வதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து இயக்கப்பட்ட ஒரு ஆளில்லா வேவு விமானம் ஏமனில் இருந்த மதகுரு அன்வர் அல் அவ்லகியை 2011 இல் கொன்றது. அமெரிக்காவில் பிறந்த இவர், அரவு வளைகுடாவில் அல் கையீதாவின் ஏமன் கிளையின் வெளித் தாக்குதல்களுக்கான பொறு…
-
- 2 replies
- 416 views
-
-
குஜராத் மாநிலத்துக்கு உதவ தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்-கை சந்திப்பதற்காக வந்திருந்தார் நரேந்திர மோடி. புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நரேந்திர மோடி, தான் மீண்டும் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வருவதால் பிரதமரையும் சந்திப்பதற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது, வாசல் வரை வந்து தன்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றதாகக் கூறிய நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார் என்றார். குறிப்பாக, அணை…
-
- 4 replies
- 443 views
-
-
டொரண்டோவில் காணாமல் போன 12 வயது பள்ளி மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவனை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். Jesse Sacobie என்ற 12 வயது பள்ளி மாணவனை நேற்று மாலை 6.30 மணியில் இருந்து காணவில்லை. பள்ளிக்கு சென்ற மாணவனை கடைசியாக DupontStreet and Spadina Road அருகே பார்த்ததாக அவனுடைய நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அவன் அன்று வீடு திரும்பாததால் பதட்டமடைந்த பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். JesseSacobie காணாமல் போன அன்று கறுப்புநிற ஜீன்ஸ் மற்றும் கறுப்பு நிறத்தில் சர்ட் அணிந்திருந்ததாகவும், 105 பவுண்டு எடையுடன் ஐந்து அடி ஒரு அங்குல உயரம் உள்ளவனாகவும் இருப்பான் என்றும், நீண்ட தலைமுடியுடன் பிரவுன் கலர் கண்ணும்…
-
- 0 replies
- 405 views
-
-
சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகள் ஆகியும், சிறந்த நிர்வாகத்திற்காக நாடு காத்திருப்பதாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, முதல் முறையாக இன்று டில்லி வந்தார். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்பவர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறை. இதன்படி, மன்மோகன் சிங்கை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், குஜராத் மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் படி தான் பிரதமரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, டில்லியிலுள்ள நாட்டின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒ…
-
- 0 replies
- 687 views
-
-
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை …
-
- 4 replies
- 556 views
-
-
After six Spanish tourists raped in Mexican resort of Acapulco, police hunt gang of armed, masked men http://youtu.be/dwwzuZfptmk Bertha Ramos and Mark Stevenson, Associated Press | ACAPULCO, Mexico — Authorities have information they hope will lead them to the gang of armed, masked men who raped six Spanish tourists in the Mexican resort of Acapulco, the attorney general in the southern state of Guerrero said. The vicious, hours-long attack at a beach home on the outskirts of Acapulco before dawn Monday was the latest chapter of violence that has tarnished the once-glamorous Pacific coast resort celebrated in Frank Sinatra songs and Elvis Pre…
-
- 0 replies
- 576 views
-
-
வட கொரியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தினால், கணிசமான பின்விளைவுகள் ஏற்படுமென அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரித்தன. வட கொரியா அணு குண்டுப் பரிசோதனை ஒன்றை நடத்தினால், அதன் காரணமாக பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டி வருமென அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரிக்கை விடுத்தன. ஒன்றுக்கு மேற்பட்ட அணு குண்டுப் பரிசோதனைகளை நடத்துவதற்கு வட கொரியா திட்டமிட்டுள்ளதென இந்த மாதம் பதவி விலகிக் செல்லும் தென் கொரிய ஜனாதிபதி லீ மியங் பக் (Lee Myung-bak) தெரிவித்தார். உயர் மட்ட அணுப் பரிசோதனையை நடத்தவுள்ளதாக கடந்த மாதம் வட கொரியாவும் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, தென் கொரிய வெளியுறவு அமைச்சரை நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வட கொரிய…
-
- 2 replies
- 443 views
-
-
இன்னும் 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணையும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்கண்டேய கட்ஜூ, ' பாகிஸ்தான் என்பது ஒரு நாடு அல்ல. பிரித்தாளும் பிரிட்டிசார் கொள்கையால் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட வெறும் போலியான நாடு. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சிந்து, பஞ்சாப்தான் இன்று பாகிஸ்தானாக உள்ளது. போர் என்பது ஒரு நாட்டின் பலவீனமாகும். அது ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை அழித்துவிடும். மேலும் எண்ணிலடங்காத இழப்பை உண்டு செய்யும். தற்போது அதை பற்றி பேசுவதே தேச துரோகம். எனினும் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேல் பயணம் இஸ்ரேல் பிரதமர் வேட்பாளருக்கு கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று புதிய பிரதமராக பெஞ்சமின் தேர்வானார். அவருக்கு ஒபாமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசு முறை பயணமாக இன்னும் சில நாட்களில் ஒபாமா இஸ்ரேல் செல்லவிருக்கிறார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான போடியில் இருந்தபோது இஸ்ரேல் சென்றார் ஒபாமா. அதிபராக பதவியேற்றபின் இஸ்ரேல் செல்லும் முதல் பயணமாகும். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ஒபாமா மேற்கொள்ளும் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த பயணத்தின் போது முக்கிய பிரச்சனைகள் குறித…
-
- 0 replies
- 478 views
-
-
To back up President Barack Obama's statement that he goes skeet shooting regularly, which some Republicans questioned, the White House released this photo of Obama firing a gun at Camp David in August. See more commanders in chief taking advantage of their right to bear arms. http://www.cnn.com/2013/02/04/politics/gallery/presidents-guns/index.html?hpt=hp_c2 George W. Bush hunts for doves in Hockley, Texas, in September 1994. George H.W. Bush and oil heir William Farish check out a quail hunt at Lazy F Ranch in Texas in January 1989.
-
- 0 replies
- 396 views
-
-
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்து கட்சிக்கூட்டம் இன்று நடக்கிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், தமிழகம் - கர்நாடகா இடையே, நெடுங்காலமாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, 1990ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், பல்வேறு ஆய்வுகளை நடத்தியும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்தும், 2007, பிப்ரவரியில், இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதன்படி, காவிரி நீரில், 419 டி.எம்.சி., தண்ணீரை தமிழகமும், 270 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகாவும், கேரள அரசு, 30 டி.எம்.சி., தண்ணீரையும், புதுச்சேரி அரசு, 7 டி.எம்.சி,, தண்ணீரையும், பகிர்ந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, 10 டி.எம்.…
-
- 0 replies
- 321 views
-
-
பெங்களூரு: ""இலகுரக போர் விமானம், "தேஜஸ்'தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் எனது பொறுமை தீர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டிலாவது தயாரிக்கப்பட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.போரில் பயன்படுத்த, "தேஜஸ்' என பெயரிடப்பட்ட, இலகு ரகவிமானத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கியும், இன்னும் விமானம் முழு அளவில் தயாரிக்கப்படவில்லை.பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலகங்கா விமான தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், அமைச்சர் அந்தோணி பேசியதாவது:டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் சாதனைகளை நான் மெச்சுகிறேன்.…
-
- 1 reply
- 585 views
-
-
ஷரியா என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் 5வயது குழந்தையை கொன்ற பாலியல் கொலைகாரன் விடுதலை. முஸ்லீம்களால் கடைப்பிடிக்கப்படும் ஷரியா என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் எத்தகைய கொலையை செய்தாலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் 5வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மிகக்கொடூரமான கொலைகர பாதகனை சவுதி அரசாங்கம் ஷரியா சட்டத்தின் கீழ் விடுதலை செய்துள்ளது. இத்தனைக்கும் இந்த கொலைகாரன் முஸ்லீம் மதத்தை போதிக்கும் போதகன் என்று சவுதி அரசாங்கம் பெருமையாக சொல்லியுள்ளது. சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்…
-
- 8 replies
- 1.2k views
-