உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…
-
- 0 replies
- 438 views
-
-
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வரும் தி எக்னாமிஸ்ட் என்ற பத்திரிகை 2013 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் பிறந்தால், இன்பமாக வாழலாம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. சுவிஸை அடுத்து நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. சென்ற வருடம் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த கனடா, இவ்வருடம் நான்கு இடங்கள் பின் தள்ளி, ஒன்பதாவது இடத்தையே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்க முடியவில்லை. அதற்கு 16வது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்கா 1988 ஆம் வருடம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
அசாமில் கணவன் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பிக்ராம் சிங் பிரம்மா. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, பக்சா மாவட்டத்தில் உள்ள சபாகுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று அதிகாலை போடோ பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவர் வீட்டில்…
-
- 2 replies
- 506 views
-
-
தம்மை யார் எவ்வாறு ஆள்வது என முடிவு செய்வது மக்களின் சொந்த ஜனநாயக உரிமையாகும். இந்த விடயத்தினை வைத்து சில சர்வதேச விவகாரங்களை லாவகமாக பிரித்தானியா கையாள்கின்றது. ஸ்பெயின் பக்கத்தில் ஒரு சிறு பிரதேசம்: ஜிபல்டார். பலமுடன் இருந்த காலத்தில் வளைத்துப் போட்டது பிரிட்டன். அது தனது கோடியில் உள்ள ஒரு பிரதேசம். தனக்கு திருப்பித் தரப் படவேண்டும் என ஸ்பெயின் அடம் பிடித்த போது இந்த சுய நிர்ணய அஸ்திரத்தினை பாவிக்க, ஜிபல்டார் மக்களோ பிரிட்டிஷ் கொலனியாகவே இருக்க வேண்டும் என சொல்ல ஸ்பெயின் வாய் மூடிக் கொண்டது. ஹாங்காங் விடயத்தில் சீனாவுடன் 99 வருட ஒப்பந்தம் போட்டிருந்ததாலும், சீனா பெரும் பேட்டை பிஸ்தா என்பதாலும் பேசாமல் கிளம்பி வர வேண்டியதாகி விட்டது. இப்பொது அதே அடத்தினை ஆர்…
-
- 0 replies
- 787 views
-
-
Bank Of Canada இனால் அதிகப்படியான பாதுகாப்பிற்காகவும் , கள்ளத் தாள்களின் பெருக்கத்தை தவிர்க்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய $100 குழைம வங்கித் தாள்கள் நாட்டின் பல பகுதிகளில் கோடைக்காலத்தின் போது சூடு தாங்க முடியாமல் கரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கனடிய மத்திய வங்கி என்ன பதில் சொல்ல விரும்புகிறது என கனடியன் பிரஸ் சில தினங்களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் 134 பக்க ஆவணங்களை Bank Of Canada வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சினை தேசப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதொடு சர்வதேச உறவுகளையும் சீர்குலைத்து விடும் என்பதால் இதன் பின்னணி குறித்த வெளிப்படையான விவாதங்க…
-
- 1 reply
- 485 views
-
-
இளவரசர் ஹாரி ஒரு குடிகார நரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிக்கிறார் - ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் பிரித்தானிய ஊடகத்தில் பகிரங்க விமர்சனம் Jan 03 2013 09:13:37 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க அமெரிக்கா தொடர்ந்தும் போராடி வருவதால் வெறுப்படைந்துள்ள தீவிரவாதிகள் சிலர் பிரித்தானியப படைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆப்கனில் தங்கியிருந்த இளவரசர் ஹாரியை " குடிகார நரி " என வருணித்துள்ளார் ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவரான குல்புதின் ஹெக்மத்யார். அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிப்பதற்காகவே இளவரசர் பிரித்தானியாவிலிருந்து ஆப்கன் வந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான " தி டெய்லி…
-
- 0 replies
- 638 views
-
-
தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது பள்ளி மாணவி மலாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பாகிஸ்தானில் 15 வயது பள்ளி சிறுமி மலாலாவை துப்பாக்கியால் சென்ற அக்டோபர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதால், இன்று மாலை தற்காலிகமாக லண்டனில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதிருப்பதால், அதுவரை லண்டனிலேயே தங்கியிருப்ப…
-
- 0 replies
- 707 views
-
-
வணக்கம் உறவுகளே, மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கின்றது......ஊடங்களில் எல்லாம் முக்கிய செய்தியாக தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருப்பது கருணாநிதி அவர்களினுடைய பேச்சு அதாவது தனக்கு பிறகு ஸ்டான்லின் இருக்கின்றார் என்று அறிவித்ததன் மூலம் தி மு க என்ற மாபெரும் இயக்கத்தின் அடுத்த பொறுப்புக்கு ஸ்டான்லின் அவர்கள் வருவது ஏறத்தாள உறுதியாகி விட்டது.......... ஸ்டான்லின் ஒன்றும் அரசியலுக்கு தலைவரின் மகன் என்ற செல்வாக்கோடு வலம் வந்தவர் அல்ல மாறாக ஊர் ஊராக சென்று இயக்கத்தை வளர்த்து அரசியல் களம் பல கண்டு சிறை சென்று சென்னை மாநகராட்சி தலைவராக திறம்பட செயலாற்றி பின்பு அமைச்சராகி அதன் பின்பு துணை முதல்வராகி என்று திறம்பட செயலாற்றியவர் சரி இனி இன்றைய that's தமிழ் இல்…
-
- 1 reply
- 676 views
-
-
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் டெல்லியில், துணை மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 13 நாள் போராட்டத்துக்குப்பிறகு உயிரிழந்த வழக்கில், டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்காகப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 6வது நபர் 18 வயதை எட்டாதவர் என்பதால், அவர் மீது இளம் குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.…
-
- 2 replies
- 526 views
-
-
சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
-
- 22 replies
- 1.5k views
-
-
சியோல்: சாட்டிங் மூலம் அறிமுகமான சிறுமிகளை மிரட்டி பலமுறை உறவு கொண்ட காமக்கொடூரனுக்கு ரசாயண ஆண்மை நீக்கம் செய்ய தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கயவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்க ஆபரேசன் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி மரணம் அடைந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் பாலியல் சம்பவங்களைத் தடுக்க சம்பவங்களைத் தடுக்கும் வகையி…
-
- 0 replies
- 556 views
-
-
ஹாலிவுட் நடிகர் பிரான்சன் பெல்லட்டியர் பொது இடத்தில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த டிசம்பர் 17ந் தேதி அன்று நன்றாக குடித்து விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடியிருந்தபோது அவர் இந்த செயலை செய்தார். இது அங்கிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் வரும் வரை அவருக்கு பின்னால் பயணிகள் நின்று கொண்டு இருந்தது வீடியோவில் பதிவு ஆகியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை தொடக்கத்தில் அவர் மறுத்தார். தற்போது இந்த வழக்கு வருகிற ஜனவரி 7ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த…
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்காவின் பழம்பெரும் பாப் இசை பாடகியாக விளங்கிய பத்தி பேஜ்(85) மரணம் அடைந்தார். 1927–ம் ஆண்டில் பிறந்த அவர் இளம்வயது முதல் பாடத்தொடங்கினார். இவர் பாடிய 10 கோடிக்கும் மேல் இசைதட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது. கிராமி உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர். 3 தடவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஏராளமான பேரக்குழந்தைகளும், கொள்ளுப்பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். பாப் பாடகி பத்திபேஜ் படம் பார்க்க....
-
- 0 replies
- 529 views
-
-
Assam women beat 'sex-attack politician' Bikram Singh Brahma Indian police have detained a politician accused of rape after he was set upon and beaten by crowds in a village in Assam state. http://www.bbc.co.uk/news/world-asia-india-20902258
-
- 0 replies
- 500 views
-
-
துப்பாக்கி தாரி சுட்டதில் மூவர் பலி A GUNMAN with known psychiatric and drug problems has opened fire in a village in southern Switzerland, killing three women and injuring two men, authorities say. News.com
-
- 5 replies
- 974 views
-
-
ஆந்திராவின் பிரபல சாமியார் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. சர்வதேச தியான மாநாடு என்ற பெயரில், மாநாட்டை நடத்தி, பெண்களை கட்டி பிடித்தும், சில்மிஷம் செய்ததாகவும் சாமியார் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிஜாமாபாத் அருகே உள்ள ஹன்சபள்ளி என்ற இடத்தில் பிரமாண்ட பிரமிட் அமைத்து, தியான மையம் நடத்தி வருபவர், சுபாஷ் பத்ரி, 65. "பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம்' என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி. கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார் சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண…
-
- 14 replies
- 2.5k views
-
-
கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால், முதலில் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் தீ, அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்க முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Central York தீயணைப்பு துறையின் உயரதிகாரி Ian Laing செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், தீயை கட…
-
- 0 replies
- 549 views
-
-
டொரண்டோவில் உள்ள ஒரு மனிதர் இந்த வருடத்தின் முதல் கொலைக்குற்றவாளியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று, O’Marie Brooks என்பவருடன் சண்டை போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றவாளியின் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த கொலை north of Steeles Avenue என்ற இடத்திலுள்ள Randy’s Sports Bar அருகே அதிகாலை 5 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த O’Marie Brooks என்பவரை அவருடைய நண்பர்கள் மிகவும் துரிதமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போதிலும், மருத்துவமனையை அடையும் முன்பே…
-
- 0 replies
- 534 views
-
-
உலகிலேயெ மிக அதிகமான உடல் எடையை கொண்ட இங்கிலாந்து மனிதர் ஒருவர் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் தனது உடல் எடையில் 285 கிலோவை குறைத்து சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 51 வயது பால் மேசன் என்பவர் உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் உடல் எடை சுமார் 750 கிலோ ஆகும். ஆனால் தனது தளராத முயற்சியாலும், மருத்துவர்களின் அறுவை சிகிச்சையாலும், தனது உடல் எடையை 285 கிலோ குறைத்து, தற்போது காணப்படுகிறார். இன்னும் 50 கிலோவை குறைப்பதற்காக அடுத்த வாரம் ஒரு அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள இருக்கிறார். இவர் இங்கிலாந்தின் Ipswich, Suffolk என்ற பகுதியை சேர்ந்தவர். உடல் எடை கூடுவதற்கு முன் தபால்காரராக வேலை பார்த்து வந்தவர். அளவுக்கு மீறி உடல் எடை கூட…
-
- 0 replies
- 682 views
-
-
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு திருவனந்தபுரம் கோர்ட் தூக்கு தண்டனை! Posted by: Mathi Updated: Thursday, January 3, 2013, 17:53 [iST] திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவு…
-
- 0 replies
- 506 views
-
-
By General 2013-01-02 14:44:33 டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாணவியொருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்யில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிற நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு பிடித்து வரும் 17 வயது மாணவியொருவரே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த மாணவியை அவரது ஆண் நண்பரொருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் தனது நண்பருடன் சேர்ந்து வல்லுறவுக்…
-
- 10 replies
- 1.1k views
-
-
மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திகளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. பெங்களூரு - மைசூர் இடையே விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வேயப்பட்டு தனியாருக்குச் சுங்கம் வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது நைஸ் சாலை. அந்த விவகாரத்தில் விவசாயிகளுக்காகப் போராட பெங்களூரு வந்திருந்தவரைச் சந்தித்தேன். ''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அ…
-
- 1 reply
- 639 views
-
-
'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?'' ''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடு…
-
- 4 replies
- 675 views
-
-
பிளேபாய் இதழின் நிறுவனர் ஹீயூஜ் ஹெப்னர். 86 வயதான இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 26 வயது மாடல் அழகி கிரிஸ்டல் ஹாரீஸ் என்பவரை காதலித்து தற்போது திருமணம் செய்து உள்ளார். இவர்களது திருமணம் புத்தண்டு தினத்தில் நடந்தது. இதுகுறித்து மாடல் அழகி டூவிட்டரில் இன்று நான் ஹியூஜ் ஹெப்னர் ஆகிவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிர்ஷ்டமானவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்கிறேன் என்று கூறி உள்ளார் 26 வயது மாடல் அழகியுடன் பிளேபாய் நிறுவனர் இருக்கும் படம் பார்க்க....
-
- 3 replies
- 761 views
-
-
நபிகளைப் பற்றி காமிக் புத்தகம்! பிரான்ஸில் மீண்டும் சர்ச்சை! முகமது நபிகள் குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு உலக இஸ்லாமியகளின் கோபத்திற்குள்ளான பிரெஞ்சு பத்திரிகை, தற்போது நபிகள் குறித்து காமிக் புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. பிரான்சிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழ் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கார்டூன்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் கோபத்திற்கு ஆளாகியது. இந்நிலையில் சார்லி ஹெப்டோ இதழின் பதிப்பாளர் சார்ப், இஸ்லாமிய இறை தூதர் முகமது நபிகள் குறித்து காமிக் புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த சார்ப், வரும் ஜனவரி 2 ஆம் திகதி இந்த புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 2006-இல் டென்…
-
- 5 replies
- 646 views
-