உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
பிரான்ஸ் அரசு அந்நாட்டில் அதிகரிக்கும் வறுமைக்கு பரிகாரம் காணுமுகமாக ஏழ்மையை போக்க உதவும் கொடுப்பனவுகளை பத்து வீதத்தால் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்சில் வாழும் 16 – 25 வயதுக்கு இடைப்பட்ட இளையோரில் நால்வருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வறுமைக்குள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ஐரோப்பாவின் மற்றைய நாடுகளில் உள்ளதைப்போலவே வறுமையின் பரந்துபட்ட வளர்ச்சி பிரான்சிய சமுதாயத்திலும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பது சோசலிச அரசாங்கம் என்பதால் முன்னைய அரசாங்கங்கள் போல ஏழைகளைப் பற்றி கவலையற்ற ஆட்சி செய்யாமல் மனம் மாறியுள்ளது. பிரான்சில் எஸ்.யூ எனப்படும் பாடசாலைக்கல்வி கொடுப்பனவு கிடையாது ஆனால் சட்டத்தரணி படிக்கும் 22 வயது யுவதி ஒருவர் கூறும்போது வெறு…
-
- 1 reply
- 648 views
-
-
டொரண்டோவில் வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட குரங்கை, மீண்டும் தன்வசப்படுத்த பெண் ஒருவர் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று தான் வளர்த்த குரங்கோடு காரில் North York நகரத்தில் ஷாப்பிங் செய்ய வந்தபோது, குரங்கை காரிலேயே வைத்துவிட்டு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே சென்றார் அதனை வளர்க்கும் Nakhuda என்ற பெண். காரின் கண்ணாடி திறந்திருந்த காரணத்தால் வெளியே வந்த குரங்கு, அங்கு நடமாடிக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடைஞ்சல் தருவதாக கூறி அந்த குரங்கை காவல்துறையினர் பிடித்துவைத்தனர். பின்னர் அந்த பெண்ணுக்கு பொது இடத்தில் விலங்குகளை அழைத்துவந்து தொந்தரவு செய்த குற்றத்திற்காக அபராதமும் விதித்து, குரங்கை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அ…
-
- 0 replies
- 429 views
-
-
சிரியா அரசு ரசாயன வெடிபொருளை உபயோகித்து, தனது எதிரிகளை அழிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் பெண்டகம் இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird, சிரியா தனது நாட்டு மக்கள் மீதோ அல்லது எதிரி நாட்டு மீதோ, ரசாயன தாக்குதல் நடத்தினால், உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், இதனால் சிரியா கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். உலகில் எங்கு தீவிரவாதம் நடந்தாலும், அதை தடுக்க சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சியில், கனடாவின் பங்கு பெருமளவில் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். மேலும் சிரியா அத்பர் Bashar Al-Assad சில நாட்களுக்கு முன், சிரிய அரசு அதி…
-
- 0 replies
- 460 views
-
-
NEW YORK -- British bank HSBC has agreed to pay $1.9 billion to settle a New York based-probe in connection with the laundering of money from narcotics traffickers in Mexico, U.S. authorities announced Tuesday. The move avoids a legal battle that could further savage the bank's reputation and undermine confidence in the global banking system. The announcement was made by Assistant Attorney General Lanny A. Breuer and U.S. Attorney Loretta A. Lynch in Brooklyn. At least $881 million in drug trafficking proceeds was laundered through HSBC Bank USA, violating the Bank Secrecy Act, U.S. authorities said. The government also alleges that HSBC intentionally allowed prohibited t…
-
- 0 replies
- 659 views
-
-
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடக் கோரி நாளை கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இடிந்தகரையில் நேற்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வலியுறுத்தி கடல்வழியே படகுகளில் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.அதே நேரத்தில் இதர மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இப்போராட்ட அறிவிப்பையடுத்து கூடங்குள…
-
- 4 replies
- 446 views
-
-
பிரிட்டன் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு விடுமுறை கொடுத்து, அவர்களை 100 வீரர்கள் கொண்ட பல பிரிவுகளாக பிரித்து, அவர்களை இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா என்ற இடத்திற்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது. அங்கு அவர்களுக்கு முறையான தியானப்பயிற்சி புனித போதி மரத்தடியில் கொடுக்க பீகார் மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 467 views
-
-
Abraham Shakespeare என்ற அமெரிக்க கறுப்பினத்தை சேர்ந்தவருக்கு 2009ஆம் நடந்த ஒரு லாட்டரி குலுக்கலில் 30 மில்லியன் டாலர் பரிசு விழுந்தது. இந்த செய்தியை செய்தித்தாள்களில் பார்த்த Dorice Dee Dee Moore என்ற பெண், அவருடையை பணத்தை கொள்ளையடிக்க தனியாகவே சதித்திட்டம் தீட்டியுள்ளார். முதலில் சமுக வலைத்தளம் ஒன்றில் அவருடன் நட்புடன் பழகுவதாக அறிமுகபடுத்தி, தன்னுடைய படுகவர்ச்சியான புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் நேரிலும் சந்தித்து நட்பை விரிவுபடுத்தினார். இந்நிலையில் கிடைத்த ஒரு சரியான சந்தர்ப்பத்தில், Abraham Shakespeare ஐ கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு, தலைமறைவானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீஸார்…
-
- 0 replies
- 587 views
-
-
இங்கிலாந்து இளவரசி கேத் விண்செண்ட் கர்ப்ப ரகசியங்களை கசியவிட்டதன் காரணமாக விவகாரத்தில் தற்கொலை செய்யப்பட்ட நர்ஸ் Jacintha Saldanha அவர்களின் கணவர் Benedict Barboza மற்றும் அவரது குழந்தைகளை இன்று பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி எம்.பி. Keith Vaz அவர்கள் அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினார். தாயை இழந்து வாடும் குழந்தைகள் உள்ள இந்த குடும்பத்திற்கு King Edward VII தகுந்த நிவாரணம் தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்தின் நலனில் பிரிட்டிஷ் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது" எனவும், இந்த குடும்பத்தின் நலனுக்கு அரசு எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இங்கிலாந்து பிரதம…
-
- 0 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்தில் உள்ள Sandbach, Cheshire, அருகிலுள்ள southbound carriageway என்ற இடத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளது. Cheshire காவல்துறை அதிகாரி ஒருவர் நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த சாலையில் இரண்டு வேன்கள், இரண்டு HGVs மற்றும் ஐந்து கார்கள் ஒரே இடத்தில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். மேலும் மேலும் ஐந்து பேர் உடல் உறுப்புகள் வெட்டுண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வர்களின் இரண்டு பேர்…
-
- 0 replies
- 555 views
-
-
அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவ மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மனைவி Michelle மற்றும் மகள்கள் Sasha and Malia அவர்களுடன் கலந்துகொண்டு விழாவை கலகலப்பாக இடமாக மாற்றினார். ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் விழாவில் இவ்வருடம் ஒபாமா கலந்துகொண்டு சிறப்பித்ததை பெருமையாக கருதுவதாக தேசிய குழந்தைகள் மருத்துவன நிறுவன அதிகாரி ஒருவர் நமது செய்தியாளரிடம் தெரிவித்தார். முன்னதாக விழா தொடங்குவதற்கு முன் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக கூடை நிறைய புத்தகங்களை ஒபாமா வழங்கினார். இந்த வருடம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற Christmas in Washington என்ற இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவுடன் South Korean Gangnam Style rapper Psy கலந்து கொண்டு விழ…
-
- 0 replies
- 527 views
-
-
தங்கள் மீதான குற்றச்சாட்டினை வால்மார்ட் மறுத்துள்ளது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டினை அனுமதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வாயிலாக வால்மார்ட் நிறுவனம் காய்நகர்த்தி காரியம் சாதித்ததாக பகீர் புகார் எழுந்தது. இது தொடர்பாக வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை. எந்த அமெரிக்க எம்.பி.க்களையும் நாங்கள் வற்புறுத்தவில்லை. அமெரிக்க சட்டத்திட்டங்களை மதித்து தான் நடக்கிறோம் அதே வேளையில் இந்திய சட்டத்திட்டங்களையும் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%…
-
- 12 replies
- 933 views
-
-
பழைய உலக வங்கித் தலைவர் கான் சிலஆண்டுகளுக்கு முன்னர் நியூயோர்க் கொட்டல் ஒன்றில் வேலை செய்த பெண்ணை பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மான நஸ்டமாக பணம் கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.இங்கே தொகை எவ்வளவு என்று சொல்லாவிட்டாலும் பல மில்லியன் டாலர்கள் கை மாறியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். Former International Monetary Fund chief Dominique Strauss-Kahn has signed a settlement with a hotel maid who accused him of sexual assault, a New York judge says. Details of the 63-year-old's agreement with Nafissatou Diallo will remain confidential, the judge added. Mr Strauss-Kahn was held in New York in May 2011 after Ms Diallo, 33, said he assaulted her in his hotel suite. …
-
- 1 reply
- 416 views
-
-
இந்தோனேஷியாவில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தோனேசியாவின் சவும்லாகி நகரில், பூமியின் அடியில் 155 கிலோமீற்றர் ஆழத்திலேயே இந்த பூமியதிர்ச்சி 7.2 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசிய நேரத்தின் பிரகாரம் நேற்றிரவு ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சியினால், பல பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. எனினும் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. அது மட்டுமின்றி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப் படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/54507-2012-12-10-23-40-27.html
-
- 0 replies
- 363 views
-
-
பெங்களூரு: உச்சநீதிமன்றம் உத்தரவு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் வீடு முற்றுகையிடப்பட்டது. தமிழநாட்டில் காவிரியில் டெல்டா மாவட்டங்களில் உள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற இடைக்கால நிவாரணமாக வினாடிக்கு 10,000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடமாறு கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி நேற்றிரவு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கர்நாடக அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வி…
-
- 5 replies
- 711 views
-
-
டொரண்டோவில் பனிமழை கடுமையாக் பெய்வதால், பள்ளி பேருந்துகள் இன்று இயக்கப்படுவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான பனியின் காரணமாக சாலைகளில் பனிக்கட்டிகள் சிதறியுள்ளதால், இன்றைய தினம் டொரண்டோவில் உள்ள எல்லா பள்ளிகளின் பேருந்துகளும் இயக்கப்படாது. கீழ்க்கண்ட பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன: All buses to schools in Muskoka for Trillium Lakelands District School Board All buses to St. Dominic Catholic Secondary School, and Monsignor Michael O”Leary and Saint Mary Catholic elementary schools All buses to schools in Haliburton for Trillium Lakelands District School Board All buses to schools in City of Kawartha Lakes for Trillium Lakelands Dist…
-
- 0 replies
- 538 views
-
-
இங்கிலாந்து இளவரசி கேத் வின்செண்ட் கர்ப்ப மருத்துவ அறிக்கை கசிவுக்கு காரணமாக இருந்த நர்ஸின் தற்கொலைக்கு காரணமான ஆஸ்திரேலிய வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் இன்று முதன்முதலாக பத்திரிகையாளர்கள் முன் தோன்றி, தங்களது வருத்தத்தை கண்ணீருடன் தெரிவித்தனர். Mel Greig மற்றும் Michael Christian ஆகிய அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் இன்று காலை தங்களது 2Day FM வானொலி நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். தங்களது விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான செய்கையால் தாயை இழந்து வாடும் நர்ஸின் குழந்தைகளிடம் தாங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளனர். இவ்வாறு நடக்கும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அழுதுகொண்டே கூறிய Mel Greig தங்களது தவறான செய்கையால் நர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
[size=4][size=5]ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை![/size] முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல[/size] [size=4]்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.[/size] [size=4]உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உ…
-
- 113 replies
- 8.2k views
-
-
உலகில் விற்பனையாகும் பொம்மைகளில் 75 சதவிகிதம் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொம்மை உற்பத்தி சந்தையாக சீனா கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றது. கிறிஸ்துமஸ் திருவிழா நெருங்குவதால், சீனாவின் மிகப்பெரிய பொம்மை நிறுவங்களுக்கு ஏராளமான ஆர்டர்கள் உலகெங்கும் இருந்து குவிந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு குறித்த நேரத்தில், பொம்மைகளை சப்ளை செய்வதற்காக, அந்த நிறுவங்களின் ஊழியர்களை மிக அதிக நேரம் வேலை பார்க்கவும், அவர்களை வீட்டிற்கு செல்லவிடாமல், நிறுவனத்திலேயே பொம்மைகளோடு பொம்மைகளாக தங்க வைத்திருப்பதாகவும், தற்போது எழுந்துள்ள ஒரு குற்றச்சாட்டு, சீனாவில் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, பொம்மை நிறுவன ஊ…
-
- 0 replies
- 900 views
-
-
ஏராளமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு பிரிட்டனை நோக்கி உலகின் மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த சரக்கு கப்பலின் பெயர் Marco Polo என்பது ஆகும். இந்த சரக்கு கப்பல், உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380ஐவிட ஐந்து மடங்கு பெரியது. ஒரு பெரிய கால்பந்து மைதானத்தை விட நான்கு மடங்கு பெரியது. சுனாமி போன்ற மிகப்பெரிய அலைகளையும் தாங்கக்கூடிய சக்தியை உடைய இந்த கப்பலில், 16,000 கண்டெய்னர்களை சுமந்து செல்லும். 396 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல், பிரிட்டன் மக்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று, லண்டன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. பிரிட்டனுக்கு தேவையான பொருட்களை இறக்கி முடித்தவுடன், அடுத்த இந்த பிரமாண்டமான கப்பல் ஜெர்மனியை நோக்கி செல்ல இருக்க…
-
- 0 replies
- 804 views
-
-
வடகொரியா இந்த மாதம் 10-லிருந்து 12 தேதிக்குள் செயற்கைகோளை விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டுள்ளது. அந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ரொக்கட்டின் பாதையைக் கண்காணிக்க அமெரிக்க போர்க்கப்பல்கள் அங்கு விரைந்துள்ளன. இப்பகுதியில் அமைதிச்சூழல் நிலவ வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையிலேயே அங்கு போர்க் கப்பலகள் அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியா ரொக்கட்டிலிருந்து தங்கள் பிராந்தியத்துக்குள் உடைந்து விழும் பாகங்களை சுட்டுத்தள்ள ஜப்பானும் உத்தரவிட்டுள்ளது. ஐ.நா. விதிமுறைகளை மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருவதாக அமெரிக்கா உள்பட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே வடகொரியா விண்ணுக்கு அனுப்பும் ரொக்கெட், ஏவுகணையாக இருக்கலாம் …
-
- 1 reply
- 623 views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்மின் மனைவி கேத்தரின் மசக்கைக்காக இந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் கிங் எட்வர்ட் செவென் மருத்துவமனையில் வேலைபார்த்துவந்த பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ராஜ குடும்பத்தார் பேசுவதுபோல நடித்து ஆஸ்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து பொய்யாக வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனை கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த நர்ஸ் இவர்தான் என்பதை மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. பின்னர் அந்த அறையில் இருந்த வேறொரு நர்ஸ், கேதரினுடைய உடல் நலம் பற்றி தந்த தகவல்கள் வானொலியில் பின்னர் ஒலிபரப்பப்பட்டிருந்தன. செவிலியர் ஜசிந்தா சல்தானாவின் மறைவுக்கு மருத்துவமனை தலைமை நிர்வாகி வருத்தம் தெரிவித்துள்ளார். இள…
-
- 5 replies
- 568 views
-
-
திருச்சியில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா கூட்டத்தில் வைகோ பேசும்போது காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களை வஞ்சிக்கிறது. இப்போது கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கிறது. பாலாறு, முல்லை, பெரியாறு விவகாரங்களிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?. உலகில் உள்ள எந்த நாடுகளிலும் இதுபோன்ற மாநில உரிமை மறுக்கப்படவில்லை. நைல் நதி விவகாரத்தில் ஆப்பிரிக்க நாட்டின் உரிமைகளை சூடான் நாட்டால் மறுக்க முடிய வில்லை. அதேபோன்று ஈரோப்பிய நாடுகள் தனுபே நதி விவகாரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் மாநிலங்களில் நதிகளின் குறுக்கே அணைக்களை கட்…
-
- 0 replies
- 398 views
-
-
இந்திய இராணுவ இரகசியங்களை இலங்கை வழியே பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரியை கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி திருச்சியில் கியூ பொலிஸார் கைதுசெய்தனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மூலமாக இந்திய இராணுவ இரகசியங்களை கடத்தினார் என்பது தமீம் அன்சாரி மீதான குற்றச்சாட்டு. மேலும் தமீம் அன்சாரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கியூ பிரிவு போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய பொ…
-
- 0 replies
- 382 views
-
-
பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சிPublished on December 8, 2012-9:05 am · பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில் இந்த சோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. போல்லக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, அணுகுண்டு எதனையும் வெடிக்காமல், அணுப்பொருட்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் நடாத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சோதனையை அமெரிக்கா ஏற்கனவே 2…
-
- 0 replies
- 993 views
-
-
மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் மரணதண்டனையை ஒழிப்போம்: நடிகை ரோகிணி உரை இராசீவ்காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூன்று தமிழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் மற்றும் அனைவரது தூக்குத்தண்டனையையும் இரத்து செய்யக்கோரியும் மரண தண்டனையை ஒழிக்கக்கோரியும் போராடி வரும் மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட "நீதியரசர் கிருஷ்ணய்யர் 98 அகவை பிறந்த நாள்" நிகழ்வில் பிரபல வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி, பேராயர் சின்னப்பா, நடிகை ரோகிணி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் பல மனிதநேய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடகர…
-
- 0 replies
- 518 views
-