உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26925 topics in this forum
-
டொரண்டோ நகரில் மிகச்சரியாக 2013 புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 பிறந்த குழந்தையை இந்த ஆண்டின் முதல் குழந்தையாக டொரண்டோ நகர மக்கள் போற்றுகின்றனர். டொன்ரடோ நகரில் உள்ள St. Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். இதேபோல Mississauga நகரத்தில் Credit Valley மருத்துவமனையில் 12.07க்கு பிறந்த ஒரு பெண் குழந்தையை அந்த நகரத்தின் முதல் குழந்தையாக கருதுகின்றனர். இந்த குழந்தை…
-
- 0 replies
- 486 views
-
-
சென்னையை சேர்ந்த மைக்ரோ நியூட்ரியன்ட் எம். ஜி வெங்கடேஷ் மன்னார் என்பவர் கனடாவின் உயரிய விருதை பெறுகிறார். இவருக்கு சமூக சேவைக்காக, கனடாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் கனடா என்ற விருது வழங்கப்படுவதாக கனடாவின் கவர்னர் ஜெனரல் அறிவித்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக வெங்கடேஷ் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னையில் பிறந்த வெங்கடேஷ் மன்னார், சென்னை ஐ.ஐ.டி.,யில் பிடெக் பட்டம் முடித்துள்ளார். பின்னர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யில் மேல்படிப்பை முடித்தார். ஆர்டர் ஆப் கனடா விருதுபெற்ற எம்.ஜி.வெங்கடேஷ் மன்னார் படம் பார்க்க...
-
- 0 replies
- 469 views
-
-
டில்லி மாணவியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமானது இந்தியாவில், பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை கோரும் நிலைமையை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. கடந்த டிசெம்பர் மாதம் 16 திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவப்பீட மாணவி ஒருவர், ஆறுபேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி மாணவி 13 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, 274 பெண்கள் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் கோரி, டில்லி பொலிஸ் பிரி…
-
- 4 replies
- 491 views
-
-
பாலியல் வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுபவோரை வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் (chemical castration) செய்யலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வழி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமெனவும் கூறியிருக்கிறார். பாலியல் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை 30 நாட்கள் வரை காவலில் வைக்கவும், அவர்கள் முன் ஜாமீன் பெறாமல் இருக்கவும், கைது செய்யப்படுவோர் வழக்கு விசாரணை முடியும் வரை பிணையில் விடுவிக்கப்படாமல் இருக்கவும் சட்டத்திருத்தங்கள் வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். தமிழகத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்க…
-
- 16 replies
- 997 views
-
-
இந்தியாவில், பாலியல் வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை தடுப்பதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று, இந்தியாவில் உள்ள ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் டில்லியில் பாலியல் கொடுமையினால் பாதிக்கப்பட்டு மாணவி பலியான சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் குழந்தை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர். பெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடைசி நேரத்தில் நிதி பள்ளத்தாக்கில் விழாது அமெரிக்கா தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. Fiscal Cliff Deal Reached: White House, Hill Leaders Agree To Delay Sequester By Two Months WASHINGTON -- Three hours shy of the midnight deadline, the White House and congressional leaders reached a deal to avert the so-called fiscal cliff, several sources confirmed to The Huffington Post. Under the deal brokered by Vice President Joe Biden and Senate Minority Leader Mitch McConnell (R-Ky.), Congress would permanently extend the Bush income tax cuts at $400,000 and below, keep the estate tax threshold at $5 million and extend unemployment benefits for one year. It would …
-
- 0 replies
- 459 views
-
-
நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை இல்லை எனவும், எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும் எனவும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளர் என திமுக தலைவர் கருணாநிதி சூசகமாக கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிதம்பரம் பதில் :@@ டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம் கூறியதாவது : எனது வரம்பு என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்; எனது வரம்புகளுக்கு உட்பட்டே நான் வாழ்ந்து வருகிறேன்; அதன்படியே நான் என்னை வழி நடத்துகிறேன்; உங்களில் சிலர் என்னை முட்டாள் என நினைப்பது எனக்கு தெரியும்; அவர்களுக்கு நான் சொல்லி…
-
- 1 reply
- 863 views
-
-
ஈரானிய கப்பல் இலங்கையால் தடுத்துவைப்பு! இலங்கை காலி துறைமுகத்தில் 16 ஈரான் மற்றும் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை இலங்கை தடுத்து வைத்துள்ளது. எம்.வி. அமினா என்ற இந்த கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18ஆம் திகதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமா…
-
- 0 replies
- 344 views
-
-
லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அக்கட்சி பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு- பொதுக்குழுவில் பேசிய ஜெயலலிதா, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட தொண்டர்கள் தயாராக வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியின்றி போட்டியிட தயாராவோம். இந்தத் தேர்தலில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெறுவோம். மத்தியில் அதிகாரத்தின் மூலம் நமது அனைத்து உரிமைகளையும் பெ…
-
- 0 replies
- 328 views
-
-
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மலையருவியின் உச்சியில் தங்களது 14வது திருமண நாளை கொண்டாடச் சென்ற தம்பதியினர், தங்களது 13 வயது மகளுடன், அருவியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து, மூன்று பேரும் பலியான சம்பவத்தால், தென்னாப்பிரிக்க நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது., தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பார்க் பகுதியை சேர்ந்தவர் Pieter Prinsloo என்பவர், தனது மனைவி Adele மற்றும் 13 வயது மகளுடன் தங்களது 14வது திருமண நாளை கொண்டாட நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடக்கும்போது, திடீரென தண்ணீர் அதிகமாக வந்ததால், நிலை தடுமாறி மூன்று பேரும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். தகவல் கிடைத…
-
- 0 replies
- 370 views
-
-
இங்கிலாந்தில் 13 வயது மகனுக்கு ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது என்பது போன்ற 18 கண்டிஷன்கள் போட்டு, கிறிஸ்துமஸ் பரிசாக ஐபோன் வாங்கிக் கொடுத்துள்ளார் ஒரு தாய். இதுகுறித்து ஒரு சுவையான செய்தி. இங்கிலாந்து நாட்டில் 13 வயது Greg Hofmann என்ற சிறுவனுக்கு அவனுடைய தாயார், கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பரிசைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், தன்னுடைய தாயாரின் 18 கண்டிஷன்களை கேட்டு, மிகவும் அதிர்ச்சியடைந்தான். ஐபோனை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது, ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது, இரவு ஏழு மணிக்கு மேல் பள்ளி நாட்களிலும், விடுமுறை நாட்களில் இரவு 9 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது, தாய், அல்லது தந்தை போன் செய்தால் அழைப்பை மறுக்கக்கூடாது,…
-
- 0 replies
- 870 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு 17 வயது பள்ளி மாணவி ஒருவர், சமீபத்தில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய கொலைகாரன் குறித்து கவிதை ஒன்று எழுதி, அதை சக மாணவர்களுக்கு படிக்க கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அமெரிக்காவையே உலுக்கிய பள்ளி துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் மரணமடைந்தனர். இதில் ஆடம் லான்சா என்ற கொலைகாரனும் இறந்து போனான். இறந்துபோன கொலைகாரன் குறித்து, கவிதை எழுதியதாக Courtni Webb என்ற 17 வயது பள்ளி மாணவி அப்பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த மாணவி கொலைகாரன் குறித்து எழுதிய கவிதையை தனது புத்தகத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும், அதை ஆசிரியர் தற்செயலாக பார்த்து, பிரின்ஸிபாலிடம் கொடுத்ததாகவும், பிரின்ஸிபல் உடனே அந்த மாணவியை சஸ்பெ…
-
- 0 replies
- 575 views
-
-
சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்குமிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது, இவர்களின் கருத்துப்படி சுமார் 50 உடலங்கள் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கழுத்தறுப்பு வேலைகள் நேற்று நடைபெற்…
-
- 0 replies
- 510 views
-
-
Dec 31 2012 01:31:57 1.ஒபாமாவின் வெற்றி உலகத்தினரின் கவனத்தைக் கவர்ந்தது. மிட் ராம்னியை வென்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றார். 2. ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியிருந்த கனடிய இளைஞன் லுகா மக்நாட்டா மாண்ட்ரியல் பல்கலைக் கழக மாணவனைக் கொன்று, வெட்டி, நர மாமிசம் சாப்பிட்டது உலகை உலுக்கியது. 3. சாண்டி புயல் அமெரிக்காவின் பல பகுதிகளை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது. இந்தப் புயலால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 4. கனடாவின் எக்ஸெல் மாட்டு இறைச்சி உணவுகளில் ஈகோலி கிருமிகள் இருந்ததனால் திரும்பப் பெறப்பட்டன. கிட்டத்தட்ட 1500 வகை உணவுகள் மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. 5. குறிப்பிடப்பட வழியில் செல்லாமல் கோஸ்டா கான்கார்டியா கப்பலை வேறு வழ…
-
- 0 replies
- 535 views
-
-
கனடாவின் மாநிலங்களுக்கு இடையிலான இண்ட்டர் ஸ்டேட் 84 நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த சரிவிற்குள் வழுக்கிச் சென்று கவிழ்ந்தது. வான்கூவருக்குப் போன சுற்றுலாப் பேருந்து சாலையோரத்தின் சரிவில் கவிழ்ந்ததால் ஒன்பது பேர் உயிரிழந்தனர். இருபது பேர் படுகாயமுற்றனர். சாலைகளில் பனிபடர்ந்து இருந்ததால் சக்கரங்கள் வழுக்கிவிட்டன. ஓட்டுநர் உயிர் பிழைத்தாலும் காயங்கள் மோசமாக இருப்பதால் விபத்து பற்றி அவரால் எதையும் விளக்க இயலவில்லை. லாஸ் வேகாஸின் நேவாடாவுக்குப் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து பகல் 10.30 அளவில் விபத்துக்குள்ளான போது அதில் 40 பேர் இருந்தனர். இவர்களில் காயம்பட்ட 18 பேர் கெண்டில்ட்டனில் உள்ள தூய அந்தோனியார் மருத்துவமனையில் சேர்…
-
- 0 replies
- 309 views
-
-
காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க.…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக, விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இது தொடர்பில் இந்திய செய்திச்சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவா…
-
- 1 reply
- 558 views
-
-
பெண்கள் செக்ஸ் கொடுமைக்கு ஆளாகும் போது அவசர உதவிக்கென அரசு சார்பில் அவசர தொலைபேசி எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் முதல்நாளிலேய செயல்படாமல் போனது. அழைத்தால் வெறும் பீப் சப்தம் மட்டுமே வந்தது இதனால் மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியை தெரிவித்தனர். கடந்த 16ம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் வேண்டும் என மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்தியதால் டில்லி ஸ்தம்பித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷீத் அவசர எண் 181 என்ற பொது அழைப்பை உருவாக்கியுள்…
-
- 3 replies
- 529 views
-
-
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும்,40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய ஜெ., வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ மற்றும் பா.ஜ.,வை நம்ப முடியாது என்றும் அதனால் தனித்து போட்டியிடப்போவதாகவும் ஜெ., கூறியுள்ளார். சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்…
-
- 1 reply
- 473 views
-
-
தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை [sunday, 2012-12-30 17:51:58] திருப்பதியில் 3 நாள் நடந்த 4-வது உலக தெலுங்கு மாநாடு நேற்று நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில் தமிழக கவர்னர் ரோசையா, மத்தியமந்திரி சிரஞ்சீவி, முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கவர்னர் ரோசையா பேசும்போது, நான் கடந்த 15 மாதமாக தமிழக கவர்னராக உள்ளேன். தாய்மொழியை நேசிப்பதை தமிழர்கள் முன்னுதாரணமாக உள்ளனர். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை சொல்வதால் தெலுங்கு மக்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவு உயர்கல்வி படித்து இருந்தாலும் அவர்கள் தமிழில்தான் பேசுகிறார்கள். அந்த அள…
-
- 5 replies
- 697 views
-
-
(CNN) -- Secretary of State Hillary Clinton was hospitalized Sunday after doctors discovered a blood clot during a follow-up exam related to a concussion she suffered this month, her spokesman said. She is expected to remain at New York Presbyterian Hospital for the next 48 hours so doctors can monitor her condition and treat her with anti-coagulants, said Philippe Reines, deputy assistant secretary of state. "Her doctors will continue to assess her condition, including other issues associated with her concussion," Reines said. "They will determine if any further action is required." Reines did not specify where the clot was discovered. Clinton, 65, was suffering from…
-
- 6 replies
- 584 views
-
-
இந்தியா=பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்த, இந்திய அணியால், பாகிஸ்தான் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றியை இழந்தது. தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நசீர் ஷாம்ஷெட் அபார விளையாடி 101 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 561 views
-
-
இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார். பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி: இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எ…
-
- 2 replies
- 514 views
-
-
கினிய படகு விபத்தில் 22 பேர் பலி: 69 பேர் மாயம் கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி படகு ஒன்று புறப்பட்டு சென்றது. மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்தது. அப்போது அந்த படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 பேரை உயிருடன் மீட்டனர். இறந்த 22 பேரின் சடலங்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள 69 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 502 views
-
-
நான் அரசியலுக்கு வந்தால் எனது பாதை தனியாக இருக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை யில் சனிக்கிழமை நடைபெற்ற "ப. சிதம்பரம் - ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: 1995-ஆம் ஆண்டு முதல் முதல் ப. சிதம்பரம் எனது நெருங்கிய நண்பர். அந்தக் காலகட்டத்தில் தனி அறையில் மூப்பனார், கருணாநிதி, சிதம்பரம், சோ ராமசாமி ஆகியோருடன் உரையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்போது நினைக்கும்போது அது உண்மைதானா, நடந்ததா என்று சந்தேகம் வருகிறது. அதன் அருமை அப்போது எனக்குத் தெரியவில்லை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானபோது குறுகிய காலத்தில் அதற்கு அனுமதி பெற்றுத் தந்தவ…
-
- 5 replies
- 843 views
-