உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27025 topics in this forum
-
டெல்லியில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுசில்குமார் ஷிண்டே நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. போராட்டம் டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ–மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. சுசில்குமார் ஷிண்டே …
-
- 4 replies
- 681 views
-
-
முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி! கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல…
-
- 0 replies
- 570 views
-
-
பாலியல் வல்லுறவுத் தலைநகராகும் டெல்லி! Posted Date : 15:18 (18/12/2012)Last updated : 16:20 (18/12/2012) டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ள நிலையில் 'டெல்லி-பாலியல் வல்லுறவுக்கு' தலைநகர்'என்ற நிலையை நோக்கி செல்வதாக சொல்லி அதிரவைக்கிறது தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பின் புள்ளிவிவரம் ஒன்று! டெல்லியில் கடந்த ஞாயிறன்று இரவில், 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் திரைப்படம் பார்த்துவிட்டு, தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, 7 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது.பின்…
-
- 33 replies
- 2.3k views
-
-
வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு மரத்தில் கட்டிவைக்கப்பட்ட குடும்பப் பெண்: திரிபுராவில் சம்பவம் இந்தியாவின் திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்படுத்தி அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ பீட மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்ப…
-
- 0 replies
- 600 views
-
-
ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ராயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார். தலிபான்களை ஒடுக்கும் பணியில், ஹெல்மான்ட் மாகாணத்தில், இவர், அக்., மாதம் ஈடுபட்டிருந்தார்.பிரிட்டன் விமானப் படையின், அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றார் என, பிரிட்டன் பத்திரிகைகள், தற்போது செய்தி வெளியிட்டு உள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%AA-%E0%…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல கருணாநிதி என்னை வற்புறுத்தினார் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா கூறினார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-இன்படி தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மே 2-ஆம் தேதி வரை 632 கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் கேள்விகள் கேட்டு பதில்களைப் பதிவு செய்வது சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதுவரை சசிகலாவிடம் 1,032 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது சசிகலா ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு களங்கம…
-
- 2 replies
- 653 views
-
-
இந்தியாவில் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களால், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி முகம் முழுவதும் கோரமாக்கபட்ட ஒரு பெண், தற்போது ஒரு தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டியில் பெற்று லட்சாதிபதியாக மாறியுள்ளார். சோனாலி முகர்ஜி என்ற 27 வயது இந்திய பெண், டெல்லியை சேர்ந்தவர், இவர் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, முகத்தில் ஆசிட் வீசப்பட்டார். இதன் காரணமாக இவர் பலமுறை முகத்தை சர்ஜரி செய்தும், அவருடைய முகம் சரியாகவில்லை. தற்போது கூட அவருடைய முகம் பொலிவிழந்து, மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றது. அவர் நேற்று, புதுடெல்லியில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு, லட்சாத்பதியாக மாறியுள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் தன்னு…
-
- 1 reply
- 651 views
-
-
சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 200 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களது உடல்கள் சாலைகளின் நடுவே, ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடி…
-
- 1 reply
- 527 views
-
-
இங்கிலாந்தில் சில நாட்களுக்கு ஆஸ்திரேலிய DJக்களின் விளையாட்டுத்தனமான தொலைபேசி அழைப்பால், மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இந்திய பெண் நர்ஸ், ஜெசிந்தா குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. நர்ஸ் ஜெசிந்தா ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார் எனவும் இந்திய பத்திரிகை ஒன்ற் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை, ஆஸ்திரேலிய வானொலி நிலைய DJக்களிடம் கசியவிட்டதன் காரணமாக, மனநிலை பாதிக்கப்பட்ட நர்ஸ், ஜெசிந்தா, ஏற்கனவே இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது. சென்றமுறை இந்தியாவில் தனது உறவினர்களை சந்திக்க சென்றப…
-
- 0 replies
- 688 views
-
-
இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு நகரங்களில் பயங்கர கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. சாலைகளில் கழுத்துக்கு மேல் தண்ணீர் ஓடுவதால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். Helston and Lostwithiel போன்ற பகுதிகளில் கனமழையின் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நேரத்தில் பயணங்களை தவிர்க்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Braunton நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கின்றது. Helston நகரங்களில் உள்ள வீடுகளில் வாழும் மக்களை காவல்துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் காரணமாக வெளியூர் செ…
-
- 1 reply
- 594 views
-
-
ராஜீவ் காந்தி என் கணவர் : சொந்தம் கொண்டாடும் ஆந்திர பெண் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் சோனியா என்று. ஆனால் இப்போது ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் ராஜீவ்காந்தி என் கணவர் என்று சொந்தம் கொண்டாடுகிறார். ஐதராபாத் நிஜாம் சாகித் ரோடு, தாதாசாகிப் தெருவை சேர்ந்தவர் சபீனா பெரோஸ்கான் (50). நேற்று காலையில் கையில் ஒரு விண்ணப்ப மனுவுடன் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவகத்துக்கு வந்தார். அந்த மனுவில் ராஜீவ் காந்தி என் கணவர். அவரது இறப்பு சான்றிதழ் நகல் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மனுவை வாங்கி படித்த அதிகாரிகள் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்தார்கள். அப்போதும் ராஜீவ் கா…
-
- 3 replies
- 916 views
-
-
அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மீண்டும் வெறியாட்டம் அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில் கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20 குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது தாயையும், அவன் கொன்றதுடன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தான். இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. துப்பாக்கி வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங…
-
- 1 reply
- 556 views
-
-
Dec 23 சிறியவயது பெண் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாண்ட்ரீயல் நகரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். William Kokesch, என்ற 65 வயது மாண்ட்ரீயல் மனிதர், இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட்டார். அவரது வீட்டில் 2000க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வயது குழந்தைகள் படங்கள். இவற்றைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்தனர். …
-
- 0 replies
- 909 views
-
-
தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜனாதிபதி மாளிகை நோக்கி... இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தொடர்ந்து 2–வது நாளாக ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல ‘இந்தியா கேட்’ பகுதியில் காலை 9 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் அலை, அலையாக திரண்டனர். அங்கு முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வந்து, போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவ…
-
- 0 replies
- 742 views
-
-
தெற்கு சூடானில் ஐ.நா., ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அந்த ஹெலிகாப்டரில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். http://tamil.yahoo.com/%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-083000196.html
-
- 0 replies
- 588 views
-
-
நெல்சன் மண்டேலா இராணுவ மருத்துவமனையில் அனுமதிப்பு. சிறீலங்கா | ADMIN | DECEMBER 9, 2012 AT 10:52 தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பிரெட்டோரியாவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா. இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு…
-
- 3 replies
- 605 views
-
-
மூன்று நாடுகளில் உறைபனி பொழிவு: 200 பேர் பலி சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012 23:18 ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர். உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியாயுள்ளனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோங்களில் கிடந்துள்ளன. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலந்தில் உறைபனி பெய்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை - தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். தீர்மானம் 1 தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும்; நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் மு…
-
- 11 replies
- 702 views
-
-
தமிழ்நாட்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் பல்லாயிரக்கணக்கான சிறு கடைகளையும், மளிகை கடைகளையும் முடக்கும் வகையில் சென்னையில் திறக்கப்படவுள்ள வால்மார்ட் நிறுவனத்தின் சில்லரை வணிக கடையை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததை எதிர்த்தும், யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் கண்டித்தும், பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்ப்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செந்தமிழன் சீமான், சில்லரை வர்த்தக…
-
- 4 replies
- 867 views
-
-
இங்கிலாந்தில் உள்ள Newcastle நகரில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, பயங்கர வன்முறை நடந்தது. காவல்துறையினருக்கு ஒரு சவாலான நாளாக இருந்ததாக லண்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய கடைசி வெள்ளியான நேற்று, அனைத்து நிறுவங்களிலும் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. அந்த பணத்தை வாங்கிய பலர், குடித்துவிட்டு சாலைகளில் ஆட்டம் போட்டனர். இதில் சில ரெளடிகளும் அடங்குவர். குடிபோதையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால், பலருடைய முகங்களில் ரத்தம் வழிந்து ஓடியது. இளம்பெண்கள் பலர் அரைகுறை ஆடையுடன் சாலைகளின் நடுவில் போதையில் தள்ளாடினர். அவர்களை காவல்துறையினர் மீட்டு, பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலைகளில் வன்முறையில் இறங்கிய குடிகாரர…
-
- 0 replies
- 610 views
-
-
Obama Names Kerry to Follow Clinton as Secretary of State President Obama nominated Senator John Kerry of Massachusetts as secretary of state on Friday, choosing an elder of the Democratic Party’s foreign policy establishment and a crucial political ally in the Senate to succeed Hillary Rodham Clinton. அதிபர் ஒபாமா ஜோன் கெரியை அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக நியமித்தார்! http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html?hp&_r=1& 24 ஆம் திகதி மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு கேரி கூறிய கருத்து: இலங்கையின் வடபகுதியில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த …
-
- 5 replies
- 782 views
-
-
இங்கிலாந்து நாட்டில் தொடர்ந்து பயங்கரமாக கனமழை பெய்து கொண்டு வருவதால், அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. சாலைகள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இரயில் பாதையில் விழுந்துள்ளதால், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ் 400 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் 91 இடங்கள் மிகவும் சீரியசானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. Wallington, Hampshire, போன்ற நகரங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வெள்ள மீட்பு படையினர் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பயணிகள் மிகவ…
-
- 13 replies
- 839 views
-
-
சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். அரசு பஸ் சென்னை வடபழனி பணிமனையில் இருந்து வடபழனி–குன்றத்தூர்(தடம் எண்: எம்.88) செல்லும் அரசு பஸ், நேற்று காலை வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் சென்றது. நேற்று பிற்பகல் குன்றத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போரூர் வழியாக வடபழனி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டினார். கண்டக்டர் கருணாநிதி பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். புகை வந்தது மதியம் 1 மணியளவில் வடபழனி பஸ் நிலையத்துக்கு முன்பு ஆற்காடு சாலையில் சாலிகிராமம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்…
-
- 1 reply
- 2k views
-
-
சம்பவத்தில் இறந்த தனது ஆறு வயது தம்பியை, எட்டு வயது சிறுவன் ஒருவன் பிரியாவிடை கொடுத்து அனுப்பிய இறுதிச்சடங்கு இங்கிலாந்தின் church in Bethel, என்ற இடத்தில் மிகுந்த சோகத்துடன் நடந்தது. சாண்டிகுக் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த Dylan Hockley என்ற ஆறு வயது சிறுவனின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெற்றோர் மற்றும் எட்டு வயது சகோதரர் மிகுந்த இறுக்கத்துடன் காணப்பட்டனர். இறந்த Dylan Hockley நினைவாக வானத்தில் பலூன்களை பறக்கவிட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் இறந்த குழந்தைகளான Olivia Engel, 6, Madeline Hsu, 6, Grace McDonnell, 7 ஆகியோர்களின் இறுதிச்சடங்கும் இதே இடத்தில் நடந்தது. இறந்த சிறுவன் Dylan Hockleyயின் புகைப்படங்களை இறுதிச்சடங்கில் …
-
- 0 replies
- 473 views
-
-
இங்கிலாந்து நாட்டில் Stoke-on-Trent. என்ற இடத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் Keeley O'Brien என்ற பெண், தன்னுடைய 19 மாத சிறுமி Leanne Bradbury ஐ அழைத்துக்கொண்டு பொருட்களை வாங்குவதற்காக வந்திருந்தார். பொருட்களை வைக்கும் டிராலியில் சிறுமியை உட்கார வைத்துவிட்டு, பொருட்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரமாக டிராலியில் உட்கார்ந்திருந்த சிறுமியின் கால்கள், டிராலியின் இடைவெளியில் சிக்கிக்கொண்டதால், அழ ஆரம்பித்தது. உடனே சிறுமியின் தாயாரும், கடை ஊழியர்களும் சிறுமியின் கால்களை விடுவிக்க பெருமுயற்சி எடுத்தும் முடியவில்லை. குழந்தை மேலு அழ ஆரம்பித்ததால், உடனே நகரின் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டு மணிநேரம் போராடி, பின்னர் அதிநவீன வெட்டும…
-
- 0 replies
- 379 views
-