Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விகடன்-மதன் லடாய்:அம்பிகளின் காரியவாதக் குடுமிபிடிச் சண்டை! விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். அந்த நீக்கம் ஏன் என்பதை அவர்களது வாயாலேயே முதலில் பார்த்து விடுவோம். ஹாய் மதன் கேள்வி – பதிலுக்கு வந்த கேள்வியும் அதற்கு மதன் அளித்திருக்கும் பதிலும் இந்த பாரதப்போரின் துவக்கம். ஹாய் மதன் கேள்வியும் – பதிலும்: க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர். உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்? * ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். க…

  2. தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் போராட்ட அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்று விமர்சித்தார் கலைஞர் கருணாநிதி. போராட்டத்தின் பின்னடைவிற்கு அது தான் முக்கிய காரணம் என்ற தோரணையில் அவர் ஆகஸ்து 12ம் நாள் நடந்த டெசோ மேடையில் பேசினார். தமிழகத் தலைவர்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒற்றுமை நிலவுகிறதா, இது தான் முக்கிய கேள்வி. மாநாட்டில் நிறைவேறிய 17 தீர்மானங்களில் இறுதியானது திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு இடையிலான பூசலை வெளிப்படுத்துகிறது. “டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்குக் கண்டனம்” என்பது அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். இரு கட்சிகளும் தமது மேலாண்மையைக் காட்டுவதில் குறியாக உள்ளன. ஈழத் தமிழர் நலன் இரண்டாம் பட்சமே. டெசோ மாநாடு வெற்றி – …

  3. கூடங்குளம் அணு உலை ஆபத்து பற்றிய ஒரு தெளிவான விளக்கம்

    • 0 replies
    • 629 views
  4. [size=4]கர்நாடகா மாநிலத்தில் இருந்து, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அச்சம் காரணமாக வெளியேறி வரும் நிலையில், வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அமைதி நிலவுவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களுக்காக மேலதிக தொடரூந்துகள் அசாமுக்கு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மாநில முதல்வர் ஜெயதீஸ் ஷெட்டருடன் தாமும், பிரதம மந்திரியும் பேசியதாகவும் அவர் கூறினார். இந்த நிலைமை குறித்து ஆராய்வதற்காக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை மாநில முதல்வர் ஷெட்டர் கூட்டியுள்ளார்.[/size] …

  5. விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகர் ஜூலியஸ் அசான்ஜீயை கைது செய்யப் போவதாக பிரித்தானியா அச்சுறுத்தல் விடுப்பதாக ஈக்வடோர் குற்றம் சுமத்தியுள்ளது. லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவிற்கான தமது தூதரகத்தில் அசான்ஜீ அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஈக்வடோர் அறிவித்துள்ளது. இவ்வாறான ஓர் நிலைமையில் பிரித்தானிய அரசாங்கம், தூதுரகத்திற்குள் அத்துமீறி அசான்ஜீயை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் அசான்ஜீ ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருக்கின்றார். பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அசான்ஜீ மீது சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா அசான்ஜீயை கைது செய்தால் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள நேரிடும் என ஈக்வடோர் வெளிவிவகார…

    • 20 replies
    • 1.2k views
  6. சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது…

  7. ஈழத் தமிழரின் கண்ணீரை வைத்து தி.மு.க தலைவர் கருணாநிதி அரசியல் நடத்த வேண்டாம் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கோரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி அண்மையில் நடத்திய டெசோ மாநாட்டால் ஈழத் தமிழர்களுக்கு எள்ளவு பயனும் ஏற்படப் போவதில்லை. மாநில அரசின் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால், எந்தத் தடயமும் இல்லாமல் அந்த மாநாடு முடிந்திருக்கும்.ஜனகூட்டம் கூடும் உரிமையையும் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையையும் தடுப்பது ஜனநாயக அரசின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியாது.என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் மாநாடு நடத்துவதைத் தடுக்க முயன்ற மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.டெசோ மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அரசியல் வாழ்வாதா…

  8. குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை. இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்…

  9. [size=4]பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானப்படைத்தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அங்கு சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மின்காஸ் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை அடுத்து இந்தச் சண்டை மூண்டுள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர்....![/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  10. தமிழ்நாடு: அடிமைகளின் தேசம்! ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர். விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயி…

  11. [size=2][size=4]டுவிட்டர் சமூகவலையமைப்பானது வேகமாக வளர்ச்சியடைந்து வருவதனால் பல அரசியல் பிரமுகர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இதில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதியும் விரைவில் டுவிட்டரில் நுழையவுள்ளார். அவர் விரைவில் அவர் டிவிட்டரில் கணக்கொன்றைத் தொடங்கவுள்ளதாக தி.மு.க. கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=2][/size] [size=4]நாடகம், சினிமா, பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி என ஊடகத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்கமே தி.மு.க. ஆகும். ஆனால், இணையத்தின் மீது அதன் கவனம் இவ்வளவு நாளாய் திரும்பவில்லை. ஆனால் அரசியலில் இளைஞர்களின் பங்கு அதிகரித்திருப்…

  12. [size=3][size=4]டெல்லி: இந்தியா சார்பில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து நாம் பெறப்போகும் தகவல்கள் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றார் மன்மோகன்சிங்.[/size][/size] [size=3][size=4]இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்பட இரு…

  13. சட்டிஸ்கர் பழங்குடியின மக்கள் படுகொலை: அம்பலமானது அரசு பயங்கரவாதிகளின் புளுகு! ஜூன் 28ஆம் தேதி. சட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டம் கொட்டேகுடா பஞ்சாயத்திலுள்ள சர்கேகுடா கிராமம். இவ்வாண்டின் விதைப்புத் திருவிழாவை எப்படி நடத்துவது என்பதையொட்டி, யார் முதல் ஏர் ஓட்டுவது என்பதைப் பற்றி அன்று இரவு நிலவொளியில் அப்பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 30 பேர் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். அக்கிராம மக்களைச் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசுப் படை, திடீரென நாற்புறமிருந்தும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய அம்மக்களைத் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றது. பலரது முதுகில…

    • 0 replies
    • 426 views
  14. பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது, என, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அரசு கொள்கைகளை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் ஆய்வுக் குழு, சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை அளித்தது.இதுதொடர்பாக, பென்டகனில் நேற்று முன்தினம், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, நிருபர்களிடம் கூறியதாவது:பாகிஸ்தானில், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அந்நாட்டின் அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகளின் கைகளுக்குச் சென்று விடும் அபாயம் உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பொதுவான நோக்கம் வேண்டும் என, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நான் வலியுறுத்தியுள்ளேன். பயங்கரவாதிக…

  15. கூடங்குளம் பகுதிகளில் கறுப்புக் கொடி புதன், 15 ஆகஸ்ட் 2012( 10:55 IST ) [size=2]கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து சுதந்திர தினமான இன்று கூடங்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடிகள் ஏற்றப்பட்டன. [/size] [size=2]கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளையுடன் போராட்டம் ஒருவருடம் நிறைவடைகிறது. [/size] [size=2]இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து கூடங்குளம் பகுதியை சுற்றிலும் 7 கில…

  16. பிரான்சில் கலவரம்-தீ வைப்பு: போலீசாருடன் இளைஞர்கள் மோதல் புதன், 15 ஆகஸ்ட் 2012( 14:43 IST ) [size=2]பிரான்சின் வடக்கு பகுதியில் அமியென்ஸ் நகரம் உள்ளது. இங்கு அல்ஜீரியா, துனிசியா, மொரங்கோ, கபோனி, மாலத்தீவு போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர். [/size] [size=2]இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக மாறியது. [/size] [size=2]இதையொட்டி போலீசார் மீது கல்வீச்சு நடந்தது. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில் 16 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். பல கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. [/size] […

    • 2 replies
    • 635 views
  17. மோட்டோரோலா மொபைலிடி (Motorola Mobility) நிறுவனத்தினை கூகுள் இவ்வருட ஆரம்பத்தில் கொள்வனவு செய்தது. சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இக்கொள்வனவு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் 4000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதே அம்முடிவாகும். இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியப் படையின் 5 இல் 1 வீதமாகும். இப்பணிநீக்கத்தில் 3 இல் 2 பங்கு அமெரிக்காவுக்கு வெளியே இடம்பெறவுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்கள் பலவற்றையும் மூடிவிட கூகுள் முடிவுசெய்துள்ளது. எனினும் பணிநீக்கம் செய்பவர்களுக்குத் தகுந்த…

    • 10 replies
    • 994 views
  18. புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அடிமைகளின் தேசம்! “வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது.” கடவுளை நொறுக்கிய துகள்! “இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவா…

  19. [size=4]பசி, வறுமை மற்றும் நோய்களை ஒழிக்க 2வது சுதந்திரப்போராட்டத்திற்கு நாடு தயாராக வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். [/size] [size=4]நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக, சுதந்திர தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், நாட்டின் பணவீக்கம் குறிப்பாக உணவுப்பொருட்கள் விலை கவலை தரக்கூடிய அம்சமாகவே இருப்பதாக தெரிவித்தார். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இன்னும் தடங்கல் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், பசுமைப்புரட்சியை மீண்டும் கொண்டுவரவும் விரைவான அமைப்பு தேவை என்று கூறினார். [/size] [size=4]நாட்டில் நோய், பசி மற்றும்…

    • 12 replies
    • 2.8k views
  20. இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண் [size=3] இஸ்ரேல் நாட்டு சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிர் அணுவை கடத்தி வந்த பாலஸ்தீன பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில…

    • 0 replies
    • 618 views
  21. [size=2]த‌மிழக முத‌‌ல்வ‌ர் ஜெயல‌லிதா ‌‌மீதான சொ‌த்து‌க்கு‌வி‌ப்பு வழ‌‌க்‌கி‌ல் ஆஜரா‌கி வாதாடி வரு‌ம் க‌ர்நாடக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆ‌ச்சா‌‌ர்யா ‌திடீரென இ‌ந்த வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ‌வில‌கியு‌ள்ளது அர‌சிய‌ல் வ‌‌ட்டார‌த்த‌ி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.[/size] [size=2]முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, அவரது தோ‌ழி ச‌சிகலா உ‌ள்பட 4 பே‌ர் ‌மீதான சொ‌த்து‌க்கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் க‌ர்நாடக மா‌நில‌ம் பெ‌ங்களூரு‌வி‌ல் உ‌ள்ள ‌த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் நட‌ந்து வரு‌கிறது.[/size] [size=2]க‌‌ர்நாடக அர‌சி‌ன் தலைமை வழ‌க்க‌றிஞராக ப‌ணியா‌ற்‌றி வ‌ந்தவ‌ர் ஆ‌ச்சா‌ர்யா. கட‌ந்த 2005ஆ‌ம் ஆ‌ண்டு ஜெயல‌லிதா ‌மீதான சொ‌‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் அரசு சா‌ர்‌பி‌ல் ஆஜரா‌னதா‌ல் தலைமை வ…

  22. கிரேக்க அரசாங்கம் சமூகநலச் செலவுகளில் 11.5 பில்லியன் யூரோக்களை அறிவித்து ஒரே வாரத்திற்குப் பின் 4,500 பொலிஸ் அதிகாரிகள், தோட்டாக்கள் ஊடுருவ முடியாத உடைகளை அணிந்து, அல்சேஷன் நாய்களின் துணையோடு, ஏதென்ஸ் நகரத் தெருக்களில் வெளிநாட்டு-தோற்றமுள்ள மக்களைத் தேடிப் பிடிக்கப் புறப்பட்டனர். கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர். நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்க…

    • 7 replies
    • 757 views
  23. தூத்துக்குடி: தூத்துக்குடியில் தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர். புதூர் பாண்டியபுரத்தில் உள்ள இந்து பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்தில், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்த நிலையில்,அது ஆலைக்குள் பரவியது. இதில் 4 பேர் பலியாகினர்;5 பேர் காயமடைந்தனர்.மேலும் பலர் உள்ளே சிக்கி இருப்பதாகவும்,அவர்களை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Vikatan NEws

  24. ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு நாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1.16 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். இவ்வளவு பேரின் உடமைகளை பரிசோதிப்பது கடினம் என்பதால், விளையாட்டு வீரர்களது உடமைகள் ஒலிம்பிக் கிராமத…

  25. [size=3][size=5]ரஷ்யா, வடஜப்பானில் கடும் நிலநடுக்கம் -ரிக்டரில் 7.3 அலகுகளாக பதிவு[/size][/size] [size=3][size=3]Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 10:30[/size][/size] [size=3][/size] [size=3][size=3]மாஸ்கோ: கிழக்கு ரஷ்யா மற்றும் வடக்கு ஜப்பான் ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.[/size][/size] [size=3]ரஷியாவின் கிழக்குப் பகுதியில் பூமிக்கு அடியில் 625 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி தொடர்பான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.[/size] [size=3]ரஷியா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.