Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நீதி வேண்டுமா, ஆயுதமேந்து! ரூபம் பதக் வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் உண்மை. ரூபம்-பதக் பீகார் மாநிலத்திலுள்ள புருனியா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி மரணமடைந்த வழக்கில், அவரது மரணத்துக்குக் காரணமான 35 வயதான ரூபம் பதக் என்ற பெண்ணுக்கு, கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். ஒரு பள்ளி ஆசிரியை ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கத்தியால் குத்தி, அவரது உயிரைப் பறிக்க வேண்டிய காரணமென்ன? இக்காரணத்தை ரூபம் பதக்கின் வார்த்தைகளில் சொன்னால், “அவன் ஒரு சாத்தான்!” ராஜ் கிஷோர் கேசரியும், அவரது உதவியாளர் பி.என்.ராய் என்பவனும் கூட்டாகச் சே…

  2. தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது. வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை …

  3. வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அவ்வழியான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் நேற்று இரவு 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து தொன்காரியோ என்ற எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டது. மேலும் எரிமலையில் இருந்து புகையும், சாம்பலும் வெளியேறியது. 1897ம் ஆண்டு தான் இந்த எரிமலை கடைசியாக வெடித்தது. இந் நிலையில், கடந்த 115 ஆண்டுகளுக்கும் மேலாக மவுனமாக இருந்து வந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் எரிமலையின் அருகே வசி…

  4. புதுடெல்லி: மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 'சட்டவிரோத’ அரசு என்று பா.ஜனதா தலைவர் அத்வானி பேசியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார். மக்களவையில் இன்று அசாம் கலவரம் மற்றும் சுரங்க ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அரசு ஒரு சட்டவிரோத அரசு என குற்றம்சாட்டினார்.அத்வானி இவ்வாறு கூறியதும் சோனியா கடும் ஆவேசமடைந்து,தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதனை தனது முக பாவனை மூலமும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் அத்வானியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு கண் ஜாடை காட்டினார். திரும்ப பெற்ற அத்வானி இதனைய…

  5. சென்னையில் டெசோ மாநாடு நடைபெறும் அதே நாளில் அம் மாநாட்டிற்கு எதிராக தமிழீழமே தனித் தீர்வு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநாடு ஒன்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ளது. தமிழீழ ஆதரவு மாநாடு என்ற பெயரில் வேலூர் கோட்டை மைதானம் அருகே 12-ம் தேதி இம் மாநாடு நடைபெறவுள்ளதாக அக் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெசோ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தலைவர்கள் தற்போது மாநாட்டில் தனித் தமிழீழத் தீர்மானத்தை நிறைவேற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அர்ஜுன் சம்பத், ஈழத்தமிழர்களின் இன்னல் தீரவும், தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் ஒரே தீர்வு தனித் தமிழ…

  6. குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை! கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும். இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும். ‘‘தனியார் ஆங்கி…

  7. [size=4]இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.[/size] [size=4]இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை ஏராளமான இயக்கங்கள் மூலமாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தி வருகிறது.[/size] [size=4]இதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய …

  8. [size=3][size=4]டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய வீரர் விஜய்குமார். ஆனால் அவருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால், ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார்(25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து வி…

  9. [size=2][/size] [size=2][size=4]கெமரூன் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் போட்டியாளர்கள் 7 பேர் பிரிட்டனில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பொருளாதார காரணங்களுக்காக ஐரோப்பாவில் தங்கியிருக்க தீர்மானித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மகளிர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த மாற்று கோல்காப்பாளரான ட்ருசில்லே என்கோகா முதலாவதாக காணாமல் போனதாக கெமரூன் ஒலிம்பிக் குழுவினர் கூறியதாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பின்னர் நீச்சல் போட்டியாளர் ஒருவரும் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து காணாமல் போயுள்ளனர். முதலில் வதந்தி என கருதப்பட்ட விடயம் உண்மையாகியுள்ளது என …

  10. [size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் கழுதை மீது வெடிகுண்டு கட்டி அனுப்பி, தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]ஆப்கனில் தலிபான்களை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஆப்கன் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ படை வீரர்கள் போர் பயிற்சியும் அளித்து வருகின்றனர். இவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில், தலைநகர் காபூலில் இருந்து 360 கி.மீ. தொலைவில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள சர்சதா மாவட்டத்தில் நேற்று வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் போல…

  11. சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாலசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நட…

    • 1 reply
    • 587 views
  12. இலங்கையில் மீன்பிடிக்க சீனர்களுக்கு உரிமை- இலங்கை கடற்படையே அம்பலப்படுத்தியது திருகோணமலை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்லப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழீழ மீனவர்களும் காலம்காலமாக பாக்ஜலசந்தி கடற்பரப்பில் எந்தவித பிரச்சனையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவில் வலைகளை உலரவைத்து ஓய்வெடுத்து ஆண்டுக்க்கொருமுறை நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்று தொப்புள் கொடி உற்வுகளாய் தமிழ…

  13. சிரிய பிரதமர் றியாத் ஹிஜாப் கிளர்ச்சியில் இணைந்து கொள்ளும் முகமாக ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளதாக அவரது பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கத்திற்கு ௭திரான மக்கள் ௭ழுச்சி ஆரம்பமானதையடுத்து அரசாங்கத்தை விட்டு வெளியேறிய உயர்மட்ட அரசியல்வாதியாக கருதப்படுகிறார். ஹிஜாப்புடன் அவரது குடும்பமும் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னி முஸ்லிமான ஹிஜாப், சிரியாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள டெயிர் அல்ஸோரைச் சேர்ந்தவராவார். சிரிய அரசாங்கத்திலிருந்து விலகிய முதலாவது அமைச்சராக ஹிஜாப் விளங்குகிறார். ஒரு மாதத்திற்கு முன் பஷார் அல் அஸாத்த…

  14. இங்கிலாந்தில் கறுப்பின வாலிபருடன் தொடர்பு வைத்திருந்த மகளை கொடூரமான முறையில் தாக்கிய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது, வேல்ஸ், ஸ்வான்சீ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான டேவிட் செம்பியன். இவரது மனைவி பெயர் பிரான்சஸ் செம்பியன். இவர்களின் மகள் ஜேன் சாம்பியன் (17). ஒரு நாள் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயம் ஜேன் தனது காதலரான அல்போன்ஸ் நெகுபேயை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். நெகுபே கறுப்பினத்தைச் சேர்ந்தவர். இதன்போது வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதேவேளை அங்கு வந்த ஜேனின் பெற்றோர் தங்களது மகள் நிர்வாண நிலையில் தனது காதலருடன் இருப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளனர். இதையடுத்து தந்தை டேவிட்…

  15. காசி நகரின் சுடுகாட்டுச் சிறுவர்கள்! சிதையின் குழந்தைகள் ஆவணப்படம் | Children of the Pyre “நீங்கள் பலவீனமான இதயம் கொண்டவராக இருந்தால் தயவு செய்து இந்தப் படத்தை பார்க்க வேண்டாம், உடனே இந்த திரையரங்கை விட்டு வெளியேறிவிடுங்கள். உண்மையாகவே இந்த ஆவணப்படம் அதிர்ச்சியானது” என்று சிதையின் குழந்தைகள் (The Children of Pyre) ஆவணப்படத்தை அறிமுகப்படுத்தினார் அப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஜாலா. குளிரூட்டப்பட்ட அந்த திரையரங்கத்தில் இது ஒரு விளம்பர யுக்தியாகவே பட்டது. ஆனால், ஆவணப்படம் ஆரம்பித்த சில நொடிகளில் அந்த திரையரங்கமே காசி நகரின் கங்கைக்கரையில் பிணங்கள் எரிக்கப்படும் சுடுகாடாக மாறிவிட்டது. உடல் முதல் உள்ளம் வரை வேர்த்து விறுவிறுத்துவிட்டது. காரணம் சுடுகாட்டில் எர…

  16. ஐ.நா. மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவியிலிருந்து விலகுமாறு அமெரிக்கா கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும், அமெரிக்காவும் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறானதொரு அழுத்தம் தனக்கு தரப்படவில்லை.என்னை பதவி விலகுமாறு கேட்கப்பட்டதான செய்தியில் உண்மை கிடையாது என நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இப்போது வகிக்கும் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரி…

    • 1 reply
    • 568 views
  17. சிறுமி சுருதியைக் காவு கொண்டது எது? ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது. சென்னை, சேலையூரில் உள்ள சீயோன் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் சிறுமி சுருதி, 25ஆம் தேதி புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பும்போது, பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் கால் தவறி விழுந்து, பின் சக்கரம் தலையில் ஏறி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கும் செய்தி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பள்ளிப் பேருந்துக்கு ஜூலை 9ஆம் தேதியன்ற…

  18. உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி இன்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு “எனோலாகே” என்ற விமானம் லிட்டில் பாய்(சின்னப் பையன்) என்ற அணுகுண்டை நகரத்தின் நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும், படைத் தளபதியுமான “பால்டிப்பெட்ஸ்” என்பவரின் தாயார் பெயர் தான் எனோலாகே என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரித்தன. உடனடியாக 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நில…

  19. காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி [size=4]தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .[/size] [size=4]பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த …

    • 0 replies
    • 831 views
  20. வேண்டாப் பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல சிரிய அதிபர் இப்போது எதனைச் செய்ய முயன்றாலும் அது குற்றமாகவே பார்க்கப்படும் நிலைமைக்குள் அவர் வந்துள்ளார். 42 ஆண்டுகள் லிபியாவை ஆண்ட கேணல் முவம்மர் கடாஃபியை ஒரு சில மாதப் போரின் மூலம் அகற்றிய மேற்குலக நாடுகளால், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தெரிகின்றது. எனினும், அகற்றியே ஆகவேண்டும் என்பதில் மேற்குலகம் உறுதியாக இருப்பதால் அவரின் ஆட்சி அதிகார நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றே நம்பலாம். இலங்கையில் போர் தொடங்கியவுடன் அங்கிருந்து தனது பணியாளர்களை வெளியேற்றிய ஐ.நா, இனப்படு கொலையான தமிழர்களை கணக்கெடுத்துச் சொல்ல மாதங்கள் பலவற்றை எடு…

  21. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of South – East Asian Nations)1967 ஆகஸ்து 8ம் நாள் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்த அமைப்பிற்கு 45 வயதாகிறது. இவ்வளவு காலமும் இல்லாத உறுப்பு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் சென்ற வாரம் (யூலை 13-20,2012) வெளிப்பட்டன. ஆசியன் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பு நாடுகளாக தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர் என்பன இருக்கின்றன. இன்று கம்போடியா. பர்மா, வியற்நாம், லாவோஸ், புரூணை போன்றவை சேர்த்துக் கொண்டபடியால் உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி. பிராந்திய அமைதி, பரஸ்பர உதவி, கல்வி தொடர்பான பயற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்சார் வளர்ச்சி, பிற பி…

  22. சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!! ஈஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்” இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்…

  23. ஒபாமாவுக்கு எதிராக ஒரு சலாம் வரிசை! புழுதி பறக்கக் கம்பைச் சுழற்றி, புழுதி அடங்குமுன் அப்படியே குனிந்து வாத்தியாருக்கு சலாம் வைப்பதை, சிலம்பத்தில் சலாம் வரிசை என்பார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் பி.டி.ஐ. செய்தி நிறுனவத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் வர்த்தகச் சூழல் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளால், ஆத்திரம் கொண்ட மத்திய அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் அவர்களுடன் இந்தியத் தரகு முதலாளிகளும்கூடச் சாமியாடி சலாம் வரிசை எடுத்து விட்டார்கள். பத்திரிகைகளைப் படிக்கின்ற வாசகர்கள், அடேயப்பா ஒபாமாவுக்கு பலத்த அடிதான் போலும் என்று எண்ணியிருக்கக் கூடும். புழுதி கிளப்பிவிட்டதால், காலில் விழுந்த காட்சியை யாரும் கண்டிருக்க முடியாது. இந்தியாவில்…

  24. [size=4]கற்பைக் காக்க தந்தையை குத்திக் கொன்ற மகளை பாராட்டி விடுதலை செய்த நீதிபதி! தன் கற்பை பாதுகாக்க வேறு வழியின்றி தந்தையை குத்திக்கொன்ற மகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் அந்த மகள் செய்துள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்தவர் அனுராதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அண்ணன் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவு வீட்டில் அனுராதா தனியாக இருந்தார். அப்போது அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.