Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. | பாமக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கம் var zflag_nid="1185"; var zflag_cid="767/186"; var zflag_sid="209"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9"; பாமக மாநில இணை பொதுச்செயலாளராக இருந்தவர் வேல்முருகன். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் இவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் அவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. …

  2. தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை 61பிரபல கடைகளிற்கு சீல் -பரபரப்பு சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை. இன்று காலை தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் த…

  3. பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர். ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்க விருப்பத்தை …

    • 10 replies
    • 1k views
  4. அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியைத் தாக்கிய பாரிய பனிப் புயல் காரணமாக 6 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக நிவ்ஜேர்ஸி, கெனக்டிகட், மசாசுஸெட்ஸ் மற்றும் நிவ்யோர்க்கின் சில பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிலிடெல்பியாவில் பனிப் பொழிவின் காரணமாக இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். பென்சில்வேனியாவிலுள்ள ஆலயத்தில் பனி விழுந்ததால் 84 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார். கெனக்டிகட்டில் 75,000 பேரும் நிவ்ஜேர்சியில் 600,000 பேரும், மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …

  5. சென்னை: விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு இன்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பு குழுவை, சென்னை ஐகோர்ட் கடந்த, 2006ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவினர் செய்த ஆய்வில், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில், 48 வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இந்த கட்டடங்களை இடிக்க, 2007ம் ஆண்டு கண்காணிப்பு…

  6. துனிஷீயா, எகிப்து, லிபியா ஆகிய அரபுநாடுகளில் மக்கள் ஒன்று திரண்டு நீண்ட கால சர்வாதிகாரிகளைத் துரத்தியும், வீழ்த்தியும் புரட்சி செய்தனர். இந்தப் புரட்சி ‘அரபு வசந்தம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. பாக்கிஸ்தானிலும் அத்தகைய மக்கள் புரட்சி காலத் தேவையாக உள்ளது என்று தஹ்ரீக்கெ இன்சாஃப் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார். லாஹுரில், மினாரே பாக்கிஸ்தான் என்னுமிடத்தில் கூடிய 50,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே, பேரணியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். “மாற்றத்தை முன்னெடுப்போம்” என்றொரு முழக்கத்தைப் பற்றிக்கொண்ட இம்ரான்கான், “இந்த நாடு, திருடர்களிடமிருந்தும், சுரண்டல்வாதிகளிடமிருந்தும், ஊழல்பேர்வழிகளிடமிருந்த…

  7. உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது! Published on October 31, 2011-3:45 am உலக மக்கள் தொகை இன்று (31) 700 கோடியை தொட்டுவிட்டது. நேற்று (30) நள்ளிரவுடன் இந்த விசேட மக்கள் தொகை எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய விடயத்தை கொண்டாடும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனத்தொகை நிதியத்தினால் 07 பில்லியன் பெறுமதியான திட்டங்கள் உலகம் முழுவதும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 பில்லியன் மக்கள் வசிப்பு மற்றும் அதன் மூலம் ஏற்படும் எதிர்கால சவால்கள், சந்தர்ப்பம், மற்றும் ஏதும் செய்வதற்கு உள்ள திறமை, உலகின் எதிர்காலத்தை திட்டமிடுதல் ஆகிய செயற்பாடுகளின் கீழ் மேற்படி திட்டங்கள் அமையும். 07 பில்லியன் மக்களாக நாம் ஒருவருக் கொருவர் அக்கறையுடன் வசிப்போம் …

  8. 03.11.11 ஹாட் டாபிக் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அத்வானியின் ரத யாத்திரை, இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது, கூடங்குளம் அணுமின் நிலையம் என சென்சிடிவ் பிரச்னைகளை தமிழகத்தில் கையில் எடுக்க, பரபரப்பு அதிகரித்துள்ளது. லஞ்சம், ஊழலை எதிர்த்து அத்வானியின் நாடு தழுவிய ‘ஜன் சேத்னா யாத்ரா’ என்ற ‘மக்கள் விழிப்புணர்வு யாத்திரை’ பீகார் மாநிலத்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த சாப்ரா நகரில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 38 நாட்கள் நடக்கிறது. இந்த யாத்திரை 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 100 மாவட்டங்கள் வழியாக 7,600 கி.மீ. பயணித்து நவம்பர் 20-ம் தேதி டெல்லியில் நிற…

  9. ஆப்கனில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 14 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் படையினர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். நேட்டோ படையினர் பயணம் செய்த பஸ் மீது காரில் வந்த தலிபான் தீவிரவாதி மோதி வெடிக்கச் செய்ததில் நேட்டோ படையினர் 11 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் நகரத்தின் மேற்கு பகுதியான அஸாதாபாதின் குணார் மாகாணத்தில் மற்றொரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகத்துக்கு வெளியே பெண் மனித வெடிகுண்டு நடத்திய இத்தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். காந்தகார் நகரில் அமெரிக்க நடத்தி வரும் பொது மக்கள்-ராணுவ முகாம்கள் மீது தலிபான்கள் வெள்ளிக்கிழமை நான்கு மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்…

  10. மூவரையும் தூக்கிலிட வேண்டும்: மத்திய அரசு பதில் மனு முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத தலைவர் நிராகரித்துவிட்டதால், அவர்களை தூக்கிலிட உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தங்களுடைய கருணை மனுக்களை 11 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருந்துவிட்டு, பிறகு நிராகரித்திருப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இவர்களின் மன…

    • 8 replies
    • 873 views
  11. லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவ…

  12. [ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 01:36 GMT ] [ கார்வண்ணன் ] அவுஸ்ரேலியாவின் சிட்னி வில்லாவூட் தடுப்பு நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுஸ்ரேலியாவின் அகதிகள் பற்றிய கொள்கை குறித்த கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. “சுட்டிவிகடன்“ என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட 27 வயதான ஜெயசங்கர் ஜெயரட்ணம் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை அதிகாலை, அதிகளவிலான தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்து ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இருந்து இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவரது தஞ்சக் கோரிக்கை கடந்த ஓகஸ்ட் மாதமே ஏற்கப்பட்டு விட்டது. ஆனால் அவுஸ்ரேலிய புலனாய்வு அதிகாரிகளின் அறி…

  13. கடாபியின் இரகசிய இரசாயன ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிப்பு _ வீரகேசரி இணையம் 10/27/2011 5:11:28 PM லிபியாவில் கடாபியினது இரகசிய இரசாயன ஆயுதக் களஞ்சியசாலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிர்ட் நகரின் தெற்கே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 80 ஆயுதக் களஞ்சியசாலையொன்றிலேயே அபாயகரமான இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த ஆயுதங்கள் இடைக்கால அரசாங்கப் படையினர் சிர்ட் நகரைக் கைப்பற்றும் வரை கடாபியின் படையினரின் காவலின் கீழ் இருந்தாக இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேட்டோவின் உளவு விமானங்கள் சிர்ட் நகரிலிருந்து தெற்கே 130 மைல் தொலைவில் ருகவா எனும் இடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் சந்தேகத்துக்கிடமாக இரசாயன ஆயு…

  14. கவின் / வீரகேசரி இணையம் 10/27/2011 10:53:25 AM Share சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள‌ நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு…

  15. சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவம். மியான்மர் சுதந்திர போராட்ட வீராங்கனை ஆங் சாங் சுகிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர் ஆங் சாங் சுகி. ராணுவத்திற்கு எதிராக போராடியதற்காக 15 ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் அவருக்கு உயரிய வாலன்பர்க் விருது வழங்கி கவுரவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு செல்ல ராணுவ அரசு அனுமதி வழங்காததால் இணையதளம் மூலம் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். http://mykathiravan....a-news/?p=17868

  16. புதுடில்லி: இந்தியப்பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியப்பெருங்கடலில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது அந்தமான் நிகோபர் தீவுகள். இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்காசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலைத் தாண்டி இந்தியாவுக்கு வந்த எவ்வித ஆபத்தும், அந்தமானை கடந்து தான் இந்தியாவை தொடமுடியும் என்பதால், இப்பகுதி மீது சீனாவுக்கு ஆர்வம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை கப்பல் ஒன்று இங்கு உளவு பார்த்த சம்பவம் மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், தனது தவறை தாமதமாக உணர்த்தியும் உள்ளது…

  17. அந்தமான் தீவுகளில் இந்தியா பாதுகாப்பை அதிகரிக்கிறது - சீன ஊடுருவலால் அதிர்ச்சி:- இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடலில் சீனாவின் ஊடுருவலை தாமதமாக உணர்ந்த இந்தியா, அந்தமான் தீவுகளில் தனது பாதுகாப்பை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகள் இந்தியப் பெருங்கடலில் வரலாற்று ரீதியாகவும் பூகோளரீதியாகவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிலிருந்து மிக தொலைவில் இருக்கும் அந்தமான் தீவுகள், தென்கிழக்கு ஆசியாவுக்கான நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் தீவுகளைக் கடந்தே இந்தியாவுக்கு எவ்வித ஆபத்தும் வர முடியும். இப்பகுதி மீது ஆரம்பத்தில் இருந்தே சீனாவுக்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் சீனக்கடற்படை…

  18. வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…

    • 7 replies
    • 1.8k views
  19. Started by வீணா,

    விபரம்கள் சரியா என தெரியவில்லை முக நூலில் கிடைத்ததை பகிர்ந்துள்ளேன் முன்னாள் லிபிய ஜனாதிபதி ஜெனரல் கடாபியையும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினையும் ஒரே பார்வையில் பார்க்கும் ஈழத்தமிழர் கவனத்திற்கு : ஜெனரல் கடாபி ஆட்சியில்........: 1) லிபிய குடிமக்கள் எவரும் மின்சாரகட்டணம் செலுத்தவேண்டியதில்லை. 2) லிபிய அரசின் வங்கிகளில் எந்த ஒரு லிபிய குடிமகனும் 0% வட்டிக்கு வங்கிகடன் பெற்றுகொள்ளலாம். 3) லிபிய மனித உரிமைகளில் ஒன்று : லிபிய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தனிதனி வீடுகள் பெற்றுகொள்ளலாம், கடாபி இறக்கும் நேரம் வரை கடாபியின் தாயும் தந்தையும் ஒரு தகர கூடாரத்தினுள்ளே வாழ்ந்துவருகின்றனர். 4) லிபிய குடிமக்கள் எவரும் புதிதாக மணம் முடிக்கும் …

  20. - 30.10.11 ஹாட் டாபிக் அழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெ…

  21. 25-11-2011 ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..! நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தே…

  22. ஸ் ரீவ் யேப்ஸ் புதிய புத்தகம் நேற்று வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளால் உலகின் சிகரங்களை தொட்டு அண்மையில் புற்நோயால் மரணமடைந்த ஸ் ரீவ் யேப்ஸ்சின் வாழ்க்கை வரலாறு நூல் வடிவில் நேற்று வெளியானது. வோல்ரர் ஈசக்சன் walter Isaacson இதை எழுதியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 40 தடவைகள் ஸ் ரீவ் யேப்சை இவர் தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார். மேலும் இவர் தொடர்பான கருத்துக்களை பல ஆயிரக்கணக்கானவரிடமிருந்து திரட்டியும் உள்ளார். ஸ் ரீவ் யேப்ஸ் பற்றிய பாரிய அனுபவத்துடன் நூலை வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் சி.என்.என் நிர்வாகத்தில் உள்ளவர், ரைம் சஞ்சிகையின் நிர்வாக எடிட்டர், மற்றும் ஐன்ஸ்டைன், பென்ஞமின் பிராங்கிளின், அன் அமெரிக்கன் லைப் கீஸிங்கர் போன்ற புகழ…

    • 9 replies
    • 1.3k views
  23. சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா? இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவத்தின் காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்காணொளியில் குழந்தை வாகனத்தில் மோதப்படுவது முதல் மற்றையவர்கள் அலட்சியமாக விலகிச் செல்வது வரை அனைத்தும் பதிவாகியிருந்தது. மேலும் சீனர்களில் மனிதாபிமானம் தொடர்பிலும் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அச்சம்பவம் தொடர்பில் விசார…

    • 9 replies
    • 1.1k views
  24. உலக ஒற்றுமையின் சின்னம் ஐ.நா தினம் இன்றாகும். ஐ.நா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா அமைப்பின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. இனி இன்னொரு போர் உலக நாடுகளிடையே ஏற்பட்டுவிடக் கூடாது. உலகில் அமைதியும் சமநிலையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 1945 ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 26ல் சான்பிரான்சிஸ்கோ நகரில் உலக நாடுகளின் கூட்டம் நடந்தது. அ…

  25. விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான தகவல் பரிமாற்ற விவரங்களை வெளியிட்டு உலகையே உலுக்கிய இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்ச். விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல பரபரப்புத் தகவல்களால் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் பெரும் புயல் கிளம்பியது. இந்தநிலையில் தனது தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுக்கு எதிராக …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.