Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாகை அருகே நடுக்கடலில் மீனவர்களை அரிவாளால் வெட்டி மீன்கள் கொள்ளை: இலங்கை கடற்படையினர் அட்டூழியம் Nagapattinam சனிக்கிழமை, ஆகஸ்ட் 20, 3:33 PM IST நாகை, ஆக. 20- நாகை அருகே உள்ள அக்கரை பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 200 விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு தமிழக எல்லை கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 7 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கினர். அதோடு மீனவர்களை அரிவாளால் வெட்டினர். பின்னர் மீன்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் மீனவர்கள் வெங்கடேஷ், பாலையா, ரவி ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.வெட்டுப்பட்ட அவர்கள் படகில் ரத்த வெள்ள…

  2. வரலாறு படிப்பதற்கு மட்டும் அல்ல; படைப்பதற்கும்தான்!'' - என்று மாணவர் படைக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் படையைத் திரட்​டத் தயாராகிவிட்டார் சீமான். 'நாம் தமிழர் கட்சி’யின் மாணவர் பா​சறையின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 15-ம் தேதி, சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்தது. பேரா​சிரியர் தீரன், சாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம் ஆகியோ​ருடன் சீமான் மேடையேற... மாணவர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம்! நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்​டும்? அடுத்த இலக்கு என்ன என்பவை​பற்றி விரிவாக அலசப்பட்டது. இதில் பேசிய இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்​பாளர்​களான இளமாறன், ராஜீவ்காந்தி ஆகியோரின் பேச்சுதான், வந்திருந்தவர்களை முறுக்கேறச் செய்தது. …

  3. பிரிட்டனில் சமூகம் சீரழியவில்லை என முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கூறினார். இந்த மாத துவக்கத்தில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளுக்கு நடத்தை சீரழிவு என கூறக்கூடாது என அவர் தெரிவித்தார். பிரிட்டனில் சமூக சீரழிவு ஏற்பட்டு விட்டது. அதனால் வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன என சிலர் விமர்சனம் செய்தனர். இதனை டோனி பிளேர் திட்டவட்டமாக மறுத்தார். தற்போதைய தாக்குதலை சமூக சீரழிவு என கூறக்கூடாது. இதனால் உலக அளவில் பிரிட்டனின் புகழ் பாதிக்கப்படும் என்ற கவலை தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் உள்ளூர் அரசியலில் மிக அரிதாகவே ஈடுபட்டார். தற்போது வெளியாகி உள்ள கருத்து பிரிட்டனின் மதிப்பை குறைப்பதாக உள்ளது என அவர் உடனடியாக பதிலடி தந்துள்ளார்.…

  4. இஸ்லாமாபாத்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மைத்துனர் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திய அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கடந்த மே மாதம் 2-ம் தேதி அப்போத்தாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு வளையமாக இருந்த அவரது மனைவி அமால் அல் சதா (28) மற்றும் 5 குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த 6 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, எனது சகோதரி பின் லேடனின் மனைவிய…

  5. திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை, அதன் 6வது ரகசிய அறையிலிருந்தவற்றில் பலமுறை திருவிதாங்கூர் மன்னர் உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கடத்தி சென்றுள்ளார் என்று கேரள முதல்வர் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். மொத்தம் உள்ள 6 அறைகளில் 5 அறைகளைத் திறந்து பார்த்து விட்டனர். அவற்றில் பதுங்கிக் கிடந்த பல லட்சம் கோடி பொக்கிஷங்கள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்த நிலையில் 6வது அறையைத் திறக்க மட்டும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து தேவ பிரஸ்னம் பார்க்க மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். அப்போது இந்த அறையைத் திறந்தால், திறப்பவரின் வம்சமே அழிந்து போய் விடும் என ஜோதிடர்கள் எச்சரித்தனர். இந்த நிலையில் 6வது அறையில் இருந்த பொக்க…

  6. நில அபகரிப்புப் புகார் என்ற பெயரில் தி.மு.க-வினரைக் கைது செய்து பழி தீர்த்து வருகிறார் ஜெயலலிதா’ என்று கருணாநிதி ஒரு பக்கம் வெடித்துக்கொண்டு இருக்க... 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடரும்...’ என்று பதில் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தமிழகம் முழுக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், நில அபகரிப்புப் புகார் சிறப்புக் காவல் பிரிவும் தொடங்க உத்தரவு இட்டு இருக்கிறார். ''உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்கள் அத்தனை பேரும் உள்ளே இருக்கணும்'' என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக …

    • 0 replies
    • 463 views
  7. இந்தியாவில் மரண தண்டனையை நிறுத்துமாறு சர்வதேசம் வேண்டுகோள் வீரகேசரி இணையம் 8/21/2011 12:06:31 PM பிரிட்டன், அமெரிக்கா, கனடா, இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்களும் கல்விமான்களும் மற்றும் தத்துவஞானியான நோம் சொம்ஸ்கியும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இது இவ்விதமிருக்க மகேஸ்டட்டானி, மகாஸ்வெட்டாதேவி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இந்தியாவில் மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து பத்திரிகைக்கு அறிக்கை விட்டுள்ளதாக இந்த தீர்மானத்தை முன்னெடுக்கும் குழுவின் ஒருவரான மங்களூர் சென்ட் அலோசியஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் சாள்ஸ் அந்தோனி கூறுகி றார். மூன்று பேரின் மரண தண்டனையை நிறுத்தி அவர்களின் உயிரைக் காக்குமாறு பிரபல சட்டவல்லுநரான ஜி.ஆ…

  8. http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!

    • 1 reply
    • 1.1k views
  9. பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை.. ஆஸ்திரேலியா புதிய சட்டம் போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டத்தின்படி போலீஸ் சோதனையின்போது வாகனம் ஓட்டுபவர்கள் பர்தா, ஹெல்மட்கள், முகமூடிகள், முகத்தை மூடி இருக்கும் திரை சீலைகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். இவை தவிர போலீசாரின் சோதனையின் போது தேவைப்பட்டால் உடலில் அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கூட கழற்ற வேண்டும். சோதனையின்போது, அவற்றை அகற்ற மறுத்தால் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். சோதனையின…

    • 0 replies
    • 501 views
  10. முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர் மத்திய அரசால் பறிக்கப்பட இருக்கிறது. இது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூ க்குக் கயிறை தழுவப்போகிறார்கள். தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். பேரறிவாளன், முருகன், சாந்த…

    • 4 replies
    • 1.3k views
  11. என் மகன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்யுங்கள்’’ என்ற குரலோடு நீதி கேட்டு அற்புதம்மாள் நடக்கத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. மகனின் தூக்குத்தண்டனை மீதான கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் வேகத்தோடும், நம்பிக்கையோடும் அதிகாரத்தின் கதவுகளை தட்டத் தொடங்கியிருக்கிறார் அற்புதம்மாள். அற்புதம்மாள்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார். பத்தொன்பது வயதில் இவர் மகன் அறிவை விசாரணைக்கென அழைத்துச் சென்றது சி.பி.ஐ.! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக அவர்கள் சொன்னதும் அதிர்ந்து போனார் அற்புதம்மாள். தன் மகன் நிரபராதி என நிரூபிக்க இவர் மேற்கொண்ட போராட்டங்கள் யா…

  12. ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்ப…

  13. சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமண…

  14. பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலைக்குண்டு தாக்குதல் - 48 பேர் பலி பாகிஸ்தானின், ஜமுர் மாவட்டத்தின் பள்ளிவாசல் ஒன்றில், இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 48 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சுமார் 400 க்கு மேற்பட்டோர் இங்கு கூடிய போதே இக்குண்டு தாக்குல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலின் போது காயமடைந்த 50 க்கு மேற்பட்டோர் பேஷ்வாரில் உள்ள லெடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடன் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவோம் என அல் கைதாவினர் சபதம் எடுத்திருந்த நிலையில் அல் கைதாவுடன் சேர்ந்தியங்கும் குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. http://www.4tamilmed...-48-i…

  15. ராஜீவ் கொலைக்குற்றவாளிகளின் கருனை மனு நிராகரிப்பை வரவேற்கிறேன் : தங்கபாலு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். அவர், ’’முருகன், பேரறிவாளன், சாந்தன் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நியாயமானதே. …

    • 6 replies
    • 1.3k views
  16. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்…

  17. பணம் பாதாளம் வரை பாயும்...’’ இந்த தாரக மந்திரத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு லாட்டரி தொழில் மூலம் பல மாநிலங்களை பாக்கெட்டில் வைத்திருந்தவர் மார்ட்டின். எங்கெல்லாமோ பாய்ந்த அவரது பணத்தால், இம்முறை அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ஆம்! லாட்டரி அதிபர் மார்ட்டினை கைது செய்வார்களா? மாட்டார்களா..? என்று பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்க... கடந்த சனியன்று அதிரடியாக கைது செய்தி ருக்கிறார்கள் சேலம் போலீஸார். தற்போது சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் மார்ட்டின். சேலத்தைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், சென்னை என்று மார்ட்டின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்துகொண்டிருக்க... அந்த வழக்குகளிலும் மார்ட்டின் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள…

    • 0 replies
    • 591 views
  18. ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்பட்டது. இவ்விமானத்தினை உர…

  19. அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றமைக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நாட்டுப் படைகளும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பமாகியதுடன் 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறவுள்ளது. பசுபிக் பகுதியில் நடைபெறும் இப்பயிற்சி நடவடிக்கையில் மூவாயிரம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவெனவும் இது போருக்கான அறிகுறியெனவும் இதனை நிறுத்தவேண்டுமெனவும் எச்சரித்துள்ளது. இதேவேளை கொரிய தீபகற்பத்தில் போர் உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் தென்கொரிய பத்திரிகைகள் செய்தி வெ…

  20. நியூயார்க்கில் சோனியா ஆதரவாளர்கள் பிராத்தனை காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக, அவரது ஆதரவாளர்கள் கூடி பிராத்தனை நடத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா அமெரிக்காவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியன் காங்கிரஸ் பார்ட்டி அமெரிக்கா என்ற அமைப்பைச் சேர்ந்த சிலர், நியூயார்க்கில் சோனியா அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் மருத்துவமனை முன்பாக அமர்ந்து, அவர் விரைவில் குணமடைய பிராத்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக, மருத்துவமனையினுள் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை நடத்த அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது. http://www.nakkheeran.in/users/…

  21. 24.08.11 மற்றவை இந்தக் கால கல்லூரிப் பெண்களிடம் எந்தவிதமான ஆசைகள் அதிகம்...? காதலா? காசுள்ள புருஷனா? வெளிநாட்டில் வேலையா? வேறென்ன இருக்கும்.... கேள்வியோடு கல்லூரி மாணவிகள் சிலரது மனதைக் கிள்ளினோம்... அங்கே நாம் சிந்தித்தே பார்த்திராத சென்டிமெண்ட்டுகள், கனவுகள், லட்சியங்கள், பொறுப்புகள்... அம்மம்மா.... ‘‘அம்மா, அப்பாவுக்குக் கடைசி வரை சப்போர்ட் செய்யணும்’’ பட்டென்று பதில் சொல்கிறார் ப்ரீத்தி. ‘‘ஐயையோ இதெல்லாம் நமக்கு சரிப்படாதுப்பா.... நமக்கு ஆடம்பர வாழ்க்கைதான் செட் ஆகும். பெருசா வீடு, பணக்கார வாழ்க்கைன்னு வாழ்ந்து பார்க்கணும்’’ என மோனிகா சொல்ல, ‘‘மீடியாவுல ஃபேமஸ் ஆகணும்... விளம்பரப் படங்கள்ல போட்டோகிராபரா…

  22. கனடாவில் ஒண்டோரியா அருகிலுள்ள லாசாலி என்ற இடத்தில் கார் நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டையே இழந்து நிற்கிறது ஒரு குடும்பம். வீட்டின் உரிமையாளர் காரில் இருந்து புகை மளமளவென வருவதைப் பார்த்தவுடன் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ வீட்டையே நாசமாக்கிவிட்டது என்று கூறினார். 20 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிய பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் சுமார் $30,000 டாலர்கள் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தீ விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீயினார் சேதமடைந்த வீட்டின் படம…

  23. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59664 முருகன், பேரறிவாளன், சாந்தனை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் : விஜயகாந்த் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைக்குள்ளான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்ளுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.