Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு புறம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனினும், விஜயகாந்துக்கு ஜெ. விதித்த 3 நிபந்தனைகளால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் கசிய ஆரம்பித்திருக்கிறது. இது உண்மைதானா என்று அறிய தே.மு.தி.க. வட்டாரங்களில் பேசினோம். “தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் ஒரு மாற்றத்தை உருவாக்கவே தே.மு.தி.க. உதயமானது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகவே விஜயகாந்தை மக்கள் நம்பிக்கையோடு பார்த்து வருகின்றனர். இருப்பினும், தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சி பல மட்டங்களிலும் தமிழகத்தை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு செல்வதை தமிழன் எவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான். அந்த அடிப்…

  2. ராசா இங்கே… கனியும் தயாளுவும் எங்கே ? உஸ்மான் ஆஷிஷ் பல்வா. மதுரை சாந்திக் கடை அல்வா அல்ல தோழரே... பல்வா.. பல்வா... இவர் செவ்வாய் அன்று இரவு, மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் படுவதற்கு முன், இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால், தீவிரமாக விசாரிக்கப் பட்டிருக்கிறார். shahid-balwa ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம் விஸ்ரூபம் எடுத்து பல பேரின் தூக்கத்தை ஏற்கனவே கெடுத்திருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள பூதம் ஆணி வேரையே ஆட்டி வைத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது, சிபிஐ விசாரணையில் ஆரயாயப் பட்டுக் கொண்டிருக்கும் நிலை…

  3. விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு: விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் ப…

  4. எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததைப் போல காஷ்மீரிலும் நடக்கும் என்று கூறியுள்ளார் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா. ஸ்ரீநகரில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எகிப்தில் மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு போராடிய மக்களுக்கு ராணுவம் பாதுகாப்பாக இருந்ததற்காக அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எகிப்து மக்கள் தங்கள் ஜனநாயகத்துக்காக போராடி வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் காஷ்மீரில் ஜனநாயகத்துக்காக 60 ஆண்டுகளாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை. எகிப்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது யாரும் அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காஷ்மீரில் மக்கள…

  5. பயணிகளுக்கான படகுப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன், இந்த முயற்சியில் சுதாட்டம் இருப்பது வெளிப்படை என்று குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறி்க்கையி்ல், "இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுப் போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அதில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தலை மன்னார்க்குப் படகுப் போக்குவரத்து உரிமங்கள் வழங்கிட உலகளாவிய ஒப்பந்தக் கோரல் விளம்பரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கால அவகாசம் கொடுத்து, அத்தகைய விளம்பரம் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் வரும…

  6. கச்சத் தீவு அருகே எண்ணெய் கிணறுகள்: தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி. இங்கு, பல்வேறு அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. எனவே, மன்னார் வளைகுடாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனம…

  7. இ‌ந்‌‌தியா கரு‌த்து‌க்கு ‌‌‌சீனா ‌ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம்: நிருபமா ரா‌‌வ் ஞாயிறு, 13 பிப்ரவரி 2011( 12:21 IST ) பா‌கி‌ஸ்தா‌ன் உடனான ‌பிர‌ச்சனைகளு‌க்கு இ‌ந்‌தியா‌வி‌ன் கரு‌த்து‌களு‌க்கு ‌சீனா ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று அயலுறவு‌த்துறை செயல‌ர் ‌நிருபமா ரா‌வ் கூ‌றியு‌ள்ளா‌ர். அமெ‌ரி‌க்கா‌வில ‌நியூயா‌ர்‌க்‌கி‌ல் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் பே‌சிய அவ‌ர், பா‌கி‌ஸ்தா‌னி‌ன் அணுஆயுத தி‌ட்ட‌ங்களு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பது கு‌றி‌த்து ‌சீனா ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர். பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் அணுஆயுத ‌‌தி‌ட்ட‌ங்களா‌ல் ஆ‌சிய ‌பிரா‌ந்‌திய‌த்த‌‌ல் பாதுகா‌ப்பு அ‌‌ச்சுறு‌த்த‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று ‌நிருபமா ரா‌வ் கூ‌றியு‌ள்ளா…

  8. காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எகிப்தில் மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு போராடிய மக்களுக்கு ராணுவம் பாதுகாப்பாக இருந்ததற்காக அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எகிப்து மக்கள் தங்கள் ஜனநாயகத்துக்காக போராடி வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் காஷ்மீரில் ஜனநாய கத்துக்காக 60 ஆண்டுகளாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை. எகிப்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது யாரும் அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காஷ்மீரில் மக்கள் தெருவில் இறங்கி போராடினால் அவர்களை லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகளின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகிறார்கள். அமெ…

  9. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மாஅன்சாரி. இவர் அடிக்கடி மரபுகளை மீறி கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து கடந்த ஆண்டு தீவிரமாக விவாதம் எழுந்த போது, அந்த இட ஒதுக்கீடு எந்த பயனும் தராது என்று சல்மா அன்சாரி பேசினார். அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் எத்தனை பெண்கள் பயன் பெறுகிறார்கள். எனவே பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாத வரை இட ஒதுக்கீடு பயன் தராது என்றார். சல்மாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த நிலையில் சல்மா அன்சாரி புது சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்…

  10. சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு காய் நகர்த்தி வருகின்றன. கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்து பாதிரியார்கள் மூலம் பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், அண்மையில் கூடிய பிஷப்புகள் கவுன்சிலில் கிறிஸ்துவர்கள் யாரும் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிஷப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக முதல்வருக்குத் தெரியவர, அதிர்ந்து போனாராம். கடந்த நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சென்னை சாந்தோமிலுள்ள ஆர்ச் பிஷப் அலுவலகத்தில் பிஷப் கவுன்சில் கூட்டம் கூடியது. தமிழகத்திலுள்ள அனைத்து மறை மாவட்டங்களிலிருந்தும் பிஷப்புகள் இதில் கலந்து கொ…

  11. பாகிஸ்தானின் பிரபல சினிமா பாடகர் ரஹெத் பாதே அலிகான் (37) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவரிடம் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் மற்றும் அவருடைய மானேஜர் உள்ளிட்ட 3 பேரிடம் சோதனை நடத்தியதில் 1 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தான் அவரை விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. பாகிஸ்தான் முயற்சியை அடுத்து ரஹெத் அலி அவருடைய மானேஜர் உள்ளிட்ட 3 பேரும் நிபந்தனைகள் பேரில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் டெல்லியில் தங்கியிரு…

  12. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் தொலைத் தொடர்பு இலாகா பொறுப்பு வகித்த ஆ.ராசா கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை டெல்லிக்கு 4 தடவை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது ஆ.ராசா ஒத்துழைக்க வில்லை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டனர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 22 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய சி.பி.ஐ கடந்த 2-ந்தேதி ஆ.ராசாவை கைது செய்தது. அவரை 5 நாள் காவலில் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. 5 நாள் விசாரணைக்குப் பிறகு 8-ந்தேதி ஆ.ராசா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மேலும் 2 நாள் ராசாவை சி.பி…

  13. காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தின விழா களை கட்டியது. இதையொட்டி காதலர்கள் இன்று சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பூங்காக்களில் குவிந்தனர். ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் இன்று புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். இதற்காக புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தோப்பு பகுதியில் இ…

  14. துனீசியா, எகிப்து நாடுகளின் மக்கள் எழுச்சியின் வெற்றியில் அல்ஜீரியா மக்களும் ஆர்பாட்டங்களில் இன்று ஈடுபட்டனர். மே 1 சதுக்கத்தில் கூடிய மக்கள் சனாதிபதி பூர்ரிபிக்கா வெளியேறு என கோஷமிட்டனர். அதிபர் பூர்ரிபிக்கா,President Abdelaziz Bouteflika, 1999 ஆம் ஆண்டிலிருந்து பதவியில் இருப்பவர்.எவ்வளவு மக்கள் பங்குபற்றினர் என்பது பற்றி சரியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருபது வடங்களுக்கு மேலாக அவசரகாலச்சட்டம் அமுலில் உள்ளது. பல ஆர்ப்பாட்டங்கள் தை மாதத்திலும் நடந்தன. http://www.nytimes.com/2011/02/13/world/africa/13algeria.html ==================================================================================== அல்…

  15. பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிற…

    • 5 replies
    • 1.3k views
  16. பொன் விழா கண்ட தி.மு.க, எத்தனையோ முறை ஊழலை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கியது உண்டு. ஆனால், அதே தி.மு.க., இப்போது ஊழலில் கைதாகியிருக்கும் தங்களது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாகப் போர்க் கொடி தூக்கியதற்குப் பின்னணி ஏதும் உண்டா என்பதே டெல்லி வட்டாரங்களை இப்போது குடையும் கேள்வி! ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஐந்து நாள் கஸ்டடியில் இருக்கிறார்! முறைகேட்டில் கைமாறிய பணம் எங்கெல்​லாம் போனது என்பதைப் பல்வேறு கேள்வி​களாக்கி, ஆ.ராசா மற்றும் அவரோடு கைதான இருவரையும் துளைத்துக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. வெளி​நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள், தூரத்து நாடு​களின் ரகசி…

  17. தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் பலி வாக்கெடுப்பின் பின்னர் மீளவும் இரண்டு தரப்பினருக்கும் இடையிலான மோதல்கள் வெடித்துள்ளன. தென் சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 39 பேர் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் ஆதருக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களுக்கும் தென் சூடான் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வட சூடானிலிருந்து பிளவடையும் நோக்கில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு 99 வீதமான சூடான் மக்கள் ஆதரவு வெளிய…

  18. கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் விண்ணப்பம் என்று அ.தி.மு.க.வில் தேர்தல் பணிகள் அசுர வேகத்தில் நடந்துகொண்டிருக்க... ஸ்பெக்ட்ரம் ராசா கைதால் தி.மு.க.வில் தேர்தல் பணிகள் ஆமை வேகத்தில் அசைந்து கொண்டிருக்கிறது’ என்று நொந்து போயுள்ளனர் உடன்பிறப்புகள். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் தேர்தல் களத்தில் வியூகங்களை அமைத்துக் கொண்டிருந்தது தி.மு.க. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்பைப் பார்த்து எதிர்க்கட்சிகளே மிரண்டு போயின. இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரம், ராசா கைது ஆகியவை அணிவகுக்க... தி.மு.க தரப்பில் தேர்தல் பணிகளுக்கு ‘பிரேக்’ போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வோ கடந்த 5-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து …

  19. State multiculturalism has failed, says David Cameron The prime minister will criticise "state multiculturalism" in his first speech on radicalisation and the causes of terrorism since being elected. Addressing a security conference in Germany, David Cameron will argue the UK needs a stronger national identity to prevent people turning to extremism. Different cultures are encouraged to live apart, and objectionable views met with "passive tolerance", he will say. He will also signal a tougher stance on groups promoting Islamist extremism. Mr Cameron is to suggest there will be greater scrutiny of some Muslim groups that get public money but do lit…

  20. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய முன்னாள் தொலை தொடர்பு துறை அமைசர் ஆ.ராசா ரூ.3,000 கோடி வரை லஞ்சமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி ஊழல் குறித்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் நடத்திய கூட்டு விசாரணையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக அந்த இரு அமைப்புகளும் தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்களை மிக மலிவான விலைக்கு ஒதுக்கீடு செய்ததால், அரசு கஜானாவுக்கு ரூ.40,000 முதல் 50,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக டெல்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://tamil.webduni…

    • 0 replies
    • 539 views
  21. இலங்கை கடற்படைக்கு கண்டனம் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் ஆர்ப்பாட்டம்! இலங்கை கடற்படையால் நாகையச்சேர்ந்த தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாகப்பட்டினம் சென்று கொல்லப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, உதவி தொகைகளும் வழங்கிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் வரும் 22ம் தேதி ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய்யை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் செய்து வருகின்றனர். விஜய்யுடன் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் நாகப்பட்டினம் செல்கிறார். அன்றைய தினம் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொட…

  22. தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார். 1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார். அனால் 2002 ஆம் ஆண்டு இவரது இந்திய கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவருக்கு தெரிவித்தனர். முத்துவேல் தாயாருடன்-பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்…

  23. இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தேச துரோகம் செய்ததாகத் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஆயுட் தண்டனை விதித்துள்ளது. மாவோயிய கிளர்ச்சிக்காரர்களின் வலயமைப்பு உருவாக பினாயக் சென் உதவினார் என்று கீழ் நீதிமன்றத்தால் குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவரான பினாயக் சென் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின ஏழை மக்களுக்காக மருத்துவ உதவி மையங்களை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய சேவைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. கைதாகி வழக்கு நடத்தப்படுவதற்காக சிறையில் அவர் காத்திருந்த சமயத்தில் மருத்துவ தொண்டுக்கான கௌரவம் மிக்க சர்வதேச விருது ஒன்று அவருக்கு வழங்கப்ப…

    • 4 replies
    • 710 views
  24. A total of 98.83 percent of voters from Sudan’s oil-producing south chose to secede from the north in last month’s referendum, according to a video display of the vote seen by Reuters at the venue of the announcement. http://www.theglobeandmail.com/news/world/africa-mideast/south-sudan-votes-for-independence-vote-report/article1896874/ தென் சூடான் தனி நாடாக 99.57% ஆதரவு ஆப்ரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்கள் அதிகமாகவும் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் வசித்து வருகின்றனர். தெற்கு சூடானில் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். தென்பகுதி மக்கள் அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அந்தப்பகுதி மக்கள் தனி நாடு கேட்டு போராடி வந்…

    • 3 replies
    • 1.2k views
  25. ஆப்கானிஸ்தானில் தாலிபானால் சட்டத்துக்கு புறம்பான முறையில் உறவு / தொடர்பு வைத்து இருந்த தம்பதியினரை கல்லாலே அடித்துக் கொல்லும் தண்டனையை அண்மையில் நிறைவேற்றியதன் காணொளி தலிபான் மிருகத்தனமான இஸ்லாமிய பயங்கரவாதிகளை விடுதலை வீரர்களாக பார்க்கலாம் என ஒரு முறை நெடுக்ஸ் எனது ஒரு பதிவுக்கு பதில் கூறியிருந்தது நினைவுக்கு வருது. இத்தகைய பயங்கரவாதிகளால் தான் உண்மையான விடுதலை போராட்டங்களும் மோசமான நிலைக்கு செல்லுகின்றன காணொளி (இதில் மனதை பாதிக்கும் சில காட்சிகள் உங்களை வருத்தமுறச் செய்யலாம்) http://www.youtube.com/watch?v=KXQFjbM8l_g செய்தி Siddiqa and Khayyam eloped to Pakistan after she fled an arranged Afghan marriage and he left his wife and two children…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.