Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீமானிடம் உவரி மக்கள் உறுதிமொழி உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும். ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' எ…

  2. லிபியா மீதான விமானப் பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்தப்போவதாக நேட்டோ அறிவித்திருக்கிறது. ஆனால்,அந்த அமைப்பு ஐ.நா. வின் ஆதரவுடனான இராணுவ நடவடிக்கைகளில் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளவில்லை. வியாழக்கிழமை லிபியாவின் தென்பிராந்தியத்தில் மேற்குலக விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால், மிஸ்ராடா நகரத்துக்குள் கடாபியின் தாங்கிகள் மீளப்பிரவேசிப்பதை தடுத்து நிறுத்துவதில் தோல்விகண்டுள்ளன. மிஸ்ராடாவிலுள்ள பிரதான வைத்தியசாலை கவச வாகனங்களாலும் அரசாங்கத்தின் ஊடுருவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. கிழக்கு லிபியாவிலுள்ள கிளர்ச்சிப் படைகள் கடாபியை அகற்றிவிடுவார்கள் என்று மேற்குலகத் தளபதிகள் கருதுகின்றனர். ஆனால், மிஸ்ராடாவுக்கு தாங்கிகள் திரும்ப வருகைதந்திருப்பதானத…

  3. கடனாவின் முதியோர் இல்லமொன்றில் கைகலப்பு, 87 வயதான முதியவர் மருத்துவமனையில் அனுமதி கனடாவின் வின்னிபெக் பிராந்தியத்திலுள்ள முதியவர் இல்லமொன்றில் இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பினைத் தொடர்ந்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் மற்றையவர் சட்டவிசாரணையினை எதிர்கொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று மாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 87 வயதான முதியவர் ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிசார் சனியன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 70 மற்றும் 87 வயதுடைய இரண்டு முதியவர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த் தர்க்கம் ஈற்றில் கைகலப்பாக மாறியதாக ஆரம்பகட்ட விசாரணையினை …

  4. முடிந்த வரை தமிழக உறவுகளிடம் கொண்டு செல்வோம்

  5. ‌‌சீனா‌வி‌ல் 2 முறை பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம் ஞாயிறு, 27 மார்ச் 2011( 11:42 IST ) [Feedback] [Print] சீனா‌வி‌ல் அடு‌த்தடு‌த்து இர‌ண்டு முறை ச‌க்‌திவா‌ய்‌‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌‌ல் பொதும‌க்க‌ள் ‌வீ‌‌ட்டை ‌வி‌ட்டு அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டு வெ‌ளியே‌றின‌ர். இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌‌ர் அள‌வுகோ‌லி‌ல் 6.4 ம‌‌ற்று‌ம் 5. 9 ஆகய ப‌‌திவா‌கியு‌ள்ளது. ‌பீ‌‌ஜி‌ங் நக‌ரி‌ல் வட‌கிழ‌க்கு நக‌ரி‌ல் உ‌ள்ள ல‌ம்பாசா, ச‌வுச‌வு நகர‌ங்க‌‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. உ‌யி‌ர் தேச‌ம், பொரு‌ள் தேச‌ம் கு‌றி‌த்த ‌விவர‌‌ம் உடனடியாக தெ‌ரிய‌வி‌ல்லை. tamil.webdunia.com

    • 4 replies
    • 1k views
  6. மதிமுக தொண்டரின் குமுறல் வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள். 1. "மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது. 2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது. 3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது. 4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது. 5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது. 6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது. 7. முல்ல…

  7. 20,000 டொலர் பெறுமதியான போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியர் மீது கனேடியப் பொலிசார் நடவடிக்கை கனடாவில் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைச் செடிகளை வளர்த்த பிரித்தானியாவினைச் சேர்ந்த ஒருவருக்கு கனேடியப் பொலிசார் சட்ட நடவடிக்கையினை எடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரிடமிருந்து 800 கிறாம் மரியுவானா வகையினைச் சேர்ந்த போதைப்பொருளையும் 14 மரியுவானா பயிர்களையும் கையகப்படுத்தியிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள். குறிப்பிட்ட இந்தப் போதைப்பொருட்கள் 20,000 டொலர் பெறுமதியானவை எனப் பொலிசார் கணக்கிடுகிறார்கள். குறிப்பிட்ட இந்த நபரை கனடாவிலிருந்து வெளியேற்றுமாறு கிடைத்த உத்தரவினை அடுத்து அதனைச் செயற்படுத்துவதற்காக பொலிசார் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றபோதே அங்கு ப…

    • 0 replies
    • 878 views
  8. பகலில் பணியாளர், இரவில் பாலியல் பட நடிகை: வேலையினை இழப்பார் கியூபெக் பெண் பகலில் அவள் கியூபெக் நகர பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளர். இரவில் தனக்குக் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் பாலியல் பட நடிகை. கியூபெக்கின் முன்னணிப் பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் சமன்தா ஆடென்ரி என்ற இந்தப் இளம் பெண்ணே இவ்வாறு இரவில் பாலியல் படங்களில் நடித்து வருவது அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக குறிப்பிட்ட இந்தப் பெண்ணைப் பணியிலிருந்து நிரந்தரமாக நிறுத்தலாமா என்பது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. குறித்த இந்தப் பெண்ணின் பாலியல்சார் படமொன்றில் நடித்திருந்தை இணையத்தில் அவதானித்த பாடசாலை மாணவன் நிர்வாகத்திடம் முறையிட, இந…

    • 0 replies
    • 1.5k views
  9. ஒன்ராரியோ பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து தேவையற்ற பணத்தினை அறவிட முடியாது எத்தகைய சந்தர்ப்பங்களின்போது குறித்ததொரு பாடசாலை மாணவர்களிடமிருந்து மேலதிக பணத்தினைப் பெறமுடியும் என ஒன்ராரியோ மாகாணக் கல்வியமைச்சு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த வழிகாட்டல்களுக்கு அமையஇ பாடப்புத்தகங்கள்இ விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள்இ சித்திரம் வரைவதற்கான மூலப்பொருட்கள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவற்றுக்காக பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து பணத்தினை அறவிட முடியாது. வகுப்பறைக் கல்விக்கு அத்தியாவசியமான வசதிகள் எவையோ அவற்றினைப் பெறுவதற்காவோ அன்றில் குறிப்பிட்டதொரு பாடத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கோ அல்லது புதிய மாணவர்களின் பதிவுக்காகவே இ…

    • 0 replies
    • 440 views
  10. பயங்கரவாத போர் முடிந்து பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போர் ஆரம்பம் ! கடந்த 2001 ம் ஆண்டில் இருந்து ஆரம்பித்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும். இந்தப் போர் பத்தாண்டு காலம் நடைபெற்றது. இப்போது நடைபெற ஆரம்பித்திருப்பது பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போராகும். எகிப்து, ரூனிசியா, லிபியா போன்றன பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போராட்டங்களே ! இந்தப் போராட்டத்தை எதிர்த்தால் வெல்ல முடியாது என்ற உண்மையை பல தலைவர்கள் உணர்ந்து வருகிறார்கள். மேலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தைச் சந்தித்து, அவமானத்துடன் வரலாற்றை முடிப்பதை விட, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே சிறந்தது என்ற நிலைக்கு பல உலகத் தலைவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏமன் நாட்டின் அதிபர் அலி அப்து…

    • 1 reply
    • 501 views
  11. எமது ஆசிய கண்டத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடரும் ஆதிக்கப்போட்டி தொடருகின்றது. முன்னர் இந்தியாவுக்கு எதிரான கொள்கை வளர்ப்பில் அமெரிக்கா பாகிஸ்தானை வளர்த்தது ( பல ஆயுத வழங்கல்கள், பண உதவிகள், அணு தொழில்நுட்பம்..). பின்னர் செப்டெம்பர் உடன் பாகிஸ்தான் அப்கானிஸ்தான் மூலம் நடத்திய அரசியல் பாகிஸ்தான் - அமெரிக்கா விரிசலை உருவாக்கி வந்தது. அந்த இடைவெளியை சீனா தனக்கு சாதகமாக பாவித்து வருகின்றது. இப்பொழுது முழுதாக பாகிஸ்தான் அமெரிக்காவை கைவிட்டு சீனாவை இறுக்கிப்பிடிகின்றதாக இந்த கட்டுரை கூறுகின்றது. இது உண்மையானால் அமெரிக்காவின் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்கள் வந்தாக வேண்டும். ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணு ஆயுத …

    • 6 replies
    • 1.1k views
  12. பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு, இந்தியா சார்பில், ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது:ஜப்பானில் கடந்த 11ம் தேதி நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர்; பலரை காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஒரு விமானம் நிறைய கம்பளி போர்வைகள் மற்றும் படுக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பூகம்பம் நிகழ்ந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து பத்தாயிரம் லிட்டர் குடிநீர், பாட்டில்களில் நிரப்பப்பட்டு அனு…

    • 8 replies
    • 1.3k views
  13. முன்னாள் கோவியத் ரஷியாவின் அதிபராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார். அவர் குறித்து ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரேடியோ நிலையம் ஒரு செய்தி வெளியிட்டது. அப்போது, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சுட்டுக் கொல்ல அவர் உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஜோசப் ஸ்டாலினின் பேரன், ஜெவ்ஜெனி ட்ககாகஸ்விலி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியை மறுத்த அவர் ரேடியோ நிலைய நிருபர் நிகோலே ஸ்வானிட்ஷ் மற்றும் அதை ஒலிபரப்பிய ரேடியோ நிலையம் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது தாத்தா ஜோசப் ஸ்டாலின் குறித்து பொய்யான தகவல் வெளியிட்ட ரேடியோ நிலையம் தனக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் நஷ்டஈடு வழங்க…

  14. பிரிட்டனில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்‌கி லைசென்ஸ் வழங்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டனின் தகவல் பெரும் சுதந்திர சட்டத்தின் கீழ் , பிரிட்டனில் படைப்பிரிவில் துப்பாக்கி லைசென்ஸ் தொடர்பான விவரங்களை கேட்டிருந்தது. பிரிட்டனில் உள்ள குளுசெஸ்டர்ஸ் மாகாணத்தில் 7 வயது சிறுவனுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்கியிருப்பதும், அதே மாகாணத்தில் மேற்குமெர்ஸியா போலீஸ் நிலையத்தில் 8 வயது சிறுவன் துப்பாக்கி லைசென்ஸ்ஸிற்காக மனு செய்திருப்பதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பல விபரங்கள் கேட்டதில் கடந்த 2008-2010 ஆண்டுகால கட்டத்தில் 10வயது பூரத்தியான 12 சிறுவர்களு…

  15. பூகம்பத்தினால் சேதங்களுக்குள்ளான புகுஷிமா டாய்ச்சி அணு உலையின் தொழிலாளர்கள் இருவர் அணுக்கதிர்வீச்சின் காரணமாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் 11ம் திகதி பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட 3 ஆவது அணு உலையின் குளிரூட்டியை மீளமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்களுமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் பாதுகாப்பான ஆடைகளை அணிந்திருந்த போதும் கதிர்வீச்சுக்குள்ளான நீர் அவர்களது கால்களுக்குள் சென்றதால் அவர்கள் கதிர்வீச்சுத் தாக்கத்திற்குள்ளானதாக ஜப்பான் அணுப்பாதுகாப்பு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. டோக்கியோ நீர் விநியோகத்தில் அணுக்கதிர்வீச்சின் அளவு தற்பொழுது குறைந்துள்ள போதிலும் வடக்கு ஜப்பானின் ஏனைய பகுதிகளில் இதன் …

  16. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தோல்வியடையச் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது குறித்து சீமான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நாங்கள் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழர் தேசிய இனத்தோடு உணர்வு, உயிர், உடைமை என அனைத்திற்கும் எதிராகவும், இலங்கை அரசுக்கு துணை நிற்கும் காங்கிரஸ் கட்சியை 63 தொகுதிகளிலும் தோற்கடிப்பது என்று முடிவு செய்துள்ளோம். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் எங்களுக்கு ஆலோசனை வழங்க…

  17. ஜப்பான் பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அது அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது. இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல…

  18. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…

  19. கொழும்பில் இருந்து வவுனியாவுக்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு விதித்த அழுத்தம் காரணமாக, தமது வவுனியா அலுவலகத்தை மூடியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ‌பி‌ப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மூடப்பட்டதுடன் பின்னர், மன்னார் அலுவலகமும் மூடப்பட்டது. இந்த நிலையில் வடபகுதியில் இயங்கி வந்த ஒரே அலுவலகமான வவுனியா அலுவலகத்தையும் மூட நேர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 1989 ஆம் ஆண்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. யுத்தத்தின் பின்னர், இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நடவடிக்கைகளை வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வந்ததது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்…

  20. லிபியா மீதான தாக்குதல்களுக்கு சீனா, இந்தியா, ரஸ்யா என்பன எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. பிரான்சின் தாக்குதல் விமானங்கள் கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட் 10 தாங்கிப்படையணிகளை அழித்துள்ளதாக பிரான்சின் பாதுகாப்பமைச்சர் Gérard Longuet தெரிவித்துள்ளார். லிபிய மக்களைக் காப்பதற்காக கவசவாகன மற்றும் தாங்கிப்படையணிகளைத் தாக்கியழிப்பதாகக் கூறினார். எந்த வழிமுறைகளிலாவது மக்கள் காக்கப்பட வேண்டுமென்பதே 1973ன் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானமாகும். இதையே நாம் நடைமுறைப் படுத்துகின்றோம். கடாபியின் அரசு ஒரு மூடிய ஒருவழிப்பாதையினுள் சிக்கியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்த அவர் இந்தப் போர் லிபிய அரசின் ஆட்சியை உடைத்து ஜனநாயகம் மலர …

  21. பிரிட்டனில் ஆளும் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொதுச் செலவின குறைப்புக்களை கண்டித்து நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியில் சுமார் இரண்டரை லட்சம் பேர் வரையில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க காங்கிரஸ் கூறுகிறது. 2003 ம் ஆண்டில் இராக் போருக்கு எதிராக நடத்தப்பட்ட பெரும் போராட்டத்துக்கு பின்னர் இந்தப் பேரணியே மிகப் பெரியளவில் நடந்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் பொதுப் பணிகளுக்கான செலவினங்களில் மேற்கொள்ளும் குறைப்புக்களை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மக்கள் மத்திய லண்டன் பகுதியூடாக ஹைட் பார்க் மைதானத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். போராட்டத்தில் சிலர் காவல்துறை வாகனத்தை தாக்கினர்கன்…

  22. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசி​யாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்! காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறை​யாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடு​கின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்​கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி …

  23. அரசாங்கத்தின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை ள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கத்தின் காய் நகத்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. கடந்த காலங்களில் கூறி…

  24. 'நாகரிகம் இல்லாமல் உரத்த குரலில் பேசுகிறவர். தெருச் சண்டை, ரவுடியிஸம் என சகலத்துக்கும் ஈடு கொடுத்து அரசியல் செய்பவர். மேற்கு வங்க கம்யூனிஸ்ட்களையே ஒரு கை பார்க்கக்கூடியவர். மாநிலத் தொழில் வளர்ச்சிக்கே அடையாளமாக வந்த நானோ கார் தொழிற்சாலையை மாநிலத்தைவிட்டு விரட்டியவர்...’ என்று மம்தா பானர்ஜியைப் பற்றிப் பலவித கருத்துகள். ஆனால், அவரை விமர்சித்தவர்கள்கூட, அவரது தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாயடைத்துப்போய் உள்ளனர்! 'நல்லாட்சி’ என்ற தலைப்பில் அந்த 55 பக்கத் தேர்தல் அறிக்கையில், 'இது இலவசம், அது இலவசம்... வறுமையை ஒழிப்போம்... வேலை இல்லாத் திண்டாட்டம் போக்குவோம்’ என்று வெறுமனே கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புக்காக எதையும் சொல்லவில்லை. கடந்த 35 ஆண்டு கால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்…

  25. அரசியல் மிக்ஸ்! இன்றைய நிலை!!!! இந்த அனானிங்க தொல்லை தாங்கலைப்பா. நான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூளை பத்தி எழுதினதும் இவனுங்க ஆட்டம் தாங்கலை. இவனுங்க என்னா சொல்றாங்கன்னா என் அம்மாவை திட்டுவானுங்களாம் அதை நான் பிரசுரிக்கனுமாம். 4 பின்னூட்டம் அப்படி. பின்னாடி அதை ஏன் பிரசுரிக்கலைன்னு கேள்வி. உங்க கேள்வி நியாயம் தான். ஆனா என்னால பிரசுரிக்க முடியலை அனானி நாய்ஸ். பாவம் அம்மா, அது படு கிழவி, உங்க ஆசையை நிறைவேத்தி அது பாவத்தை ஏன் கொட்டிக்கனும்னு விட்டுட்டேன். அதை எல்லாம் விடுங்க. இப்ப பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு தூளுக்கு வ்ருவோம். இந்த அரசை எதிர்த்து போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுங்க பாருங்க. அங்க தான் காமடியே இருக்கு. "எனக்கு ஒபாமா மாதிரி சம்பளம் வேணும்"னு முதல்ல ஆர…

    • 0 replies
    • 724 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.