Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சபரிமலையில் நேற்று மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கொடூரமான விபத்தில் சிக்கினர் இதில் 102 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளி கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பேரிடர் மீட்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது. வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன…

  2. புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் ! நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின்…

  3. சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும் “தங்களுடைய முன்னேற்றத்தை ‘அமைதியான எழுச்சி’ (Peaceful rise) என்று கூறிக்கொண்டாலும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படும் உள்நோக்கத்தை வைத்தே சீனா மதிப்பிடப்படும்” என்று கூறி, அண்டை நாடான சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பொதிந்துள்ள திட்டங்களைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம் என்பதை மிக நேர்த்தியாக புரிய வைத்துள்ளார் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ். இந்திய - சீனா உறவு குறித்து புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவிற்கு கசந்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில், “ போட்டியும…

  4. தமிழினத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே? கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறா…

    • 0 replies
    • 843 views
  5. லா சப்பல் காடையரின் வீரவரலாறு லாசப்பல் காடையர்களின் விபரணம் பிரான்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. http://www.m6replay.fr/#/info/enquete-exclusive/21974

  6. ஜெயலலிதா தமிழீழம் மலர உதவுவேன் என்று வெளிப்படையாக சத்தியம் செய்ய வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுள்ளார். மு.கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்து இறங்குவது இறங்குவதுதான் ஆனால் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி ஜெயலலிதாவை வெறுமனே ஆட்சியில் ஏற்றுவதால் யாதொரு பயனும் கிடையாது. அப்படிச் செய்தால் காட்சி மாறுமே அல்லாது ஆட்சி மாற்றத்தால் பயன் எதுவும் நடைபெறாது. சிங்கள அரசு எப்படிப்பட்ட கோர முகம் கொண்டது என்பதை ஆவணமாக்கியிருக்கிறார் பிரபாகரன். உலக மன்றில் சிறீலங்காவை போர்க் குற்றவாளி நாடாக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அவர்கள் பிரியக்கூடாது என்றுதான் ஆண்டவனை வேண்டுகிறேன். காட்டிக் கொடுத்த இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும், தேர்தலில…

  7. காஷ்மீர் பிரச்சனையின் தொடக்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பிந்தியது. தெலுங்கானா பிரச்சனை அதற்கு முந்தியது. பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தெலுங்கானா பிரச்சனை தொடங்கிய தோடு இன்று முற்றிப் பழுத்து இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஐதரபாத் என்ற பெயரில் பிரிட்டிசார் காலத்தில் நிலவிய ஆட்சிப் புலத்தில் கொடுங்கோலன் நிசாமின் அரசாட்சி காணப்பட்டது. நிசாமின் ஆட்சிப்புலத்தின் தென் மாவட்டங்களில் பொதுவுடமை இலட்சியம் கலந்த விவசாயப் புரட்சி வெடித்தது. இந்த மாவட்ட மக்கள் மிகவும் பின்தங்கிய வாழ்கை நிலையில் இருந்தனர். ஆண்டான் அடிமை நிலவரம் பரவலாக நிலவியது. இளைய தலைமுறையினர் தலைமையில் வெடித்த விவசாயிகள் புரட்சியை அடக்குவதற்கு நிசாம் மன்னர் அனுப்பிய படைகள் தோல்வி அடைந்தன. 25…

    • 0 replies
    • 1.1k views
  8. அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா. இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அம…

    • 0 replies
    • 829 views
  9. சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) எங்கள் பயணப் பெட்டிக்கு வந்தது. எங்கள் பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த…

    • 3 replies
    • 1.1k views
  10. 1991ல் சோனியா காந்தியிடம் 2 பில்லியன் டொலர்

  11. இந்திரா காந்தி, தான் கொல்லப்படுவார் என ராஜீவுக்கும் சோனியாவுக்கும் கூறியுள்ளார் http://www.youtube.com/watch?v=JtAKwz-TQjY&NR=1&feature=fvwp

  12. ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு சி.பி.ஐ.யிடம் இருந்து நெருக்குதல் வருகிறதோ இல்லையோ, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுக்கும் அடுத்தடுத்த குடைச்சல்கள் தி.மு.க. கூடாரத்தை கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்துவிட்டது. ‘ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுவாமி கொடுத்துள்ள ஆதாரங்களின்படி இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்படி வழக்குத் தொடரலாம்’ என அனுமதியளித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு குடைச்சலின் அடுத்தபடி. ‘ஸ்பெக்ட்ரம் ராசா மீது குற்றவியல் தண்டனைச் சட்டப்படி வழக்குத் தொடர அனுமதியளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு சி.பி.ஐ. கோர்ட்டை அணுகினார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, ராசாவுக்கு எதிரான 375 பக்க புகார் மனுவை அளித்தார். பி…

  13. Sunday, January 9th, 2011 | Posted by admin தென் சூடான்: சுதந்திரத்திற்கான பாதையில் புதிய பெயரொன்றைத் தேர்ந்தெடுப்பது ஓர் ஆரம்பம் இந்தப் புதிய தேசத்திற்கு இன்னமும் பொருத்தமான பெயர் தோந்தெடுக்கப்படவில்லை. தெற்கு, தெற்கு சூடான், புதிய சூடான் அல்லது குஸ் [south, Southern Sudan, New Sudan or even Cush] என இந்தப் புதிய தேசத்திற்குப் பெயர் சூட்டப்படலாம். இங்கு இடம்பெறும் மக்கள் கருத்துக்கணிப்பின் பலம்தான் இந்த உலகின் புதிய நாட்டினது முதன்மையான வெற்றியாக அமையும். ஆனால் எண்ணெய் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தொடரும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத்தளத்தில் Mark Tran எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்க…

    • 2 replies
    • 933 views
  14. இலவசங்களால் அழியும் என் தமிழகம் இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்ன…

  15. ஜிஹாட் தீவிரவாத அமைப்பிற்காக கனேடியர்கள் பயிற்சிபெற்று வருவதாக வெளியாகிய தகவல் தொடர்பாக ஆர்.சி.எம்.பி (R.C.M.P - கனேடிய தேசிய காவல்துறை) யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் தாக்குதுல் நடத்துவதற்காக பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக கனேடியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக, தலிபான்களை ஆதூரம் காட்டி ஹொங்கொங்கைச் சேர்ந்த பத்திரிகை, ஏசியா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் அறிவதற்காக ஆர்.சி.எம்.பியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஆர்.சி.எம்.பியின் பிரதி ஆணையாளர் ஜில் மிஷெளட் தெரிவித்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12 கனேடியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்றதாக, இந்தச் செய்தியில் பாகிஸ்தான…

  16. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குடியரசுக் கட்சி எம்.பி. கேப்ரியல் கிஃப்போர்டு படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். முதலில் கிஃப்போர்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை மறுத்த மருத்துவப் பேச்சாளர், கிஃப்போர்டு உயிருடன் உள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. குண்டுக் காயங்களுடன் மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிஃபோர்டு …

    • 4 replies
    • 1.1k views
  17. முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011, 14:22[iST] சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார். ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுத…

  18. எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…

  19. தேர்தல் வரப்போவதால், தன்னிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை ஆராயாமல், அதை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, வம்பில் சிக்கி வரு கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கடந்த மாதம் 23-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ‘‘நான் ஆட்சிக்கு வந்தால், குமரியில், பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க இருக்கும் தடைகளை நீக்குவேன்’’ எனப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உண்மையில் 1982-ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி வேணுகோபால் கமிஷன்தான் குமரியில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே ஜெயலலிதா பேசிச் சென்றதை அ.தி.மு…

  20. கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர். சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங…

  21. அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது. தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்…

    • 0 replies
    • 1.1k views
  22. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக்…

    • 0 replies
    • 995 views
  23. தமிழகத்தில் ‘கள்’ இறக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் கொங்கு மற்றும் நாடார் அமைப்புகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சும்மா இருக்குமா பா.ம.க.? வழக்கம்போல் சங்கு ஊத... சட்டென பின்வாங்கியிருக்கிறது தமிழக அரசு. ‘கள்’ இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கொங்கு மற்றும் நாடார் சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க அரசு திட்டமிட்டது. கள் இறக்க அனுமதி கொடுத்தால் தென்னை, பனைத் தொழிலாளர்களின் ஓட்டுக்கள் அப்படியே கிடைக்கும் என்றும், அரசுக்கு வருவாய் ஈட்டியதாகவும் இ ருக்கும் என்றும் தி.மு.க. கணக்குப் போட்டது. இதற்கான உத்தரவையும் பிறப்பிக்க அரசு தயாரா…

    • 0 replies
    • 664 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.