உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
இன்றைய (25/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கொரிய தீபகற்பத்தை சூழும் போர் மேகங்கள்; வடகொரியாவும் அமெரிக்காவும் பரஸ்பர இராணுவ ஒத்திகையை மேற்கொள்வதால் அதிகரிக்கும் சர்வதேச பதற்றம். * உலகின் மிகப்பெரிய மனிதப்பேரவலம் யேமெனில் ஏற்பட்டிருப்பதாக ஐநா எச்சரிக்கை; அதைத்தீர்க்க தேவைப்படும் நிதிதிரட்ட ஜெனீவாவில் சர்வதேச மாநாடு. * அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் ஒரே சொமாலிய அருங்காட்சியகம்; சொமாலிய சரித்திரத்தை பாதுகாக்க வித்தியாசமானதொரு முயற்சி.
-
- 0 replies
- 234 views
-
-
நைஜீரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே உண்டான மோதலில் 150 தீவிரவாதிகளும், 16 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 ராணுவ வீரர்களைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவான போக்கோஹராம் என்ற தீவிரவாத அமைப்பு காபியா காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். கடந்த வாரம் அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ராணுவ வீரர்கள் 16 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் …
-
- 0 replies
- 438 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமா, நீடிக்க வேண்டுமா என்று மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு (பிரெக்ஸிட்) நடந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த டேவிட் கேமரூன் விலக நேர்ந்தது. அவருக்குப் பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த தெரசா மே, தன்னுடைய அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். இது அவர் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தருவதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவைக்கூட எட்ட முடியாமல் செய்துவிட்டது. தெரசா எப்படியோ பிரதமராகப் பதவியில் தொற்றிக்கொண்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்குள் மூன்று பயங்கரவாதத் தாக்குதலை பிரிட்டன் சந்தித்துள்ளது. சமீப காலங்களி…
-
- 0 replies
- 455 views
-
-
டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி படத்தின் காப்புரிமைTHE DUKE OF CAMBRIDGE AND PRINCE HARRY இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி தங்களது தாயுடனான கடைசி உரையாடல் என்பது விரக்தியடைந்த அவசர தொலைப்பேசி அழைப்பு என்று தங்களுடைய வருத்தத்தை மனம் திறந்து பேசியுள்ளனர். இளவரசி டயானாவின் உயிர் பிரிந்தபோது இளவரசர் ஹாரிக்கு 12 வயது. ''எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால் என் வாழ்க்கை முழுவதும் நான் வருந்தும் ஒரே விஷயம் அந்த தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியதாக இருந்தது மட்டுமே'' என்கிறார் ஹாரி. டயானா இறந்து 20 ஆண்டுகளை குறிக்கும் ஐடிவி ஆவணப்படத்திற்காக ஹாரி மற்றும் வில்லியம் மனம் திறந்து பேசியுள…
-
- 1 reply
- 592 views
-
-
மதுரையை தலைநகராக்கி தென் தமிழகத்தை தனி மாநிலமாக்க கோரிக்கை! சென்னை: தெலுங்கானாவைப் போல தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரை யைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்கள் - மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் ஆகியோர். பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கை என்னவென்றால் காவிரி ஆற்றை மையமாகக் கொண்டு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வட தமிழகம் என்ற ஒரு மாநிலமாகவும், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகம் என்ற இன்னொரு மாநிலமாகவும்…
-
- 2 replies
- 1.7k views
-
-
போர்ட் ஆப் பிரின்ஸ் : ஹைதி தீவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தலைநகர் போர்ட் ஆப் பிரின்சில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியலாக காட்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் மரண ஓலம் எங்கும் ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா அருகே கரீபியன் கடல் பகுதியில் உள்ளது ஹைதி தீவு. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பூகம்பம் அந்த தீவையே இடுகாடாக்கி விட்டது. சில விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகள் பதிவானது. வீடுகளும் கட்டிடங்களும் சீட்டுக் கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. நிலைமையை புரிந்து கொள்வதற்கு முன்பே இடிபாடுகளில் சிக்…
-
- 3 replies
- 784 views
-
-
8cd1ed90ee26d704dac8a3918761717a
-
- 0 replies
- 461 views
-
-
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காளர்களை கவரும் யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு புகழை உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்திய என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்துடன் ரூ. 500 கோடி ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளது என்று செய்தி வெளியானது. மேலும் இந்த நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்கும். ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும…
-
- 3 replies
- 475 views
-
-
சிமோகா வருகை மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சிமோகா வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல், கர்நாடகத்தில் போட்டியா? அவரிடம், ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிடுவாரா?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியதாவது:– ‘‘பாராளுமன்ற தேர்தலில் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிடுமாறு தொண்டர்கள் ராகுல் காந்தியை வற்புறுத்தி வருகிறார்கள். அவர் (ராகுல் காந்தி) கர்நாடகத்தில் போட்டியிட விரும்பினால் நாங்கள் முழுமூச்சுடன் வரவேற்போம்’’. இவ்வாறு ஆஸ்கர் பெர்னாண்டஸ் பதில் அளித்தார். http://www.dail…
-
- 0 replies
- 318 views
-
-
பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா 10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் – ரொய்ட்டர் Share This! குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் முதல் சில வருடங்களில்10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. பிரித்தானியா வெளியேறிய அடுத்த சில வருடங்களில் 10000 நிதித்துறை சார்ந்தவேலைகள் பிரித்தானியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிற்கு செல்லும் என ரொய்ட்டர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது. பிராங்பேர்ட் நகரே பலரின் விருப்பமாகவுள்ளது எனவும் அதற்கு அடுத்தபடியாக பாரிஸ் காணப்படுகின்றது எனவ…
-
- 0 replies
- 459 views
-
-
கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்! Tuesday, March 23, 2010 at 7:42 pm | 725 views 3 Comments போதை… மோசடி… கல்கி ஆசிரமத்தின் நிஜ முகம்! இந்த நாட்டில் பக்தி என்பது படு பயங்கரமான பிஸினஸ். இதை பல்லாண்டு காலமாக எடுத்துச் சொல்லி வரும் நிஜமான பகுத்தறிவாளர்களின் (பகுத்தறிவு பிஸினஸ்மேன்களைச் சொல்லவில்லை!) பிரச்சாரங்களை மக்கள் மதிப்பதே இல்லை. எளிமையாய் கோவிலுக்குப் போய் லஞ்சம் கொடுக்காமல் சாமி கும்பிடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கையில்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது. சும்மா கோயிலுக்குப் போனால் கூட, அய்யரிடம் ரூ 50 கொடுத்து, அடுத்தவர்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சாமி கழுத்தில் உள்ள மாலையைக் கேட்கும் அல்பத்தனமான பக்தி…
-
- 80 replies
- 15k views
-
-
Washington (CNN)Hate the security lines, middle seats and crying babies that plague a commercial flight? If you're a high-ranking government official, there may be another option. As the past week's storm over private plane use by senior members of President Donald Trump's Cabinet demonstrates, taxpayer-funded charter flights remain an option -- if a controversial one -- for top federal officials. http://www.cnn.com/2017/09/29/politics/tom-price-resigns/index.html Washington (CNN)Tom Price, the embattled health and human services secretary, resigned Friday in the midst of a scandal over his use of private planes, a storm that enraged President Donald Tr…
-
- 4 replies
- 611 views
-
-
ஐரோப்பாவில்... பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட, 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில்…
-
- 0 replies
- 201 views
-
-
உக்ரைனின் 3 போர்க்கப்பல்கள் கிரிமியா வசம் - வீரர்கள் கைது! [Friday, 2014-03-21 11:39:01] வாக்கெடுப்பின் மூலம் தனி நாடாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட கிரிமியாவில் உக்ரைனுக்கு சொந்தமான ஏராளமான ராணுவ நிலைகள் மற்றும் கடற்படை தளம் உள்ளது. இவற்றை உக்ரைன் ராணுவ வீரர்கள் காவல் காத்து வருகின்றனர். சேவஸ்டோபோல் பகுதியில் கருங்கடலில் உள்ள உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கடற்படை தளத்தை கடந்த 19-ம் தேதி சுற்றி வளைத்த கிரிமியா படையினர், அந்த தளத்தை கைப்பற்றி அதில் ரஷிய நாட்டின் கொடியை ஏற்றி வைத்தனர். அந்த தளத்தின் கடற்படை தளபதி உள்ளிட்ட வீரர்களையும் வெளியேற்றி அவர்களை கைது செய்தனர். இந்த தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் தலைநகர் சிம்பெரோபோலில் இருந்த…
-
- 0 replies
- 316 views
-
-
ரொனால்டோவின் மாஜி காதலி கொலை-உடல் நாய்க்கு வீச்சு!! சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 16:20[iST] பிரேசிலின் பிளமங்கோ கால்பந்து அணியின் கோல்கீப்பர் புரூனோ தனது காதலி எலிசாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக்கி நாய்க்குப் போட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து அணி பிளமங்கோ. இதன் கோல்கீப்பாராக இருப்பவர் ப்ரூனோ பெர்னாண்டஸ் டிசவுசா. இவரது முன்னாள் காதலி எலிசா சமுதியோ. சில நாட்களுக்கு முன்பு எலிசா திடீரென காணாமல் போய் விட்டார். தொடர்ந்து புரூனோவையும் காணவில்லை. இந்த நிலையில்தான் எலிசா கொலை செய்யப்பட்தாக தகவல் வந்தது. இந்தக்கொலை செய்தவரே புரூனோதான் என்றும் தெரிய வந்தது. இந்த நிலையில், புரூனோ தானாக முன்வந்து போலீஸில் சரணடைந்தார். எலிசாவ…
-
- 0 replies
- 601 views
-
-
இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர் 24 July 10 04:07 pm (BST) இரண்டு அமெரிக்கர்களை தலிபான் தீவிரவாதிகள் சிறை பிடித்து;ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லொகர் மாவட்டத்தில் இராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சமரின் போது இந்த இரண்டு அமெரிக்கப் பிரஜைகளையும் தலிபான்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும், இந்த சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இதுவரையில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. குறித்த இரண்டு அமெரிக்கர்களும் எச்சரிக்கைய…
-
- 0 replies
- 422 views
-
-
இந்தியாவின் குஜராத்தில் கொள்கைக்காக ஒரு கிராமமே வாக்களிக்கவில்லை… இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை கண்டித்து ஒரு கிராமத்தில் ஒருவர் கூட வாக்கு போடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகி;னற நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒருவர்கூட இன்று வாக்குபோடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜாம்நகர் மாவட்டம் கலாவத் தொகுதியின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் 1000 வாக்காளர்கள் உள்ளனர். குடிநீர்…
-
- 0 replies
- 315 views
-
-
உலகம் முழுவதும் காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் காதலர் தினம் பிரபலமாகி விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தை காதலர்கள்ஆவலோடு எதிர் நோக்கி உள்ளனர். இந்திய கலாச்சாரத்துக்கு காதலர்தினம் எதிரானது என்று கூறி பாரதீய ஜனதா கடந்த சில ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதே போல இந்த ஆண்டும் காதலர் தினத்துக்கு பாரதீய ஜனதா புதுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளது. காதலர் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடியை பிடித்து போலீசார் உதவியுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று பீகார், ஜார்கண்ட் மாநில பாரதீய ஜனதாவின் மாணவர் பிரிவான அகில்பாரதீய வித்யாத்தி பரிஷத் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது நாங்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
1984 சீக்கிய படுகொலை : சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்… இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் இருந்தது. ஆனால், ஒரு பெரும்மரம் விழும் பொழுது பூமி அதிர்வது இயற்கையானதே!” (ராஜீவ் காந்தி, நவம்பர் 19, 1984, தனது முதல் பொதுக்கூட்ட உரையில்) காங்கிரசைப் பொருத்தவரை இதனை நாம் மறந்து விட வேண்டும், ஒரு விபத்தாக கருத வேண்டும். “இப்பொழுதாவது மறந்து விடுங்கள். குறைந்தபட்சம் நாங்கள் மன்னிப்புக்கேட்டு விட்டோம். உங்கள் ஆளை பிரதமராக்கி விட்டோம்’ என்கிறார்கள். நாங்கள் கூறும் பதில் என்னவென்றால், 21 ஆண்டுகள் கழித்து நீங்கள் மன்…
-
- 2 replies
- 831 views
-
-
கேட்டலன் தேர்தல்: பெரும்பான்மையை தக்கவைத்த பிரிவினைவாதிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS கேட்டலன் பிராந்தியத்துக்கான நாடாளுமன்ற தேர்தலில் பிரிவினைவாத கட்சிகள் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் நிலையை நோக்கி செல்வதால், ஸ்பெயின் அரசாங்கத்துடன் கூடுதல் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் ப…
-
- 0 replies
- 439 views
-
-
தென் அமெரிக்கக் கண்டத்தில் இரு தீவுகளைக் கொண்ட நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு. இத்தீவுகளில் ஆரம்பத்தில், அமெரிக்கப் பழங்குடியினர் வசித்தனர். ஐரோப்பியர்களின் ஆதிக்கத் துக்குள் இந்த நாடு வந்தபோது, இங்கு வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க, சீன, போர்த்துக்கீசிய, இந்திய நாடுகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1820-களில் இந்தியர்களை ஏமாற்றி வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வது பெரும் தொழிலாக இருந்தது. மக்களும் பிழைப்புக்காக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற தவிப்பில் இருந்தனர். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகள், மற்றும் கங்கைச் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியர்களை அடிமைத் தொழிலாளர்களாக விற்பனை செய்யும் தொழிலை …
-
- 2 replies
- 657 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிரிகளின் சதி இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, "இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல கருவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்." என்று கூறி இருந்தார். இதை `அர்த்தமற்றது` என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர், இந்த போராட்டங்கள் எல்லாம் தன்னிச்சையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக ஐ.நா வில் அவசர கூட்டத்தை கூட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பெரும்புயல் மணிக்கு 145 கி.மீ …
-
- 0 replies
- 164 views
-
-
அமெரிக்க விவகாரங்களில் சீனா, ரஷ்யா தலையிடுவதாக சிஐஏ இயக்குநர் கவலை, சிரியாவில் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கிய சிறுமிகள் ஜோர்டனில் சிகிச்சைக்காக காத்திருப்பு, பிபிசி பெட்டகத்தில் இருந்து சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 238 views
-
-
உக்ரைன் போருக்கு மத்தியில்... ரஷ்யாவும், சீனாவும்... பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தம்! உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவும் சீனாவும் பிரமாண்ட போர் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய பாதுகாப்பு உறவுகளை வெளிப்படுத்த சீனாவின் படைகளுடன் சேர்ந்து பெரும் இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 திகதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்த கூட்டுப்பயிற்சி 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள், 60 போர்க்கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதப் பிரிவுகளை உள்ளடக்கியது. பாரிய பயிற்சிக்கு தயாராகும…
-
- 0 replies
- 207 views
-
-
ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்து 27 பேர் பலி!!! இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலைப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்ட ஒரு குழுவினர் பஸ்ஸில் சென்றுள்ளனர். அந்த பஸ் மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/30509
-
- 0 replies
- 221 views
-