உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் ஆதரவுடன் கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவுக்கு வர மறுத்த அமிதாப் பச்சனை இப்போது சமயம் பார்த்து அவமானப்படுத்தியுள்ளது ஐஐஎப்ஏ அமைப்பு. டொரன்டோவில் நடைபெறவுள்ள விருது விழாவுக்கு வரத் தேவையில்லை என்று அமிதாப்பிடம் அந்த அமைப்பு கூறி விட்டதாம். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் ரத்தக் கறை கூட மறையாத நிலையில், கொழும்பு நகரில் கடந்த ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவை நடத்த ஆதரவு கொடுத்தது இலங்கை அரசு. இதில் பங்கேற்க இந்தியத் திரையுலகினரும் ஆர்வத்தோடு தயாராகினர். தமிழகத்திலிருந்தும் மணிரத்தினம் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை முக்கியமாக எதிர்பார்த்தி…
-
- 0 replies
- 382 views
-
-
மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம்! தி.மு.க.விற்கு அமைச்சர் இல்லை! மத்திய அமைச்சரவையில் முக்கிய அமைச்சக பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர்கள் பலரின் அமைச்சக பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளது மட்டுமின்றி, துணை அமைச்சர்களாக இருந்த சி.பி.ஜோஷி, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் ஆகியோர் முக்கிய (காபினட்) அமைச்சர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இருந்து - 2ஜி அலைக்கற்றை ஊழல் காரணமாக பதவி விலகிய ஆ.ராசாவிற்கு பதிலாக தி.மு.க.விலிருந்து எவரும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. ஆ.இராசா வகித்து வந்த தொலைத் தொடர்பு அமைச்சகப் பொறுப்பு தொடர்ந்து கபில் சிபல் வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து தனிப் பொறுப்பு அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேல் முக்கிய…
-
- 0 replies
- 808 views
-
-
சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். கடந்த 30 வருடகாலத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும் முக்கிய சீனத் தலைவர் ஹு ஜிந்தாவோ எனக் கருதப்படுகிறது. தாய்வான் விவகாரம், மனித உரிமைகள், நாணயக் கட்டுப்பாடு போன்றவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சீன ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்றிரவு சீன ஜனாதிபதிக்கு வெள்ளை மாளிகையில் பிரத்தியேக விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார். புதன்கிழமை இவ்விருவரும் வெள்ளை மாளிகை ஓவல் மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் உத்தியோகபூர்வ விரு…
-
- 1 reply
- 854 views
-
-
சபரிமலையில் நேற்று மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கொடூரமான விபத்தில் சிக்கினர் இதில் 102 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளி கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்தை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசு பேரிடர் மீட்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது. விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது. வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன…
-
- 23 replies
- 3.1k views
-
-
புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் ! நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். தனது நாளேட்டின் தலையங்கத்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊடக நேர்மையின்…
-
- 0 replies
- 702 views
-
-
சீனாவின் அத்துமீறலும் இந்தியாவின் சீற்றமும் “தங்களுடைய முன்னேற்றத்தை ‘அமைதியான எழுச்சி’ (Peaceful rise) என்று கூறிக்கொண்டாலும், அதன் நடவடிக்கைகளில் வெளிப்படும் உள்நோக்கத்தை வைத்தே சீனா மதிப்பிடப்படும்” என்று கூறி, அண்டை நாடான சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளில் பொதிந்துள்ள திட்டங்களைத் தாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம் என்பதை மிக நேர்த்தியாக புரிய வைத்துள்ளார் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ். இந்திய - சீனா உறவு குறித்து புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆற்றிய உரை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த அளவிற்கு கசந்துள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றில், “ போட்டியும…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழினத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே? கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறா…
-
- 0 replies
- 851 views
-
-
லா சப்பல் காடையரின் வீரவரலாறு லாசப்பல் காடையர்களின் விபரணம் பிரான்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. http://www.m6replay.fr/#/info/enquete-exclusive/21974
-
- 8 replies
- 2.3k views
-
-
http://www.youtube.com/watch?v=jBrJBap6r3w&feature=related
-
- 3 replies
- 2.2k views
-
-
ஜெயலலிதா தமிழீழம் மலர உதவுவேன் என்று வெளிப்படையாக சத்தியம் செய்ய வேண்டும் என்று தமிழருவி மணியன் கேட்டுள்ளார். மு.கருணாநிதி அரசு ஆட்சியில் இருந்து இறங்குவது இறங்குவதுதான் ஆனால் அவரை ஆட்சியில் இருந்து இறக்கி ஜெயலலிதாவை வெறுமனே ஆட்சியில் ஏற்றுவதால் யாதொரு பயனும் கிடையாது. அப்படிச் செய்தால் காட்சி மாறுமே அல்லாது ஆட்சி மாற்றத்தால் பயன் எதுவும் நடைபெறாது. சிங்கள அரசு எப்படிப்பட்ட கோர முகம் கொண்டது என்பதை ஆவணமாக்கியிருக்கிறார் பிரபாகரன். உலக மன்றில் சிறீலங்காவை போர்க் குற்றவாளி நாடாக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அவர்கள் பிரியக்கூடாது என்றுதான் ஆண்டவனை வேண்டுகிறேன். காட்டிக் கொடுத்த இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும், தேர்தலில…
-
- 2 replies
- 1.4k views
-
-
காஷ்மீர் பிரச்சனையின் தொடக்கம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பிந்தியது. தெலுங்கானா பிரச்சனை அதற்கு முந்தியது. பிரிட்டிஸ் ஆட்சி நிலவிய காலத்தில் தெலுங்கானா பிரச்சனை தொடங்கிய தோடு இன்று முற்றிப் பழுத்து இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஐதரபாத் என்ற பெயரில் பிரிட்டிசார் காலத்தில் நிலவிய ஆட்சிப் புலத்தில் கொடுங்கோலன் நிசாமின் அரசாட்சி காணப்பட்டது. நிசாமின் ஆட்சிப்புலத்தின் தென் மாவட்டங்களில் பொதுவுடமை இலட்சியம் கலந்த விவசாயப் புரட்சி வெடித்தது. இந்த மாவட்ட மக்கள் மிகவும் பின்தங்கிய வாழ்கை நிலையில் இருந்தனர். ஆண்டான் அடிமை நிலவரம் பரவலாக நிலவியது. இளைய தலைமுறையினர் தலைமையில் வெடித்த விவசாயிகள் புரட்சியை அடக்குவதற்கு நிசாம் மன்னர் அனுப்பிய படைகள் தோல்வி அடைந்தன. 25…
-
- 0 replies
- 1.1k views
-
-
அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா. இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அம…
-
- 0 replies
- 835 views
-
-
சென்னையில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே கோவா செல்லும் வாஸ்கோ விரைவு தொடர் வண்டியில் கடந்த வாரம் குடும்பத்துடன் சென்றுபோது, இரயில் பயண நடத்துனர் வந்து பயணிகளின் பயணச் சீட்டை வாங்கி சரி பார்த்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், ஒரு சோதனைக் குழு (4 பெண்கள் ஒரு ஆண்) எங்கள் பயணப் பெட்டிக்கு வந்தது. எங்கள் பெட்டியில் அடுத்தடுத்த அறைகளில் 5, 6 பேர் குழுவாக பயணம் செய்யும் இரண்டு குழுக்கள் இருந்தன. அவர்களிடம் சென்று, அவர்கள் இணையத்தின் வாயிலாக பயண சீட்டு முன் பதிவு செய்திருந்ததால், அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டச் சொல்லிக் கேட்டது. அவர்களில் ஒருவர் தனது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காட்டியபோது, அது போதாது, எல்லோரும் காட்ட வேண்டும் என்று அந்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
1991ல் சோனியா காந்தியிடம் 2 பில்லியன் டொலர்
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்திரா காந்தி, தான் கொல்லப்படுவார் என ராஜீவுக்கும் சோனியாவுக்கும் கூறியுள்ளார் http://www.youtube.com/watch?v=JtAKwz-TQjY&NR=1&feature=fvwp
-
- 0 replies
- 936 views
-
-
ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு சி.பி.ஐ.யிடம் இருந்து நெருக்குதல் வருகிறதோ இல்லையோ, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுக்கும் அடுத்தடுத்த குடைச்சல்கள் தி.மு.க. கூடாரத்தை கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்துவிட்டது. ‘ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுவாமி கொடுத்துள்ள ஆதாரங்களின்படி இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்படி வழக்குத் தொடரலாம்’ என அனுமதியளித்து டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு குடைச்சலின் அடுத்தபடி. ‘ஸ்பெக்ட்ரம் ராசா மீது குற்றவியல் தண்டனைச் சட்டப்படி வழக்குத் தொடர அனுமதியளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு சி.பி.ஐ. கோர்ட்டை அணுகினார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த வழக்கில் ஆஜரான சுப்பிரமணியன் சுவாமி, ராசாவுக்கு எதிரான 375 பக்க புகார் மனுவை அளித்தார். பி…
-
- 1 reply
- 958 views
-
-
Sunday, January 9th, 2011 | Posted by admin தென் சூடான்: சுதந்திரத்திற்கான பாதையில் புதிய பெயரொன்றைத் தேர்ந்தெடுப்பது ஓர் ஆரம்பம் இந்தப் புதிய தேசத்திற்கு இன்னமும் பொருத்தமான பெயர் தோந்தெடுக்கப்படவில்லை. தெற்கு, தெற்கு சூடான், புதிய சூடான் அல்லது குஸ் [south, Southern Sudan, New Sudan or even Cush] என இந்தப் புதிய தேசத்திற்குப் பெயர் சூட்டப்படலாம். இங்கு இடம்பெறும் மக்கள் கருத்துக்கணிப்பின் பலம்தான் இந்த உலகின் புதிய நாட்டினது முதன்மையான வெற்றியாக அமையும். ஆனால் எண்ணெய் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தொடரும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத்தளத்தில் Mark Tran எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்க…
-
- 2 replies
- 939 views
-
-
இலவசங்களால் அழியும் என் தமிழகம் இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்ன…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஜிஹாட் தீவிரவாத அமைப்பிற்காக கனேடியர்கள் பயிற்சிபெற்று வருவதாக வெளியாகிய தகவல் தொடர்பாக ஆர்.சி.எம்.பி (R.C.M.P - கனேடிய தேசிய காவல்துறை) யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் தாக்குதுல் நடத்துவதற்காக பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக கனேடியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக, தலிபான்களை ஆதூரம் காட்டி ஹொங்கொங்கைச் சேர்ந்த பத்திரிகை, ஏசியா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் அறிவதற்காக ஆர்.சி.எம்.பியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஆர்.சி.எம்.பியின் பிரதி ஆணையாளர் ஜில் மிஷெளட் தெரிவித்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12 கனேடியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்றதாக, இந்தச் செய்தியில் பாகிஸ்தான…
-
- 1 reply
- 768 views
-
-
. http://www.youtube.com/watch?v=b5_9ypC1TOU&feature=related .
-
- 7 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குடியரசுக் கட்சி எம்.பி. கேப்ரியல் கிஃப்போர்டு படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். முதலில் கிஃப்போர்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை மறுத்த மருத்துவப் பேச்சாளர், கிஃப்போர்டு உயிருடன் உள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. குண்டுக் காயங்களுடன் மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிஃபோர்டு …
-
- 4 replies
- 1.1k views
-
-
முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011, 14:22[iST] சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார். ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுத…
-
- 13 replies
- 1.6k views
-
-
எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…
-
- 1 reply
- 1.5k views
-
-
தேர்தல் வரப்போவதால், தன்னிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை ஆராயாமல், அதை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, வம்பில் சிக்கி வரு கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கடந்த மாதம் 23-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ‘‘நான் ஆட்சிக்கு வந்தால், குமரியில், பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க இருக்கும் தடைகளை நீக்குவேன்’’ எனப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உண்மையில் 1982-ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி வேணுகோபால் கமிஷன்தான் குமரியில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே ஜெயலலிதா பேசிச் சென்றதை அ.தி.மு…
-
- 1 reply
- 1.3k views
-
-
கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர். சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங…
-
- 1 reply
- 11.6k views
-