உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது. அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு. ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற க…
-
- 1 reply
- 457 views
-
-
விசயகுமார் - மகள் வனிதா இவர்கள் பிரச்சனையில் ஒரு பத்திரிக்கை குளிர்காய்கிறது. சமயம் பார்த்து காத்திருந்து சகட்டுமேனிக்கு சகதியை தூற்றி வீசுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு இந்த மூன்றிலும் வாசகர்களின் நாட்டம் அதிகம். இந்த துறைகளில் உள்ளவர்களின் பொதுவாழ்க்கையையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களையும் தெரிந்துகொள்வதில் வாசகர்களிடம் ஆர்வம் உள்ளது என்பது உண்மை. அதே நேரத்தில் விளம்பரத்துக்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது அருவறுப்பானதாகவே தெரிகிறது. அலைகற்றை ஊழலால் இந்தியாவில் உள்ள பொதுசனம் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் ராசாவின் தனிப்பட வாழ்க்கையால் பொதுசனம் பாதிக்கப்பட்டது என்று சொல்வது அபத்தமே. அதே போல தான். …
-
- 1 reply
- 650 views
-
-
நேரு குடும்பத்தின் தேச துரோகங்கள் நாடகமாடிய நேரு – காங்கிரஸ் எனும் கட்சியை சுகந்திரம் வாங்கிய உடனே கலைத்துவிட வேண்டும். அதில் உழைத்த தலைவர்களெல்லாம் இந்தியாவிற்காக மீண்டும் உழைக்க வேண்டும் என்றார் காந்தி. சிலர் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் பணக்காரனாக பிறந்து, கொஞ்ச காலம் சுகந்திர தியாகி போல நடித்த நேருவோ ஒத்துக்கொள்ள வில்லை. காந்திக்கு எதிரான தலைவர்களை திரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்டார். காந்தியின் பேச்சையே கேட்கவில்லை – இந்தியாவை ஒன்றினைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல் அவர்களின் பேச்சை பல தடவை கேட்கவில்லை. சீனாவின் மீது கவணமாக இருக்குமாரு அவர் சொன்னதை கேட்காமல்தான், இந்தியாவின் பெரும்பகுதியை போரின் போது தாரை வார்த்தார் நேரு. காந்தி சுட்டு கொல்லப்படுவதற…
-
- 1 reply
- 3k views
-
-
ஈழத் தமிழர்கள் பிணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது கருணாநிதி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை கருணாநிதி குடும்பத்தினர் எண்ணிக் கொண்டிருந்தனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டினார். சென்னை தியாகராயா நகரில் இன்று மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசும் போது, ஈழத்தில் புலிகள் இயக்கம் நடத்திய போர் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த சுதந்திர இயக்கங்கள், ஆதரவோடு நடைபெற்றன. ஆனால் புலிகளின் போர், எவ்வித ஆதரவும் இல்லாமல் நடைபெற்ற போராகும்.…
-
- 5 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவுக்கும் இந்தியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில சர்ச்சைக்குரிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் பி.ஜெ. குரோலே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை கூறியுள்ளார். "இதுகுறித்து நாங்கள் இந்தியாவுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளோம். எனினும், விக்கிலீக்ஸ் எத்தகைய ஆவணங்களை வைத்துள்ளது என்பதும், அதன் திட்டம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நாங்கள் எங்களின் நிலையை நட்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆவணங்களை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்." என்றார் குரோலே. விக்கிலீக்ஸ் …
-
- 3 replies
- 822 views
-
-
சனிக்கிழமை, 27, நவம்பர் 2010 (11:16 IST) எதிர்பாராத விபத்து: ஒபாமா உதட்டில் 12 தையல்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதிகாலையில் நடந்த எதிர்பாராத விபத்தால், உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. சனிக்கிழமை ஓய்வு தினம் என்பதால், வாஷிங்டனில் உள்ள ராணுவ விளையாட்டு மைதானம் ஒன்றில் தனது உறவினர்கள், நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர் அணி வீரர் ஒருவர் ஒபாமாவிடம் இருந்து பந்தை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் மிகவும் சாமர்த்தியமாக பந்தை தன் வசமே ஒபாமா வைத்திருந்தது, மற்றொரு வீரரின் கை மூட்டு ஒபாமாவின் உதட்டில் பலமாக இடித்துள்ளது. எதிர்பாராத அந்த நிகழ்வால் ஒபாமாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்க…
-
- 5 replies
- 1k views
-
-
காஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்! வரவர ராவ் ‐ இன்று இந்திய அரசும் மாநில அரசுகளும் அஞ்சி நடுங்கும் மாவோயிஸ்டு இயக்கத்திற்காக கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி. அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றுபவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர். இவரின் எழுத்துகளும் பேச்சுகளும் ஆளும் வர்க்கத்தை தூக்கமிழக்கச் செய்பவை. ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருந்தவரை, ஒரு மாலை வேளையில் நேர்காணலுக்காக சந்தித்தேன். நடுத்தர வர்க்க மக்களிடம் மாவோயிஸ்டுகள் குறித்து இருக்கும் எண்ணங்களை கேள்விகளாக முன்வைத்தேன். பொருட்செறிவான பதில்கள் அவரிடமிருந்து வந்தன. கே: மாவோயிஸ்டுகளால் போலீச…
-
- 1 reply
- 373 views
-
-
அமெரிக்க இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சீனா – வடகொரியா ஆகிய நட்பு நாடுகளுக்கிடையிலான நட்பு முறிவடையும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா மோசமான குழந்தை என சீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்க இராஜதந்திரத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இரகசிய ஆவணமொன்றில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச்சேவையொன்று தெரிவிக்கிறது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தன்மை இதன்மூலம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் வெளியாகிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து அமெரிக்க தீவிரமாக ஆராய்…
-
- 0 replies
- 429 views
-
-
நடிகர் விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை திடீரென ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த வருடம் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தை வெளியிட்ட நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸில் இணைய ராகுல் கோரிக்கை வைத்ததாகவும், அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவி தர வேண்டும் என விஜய் கேட்டதாகவும் செய…
-
- 0 replies
- 509 views
-
-
எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது. தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல். …
-
- 0 replies
- 1.7k views
-
-
பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர். பெ.இளஞ்செழியன் 24.11.10 மாலை 7.00 மணியளவில் வாகன விபத்தில் மரணமடைந்தார். கழக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கழகம் இதுவரை நடத்திய ஆர்ப்பட்டம், போராட்டம் அனைத்திலும் பங்கேற்று சிறைக்கும் சென்றுள்ளார். ஒவ்வொரு விழாக்காலங்களிலும் தகுந்த துண்டறிக்கை விநியோகித்து பெரியாரிலை மக்களிடையே பரப்பியவர். சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் அதிகரித்த காலங்களில் தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார். - மீனகம்
-
- 0 replies
- 579 views
-
-
விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். "விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்…
-
- 2 replies
- 808 views
-
-
இந்தியாவின் கருப்புப் பணம் எவ்வளவு என்பதை ஆய்வுகள் நடத்தி அறிந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளாக மத்திய நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த 1985ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருப்பு பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடிïட் ஆப் பப்ளிக் பைனான்ஸ் அண்ட் பாலிசி என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. அப்போது ரூ.31 ஆயிரத்து 584 கோடி முதல் ரூ.36 ஆயிரத்து 786 கோடி வரை கருப்பு பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தத் தொகை அப்போதைய இந்திய பொருளாதாரத்தில் 16.53 சதவீதம் ஆகும். அதன் பின் இந்தியப் பொருளாதாரம் 31 மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, தற்போதைய நிலையில் எவ்வளவு கருப்பு பணம் இருக்கிறது என்று அறிய ஆய்வு நடத்த மத்தி…
-
- 0 replies
- 653 views
-
-
விக்கி லீக்ஸ் இணைய தளம் நாடுகளுக்கு இடையேயான முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 1. ஈரானை தாக்க, சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும், 2. பாக்., அணு ஆயுதங்கள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்காநாடுகள் அச்சம் அடைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும், 3. ஒருங்கிணைந்த கொரிய மீது தாக்குதல் நடத்தகோரி தென்கொரியா கூறியதாகவும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை, விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அபாயகரமானதும், பிரச்னைக்குரியதுமாகும் என தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகம் அனுப்பிய இரண்டரை லட்சம் ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பரபரப்புக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=135966 …
-
- 3 replies
- 963 views
-
-
குற்றம் செய்த வெளிநாட்டவர்களை திருப்பு அனுப்புதல் சட்டமானது சில வகையான குற்றங்களை செய்த வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு அகற்றப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் வாக்கெடுப்பின்படி ஒரு மாநிலத்தை தவிர மாநிலங்களில் 26 (கான்ரான்) இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். சர்வதேச சட்டங்களை மீறாத வகையில் இந்த வெளியேற்றங்கள் நடக்கும் என சட்ட அமைச்சர் தெரிவித்தார். கடந்த வருடங்களில் 300-400 பேர் நாட்டை விட்டு அகற்றப்பட்டனர் குற்றங்கள் செய்தமைக்கு. இந்த புதிய சட்டத்துடன் இந்த தொகை 1500 ஆகலாம் என அஞ்சப்படுகின்றது. Swiss approve automatic expulsion of foreign criminals GENEVA — Switzerland endorsed Sunday a far-right push to automatically expel foreign residents con…
-
- 0 replies
- 433 views
-
-
1. The Republic of Ireland will receive a bail-out worth about 85bn euros ($113bn; £72bn). 2. European minister agreed to the deal that will see 35bn euros supporting the Irish banking system with the remaining 50bn euros going towards the government's day-to-day spending. 3. An average interest rate of 5.8% will be payable on the loans, above the 5.2% paid by Greece for its bail-out.
-
- 0 replies
- 612 views
-
-
-
வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா. தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற…
-
- 2 replies
- 468 views
-
-
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நடத்துவதால் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வட கொரியா எச்சரித்துள்ளது. தென் கொரியாவின் லியோன் பியோல் தீவில் வட கொரியா குண்டுகளை வீசி தாக்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக தென் கொரியாவும், வட கொரியா மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து வட கொரியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தென் கொரியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போர் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 75 போர் விமானங்கள், 6 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவ…
-
- 0 replies
- 444 views
-
-
விக்கிலீக்ஸ் என்றால் என்ன ? http://www.youtube.com/watch?v=zRo4rtN3ACk இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரதொடக்கத்தில் புதிதாக வார இருக்கும் விக்கிலீக்ஸ் அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் ஆழ்ந்த சங்கடத்துக்குள் தள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இம்முறை இந்த இணையத்தளம் முன்பு வெளியிட்ட இராணுவ இரகசியங்கள் அல்லாது "இராசதந்திர இரகசியங்களாக" இருக்கும். இது முன்பு வெளியிட்ட அறிக்கையை விட ஏழு மடங்கு பெரிதாக இருக்கும். இது அமெரிக்காவின் இராசாங்க திணைக்கள செயலாளர் நாயகம் ஆன ஹிலரி கிளின்ரனை நித்திரை கொள்ள விடாது என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யுவது போல உலக நாடுகளில் உள்ள தனது தூதுவர்கள் மூலமாக இதைப்பற்றி அறிவுறுத்தல் செய்து முற்பாதுகாப்பாக தன…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா, தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் சண்டை நடத்தி வரும் வேளையில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை, தலிபான் முக்கிய தலைவர்கள் திடீரென ரகசியமாக சந்தித்து பேசியது பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இப்பொழுது இவர் ஒரு தலிபான் நபர் அல்ல எனவும் இவர் நேச படைகளை ஏமாற்றி பணம் வேண்டி தலைமறைவாகி விட்டார். இது பெரிய அவமானமாக பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு அதிபர் ஹமீத் கர்சாய் அமைதிக்குழுவினை நியமித்துள்ளார். இதில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. இந்நிலையில் தலிபான்கள்,மற்றும் அல்-கொய்தா அமைப்பைச் சேர்நத மூன்று முக்கிய தலைவர்கள் அதிபர் ஹமீத் கர்சாயை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இ…
-
- 0 replies
- 527 views
-
-
நத்தார் தினத்தையொட்டி மரம் கட்டவிருந்த நிகழ்வில் குண்டு வெடிக்கப்பட இருந்ததா? அமெரிக்காவில் ஒருவர் கைது.
-
- 0 replies
- 476 views
-
-
மகளையும், மகளின் காதலனையும் படுகொலை செய்ய முயற்சித்த இலங்கைத் தமிழருக்கு, கனேடிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளையும் மகளின் காதலனையும் வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது செல்லத்துரை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மகள் தமது அறிவுரைகளை கேட்காத காரணத்தினால் அவரது காதலன், மற்றும் மருமகன் ஆகியோரை வாகனத்தில் மோத முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த யுவதியை மூன்று தினங்கள…
-
- 8 replies
- 729 views
-
-
Nov 23, 2010 / பகுதி: உலக வலம் / தாயகன் கொரிய தீப கற்பத்தில் மோதல் அணுவாயுதம் தயாரிப்பதாக நேற்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்த வட கொரியா, தென் கொரியா மீது ஆட்டிலறித் தாக்குதல் மேற்கொண்டிருப்பதாகவும், தென் கொரியா பதில் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தென் கொரியாவிற்குச் சொந்தமான சுமார் ஆயிரம் பேர் வரையில் செறிவாக வாழும் தீவொன்றை நோக்கி வட கொரிய 100 ஆட்லறி எறிகணை வீசி இருப்பதாகவும், இவற்றில் 12 எறிகணைகள் மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்து வெடித்து பலர் காயமடைந்திருப்பதாகவும் தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. பதிலுக்கு தாமும் 60 வரையிலான எறிகணைகளை வீசியிருப்பதாகவும், போர் வானூர்திகளை அனுப்பி இருப்பதாகவும் தென் கொரியா அறிவ…
-
- 3 replies
- 867 views
-
-
சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா.ராசா அறிக்கை; தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நம் சொந்த இனத்தை கொன்றொழித்த சிங்கள அரசுடனான இந்திய அரசின் நட்புறவை கெடுக்கும் வகையில் பேசியதாக ஜூலை 12-ம் தேதி கைது செய்யப்பட்ட சீமானின் மீது ஜூலை 16-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.கடந்த நான்கரை மாதகாலமாக இவ்வழக்கின் மீதான விசாரனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொருமுறையும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் இழுத்தடிக்கும் நோக்கத்தோடு அரசு தரப்பினர் வா…
-
- 2 replies
- 809 views
-