உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
Published By: RAJEEBAN 22 OCT, 2023 | 10:15 AM கடந்த இரண்டு வாரகாலமாக இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் காசா சிறுவர்கள் முன்னரை விட அதிகளவு மன அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றனர் என பெற்றோர்களும் உளவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். காசாவின் 2.3 மில்லியன் சனத்தொகையில் சிறுவர்கள் என குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் இவர்களில் பலர் தங்கள் வீடுகளில் இருந்து தப்பியோடியுள்ள நிலையில் ஐநா அகதி முகாமில் குடிநீரும் உணவும் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சின் கீழ் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது. சிறுவர்கள் வலிப்பு படுக்கையில் சிறுநீர்கழித்தல் பயம் ஆக்ரோசம் நடவடிக்கைகளில் பதற்றம் பெற்றோர் அருகிலேயே இருக்கவேண்டும…
-
- 2 replies
- 199 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் இன்று -19- கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
- 23 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நதீன் யூசிஃப் பதவி, பிபிசி நியூஸ், கனடா 28 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். …
-
- 44 replies
- 3.9k views
- 3 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொன்ஸி என்பது ஒரு முதலீட்டு மோசடி திட்டம். அதாவது, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதிலிருந்து பணத்தை எடுத்து பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுப்பது. இந்தியாவில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி ஆகியோர் இணைந்து அமெரிக்காவில் நண்பன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தை …
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூத அமைப்புக்களைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். நாடாளுமன்ற பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லாத நிலையில், அங்குள்ள நாடாளுமன்ற அலுவலக கட்டடமான "கேனான் ஹவுஸ்" அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்த பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டக்காரர்கள் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், நாடாளுமன்றமும் …
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 11:01 AM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது. செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் . பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 20 OCT, 2023 | 12:41 PM ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்களை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. அய்ன் அல்அசா விமானப்படை தளத்திற்குள் பாரியவெடிப்பு சத்தங்கள் கேட்டன ஈராக்கிய படையினர் அந்த விமானதளத்தை மூடி சோதனைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை எனவும் செய்தி வெளியி;ட்டுள்ளது. கடந்த வாரம் ஈரானிற்கு நெருக்கமான ஈராக்கிய குழுக்கள் ஹமாஸ்விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அமெரிக்காவின் நிலைகளை தாக்கப்போவதாக எச்சரித்திருந்தது. ஈரா…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 03:02 PM பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இரு பகுதிகளிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சென்றுள்ளார். குறித்த சந்திபின் போது, இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலை தெரிவிப்பதோடு, மோதல் அதிகரிப்பதற்கு எதிர…
-
- 11 replies
- 804 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாட் மர்ஃபி பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன் 18 நிமிடங்களுக்கு முன்னர் சீனா கடந்த ஆண்டு அதன் அணு ஆயுத இருப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மேலும் தற்போது சுமார் 500 செயல்பாட்டு அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில், பெய்ஜிங் 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் ஆயுத இருப்புகளை இரட்டிப்பாக்கி 1,000 அணுகுண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனா "முதலில் தாக்க மாட்டோம்" கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்று அது கூறியது…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 10:26 AM ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், “அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விர…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் ஹெஸ்பொல்லா என்பது ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா பெயரின் பொருள் கடவுளின் கட்சி. 1980 களின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஈரானின் நிதி மற்றும் இராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவானது. லெபனானின் பாரம்பரியமாக அதிகாரம் இழந்த ஷியாக்களை தெற்கில் பாதுகாப்பதற்கான ஒரு சக்தியாக அது இருந்தது. அதன் கருத்தியல் வேர்கள் 1960 மற்றும் 1970 களில் லெபனானில் ஷியா இஸ்லாமிய மறுமலர்ச்சி வரை நீண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் இஸ்ரேல் பின்வாங்கிய பிறகு, ஹெஸ்பு…
-
- 1 reply
- 682 views
- 1 follower
-
-
ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு சீன ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் : 8 அம்சக் கொள்கை வெளியீடு Published By: DIGITAL DESK 3 18 OCT, 2023 | 04:58 PM அமைதி, பரஸ்பர ஆதரவு மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பழைய பட்டுப்பாதையின் நவீன வடிவம் என்றும், இதன் ஊடாக ஒரு நாட்டுக்கு மாத்திரமன்றி பல நாடுகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின் பிங் தெரிவித்தார். ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு இன்று புதன்கிழமை (18) பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சீன ஜனாதிபதி தலைமையில் 20 நாடுகளின் அரச தலைவர்கள் …
-
- 3 replies
- 315 views
- 1 follower
-
-
ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? கள நிலவரம் என்ன? பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK 18 அக்டோபர் 2023, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், அதன் தாக்கம் மற்றும் அதன் முடிவு உள்ளிட்டவை குறித்து நூற்றக்கணக்கான கேள்விகளை பிபிசி பெற்றுள்ளது. மற்ற நாடுகளும் இந்த மோதலில் ஈடுபடுமா என பலர் கேட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் இருந்து செய்தி சேகரித்…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
புதிய பட்டுப் பாதை திட்டம்: உலகையே வளைக்கும் சீனாவின் கனவை நனவாக்கியதா? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 அக்டோபர் 2023, 12:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் கனவுத் திட்டமான 'புதிய பட்டுப் பாதை திட்டம்' என்று வர்ணிக்கப்படும் பெல்ட் அன்ட் ரோடு இனிஷியேட்டிவ்(BRI) திட்டம் தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் பிற பகுதிகளோடு இணைக்க இரண்டு புதிய வர்த்தக பாதைகளை அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். பத்தாண்டு கொண்டாட்ட உச்சி மாநாட்டிற்காக, உலகம் முழுவதும் 130 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சீனாவை வந்தடையத் தொடங்கியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்களு…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் காசாவை மீண்டும் ஆக்கிரமித்தால் அது மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும், என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.ஸிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தச் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இஸ்ரேல் மீண்டும் காசாவை ஆக்கிரமிப்பது தவறு," என்று கூறினார். ஆனால், "தீவிரவாதிகளை" அகற்றுவது "மிகவும் அவசியமானது" என்று அவர் கூறினார். மேலும், ஹமாஸ் ‘முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமா’ என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, ‘ஆம்’ என்று பைடன் பதிலளித்தார். மேலும் பேசிய அவர், "பாலத்தீனத்தி…
-
- 2 replies
- 367 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபு அலூஃப், கான் யூனிஸிலிருந்து பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காசா நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் காசா நகரத்திலிருந்து வெளியேறிய ஒரு பெரும் மனிதக் கூட்டம் தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் நகருக்குள் நுழைந்துள்ளது. வடக்கிலிருந்த பல லட்சம் மக்கள், தாம் சுமக்கக்கூடிய அனைத்தையும் தூக்கிக்கொண்டு கான் யூனிஸுக்கு வந்திருக்கின்றனர். எரிபொருள் வைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வைத்திருந்தவர்கள் குதிரை வண்டிகளிலும் வந்தனர், எதுவுமே இல்லாதவர்கள் நடந்தே வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் கண்ட கான் யூனிஸ், நிலைகுலைந்து போயிருந்தது…
-
- 2 replies
- 501 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 OCT, 2023 | 06:22 PM ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமையன்று ரிச்டர் அளவுகோலில் 6.2, 6.1 மற்றும் 5.9 ஆக மூன்று பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. அரை மணி நேரத்தில் மூன்று சக்திவாய்ந்த பூகம்பங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மதியம் 12:19 மணிக்கு 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு 6.1 ஆகவும் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவுகோலில் சமீபத்திய பூகம்பம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது. ஹெராட் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு நடவடிக்கையின் மையம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று நேபாள…
-
- 19 replies
- 957 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MENAHEM KAHANA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி பதவி, பிபிசி ஐரோப்பா செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே" நோக்கம் என்றார். காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்…
-
- 3 replies
- 417 views
- 1 follower
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த "ஆபரேஷன் அல்-அக்ஸா தாக்குதலை" திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்றுதான் கேள்விகள் எழுந்தன. காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர். நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பி…
-
- 1 reply
- 295 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 15 OCT, 2023 | 09:30 PM தென் காசாவில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையையும் அங்கிருந்து அகற்றுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ரபாவில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர்களை இரண்டு மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டுள்ளனர். இரண்டு மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளனர் என தென்காசவில் உள்ள குவைத்தி மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜமால் ஹம்ஸ் தெரிவித்துள்ளார். அந்த மருத்த…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, காசாவின் தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு மசூதி இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யோலண்டே ஆணி பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம் 7 நிமிடங்களுக்கு முன்னர் 1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர். ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது. 1973ல் நடந்த அந்தத் தாக்கு…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பான்-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறையின் தலைவர் நிகோலாய் கோப்ரினெட்ஸ், துருக்கியில், இஸ்தான்புல், தக்சிம் மாவட்டத்தில் உள்ள அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ரஷ்ய தூதுவர் இஸ்தான்புல்லிற்கு கூட்டம் ஒன்றிற்கு கலந்துகொள்வதற்காக வருகை தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த கூட்டத்தை தவற விட்டமையால் ரஷ்ய அதிகாரிகள் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை விசாரணைகளின் ஆரம்ப அறிக்கைகள் கோப்ரினெட்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றன. எனினும் அவரது உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்…
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
14 OCT, 2023 | 05:44 PM நியூசிலாந்து நாட்டின் 54 ஆவது பொது தேர்தல் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்றது இந் நிலையில், நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டதால் கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான நியூசிலாந்தின் தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு என்ற கருத்துக்கள் இருந்தன. இருப்பினும் சிறு கட்சிகளின் துணையுடன் தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்துக்களும் …
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
பிரான்சில் தடையை மீறி நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வன்முறை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துகொண்டே செல்கிறது. இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளன. அதேவேளையில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பாலஸ்தீன மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 448 views
-