உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26862 topics in this forum
-
கூட்டணி, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, வரும் 22ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, மதுரை, திருச்சி, விழுப்புரம், நெல்லை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யும் ராகுல் இந்த முறையாவது தங்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் 13 லட்சம் பேர் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்வேறு பதவிகளுக்கு 60,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கவு…
-
- 0 replies
- 428 views
-
-
டெல்லியில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. வடமேற்கு டெல்லியில், டெல்லி-சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83-வது மாநாடு ஆகும். கடந்த 1978-ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட சுமார் 20 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் இன்று ஹெலிகாப்டரில் மாநாட்டு மைதானத்துக்கு வந்து சேருகிறார்கள். மேடையையொட்டி, அவர்களுக்காக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, சாப்பாட்டு கூடங்கள், வெந்நீர், ஹீட்டர் வசதியுடன் கூடிய குளியலறைகள், 8 படுக்கைகள் கொண…
-
- 0 replies
- 447 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஜெர்மன் பெர்லின் விமான நிலையங்கள் பனியால் மூடப்பட்டுள்ளதால் அங்கு தரை இறங்க இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148387
-
- 0 replies
- 467 views
-
-
புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்க…
-
- 1 reply
- 578 views
-
-
என் இனம் சேமித்து வைத்த கோபம் - சீமான் அலுவலகம் முழுக்க சினிமா நண்பர்களும்,‘நாம் தமிழர்’ தொண்டர்களும் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தனர். மொட்டைமாடியிலுள்ள கீற்றுக் கொட்டகையில் இடைவிடாமல் வரும் டெலிபோன் அழைப்புகளுக்கு ‘நன்றி அண்ணே’ சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு தோழரின் பெயரையும் அழைத்து கை குலுக்கிக் கொண்டிருந்தார் சீமான்.அது அவரது சென்னை வளசரவாக்கம் வீடு. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சீமான்,ஐந்து மாதத்திற்குப் பிறகு கடந்த வாரம் விடுதலையாகியிருந்தார்.கேள்விகளை முடிப்பதற்கு முன்பே பதில்கள் வெடித்துச் சிதறுவது போல் வந்தன. ஐந்து மாத சிறைவாழ்க்கையை எப்படிக் கழித்தீர்கள்? ‘‘சிறை என்பது என் உடலுக்கு மட்டும்தான். என் சிந்தனை முழுவதும…
-
- 1 reply
- 724 views
-
-
ஜப்பான் தனது தேசிய பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஜப்பானின் படைகளை நெறிப்படுத்தும் வகையிலான அந்தக் கொள்கைக்கு ஜப்பானின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சீனப் படைகள் பலப்படுத்தப்படும் நிலையில், இந்த மாற்றங்களை ஜப்பான் அறிவித்துள்ளது. சீனப் படைகள் கட்டியெழுப்பப்படுவது சர்வதேச ரீதியில் கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமென ஜப்பான் குறிப்பிட்டது. ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கென நாட்டின் வட பகுதியில் முன்னர் செய்யப்பட்ட பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டு, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் தென் பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படும். நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை …
-
- 0 replies
- 410 views
-
-
கொசோவாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் கைதிகளின் உடல் உறுப்புக்கள் திருட்டு தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை என ஐரோப்பிய மனித உரிமைகள் ஆர்வலர் டிக் மார்டி தெரிவித்துள்ளார். இவரது அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய அமைப்பும் நேற்று அங்கீகரித்துள்ளது. கொசோவில் கைதிகளின் உடல் உறுப்புகள் திருடப்பட்டமையானது பல்வேறு நாடுகளின்உளவு சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இது பற்றி அறிந்துள்ளதாகவும் பயம் மற்றும் அரசியல் இலாபங்களுக்காக கருத்து தெரிவிக்க முன்வருவதில்லையெனவும் மார்டி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோசோவாவின் பிரதமரான ஹாசிம் தாகியை குற்றம்சாட்டியுள்ளார். எனினும் கொசோவா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொசோவா மற்…
-
- 1 reply
- 635 views
-
-
ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிய சாட்சியங்கள் திரும்பியதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு [ வெள்ளிக்கிழமை, 17 டிசெம்பர் 2010, 12:29.47 PM GMT +05:30 ] ஐ.நா.நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்ட சாட்சியங்கள் திருப்பியனுப்பப்பட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நிபுணர் குழு அக்கறையின்றி இருக்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவுக்கு சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை கடந்த 15ம் திகதியுடன் முடிவுற்றது. ஆயினும் இந்தக் கால எல்லை மேலும் நீடிக்கப்படும் என்று என்று ஐ.நா பொதுச்செயலரின் பதில் பிரதி பேச்சாளர் பர்கான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா பொதுச்செயலர் பான் …
-
- 2 replies
- 542 views
-
-
துக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார். கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயக…
-
- 1 reply
- 680 views
-
-
அரசியலுக்கு வரும் முன்பே, எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மகன் விஜய்யும் பரம்பரை அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பேசி வருகின்றனர். 'நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்...ஆனால் இப்போது வர மாட்டார். நான்தான் வரப் போகிறேன். பிரச்சாரத்திலும் இறங்குவேன், என இப்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். விஜய்யும் அவர் தந்தையும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், ஜெயலலிதாவுடன் மரியாதை நிமித்த சந்திப்பு, கலைஞரை பிடிக்கும், திமுகவைப் பிடிக்காது என நாளும் ஒரு அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார்கள். சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், "நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சென்னையில் சந்தித்தேன். இத…
-
- 0 replies
- 438 views
-
-
“பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய முக்கியத் தலைவர்களை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுவியுள்ளார்கள்” என்று இந்திய உளவு அமைப்பு அளித்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இத்தகவலை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக இருக்கும் லத்திகா சரண் தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் உட்பட தமிழ்நாட்டிற்கு வரும் முக்கியத் தலைவர்களைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதாகவும், “அந்த தகவல் உண்மையானது தானா? என்பதையறிய …
-
- 0 replies
- 610 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்ட, விக்கி லீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்சுக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி அடுத்த விசாரணை நடைபெறும் வரை, ஜூலியன் அசேஞ் 240,000 ஸ்ரேலிங் பவுண் ரொக்கப் பிணையில் செல்ல வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான ஹோவார்ட் ரிடில் அனுமதி வழங்கினார். அசேஞ் தனது நடமாட்டம் கண்காணிப்படுவதற்காக இலத்திரனியல் சாதனமொன்றை அணிந்திருக்க வேண்டும் எனவும் தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியரான அசேஞ் மீது சுவீடனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுவீடன் நீதிமன்றம் விடுத்த பிடியாணை காரணமாக அவர் பிரித்த…
-
- 1 reply
- 559 views
-
-
வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது. இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
நீரா ராடியா... தி.மு.க-வின் ரிமோட் கன்ட்ரோல் இப்போது இவரிடம்தான் இருக்கிறது. புதுப் புதுத் திட்டங்கள் தீட்டி, வாக்குகளைச் சிறுகச் சிறுக கருணாநிதி சேமித்துவைக்க... அதை நாள்தோறும் வெளியாகும் ஏதாவது ஒரு டேப் ஆதாரம் சிதைத்துக்கொண்டே இருக்கிறது. 'தி.மு.க-வுக்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத் தைத் தேடித் தந்துவிட்டு, ஒருவழியாக ஆ.ராசா பதவி விலகி இருக்கிறார்’ என்று நாம் எழுதிய போது, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களா கத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் சிலர் சினம்கொண்டு பொங்கினார்கள். இன்று என்ன நடக்கிறது? 'இது, சாமான்யர்களின் கட்சி. வீதியோரத்தில் கிடத்தப்பட்டு இருக்கும் அபலைகளுக்காகவே நான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன்’ என்றுசொல்லி அண்ணா ஆரம்பித்த கட்சிக்கு கொள்கை பரப் புச் ச…
-
- 2 replies
- 547 views
-
-
பொங்கல் முடிந்த கையோடு ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டும் விஜய், அந்த மாநாட்டிலேயே புதிய கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தனது புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழைகளுக்கு பசுமாடுகள், இலவச அரிசி, வேட்டி சேலை என விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டி வருகிறார். மாவட்டங்கள்…
-
- 1 reply
- 496 views
-
-
கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி. கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது. ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்க…
-
- 23 replies
- 3.4k views
-
-
அதிமுக விஜய் கூட்டணி. விஜயகாந்த் மற்றும் திமுக விற்கு வைக்கும் செக். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... அப்புறம், என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசிய விஜய், பல தடவை யோசித்து அ.தி.மு.க-வில் கூட்டணி சேர முடிவு செய்துவிட்டார் என்று நாம் சொன்னது பலித்தேவிட்டது. இதோ விஜய்யின் அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்! ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு, சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய், சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய், அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்…
-
- 0 replies
- 1k views
-
-
2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு! வியாழக்கிழமை, டிசம்பர் 16, 2010, 11:02[iST] நியூயார்க்: உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது. 26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்…
-
- 0 replies
- 425 views
-
-
அமெரிக்காவை இன்று உலுப்பிய கொலை முயற்சி ஒரு பாடசாலை கூட்டத்தில், தனது மனைவி பாடசாலை சம்பந்தமான வேலையை இழந்தாலும் அதன் பின் இருந்த சகல உதவிப்பணத்தையும் இழந்தாலும் பாதிப்புக்கு உள்ளானவர், கொலை முயற்சியில் ஈடுபட்டார். நான்கு முறை அருகிலிருந்து சுட்டும், அத்தனை முறையும் அவர் குறி நல்லகாலத்திற்கு தவறியது. இறுதியில், அவர் பாடசாலை காவலாளியால் காயப்படுத்தப்பட்டு, தற்கொலை செய்தார்.
-
- 0 replies
- 678 views
-
-
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக, சீன பிரதமர் வென் ஜியாபோ நேற்று டில்லி வந்தார். பாலம் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய தொழில்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர். ஜியாபோவின் இந்தப் பயணத்தின் போது, 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த நவம்பரில் இந்திய பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, இம்மாதத் துவக்கத்தில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி வந்தார். தற்போது சீன பிரதமர் வென் ஜியாபோ வருகை தந்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு சீனா தனி விசா வழங்குவது, எல்லைப் பிரச்னை, வர்த்தக சமச்சீரற்ற தன்மை ஆகிய பிரச்னைகளுக்கிடையே ஜியா…
-
- 0 replies
- 456 views
-
-
கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து * Wednesday, December 15, 2010, 5:52 கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம். இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது. அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்…
-
- 4 replies
- 648 views
-
-
ஒவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் ரைம் (Time Magazine) இதழ் தலை சிறந்த மனிதரை தெரிவுசெய்துள்ளது. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவாகியுள்ளார் Person of the Year 2010Mark Zuckerberg: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2036683_2037183,00.html நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது. செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணைய…
-
- 1 reply
- 586 views
-
-
சீன தலைமைமையமைச்சர் வென்ச்சியாபாவ் டிசம்பர் 15ம் முதல் 19ம் நாள் வரை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்வார். இவ்விரு நாடுகளுடன் நட்பு ஒத்துழைப்புறவை முன்னேற்றுவது, தெற்காசிய பிரதேசத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும் என்று சீன தெற்காசிய பிரச்சினை நிபுணர் sun shihai தெரிவித்தார். சீனாவும் இந்தியாவும் இரு தரப்புகளிடையில் மேலதிக ஒன்று மற்ற தரப்பிடை நம்பிக்கையை உருவாக்குவது, வென்ச்சியாபாவின் இந்திய பயணத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். இருநாடுகளும் விரைவாக வளர்கின்ற வளரும் நாடுகளாகும். அவை, ஒரு அமைதியான நட்பான அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சூழ்நிலை இவற்றுக்கு தேவை. ஆனால், இரு நாடுகளிடையில் இரு தரப்பிடை நம்பிக்கை பற்றா…
-
- 1 reply
- 421 views
-
-
உதயமாகிறான் விக்கிலீக்ஸின் தம்பி! .சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு போட்டியாக மற்றுமொறு புதிய இணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இணைய தளத்திற்கு ஓபன்லீக் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் பலவற்றை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதன் தலைவர் ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தலைவர் அசாங்கேயின் நெருக்கமானவராக இருந்த டேனியல் டோஸ்சிட் என்பவராலேயே இந்த புதிய இணையம் செயற்படவுள்ளது. இந்த இணையம் விக்கிலீக்சுக்கு போட்டியாக அதே பாணியில் இரகசியங்…
-
- 0 replies
- 551 views
-
-
இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. நாம்…
-
- 4 replies
- 1.3k views
-