உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 00:47 . .நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 46 சதவீத குழந்தைகள், போதிய ஊட்டச் சத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, போனஸ் அதிர்ச்சி தகவல். பீகார், உ.பி., போன்ற மாநிலங்களில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் காப்பக நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ளோரின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருட்கள் வேண்டி, உருக்கமான கோரிக்கை விடுகின்றனர். நடைபாதை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டால்…
-
- 0 replies
- 385 views
-
-
அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக இத்தாலியில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்! * இவ் விடயம் 04. 09. 2010, (சனி),தமிழீழ நேரம் 18:18க்கு பதிவு செய்யப்பட்டதுபுலத்தமிழர் அரசமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் முன்பாக எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. இத்தாலியைத் தளமாகக் கொண்டு செயற்படும் Movement for Democracy in Sri Lanka என்கிற சிங்கள அமைப்பு இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்குள்ள இலங்கையர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைப்பு அழைப்பு வி…
-
- 0 replies
- 407 views
-
-
மக்களை மழுங்கடிக்கும் அறிக்கைப் போர்! தமிழக முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் தவறாமல் ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்து நடத்தும் போர், தமிழ்நாட்டு மக்களை திட்டமிட்டு மழுங்கடிக்கும் அக்கப்போராகவே தெரிகிறது. இந்த இரு தலைவர்களும் வெளியே வந்த பொது மேடைகளில் பேசினாலும் சரி, தங்களது இல்லம் அல்லது அலுவலகங்களில் இருந்துகொண்டு 3,4 பக்கங்களுக்கு குறையாமல் தட்டச்சு செய்து கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிட்டாலும் சரி, அதில் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றிக்கொண்டு, அதில் தங்களுக்கு இருக்கும் ‘அக்கறை’யைக் காட்டிக்கொள்வதோடு நிற்காமல், அதில் தங்களின் பங்கை சாதனையாக எடுத்துக் கூறிவிட்டு, அதற்கு எதிராக செயல்பட்டவரே இன்றைய முதல்வர் என்று ஜெயலலிதாவு…
-
- 0 replies
- 423 views
-
-
நேருவின் துரோகம் - பிணமாகும் காசுமீர் யார் இந்த காசுமீரிகள்? பாரம்பரியமாய் காசுமீரைத் தங்களது பூர்வீகமாக்க் கொண்டு வாழ்பவர்கள் தான் காசுமீரிகள். பிரித்தானியர்கள் ஆளும் காலத்தில் காசுமீரை தனி மாகாணமாகக் கருதி அவர்களின் அடாவடித்தனத்தை கொஞ்சம் குறைத்து காசுமீர் மன்னரோடு சுமுகப்போக்கையே வைத்திருந்தனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் ஒரு மாகாணமாகவும் காசுமீரை ஓர் தனி மாகாணமாகவும் ஒதுக்கி அதற்கு தனி சட்டமும் வகுத்திருந்தனர். காசுமீரிகளுக்கு நேரு இழைத்த துரோகமென்ன? 1947 பாகிசுதான் இந்தியாவை விட்டுப் பிரிகையில் சம்மு-காசுமீர் மக்கள் தொகையில் பெருமளவு முசுலீம்களே அதாவது நூற்றுக்கு 87 சதவீதம் இவர்களாக இருந்த போதிலும் அரசு பதவிகளும், சுய-உரிமை ஆட்சிகளும…
-
- 1 reply
- 816 views
-
-
வேறு யாரும் கேள்வி கேட்காவிட்டால், தனக்குத் தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்ளும் சுய விளம்பர கருணாநிதி, நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காதது ஏன் என ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில், மாநில சுயாட்சி குறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். உரிமைகளை விற்றதைத் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், உரிமைகளை பெற்றதாகக் கூறுகிறார்.கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென சட்டசபையில் பேசியதையும், கர்நாடகா பல அணைகளை கட்டிக் கொள்ள உறுதுணையாக இருந்ததையும், காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, பாம்பாறு என அனைத்து நதிநீர்ப…
-
- 1 reply
- 653 views
-
-
பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையொன்றை நடத்தியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீனாவுக்கான இந்தியத் தூதர் சி.ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் சீனா தனது 11,000 இராணுவ வீரர்களை குவித்துள்ளமை மற்றும் ஏவுகணை நிலை நிறுத்தியிருப்பது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அத்துடன், சீனாவின் ஆயுத குவிப்பு தொடர்பாக எல்லையில் ஆய்வு மேற்கொள்ளவும் இந்தக் கூட்டத்தில் தீர…
-
- 9 replies
- 994 views
-
-
கட்டி தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறு பிழியுற வயசுதான் ஸ்ரேயாவுக்கு. ஆனால் இதுவரைக்கும் வரவில்லையாம் அந்த பாழாப்போன காதல். வயசு ஏறிகிட்டே போவுது. கல்யாணத்துக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் என்று அவர் காதுபடவே பேச ஆரம்பித்திருக்கிறார்களாம் வீட்டில். எப்படியோ இந்த தகவல் கசிந்து இன்டஸ்ட்ரியில் பரவ, அவரவர் கைகளிலும் மேட்ரிமோனியல் ரேஞ்சுக்கு பயோ டேட்டா! இருந்தாலும் மனசுக்கும் கேரியருக்கும் எவ்வித சுளுக்கும் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரே. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் இப்போதும். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கே ஒரு இயக்குனரை வரவழைத்த ஸ்ரே, கதையை கேட்டு கண்களை விரித்தாராம். அடேயப்பா… பயங்கரம். பிரமாண்டம்…
-
- 0 replies
- 448 views
-
-
பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்! உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (http://wikileaks.org/wiki/CIA_Red_Cell_Memorandum_on_United_States_%22exporting_terrorism%22,_2_Feb_2010) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில: …
-
- 1 reply
- 476 views
-
-
ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்களை விட, ரஜினி என மனிதருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் அதிகம்! ரஜினி தன் ரசிகர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து அவரது மகள் திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், சென்னையில் எத்தனை மண்டபத்தை வாடகைக்கு எடுப்பது… தீவுத்திடலோ, மெரீனாவோ கூட போதாது. உண்மையிலேயே இவ்வளவு பேரும் வருவார்களா? என்று கூட சிலர் கேட்கக் கூடும். ரஜினி மட்டும் ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னால், சென்னை திகைத்து ஸ்தம்பித்துப் போகும் என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும். இதையெல்லாம் உணர்ந்துதான், ‘எதற்கு சிரமம்… வந்து சிரமப்படுவதை விட, இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள்’ என்ற நல்ல மனதோடு அந்த அறிக்கையை ரஜினி விடுத்துள்ளார். அதி…
-
- 1 reply
- 583 views
-
-
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. காரணம்... நான்குமுறை உலக ‘செஸ் சாம்பியன்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹைதராபாத்தில் நடந்த கணித நிபுணர்கள் மாநாட்டில் ‘டாக்டர்’ பட்டம் மறுக்கப்பட்டிருப்பதுதான். மறுத்திருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். ‘ஆனந்த், ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர். அவர் இந்தியர்தானா என்பதில் சந்தேகம் இருக்கு. அதனால் டாக்டர் பட்டம் கொடுக்க வழியில்லை!’ இப்படி உப்புசப்பில்லாத காரணங்களை அடுக்கியிருக்கிறது மத்தியஅரசு. இதில் வேதனையான வேடிக்கை என்ன தெரியுமா? அமெரிக்காவின் ‘ஹார்வேர்ட்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். டேவிட் மம்ஃபோர்டு என்பவருக்கு அதே மாநாட்டில் டாக்டர் பட்டம் கொடுக்க மத்திய அரசு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதுதான். …
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை - நட்பு நாடா? அச்சுறுத்தலா? தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமையை பறித்த கச்சத் தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக, அஇஅதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததற்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா, “இரு நாடுகளும் முறையாக செய்துகொண்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியாது. இலங்கை நமது நட்பு நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பதில் கூறியுள்ளார். இந்தியாவின் அயலுறவு அமைச்சராகவுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவின் குரல், இந்திய அரசின் நீ்ண்ட கால நிலையை வெளிப்படுத்துகிறது என்பதையும், தமிழர்களின் (அது இந்தியத் தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் ஆனாலும்) நலனை விட இலங்கையின் நட்பையே டெல்லி பெரிதாக …
-
- 2 replies
- 777 views
-
-
தானைத்தலைவர், தமிழ்த்தாயின் தலைமகன், முன்னவர், மூத்தவர், முதல்வர் டாக்டர் கலைஞர் மார்க்சிஸ்டுகள் மீது வெறுப்பையும் சத்துணவு ஊழியர்கள் மீது நெருப்பையும் கக்கியிருக்கிறார். பணி நிரந்தரம் கோரி சத்துணவு ஊழியர்கள் அறிவித்த கோட்டை முற்றுகைப் போராட்டம்தான் அவரது வெறுப்புக்கு காரணம். “கம்யூனிஸ்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும் அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள். பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள். அதற்கடுத்து மறியல் என்பார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள்… அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப்பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்க…
-
- 0 replies
- 370 views
-
-
"எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம். அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார். அதாவது அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறி கவலைப்படுகின்றார் எலிசினி. 'மாடலிங்கி'ல் நாட்டம் கொண்டுள்ள இவர், பிரேஸிலில் இடம்பெறப் போகும் மணப்பெண் அலங்காரப் போட்டி ஒன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அந்நாட்டு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 14 வயதிலேயே இந்த உயரம் என்றால்...பருவ…
-
- 1 reply
- 504 views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார். மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். …
-
- 1 reply
- 2k views
-
-
இந்தோனேஷியாவில் உள்ள சும்த்ரா தீவை சேர்ந்த 2 வயது சிறுவன் ஆர்டி ரிஷால். இவன் தினமும் 40 சிகரெட் பிடிப்பதாக இண்டர்நெட்டில் படத்துடன் செய்தி வெளியானது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிஷால் 6 மாத குழந்தையாக இருந்தபோது, அவனது தந்தை முதன் முதலாக ஒரு சிகரெட்டை பற்ற வைத்து அவனுக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து அவன் தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்க தொடங்கினான். அதிலும், அவனுக்கு திருப்தி ஏற்படாததால் தினமும் 40 சிகரெட் வரை பிடித்து வந்தான். இந்த செய்தி வெளி யானதும் இந்தோனேஷியாவில் புகையிலையை பயன்படுத்து வோர் எண்ணிக்கை அதிகம் என தெரிய வந்தது. சிகரெட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரிஷாலை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இந…
-
- 0 replies
- 585 views
-
-
டெல்லியில் நடுரோட்டில் குழந்தை பெற்ற ஏழை பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் எம்.பி. வேதனை தெரிவித்தார். மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. அஸ்வினி குமார் நேற்று பேசியதாவது: டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சங்கர் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏழை கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார். ஆனால், அவரை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ஆனால், ஒருவர் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யவில்லை. சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு, வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது. சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்துவிட்டார். பால…
-
- 7 replies
- 959 views
-
-
சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்! உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்! இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்! இவ்வளவு …
-
- 0 replies
- 432 views
-
-
1984 சீக்கிய படுகொலை : சர்தார்ஜி மட்டும் உயிரோடிருந்தால்… இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் இருந்தது. ஆனால், ஒரு பெரும்மரம் விழும் பொழுது பூமி அதிர்வது இயற்கையானதே!” (ராஜீவ் காந்தி, நவம்பர் 19, 1984, தனது முதல் பொதுக்கூட்ட உரையில்) காங்கிரசைப் பொருத்தவரை இதனை நாம் மறந்து விட வேண்டும், ஒரு விபத்தாக கருத வேண்டும். “இப்பொழுதாவது மறந்து விடுங்கள். குறைந்தபட்சம் நாங்கள் மன்னிப்புக்கேட்டு விட்டோம். உங்கள் ஆளை பிரதமராக்கி விட்டோம்’ என்கிறார்கள். நாங்கள் கூறும் பதில் என்னவென்றால், 21 ஆண்டுகள் கழித்து நீங்கள் மன்…
-
- 2 replies
- 823 views
-
-
சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார் பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை.. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் ‘அகதிகள்’ என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே ! அவர்களுக்கு வீடு ; வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்! நம்மவன் கதி? கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை. தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை. இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா? சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான். அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்…
-
- 3 replies
- 1.1k views
-
-
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீரென ஒரிசா மாநிலம் நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். அங்கேதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கான முதல்கட்ட அனுமதியை பெற்று, அந்த மலைத் தொடரை அழித்து வந்தது. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பழம்குடியினர் தங்கள் பாரம்பரிய மலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் மிகச் சிலருக்கு குடியிருப்புகள் அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கின்றனர். நியாம்கிரி மலைத் தொடரை தங்களுடைய கடவுளாக அந்த பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். தங்கள் கடவுளையே வயிற்றில் குத்தி, உடைக்க…
-
- 2 replies
- 780 views
-
-
இந்தியாவில் தங்களுக்கு தாங்களே சம்பளத்தை நிர்ணயிக்கின்ற உரிமை நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. ஆளும்கட்சி எதிர்கட்சி என்றபேதம் இல்லாமல் கொஞ்சமும் கூச்சமில்லாமல் 5 மடங்கு சம்பள உயர்வு வேண்டுமாம். அதுவும் அரசுச்செயலாளர்களை விட 1 ரூபாய் அதிகமாக சம்பளம் வேண்டுமாம். மக்களுக்கு பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் தங்களது சம்பளத்தை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 543 உறுப்பினர்கள் உள்ள மக்களவையில் இதை இடதுசாரி உறுப்பினர்களைத்தவிர யாரும் எதிர்க்கவில்லை என்பது வியப்பளிக்கவில்லை. பாராளுமன்றத்தில் முதன்முறையாக சம்பளம் ரூ 350 லிருந்து ரூ 400க்கு உயர்த்தப்பட்ட போது AKG என்படுகிற தோழர் A.K.கோபாலன் “நம்மை இத…
-
- 1 reply
- 653 views
-
-
தமிழக்கும், தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் தொடர்கிறது-நெடுமாறன் வேதனை புதுச்சேரி: தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளதை அறியலாம் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். புதுச்சேரித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் தனித்தமிழில் நாளிதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி திரட்டினர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பொறுப்பாளராக விளங்கிய முனைவர் இரா.திருமுருகனும், பொருளாளர் தி.ப.சாந்தசீலனார் அவர்களும் அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் தனித்தமிழ் நாளிதழுக்குத் திரட்டப்பட்ட தொகயைத் தமிழ், தமிழின வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் தென்செய்தி இதழுக்கு வழங…
-
- 0 replies
- 483 views
-
-
டி.ஆர்.பாலுவின் தமிழினக் கரிசனம்! இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எதுவும் அவர்களுக்கு வந்த சேரவில்லை என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு, “இப்பிரச்சனையை நாம் எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் அணுக வேண்டு்ம். இந்தியா ஒரு காவல் அதிகாரி போல நடந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்டத் தலையீடு பிரச்சனைகளைக் குழப்பி, இதுவரை செய்தவற…
-
- 2 replies
- 680 views
-
-
தமிழகத்தில் பாஸிஸ ஆட்சியை கருணாநிதி நடத்தி வருகிறார். வீழ்ச்சியில் இருந்து தமிழகம் மீட்சி பெற வேண்டும்,'' என, கொடி பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் கொடி பயணம் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இறுதி நாள் அன்று நிறைவு பொதுக்கூட்டம் ப.வேலூரில் நடந்தது.மாவட்டச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், தேர்தல் பணி துணை செயலாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:மாவட்டத்தில் நடந்த மூன்று நாள் கொடி பயணம் ம.தி.மு.க.,வுக்கு ஊக்கத்தை தந்துள்ளது. நாளுக்கு நாள் மக்கள் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீக…
-
- 1 reply
- 660 views
-
-
சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் அர்போகன் குள மீன் இனங்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அர்போகன் குளம் பொரிபேர்க் கான்டனில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுற்றாடல் மாசடைந்த காரணத்தினால் ஆயிரக் கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் என்ன காரணத்தினால் இவ்வாறு மீன்கள் உயிரிழக்கின்றன என்பது குறித்து சரியான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அருகாமையில் காணப்படும் கைத்தொழில் நிறுவனங்களின் கழிவினால் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. http://www.coolswiss.com
-
- 1 reply
- 720 views
-