Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தியாவின் வடக்கு பகுதியில் புதிய மொழி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் 'கோரோ' என்ற மொழியைப் பேசுவோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 'கோரோ' எனப்படும் இந்த மொழியை பேசுவோர் சுமார் 800 முதல் 1200 வரையான எண்ணிக்கையில் அங்கு வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது மொழியியல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. . நேஷனல் ஜோகிராஃபிகல் சேனல் குழுவின் 2008 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சியின் மூலம் இந்த 'கோரோ' மொழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அதேவேளை, இந்த கோரோ மொழி திபெத்தோ- பர்மன் குடும்பத்தை சேர்ந்தது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27621

  2. ''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''! மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு [^] தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர். ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் [^] திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது. சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்…

  3. ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இருக்கும் புகைப்படமொன்று நேற்றைய தினம் இலங்கையின் பிரதான பத்திரிகைகள் சிலவற்றில் வெளியிடப்பட்டன. ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தனது பரிவாரங்களுடன் நாடு திரும்பி நான்கு நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் இவ்வாறான புகைப்படம் வெளியிடப்பட்டமை ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் காணப்படும் சில யதார்த்தத் தன்மை மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அத்துடன், ஜனாதிபதியும், பராக் ஒபாமாவும் சந்தித்ததாக எந்த ஊடகங்களும் செய்திகளை வெளியிடவில்லை. அப்படியான சந்திப்புக்கள் இடம்பெற்றிரு…

    • 0 replies
    • 570 views
  4. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார். முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா். பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி…

    • 4 replies
    • 967 views
  5. இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் இந்தியாவில் அந்த இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகளிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விடுதலைப்புலிகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த அமைப்பின் தீவிரம் இன்னும் இருந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே அதன் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு ந…

  6. http://www.youtube.com/watch?v=wFGaD1IWspY&feature=player_embedded

  7. யாரோ பொருளீட்டுவதாற்காக …….. சொந்த பணத்தில் திருவிழா நடத்திய ரசிகர்கள். படம்-1 – நடிகர் ரஜினி கட்டவுட்டிற்கு அபிஷேகம் செய்ய ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்ற ரசிகைகள். படம்-2 – உயிரை துச்சமென மதித்து 80 அடி உயரம் சென்று ரஜினியின் கட்டவுட்டிற்கு மாலை அணிவிக்கும் ரசிகர் படம்-3- அதிகாலை 5 மணிக்கே தியேட்டரில் இடம்பிடித்த ரசிகர்கள் படம்-4 - எந்திரன் வெள்ளி விழா காண வேண்டுதல். http://nkl4u.in/?p=4337

  8. ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது. தன் படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முதலாளியின் இயல்பாக இருக்கும் வேட்கையும், வேகமும் இங்கே வெறியாக மாறிவிட்டது. சகல நியதிகளையும், மாண்புகளையும் கிழித்தெறியும் அதன் அகோரப்பசியை ‘வியாபார உத்தி’ என்று சொல்வதற்கும், பாராட்டுவற்கும் ஒரு கூட்டமே இருக்கிறது. ‘சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று. மனத…

  9. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது நமக்குத் தெரியும்.ஒரு வைரக்கடையின் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், நாடு முழுவதும் வைரச் சுரங்கங்களை வைத்திருக்கும் ஒரு நாடு உலகின் கோடீஸ்வர நாடாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் அந்த நாடு உலகின் மிக ஏழையான நாடுகளில் ஒன்று என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.அந்த நாடு ஆப்பிரிக்காவின் இருண்ட நாடுகளில் ஒன்று என்றால் சுலபமாக நம்பி விடுவீர்கள்! ‘அயன்’ திரைப்படத்தில் சூர்யா வைரம் கடத்துவதற்காக ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிற்குச் செல்வாரே அதே காங்கோ தான் வைரம் கொட்டிக் கிடக்கும் அந்த நாடு. குவிந்து கிடக்கும் வைரத்திற்காகவும், இன்னபிற கனிமங்களுக்காகவும் உள்நாட்டுத்…

    • 0 replies
    • 1.1k views
  10. அக்டோபர் 5: 1910 - போர்த்துக்கல் - குடியரசு நாள் 1780 - வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். 1864 - இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர். 1978 - ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன்ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார். கிருஷ்ணா வகுந்தவாசன் பற்றி அறிய: http://bit.ly/bxnNlV …

    • 0 replies
    • 460 views
  11. சுமார் 3400 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் சிலையின் மேற்பகுதியை தொல்பொருளியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். இதனை எகிப்திய கலாசார அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் அமெனோடெப் மன்னரின் 4 அடி 3 அங்குலமான இச்சிலையானது கிரனைட் எனப்படும் கல்லினால் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய கலைச் சிறப்பைப் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்தினை ஆண்டதாக கூறப்படும் துட்டன்காமன் மன்னனின் பாட்டனாரே மூன்றாம் அமெனோடெப் மன்னராவார். வரலாற்றுத் தகவல்களின் படி மூன்றாம் அமெனோடெப் மன்னரே எகிப்தில் பாரிய திட்டங்களை முன்னெடுத்தவராகக் கருதபடுகின்றார். மேலும் இவரது காலத்திலேயே எகிப்து தேசம் செல்வச் செழிப்போடு காணப்பட்டதாகவும் கூறப்…

    • 0 replies
    • 438 views
  12. இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது. இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

    • 0 replies
    • 472 views
  13. யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதுவராலயம் திறப்பு ஐப்பசி 21 திகதி யாழ்ப்பாணம் மத்திய வீதியில் ( Main Street ) மூன்று கட்டங்களை இணைத்து இந்த கட்டிடம் திறக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிகார அமைச்சின் செயலாளர் எஸ். எம். கிருஷ்ணா அவர்களால் திறந்து வைக்கப்படும். http://tamilnet.com/art.html?catid=13&artid=32728

  14. மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது. "அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன" என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலு…

  15. குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடனின் அதிவேக வளர்ச்சியினால் தளர்ந்து போன நக்கீரன் தன்னுடை ரேட்டிங்கை பலப்படுத்தும் விதத்தில் அதனுடைய சமீபத்திய போக்கு மிகவும் மோசமாக போய்விட்டது. வாராவாரம் கடைகளில் மற்றும் சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அதனுடைய தன்மை புரியும். முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த செய்திகளை பச்சையாக படம்போட்டு விளம்பரப்படுத்துகிறது. பேனர்களில் ஒட்டப்படும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்திகளினால் மக்கள் ஈர்க்கப்பட்டு அந்த பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தால் அது முழுக்க முழுக்க இவர்களின் குளிர்சாதன அறையில் எழுதப்பட்ட கற்பனைகளாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது …

  16. ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்தவர்களால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன் சென்னை: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி [^]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமா…

  17. ஐ.நா. போர்க் குற்ற ஆலோசனைக் குழு முடக்கப்பட்டுள்ளதா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா.வின் பன்னாட்டுச் சட்டங்களின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த போர்க் குற்ற ஆலோசனைக் குழு இதுவரை தனது பணியைத் துவக்காதத்து ஆச்சரியத்தையும் ஐயத்தையும் எழுப்புகிறது. தமிழர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட அந்தப் போரில் நிகழ்ந்த கொடுமைகள் பற்றி, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களிடம் கடந்த ஜனவரி 14,15ஆம் தேதிகளில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal), தமிழர்களுக்கு எதிரான …

  18. அக்டோபர் 4: லெசோத்தோ - விடுதலை நாள் (1966), அசிசியின் புனித பிரான்சிசின் திருவிழா, உலக விலங்கு நாள் 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1884 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறப்பு 1904 - இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் பிறப்பு 1957 - முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தால் பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு ஏவப்பட்டது. 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக பௌத்த மத குருக்களால் கண்டிக்கு நடைப்பயணம் நடத்த…

    • 0 replies
    • 730 views
  19. ஐ.நா. தலையிடும் வரை காஷ்மீரில் அனாதைகளின் எண்ணிக்கை உயரும்! அமைதியின்றி வளர்ச்சியில்லை என்பது அடிக்கடி அமைச்சர்களும் அதிகாரிகளும் பேசுகிற குத்து வசனங்கள் (பஞ்ச் டயலாக்). இவர்கள் எதை அமைதி என்கிறார்கள் ? எதை வளர்ச்சி என்கிறார்கள். முதலில் தெளிய வேண்டிய பித்து இதுதான். காஷ்மீரில் கடந்த ஜுன் 11 அன்று தெருவில் இறங்கி போராடிய கூட்டத்தைக் குறிவைத்து கண்ணீர்புகைத் தோட்டாவை சுட்டதில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான். வானைநோக்கி சுடுவதுதான்வழக்கம். இந்தப் படுகொலையைக் கண்டித்து போராடியவர்கள் மீது மேலும் மேலும் துப்பாக்கிச்சூடு. 25 வயது பெண், சிறுவர்கள் உட்பட கடந்த 7 வாரங்களில் 30 க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 598 views
  20. அயோத்தி....அயோத்தி..... அயோத்தி பிரச்சனை என்பது பலருக்கு தெரியாத விடயமாக இருக்கலாம். ஏன்னென்றால் இவ் பிரச்சனை 60 ஆண்டுகளுக்கு முதல் இடம் பெற்ற ஒன்றாகும்.இவ் பிரச்சனை எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம் அயோத்தி சிக்கல் என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சனையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தர பிரதேசம், அயோத்தியில்உள்ளது. இந்த இடம் இந்து மத கடவுளான இராமர் பிறந்த இடமென்றும் இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் இந்துத்வ அமைப்புகள் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பா…

  21. எம்.பி.க்களின் சம்பள உயர்வு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று நமது வயித்தெரிச்சலைக் கொட்டிக் கொண்ட அரசியல்வியாதிகளைத் திட்டித் திட்டி நமக்குத்தான் வாய் வலிக்கிறது. அவர்களுக்கு சூடும், சொரணையும், வெக்கமும், மானமும் வந்தபாடில்லை. இருந்ததாகவோ, இருப்பதாகவோ அவர்களும் காட்டிக் கொள்வதில்லை. நாம் அவர்களைக் குற்றம்சாட்டுவது மக்கள் பணத்தை ஏன் விரயமாக்குகிறீர்கள்? கொள்ளையடிக்கிறீர்கள்? என்றுதானே ஒழிய, அவர்களது சொந்தப் பணத்தில் ஏன் முத்துக் குளிக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. அரசியல்வியாதிகள் என்றாலே ஆண்டவர்கள் என்றாகிவிட்டது. அதிலும் ஆள்பவர்கள் என்றாலே உலகை படைத்தவர்கள் என்கிற ரீதியில் அவர்களது அலட்சியப் போக்கும், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்ற …

    • 0 replies
    • 620 views
  22. ஹேப்பி பர்த் டே” சிரித்துக் கொண்டே கையிலிருந்த மலர்க்கொத்தை நீட்டினான் விக்னேஷ். தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்த வசந்திக்கு ஆச்சரியம் ஒரு கண்ணிலும், வெட்கம் மறு கண்ணிலும் வழிந்தது. சூரியன் கூட இன்னும் முழுசாய் விழித்திருக்கவில்லை. “தேங்க்யூ ..” “அப்போ, இன்னியோட உங்களுக்கு பதினாறு வயசு முடிஞ்சிடுச்சா ?” விக்னேஷ் வசீகரமாய்ச் சிரித்தான். “ஹே… இருபத்து நாலு ஆகுதுப்பா…. வாழ்த்துக்கள் வாங்கும்போ சந்தோசமா இருக்கு, ஆனா வயசாகுதேன்னு கவலையாவும் இருக்கு” வசந்தியும் சிரித்தாள். “டுவண்டி ஃபோர் !!! வாவ்.. என்னால நம்பவே முடியல.. ஒ.கே..ஒ.கே… இன்னிக்கு ஈவ்னிங் டின்னர் என்னோட செலவு… மறுக்கக் கூடாது.. ஓகே… ?” சொல்லி விட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் சட சடவென்…

    • 0 replies
    • 957 views
  23. பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவராக எட் மிலிபான்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான டேவிட் மிலிபான்ட்டை, எட் மிலிபான்ட் சொற்ப வித்தியாசத்தில்தோற்கடித்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ராஜினாமாச் செய்தார். அதையடுத்து புதிய தலைவர் பதவிக்கு எட் மிலிபான்ட, எட் போல்ஸ், டியேன் அபோட், டேவிட் மிலிபான்ட், அன்டி பர்ஹாம் ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 45 வயதான டேவிட் மிலிபான்ட் இப்போட்டியில் முன்னிலையில் இருந்தார். எனினும், இன்றிரவு நடைபெற்ற கட்சித் தேர்தலில் ட…

    • 0 replies
    • 494 views
  24. ஓர் மாணவனின் தனிப்பட்ட செயற்பாடுகளை அவனுடன் தங்கியிருந்த வேறு இருவர் பகிடியாக அல்லது வெறுப்பு காரணமாக இரகசியமாக பதிவுசெய்து வலைத்தளத்தில் பிரசுரம் செய்தார்கள், குறிப்பிட்ட மாணவன் அவமானம் காரணமாக தற்கொலை செய்துகொண்டான். Gay student in alleged webcam bullying commits suicide By Sebastian Smith (AFP) NEW YORK — Two undergraduates at a US university have been arrested after a fellow student they allegedly filmed and broadcast over the Internet during a gay encounter killed himself by jumping into the Hudson River. The tragedy appeared to be the latest in a growing trend of sophisticated technology and social networking sites being used to giv…

  25. இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர் ராபெர்ட்டோ ஜாகா தெரிவித்தார். டெல்லியில் முதலீடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட வங்கிகளுக்கான இந்திய தலைவர் ஜாகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கி 69,000 கோடி முதல் ^92,000 கோடி வரை கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் இந்திய அரசு ^50,600 கோடி கேட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இதே அளவிலான கடன் தொகையை மின்சார வசதி மேம்பாட்டிற்கு உலக வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.