உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் சந்தேக நபரான அனீஸ் அம்ரியை தேடி ஜெர்மனி போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். * ரஷ்யாவில் விஷ குளியல் எண்ணெயை குடிக்கும் போதை அங்கு அறுபது பேரை பலிகொண்டிருக்கிறது. உடனடி நடவடிக்கைக்கு அதிபர் பூட்டின் உத்தரவு. * ஒரு நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுகண்ட விஞ்ஞானி. சதுரத்துளையிடும் கருவியை கண்டுபிடித்த எரித்திரிய அகதி.
-
- 0 replies
- 279 views
-
-
போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்தார் இன்னிலையில் போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடியஜானாதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்…
-
- 0 replies
- 279 views
-
-
ஜேர்மனிய திரையரங்கில் சுட்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை மேற்கு ஜேர்மனியில் ஒரு சினிமா திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாம் சுட்டுக் கொன்றுவிட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனிய திரையரங்கில் துப்பாக்கிதாரியை சுற்றிவளைத்த போலிஸார் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் அந்த நபர் ஒரு வேட்டையாவது சுட்டதாக ஜேர்மனிய ஊடகங்கள் கூறின. 20 பேராவது காயமடைந்ததாக முன்னர் கூறப்பட்டதை போலிஸார் மறுத்துள்ளனர். அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திருந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/06/160623_germantattack
-
- 1 reply
- 279 views
-
-
மலேசிய அரசியல்: முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் ஊழல் வழக்கில் கைது - முழு விவரம் படக்குறிப்பு, மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆஜராக முன்னாள் பிரதமர் மொஹைதின் யாசின் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் அந்த வளாகத்தில் திரண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மலேசிய முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மலேசிய அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. பண மோசடி விவகாரம் தொடர்பாக அவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட இருந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில்…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள், சீன பொருட்களின் இறக்குமதிக்கு மேலதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் திட்டம், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உலகின் முதல் இசைக்குழு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 279 views
-
-
ஜேர்மனியில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தவிர்ப்பதற்கு, வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தினை மேலும் கடுமையாக்கும் வகையில் இச்சட்டத்தினை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜேர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், வைரஸ் தொற்றினை தடுக்கும் முக்கிய கட்டுப்பாடுகள் நடைமுறையிலேயே உள்ளன. இன்று (திங்கட்கிழமை) முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணியாத குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் வகையில் ச…
-
- 0 replies
- 279 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 2024 இல், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வியன்னாவில் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் தொடர்பான ஆணையத்தில் உரையாற்றினார். இதன் போது, அமெரிக்காவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு மிகப்பெரிய காரணம் சிந்தெடிக் மருந்துகள் (synthetic drugs - தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தப்படும் மனோவியல் மருந்துகள்) அல்லது செயற்கை ஓபியாய்டுகள் என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் செயற்கை மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டதால் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்கா மட்டுமல்ல, கனடாவும் சக்த…
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான நியூ ஹாம்சயர் மாநிலத்தின் உட்கட்சித் தேர்தலில் பெர்னி சான்டர்ஸ் வெற்றியீட்டியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இடதுசாரி செனட்டரான சான்டர்ஸ், மையவாத முன்னாள் மேயரான பீட் பட்டிகீக்கை தோற்கடித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடுவதற்கே ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வுசெய்யும் நடைமுறையை முன்னெடுத்துள்ளது. டிரம்பின் முடிவுக்கான ஆரம்பம் இது என்று சான்டர்ஸ் தனது வெற்றி குறித்து குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 279 views
-
-
"வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரியும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய அதிபரை சந்திப்பதில் உள்ள ஆபத்துக்கள் டிரம்பிற்கு தெரிந்துதான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என மத்திய புலனாய்வு முகமையின் இயக்குநர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS "விளம்பரத்திற்காக அவர் இதை செய்யவில்லை என்றும், பிரச்சனையை சர…
-
- 0 replies
- 279 views
-
-
படக்குறிப்பு, எப்ரிமா சஜ்னியா மற்றும் அவரது மனைவி கடந்த ஆண்டு தங்கள் மகன் கண்முன்னே உயிரிழந்ததைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவித்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி நியூஸ் 22 ஆகஸ்ட் 2023, 07:58 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார். காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில வாரங்கள் முன்பாகத் தான், அவன் மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகத் …
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 122 இடங்களை இழக்க நேரிடும் என்றும் பாஜக அல்லாத இதர கட்சிகள் கடந்த முறையை விட கூடுதலாக 126 இடங்களை பெறக் கூடும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.தற்போதைய ஆகஸ்ட் மாதமே லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தின. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 137 தொகுதிகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 155 தொகுதிகள் கிடைக்குமாம். இந்த இரு கூட்டணிகள் அல்லாத இதர கட்சிகளுக்கு கிடைக்கும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 251 ஆக இருக…
-
- 0 replies
- 279 views
-
-
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உயர்நீதின்றம் உத்தரவிட்டுள்ளது. சாமியார் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என, அவருக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கை விசாரித்து வரும் கர்நாடக பொலிசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையேற்ற ராம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நித்யானந்தா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்யக்கூடாது என்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்ம் கேட்டுக்கொண்டார். எனவே செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம் இதுகுறித…
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: 893பேர் இலக்கு– 9பேர் உயிரிழப்பு சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893ஆக அதிகரித்து உள்ளது. அத்தோடு நேற்று 7ஆக இருந்த எண்ணிக்கை, கூடுதலாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை சிவப்பு சமிஞ்சை ஆக உயர்த்தியுள்ளது. தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. காய்ச்சல் அல்லது சு…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களை பெற முயற்சி- அவுஸ்திரேலியாவில் இருவர் கைது By RAJEEBAN 11 OCT, 2022 | 10:46 AM இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களிற்கான ஒப்பந்தங்களை பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பலநாடுகளை அடிப்படையாக கொண்டு ஒரு தசாப்தகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென்னாசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 14 மில்லியன் அவுஸ்திரே…
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
சிரியாவின் குழந்தைகள் : தொலைந்துபோன சந்ததி ============================================= அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எதிராக சிரியாவில் கிளர்ச்சி ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனை தொடர்ந்த மோதல்களால் இரண்டரை லட்சம் பேர்வரை அங்கு இறந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். எழுபத்தைந்து லட்சம் பேருக்கு அங்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இருபத்தெட்டு லட்சம் பேருக்கு எந்தவிதமான கல்வி வசதியும் கிடையாது. அவர்களில் இரண்டு குழந்தைகளின் கதை இது.
-
- 0 replies
- 279 views
-
-
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்கு பிரிட்டன் பொறுப்பேற்ற வேண்டும் என்று கோரி, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைக்கான ஹிண்ட்ராஃப் அமைப்பு பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் மலேயா இருந்தபோது, தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் பேர், கூலித் தொழிலாளர்களாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியல் அமைப்பு ரீதியாக போதிய பாதுகாப்பை வழங்க பிரிட்டன் தவறிவிட்டது என்பதை பிரிட்டன் ஏற்றுக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாங்கள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து பெற்றுள்ளதாக ஹிண்ட…
-
- 0 replies
- 279 views
-
-
இன்றைய (29/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸின் மௌத்தே தீவிரவாதிகள் வசம் இருந்த தெற்கு நகரான மராவியின் பெரும்பாலான பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் அறிவிப்பு; ஆனால், சண்டை தொடர்கின்றது. * தகவல் தொழில்நுட்ப கணினி கட்டமைப்புப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விமான சேவைகளை இயல்புநிலைக்கு கொண்டுவர பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொடர்ந்து முயற்சி; பகிரங்க மன்னிப்பு கோரினார் தலைமை அதிகாரி. * தாவர உலகின் நல்லது, கெட்டது அனைத்தையுமே பாதுகாக்க வேண்டுமென வனஉயிரி பாதுகாப்பு நிபுணர்கள் கோரிக்கை.
-
- 0 replies
- 279 views
-
-
வியட்நாமை உலுக்கிய வங்கி மோசடி; பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை வியட்நாம் வங்கியில் 12 பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர் ட்ரோங் மை லான்(68). அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடிய இவர், மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தார். பிறகு தாயாருடன் சேர்ந்து அழகுசாதன பொருட்களை விற்கத் துவங்கினார். பொருளாதார சீர்திருத்தம் காரணமாக 1986 ல் அவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்தார். 1990ல் ஹோட்டல் மற்றும் உணவகம் துவக்கினார். பிறகு ‘Van Thinh Phat Group’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கி அதில் கொடி கட்டிப் பறந்தார். 2022ம் ஆண்டு அக்., …
-
- 0 replies
- 279 views
-
-
வங்காளதேச அரசு, ஹில்சா மீனின் இனப்பெருக்க காலத்தில் அதனை பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹில்சா வங்காளதேசதத்தின் தேசிய மீன் என்பதால், இம்முறை 17 போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், ரோந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பயணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 22 நாட்கள் கொண்ட இந்த தடைக்காலம், அக்டோபர் 4 முதல் 25 வரை கடைபிடிக்கப்படுகிறது. வங்காள விரிகுடா மற்றும் பத்மா, மேக்னா மற்றும் ஜமுனா போன்ற முக்கிய நதி அமைப்புகள் உட்பட நியமிக்கப்பட்ட இனப்பெருக்க மண்டலங்களில் உள்ள அனைத்து கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை ஹில்சா மேலாண்மை பிரிவின் துணை இயக்குநர் ஃபிரோஸ் அஹமது, "ஹில்சா மீனின் பாதுகாப்புக்காக நாங்கள் விரிவான கண்காணிப்ப…
-
- 1 reply
- 279 views
-
-
ஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க பிரிட்டிஷ் அரசு இணக்கம் nஊழல் பணம் பதுக்கப்படுவதை சிரமமாக்க கெமரன் இணக்கம் ஊழல் மூலம் சம்பாதிக்கப்படும் பணம், பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்ட, பிரிட்டனுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பதுக்கிவைக்கப்படுவதை சிரமமாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளுக்கு தனது அரசாங்கம் இணங்கியுள்ளதாக பிரதமர் டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வெளியில் கேமெரனின் தந்தையினால் உருவாக்கப்பட்ட நிதியம் ஒன்றில் கேமரனுக்கு பங்குகள் இருந்ததாக காட்டும் பனாமா ஆவணங்கள் கசிந்துள்ளதைத் தொடர்ந்து, கேமெரன் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார். மிகவும் வலிமிகுந்த, பொய்யான குற்றச்சாட்டுக்கள் தனது தந்தைக்கு எதிராக முன்வைக்கப்படுவதாக அவர் …
-
- 0 replies
- 279 views
-
-
உலகப்பார்வை: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைAFP கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது. கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது. சிரியாவில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல் சட்டப்பூர்வமானது …
-
- 0 replies
- 279 views
-
-
Published By: RAJEEBAN 20 JUL, 2023 | 06:02 AM நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார். பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தின…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியை மூட உத்தரவு துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அஜர்பைஜானில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் ஒன்று படம்பிடித்து காட்டியதற்காக அதனை மூடும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசின் முடிவிற்கு அஜர்பைஜானில் உள்ள நீதிமன்றம் ஒன்றும் ஆதரவு தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் அஜைர்பைஜானின் இடையே உள்ள கேந்திர கூட்டுறவை சீர்குலைக்கும் வகையில் பிரபல தொலைக்காட்சி ஏ.என்.எஸ் செயல்பட்டதாக ஆட்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஏ.என்.எஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதற்குமுன், துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அமெரிக்காவில் இ…
-
- 0 replies
- 279 views
-
-
தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவே கருதப்படும்: ஐ.நா கண்டனம் [saturday, 2014-04-19 12:43:11] ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்களை அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளனர். இதுபோல் போர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஐயாயிரம் பேர் அகதிகளாகத் …
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவில் பாரிய பூகம்பம் ; 46 பேர் பலி : 50 பேர் படுகாயம் 06 Sep, 2022 | 09:33 AM சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. பூகம்பத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த பூகம்பத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பூகம்பத்தில் உயிரிழந்…
-
- 0 replies
- 279 views
-