உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26600 topics in this forum
-
Published By: RAJEEBAN 09 SEP, 2023 | 12:27 PM மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்திற்கு பயங்கரவாதம் காரணம் இல்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர் வாகனத்தை செலுத்துவதற்கான உடல்தகுதியற்ற ஒருவர் அதனை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர். மெல்டன் வெஸ்ட்டை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பற்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகனச்சாரதி மருத்துவமனையி…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
08 SEP, 2023 | 10:15 AM மாலியின் வடகிழக்கில் படகொன்றில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் அமைப்பினர் இராணுவமுகாமொன்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் 15 மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/164075
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல் தினத்தந்தி ஹர்டோம், சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.…
-
- 78 replies
- 5.3k views
- 1 follower
-
-
தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு நியூசிலாந்து. இதன் தலைநகரம் வெலிங்டன். இந்நாட்டிலுள்ள பெருநகரங்களில் ஒன்று ஆக்லாந்து. இங்குள்ள மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரசவம் [இயற்கையான] நடப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அவருக்கு சி-செக்ஷன் (C-section)எனப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை முறைப்படி பிரசவம் நடைபெற்றது. பிரசவம் முடிந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது. வழக்கமான மருந்து மற்றும் மாத்திரைகளால் வலி குறையாததால், அவருக்கு எக்ஸ்-ரே எனப்படும் கதிரியக்க படங்கள் எடுக்கப்பட்டன. பரிசோதனையிலும் எதுவும் வழக்கத்திற்கு மாறாக தென்படவில்லை. இதனையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
05 SEP, 2023 | 06:24 PM (காலித் ரிஸ்வான்) உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பை சவூதி அரேபியா நிறுவுவதாக அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அறிவித்துள்ளார். உலகின் நீர் விநியோகச் சிக்கல்களை சீர்செய்யும் தூர நோக்கோடு இவ்வமைப்பு நிறுவப்பட்டுள்ளதோடு சுற்றுச்சூழல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் தொடர்பான சவூதி அரேபியாவின் கரிசனைக்கான ஒரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது. உலகளாவிய நீர் வளத்தை பாதுகாப்பதற்கான பிற நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைத்து அவற்றை மேம்படுத்தி அவற்றோடு சேர்ந்து பயணிப்பதற்கு இவ்வமைப்பு முயற்சிக்கிறது. அத்தோடு இந்நிறு…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில்வே, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. கொரோனா தொற்று, உக்ரைன் போர், பிரெக்சிட் அமைப்பில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றால் ஏற்கனவே பிரிட்டனின் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது. இந்த நிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும். இதனால் ஏழ…
-
- 3 replies
- 411 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது. புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவற்றை சீனா தனது பகுதியாகக் காட்டியிருந்தது, அதே நேரத்தில் தென் சீனக் கடலில் உள்ள மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய கடல் பகுதிகள் மற்றும் தீவுகளை சீனா தனது சொந்த பகுதியாக அறிவித்திருந்தது. அதேபோல் சீனா தனது புதிய வரைபடத்தில், ரஷ்யாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய போல…
-
- 2 replies
- 440 views
- 1 follower
-
-
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்! உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா ஆக்கிரமிப்பு செயற்பாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒலெக்சி ரெஸ்னிகோவ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார். இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சில் ‘புதிய அணுகுமுறைகளுக்கு” நேரம் வந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் அந்த நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/271594
-
- 2 replies
- 342 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கும் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான வழக்கில், தாம் தலையிடலாம் என்ற அடிப்படையில், தீர்ப்பை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் நியூயோர்க்கில் உள்ள நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. உலகப் பொருளாதார ஊடக நிறுவனமான பைனான்சியல் டைம்ஸ் நியூயோர்க்கில் இருந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், திருப்பிச் செலுத்தாத 250 மில்லியன் டொலர் கடன் பத்திரங்களை மீட்பதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி, இலங்கைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் சாத்தியமான பங்கேற்பு பற்றி, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி டெனிஸ் கோட்டிற்கு, நியூயோர்க் தெற்கு மாவட்டத்தின் சட்டமா அதிபர் டேமியன் வில்லியம்ஸ், கடந…
-
- 1 reply
- 408 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதியாக தமிழர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவாகியுள்ளார். இவர் 70.4% வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். மொத்த சனத்தொகையில் வெறுமனே 5% மட்டுமே தமிழர்களின் எண்ணிக்கை அங்கு என்பது குறிப்பிடத்தக்கது. https://www.channelnewsasia.com/singapore
-
- 22 replies
- 1.7k views
-
-
ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின், அண்மையில் நடந்த விமான விபத்தில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தான் உயிரிருடன் இருப்பதாக ப்ரிகோஷின் வெளியிட்டுள்ள வீடியோ ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தனியார் இராணுவ படையின் தலைவராக இருந்து வருபவர் யெவ்கெனி பிரிகோஷின். ரஷ்ய இராணுவ படைக்கு வாக்னர் படை பக்கபலமாக இருந்து வருகிறது. தற்போது நடந்து வரும் உக்ரைன் போரில் வாக்னர் படை முக்கிய பங்காற்றி வருகிறது. உக்ரைன் போரின் போது முக்கிய நகரங்களை இந்த படை வீரர்கள் தான் கைப்பற்றினார்கள். இந்நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. …
-
- 3 replies
- 819 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்பியல் அறிஞரான ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு, 21 வயதில் இந்த வகை நோய் இருந்தது கண்டறியப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரா பிட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கின் இணையரும் தொழில்முறை புகைப்படக் கலைஞருமான பிரையன் ராண்டால், அண்மையில் இறந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்னும் நோய்க்கு அவர் ஆளாகியிருந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ராண்ட…
-
- 0 replies
- 499 views
- 1 follower
-
-
தென்னாப்பிரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 63 பேர் பலி written by adminAugust 31, 2023 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனத் தொிவித்துள்ள ஜோகன்னஸ்பர்க் அதிகாரிகள் தீயில் சிக்கியுள்ள பலரை , தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். தீ விபத்தில் கட்டிடம் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2023/194688/
-
- 0 replies
- 413 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூறாவளியால் ஏற்படும் பேரழிவுகளை கணிப்பது எளிதான காரியம் அல்ல என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குழப்பத்தை விளைவிக்க திட்டமிட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் புயல் வீசினால் போதும். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண மக்களுக்கு இயற்கை கடந்த ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். இந்த சூறாவளி விளைவித்த சேதம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை சேதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது புவேர்ட்டோ ரிக்கோவில் வீசிய ஃபியோனா சூறாவளி விளைவித்த சேதங்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சௌதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைக்க சீனா ஒரு ஒப்பந்தப் புள்ளியை அளித்துள்ளது. இதை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. அணு மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பத்தை சௌதி அரேபியாவுக்கு அளிக்க அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளால் சலித்துப்போன அந்நாட்டு அரசு தற்போது சீனாவின் விருப்பத்தைப் பரிசீலிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கத…
-
- 0 replies
- 384 views
- 1 follower
-
-
Published By: SETHU 30 AUG, 2023 | 11:18 AM காபோனின் ஜனாதிபதித் தேர்தலில் அலி போங்கோ ஒன்டிம்பா மீண்டும் வெற்றியீட்டியுள்ளார். ஆனால், அந்நாட்டு இராணுவம் தேர்தலை இரத்துச் செய்வதாவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் இன்று அறிவித்துள்ளது. ஆபிரிக்க நாடான காபோனில் அலி பெங்கோ ஒன்டிம்பா 2009 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அங்கு ஜனாதிபத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அலி போங்கோ ஒன்டிம்பா ஒன்டிம்பா மீண்டும் வெற்றியீட்டினார் என காபோனின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று (30) அறிவித்தது. எனினும், அதன்பின் சிறிது நேரத்தில் இத்தேர்தலை தாம் இரத்துச் செய்துள்ளதாக அந்நாட்டின் சிரேஷ்ட இர…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஆகஸ்ட் 2023, 10:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யா உட்பட பல நாடுகளாக தற்போது பிரிந்து கிடக்கும் தேசங்கள் முன்பு சோவியத் யூனியனாக ஒன்றாய் திகழ்ந்து வந்தன. அந்த காலகட்டத்தில் சோவியத் யூனியனால் 1953 க்கு முன், அணு ஆயுதங்களை பெற முடியாது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ மதிப்பிட்டிருந்தது. சிஐஏவின் இந்த கணிப்பை தவிடுபொடியாக்கும் விதத்தில், 1949 ஆகஸ்ட் 29 இல், புளூட்டோனியம் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி மேற்கத்திய நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது சோவியத் யூனியன். இந்த வகை அணுகுண்டை பெற்ற இரண்டாவது நாடு என்ற பெருமையும் சோவியத் யூனியனுக்கு கிடைத்தது. …
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
இன்று காலை பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோமீற்றர் தொலைவிலும், 516 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. https://athavannews.com/2023/1347151
-
- 2 replies
- 744 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANU படக்குறிப்பு, இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது பிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து "நீண்ட சரம் போன்ற பொருள்" வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு. இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
27 AUG, 2023 | 11:20 AM அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவை சேர்ந்த 20 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டர் ஒன்று அவுஸ்திரேலியாவில் விழுந்து நொருங்கியுள்ளது. பயிற்சியின் போது ரிவி தீவுகளுக்கு மேல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினிலிருந்து 60 கிலோமீற்றர் வடக்காக உள்ள மெல்விலே தீவில் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியுள்ளது. ஹெலிக்கொப்டர் ஒன்று அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் விரைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். 23 பேர் ஹெலிக்கொப்டரில் பயணித்தனர் அவர்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய படையினர் எவரும் அதில் பயணிக…
-
- 3 replies
- 409 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS/ANGUS MORDANT படக்குறிப்பு, யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் மலிவு விலையில் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவருகிறது. 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி20 நாடுகளின் சந்திப்பில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத் தலைவர், இந்தியா வழியாக ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார். ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேசியபோது, யுக்ரோன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், அந்தப் போரை நீண்ட காலத்துக்கு நீட்டிக்காவண்ணம் ரஷ்யாவுக்கு எதிராக…
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WIKICOMMONS படக்குறிப்பு, வெசிலி ஆர்க்கிபோவ் ஒரு முக்கிய ரஷ்ய ராணுவ அதிகாரி ஆவார். 27 ஆகஸ்ட் 2023 அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது. அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில் அமெரிக்காவை நோக்கி சோவியத் ஒன்றியம் நிறுத்திருந்த அணு ஆயுத ஏவுகணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அமெரிக்கா ஒரு நெருக்கடியை உருவாக்கியிருந்தது. அப்போது, இரு நாடுகளின் இராணுவக் கப்பல்களும் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ஒரு மூலோபாய சண்…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா உலையிலிருந்து ஒரு மில்லியன் தொன் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவிப்பதற்கு ஜப்பான் திட்டம் By SETHU 13 JAN, 2023 | 12:00 PM அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் ஆலையிலிருந்து, ஒரு மில்லியன் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட நீரை சமுத்திரத்தில் விடுவிக்கும் நடவடிக்கை இவ்வருடம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய அரச அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தள்ளார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தையடுத்து. சுனாமி அலைகள் புகுஷிமா அணு மின் நிலைய உலைகளையும் தாக்கின. இதனால், அணு உலைகளை குளிர்விக்கும் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு அணுக்கசிவும் ஏற்பட்டது. …
-
- 10 replies
- 571 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 கருப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடர் ஜெக்சன்வெலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், இரு ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1346921
-
- 1 reply
- 610 views
-
-
Published By: RAJEEBAN 25 AUG, 2023 | 06:56 AM தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார். நியுஜேர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் இல்லத்திலிருந்து விமானம் மூலம் புல்டன் சிறைச்சாலையில் ஆஜராவதற்காக டிரம்ப் நியுஜேர்சி சென்றார் . புல்டன் சிறையில் அவர் குறித்த விபரங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டன, சிறையில் வைத்து அவரை அதிகாரிகள் புகைப்படம் எடுத்தனர் – அமெரிக்க வரலாற்றில் சிறையில் படமெடுக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் டிரம்ப பிணையில் விடுதலை …
-
- 7 replies
- 581 views
- 1 follower
-