உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய மிகவும் முக்கியமான எச்சரிக்கை . யானைத்தந்தத்துக்காக பலாயிரக்கணக்கான யானைகள் வருடாந்தம் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது. இவை குறித்த பிபிசியின் செய்திப் பெட்டகம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131019_africanelephant.shtml
-
- 0 replies
- 385 views
-
-
உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 256 views
-
-
இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம்: பிரிட்டனை பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளான நிலையில், பிரிட்டன் இந்தியாவிடம் ஒரு மிக நெருக்கமான வர்த்தக உறவை எதிர்பார்க்கிறது. ஆனால், பிரிட்டன் பற்றி நவீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்? பிபிசியின் தெற்கு ஆசிய செய்தியாளர் ஜஸ்டின் ரௌலட் எழுதுகிறார். ``இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும் எனது குடும்பத்திற்கு நெருக்கமான உறவு இருக்கிறது. இதில் பெருமைப்பட எதும் இல்லை என்பதால், இதை பற்றி நான் வழக்கமாகப் பேசுவதில்லை. இந்தியா தனது 70 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வேளையில், பிரிட்டன் உடனான இந்தி…
-
- 0 replies
- 480 views
-
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: இதுவரை 26பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்! மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல், பத்கிஸ் மாகாணத்தின் கிழக்கே 41 கி.மீ. பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அமெரிக்க புவியியல் மையத்தின் தகவலின்படி ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவானது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல வீட…
-
- 0 replies
- 220 views
-
-
மலையாளிகளுக்கு ஏன் பச்சபாண்டிகள் மீது இவ்வளவு காண்டு? "கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் சுடபடுவது நிற்காது-நாராயணன் இலங்கையில் மனித உரிமை மிகச்சிறப்பாக பேணபடுகிறது- சசிதரூர் இலங்கையில் என்ன நடக்கிறது என நான் சொல்ல மாட்டேன் – விஜய நம்பியார் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன் இலங்கைக்கு இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது – மேனன் இந்தியாவினது போரைத்தான் நான் நடாத்தியுள்ளேன்-“ஜனாதிபதி ராஜபக்ஸ சொன்னது சரியானதே” – மேனன்" ஊர்விட்டு ஊர் வந்து டீ கடையும் பேக்கரியும் நடத்தும் இக்கும்பல்கள் தமிழகத்தின் அத்தனை துறைகளிலும் மேலிடத்தில் உட்கார்ந்து கொண்டு தமிழனை இம்சிப்பதும் தென்னிந்திய ரயில…
-
- 0 replies
- 1.9k views
-
-
மியான்மர் ராணுவம்: சொந்த மக்களையே வேட்டையாடும் கொடூரம் - இத்தனை பலம் பெற்றது எப்படி? 5 பிப்ரவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மியான்மர் ராணுவம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களைக் கொன்றதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஓராண்டுக்கு முன்னர் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ ச்சீ அரசாங்கத்தை கவிழ்த்ததில் இருந்து, மியான்மரின் ராணுவம் - தாட்மடா என்று அழைக்கப்படுகிறது. - கொடூரமான அடக்குமுறை மூலம் டஜன் கணக்கான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான சொந்த பொதுமக்களை கொன்று உலகையே அந்நாட்டு ராணுவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மியான்மர்…
-
- 0 replies
- 374 views
- 1 follower
-
-
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜக கூட்டணி கட்சியான மகாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா அமைப்பின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறுகையில் மோடி குஜராத் முதல்வராக இருப்பதால் எந்த பிரசாரக்கூட்டத்திற்கு சென்றாலும் குஜராத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். இந்தியா முழுவதும் அவர் தேசிய பிரச்சனைகள் பற்றியே பேச வேண்டும். அதற்காக குஜராத் முதல்வர் பதவியில் இருந்து மோடி விலக வேண்டும் என்றார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE…
-
- 0 replies
- 252 views
-
-
ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைத்து டெல்லி அரசை பிடித்துள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் 100 தொகுதிகளை கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக குமார் விஷ்வாசை களமிறக்குவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதையொட்டி அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குமார் விஷ்வாஸ் ராகுல் காந்தியின் குடும்பத்தை கடுமையாகத் தாக்கி பேசினார். செய்தியாளர்களை சந்தித்த குமார் விஷ்வாஸ், ராகுல்காந்தி குறித்து கூறியதாவது:- நாட்டில் குடும்ப அரசியல் ஊழலை வளர்த்துவிட்டு இருக்கிறது. அமேதி தொகுதியின் மேம்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டுள்ளது என்று ராகுல் கா…
-
- 0 replies
- 322 views
-
-
-
- 0 replies
- 484 views
-
-
வட கொரியாவின்... பேரழிவு ஆயுதங்களுக்கு, ஆதரவளித்த... ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை! வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சமீபத்திய தொடர் ஏவுகணை ஏவுகணைகளைத் தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், வடகொரியா மீதான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்குவதுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வட கொரிய பேரழிவு ஆயுதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என ரொக்கெட் தொழில் அமைச்சகத்தை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள…
-
- 0 replies
- 258 views
-
-
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள் ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய வகையில் புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார். தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்து. பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கி…
-
- 0 replies
- 190 views
-
-
கலையைக் கவசமாக்கும் இனப் படுகொலையாளர்கள் தனது நாட்டு மக்களின் மீதே கனரக ஆயுதங்களையும், ஒயிட் பாஸ்பரஸ், கிளஸ்டர் பாம் போன்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களையும் பயன்படுத்தி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிறிலங்க அரசு, தன் மீது படிந்துள்ள இரத்தக் கறையையும், சதைத் துண்டுகளையும் மறைக்க முடியாமல், கலையையும், கலைஞர்களையும் ‘அமைதி’த் திரையாக்க முயற்சித்து வருகிறது. இலங்கையில் அமைதி நிலவுகிறது என்றும், எந்த அச்சுறுத்தலுமின்றி சுற்றலா பயணிகள் வரலாம் என்றும், வணிக மேம்பாட்டிற்கும், முதலீட்டிற்கும் மிகச் சிறந்த நாடு என்றும் உலக நாடுகளுக்கு ஒரு பொய்த் தோற்றம் காட்ட, சிறிலங்க அரசும், பாலிவுட் திரையுலக அமைப்பான இந்திய சர…
-
- 0 replies
- 511 views
-
-
சென்னை: மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் இங்கு தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி, வரிச்சலுகை பெற்ற நிலையில், அந்த செல்போன்களை இங்கேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வாய்ப்பு செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை…
-
- 0 replies
- 361 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் டஜன் கணக்கானோர் காயம்– திட்டமிட்ட செயல் என்கிறது காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்க்க தொழில்நுட்ப உதவி: சொமாலியாவின் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவி செய்யும் ட்ரோன்கள் நீண்ட வரலாறு கொண்ட ராணுவ வாழ்க்கையை நிராகரித்து, புதிய எதிர்காலத்தை தேடும் கூர்கா இனத்தின் இளைய தலைமுறை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 207 views
-
-
தைவான் பதற்றம்: அமெரிக்காவுடன் உறவை முறிக்கும் சீனா - காலநிலை மாற்றம், போதைமருந்து ஒத்துழைப்பில் சிக்கல் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவுடனான முக்கிய ஒத்துழைப்புகளை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்திருக்கிறது. இது அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் கசப்பை அதிகரித்திருக்கிறது. பருவநிலை மாற்றம், ராணுவப் பேச்சுக்கள், சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது. …
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
வட கொரியாவின் ராணுவ தலைவர் திடீர் பணி நீக்கம் கிம் ஜோங் உன் - Getty Images வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றது முதலாக, அதற்கடுத்த உயர் பதவியான ராணுவ தலைவர் பதவியை வாங் பியாங் வகித்து வந்தார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில ஒப்பந்தங்கள் தொடர்பாக வாங் பியாங் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து வாங் பியாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியை ராணுவ அமைச்சராக இருக்கும் கிம் ஜாங் காக் கூடுதலாக கவனிப்பார் என்ற…
-
- 0 replies
- 370 views
-
-
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் - ஓரிரு நாளில் பூமியில் விழும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சீன விண்வெளி நிலையம் ஓரிரு நாளில் பூமியில் விழும் படத்தின் காப்புரிமைCHINA MANNED SPACE AGENCY Image captionதியன்கொங்-1 (சித்தரிக்கும் படம்) பூமியை அடையும்போது ப…
-
- 0 replies
- 244 views
-
-
அற்ப நிலத்துக்காக ஆறு பேரின் ஆயுளையே முடித்த குற்றவாளியை, ஒரு மந்திரி ஜெயிலில் போய் குசலம் விசாரிப்பதா? இதற்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா? ஸ்பெக்ட்ரம் விவகாரமும், ஆறு பேர் படுகொலையும்தான் இந்த ஆட்சியின் கரும்புள்ளிகள். சம்பந்தப்பட்டவர்களை தி.மு.க. தலைமை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்களே தூக்கி எறிவார்கள்!'' - இப்படி சேலத்தில் சிங்கத்தின் குகைக்கே சென்று, அதன் பிடரியை உலுக்கிவிட்டு வந்திருக்கிறார் யுவராஜா. இன்றைய தேதியில் இவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்றாலும், கருணாநிதிக்கோ இடைஞ்சல் காங்கிரஸ்காரர்! ''பாதயாத்திரை, ஆலோசனைக் கூட்டங்கள் செல்கிறீர்கள்... மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?'' ''பதவிப் பல்லக்கி…
-
- 0 replies
- 630 views
-
-
வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்ளாடும் நிலை என்பார்களே... வைகோவின் அரசியல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன! கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-வின் கூட்டணியில் சிறிதளவும் மனக் கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள். வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... மு…
-
- 0 replies
- 578 views
-
-
உலகப்பார்வை: எரிபொருள் விலை ஏற்றம்: மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் படத்தின் காப்புரிமைAFP ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங…
-
- 0 replies
- 338 views
-
-
பாகிஸ்தானில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் யாருடன் கூட்டணி? பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான் கான் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 346 views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குவது தொடர்கதை ஆகிவிட்டது. இந்நிலையில் லக்விந்தர் சிங் (வயது 28) என்ற இந்திய வாலிபர் வியாழன் இரவன்று அவரது வீட்டில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பந்தமாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கம்போடியாவை சேர்ந்தவர் என்று ஆஸ்திரேலியா போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட இந்தியனின் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/news/news.php?id=27331
-
- 0 replies
- 387 views
-
-
அமெரிக்காவில் 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அடுத்த தேர்தலில் ஒபாமாவை வீழ்த்துவதற்கான நடவடிக்கையில், இப்போதே இறங்கியுள்ளார் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப். ஒபாமா அமெரிக்காவில் பிறந்தாரா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் போலியானது. அமெரிக்காவில் பிறந்தார் என்பதை ஒபாமா ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றார் டொனால்டு ட்ராம்ப். ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர் என்பதாலும், சிறுவயதில் ஒபாமா இந்தோனேஷியாவில் வளர்ந்தவர் என்ற பின்னணியை வைத்தும் இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. இதையடுத்து ஹவாய் மாநிலத்தில் பிறந்ததற்கான பிறப்பு சான்றிதழை, தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார் ஒபாமா. அதில் ஒபாமாவின் தாய் மற்றும் ஹவாய் மாநில அதிகாரிகளின் …
-
- 0 replies
- 636 views
-
-
ஜெகத் கஸ்பார் ஊழல் வழக்கில் மாட்டுவாரா? Posted by சங்கீதா on 26/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -26/05/2011) கனிமொழியை திகார் ஜெயிலில் இருந்து விடுவித்து அவரை 2ஜீ ஸ்பெக்ற்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கருணாநிதி குடும்பம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக திமுக அஞ்சுகிறது. தோண்டும் போது புதையல் வருவது போல் உலக வரலாற்றுச் சாதனையான ரூபா1.76 இலட்சம் கோடி வழக்கில் இன்னும் பலர் சிக்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரான கருணாநிதியின் மனைவி தயாளு அதில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்தவர் அரசியல் துறவி ஜெகத் கஸ்பார் அடிகளார் என்று விஷயம் அறிந்த வட்…
-
- 0 replies
- 753 views
-
-
அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும். திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந்தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே... சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு 23-ம் தேதி வந்த கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 'மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை நீதிமன்றத்த…
-
- 0 replies
- 544 views
-