உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
துலூசிலிருந்து இரண்டு நாட்களிற்கு முன்னர் புறப்பட்ட AIRBUS A350-1000 ரக விமானம் சீனா சென்றிருந்தது. இன்று காலை ஹம்பேர்க்கில் தறையிறங்கிய இந்தப் பரீட்சார்த்த விமானம், இன்று மதியம் துலூஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த AIRBUS A350-1000 விமானம் அதன் பரீட்சார்த்தப் பறப்பாகவே சீனா வரை சென்றிருந்தது. சீனாவில் இருந்து 4 மில்லியன் முகக்கவசங்களுடன் இந்த விமானம் இன்று துலூஸ் வந்திறங்கியது.. துலூசில் தரையிறங்கிய இந்த விமானத்தை, ஜோந்தர்மினர் தங்கள் பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்தமுகக் கவசங்கள் எயார்பஸ் நிறுவத்தின் கூட்டுத் தயாரிப்பு நாடுகளான பிரான்ஸ், ஸபெயின், பிரித்தானியா, மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கிடையில் பங்கிடப்படும் எனத் தெரிவிக்கப்…
-
- 0 replies
- 258 views
-
-
2500 பேருக்கு ஒரே நேரத்தில் பொது மன்னிப்பு வழங்கிய பைடன் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார். எனவே தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வன்முறையற்ற சாதாரண போதைப் …
-
-
- 2 replies
- 257 views
-
-
உலகப் பார்வை: புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம் புதிய கிரகங்களை தேடும் முயற்சியில் நாசா படத்தின் காப்புரிமைNASA சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள புதிய உலகங்களை தேடும் நோக்கத்துடன் அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, புதிய விண்வெ…
-
- 0 replies
- 257 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்தப் பழைய படம், ஓகோட்னிக் டிரோன் Su-57 போர் விமானத்துடன் இணைந்து பறப்பதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அப்துஜலீல் அப்துரசுலோவ் பதவி, பிபிசி செய்திகள், கியவ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே. ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டனின் குடிமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்கான சரியான உறவைவத் தான் அது வேண்டுகிறது என்றார். பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்புரிமை வைத்திருக்க வேண்டும் என்பதற்க…
-
- 0 replies
- 257 views
-
-
ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் நடவடிக்கை இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
அகதிகள் போர்வையில்... தலிபான்கள்: பிரான்ஸ் தீவிர விசாரணை! பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்வதற்குச் சில நாட்களின் முன், இவர் ஆயுதங்களுடன் தலிபான்களின் பக்கம் நின்றிருந்துள்ளமையை பிரான்ஸின் புலனாய்வுப்பிரிவினர் உடனடியாக அவதானித்துள்ளனர். அகதிகள் போல் பிரான்ஸிற்குள் ஊடுருவிய தலிபான் ஆக இவர் இருக்கலாம் என்ற அடிப்படையில், தனிப்பட்ட நிர்வாகக் கண்காணிப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கையான MICAS நடவடிக்கையின் கீழ் இவரு…
-
- 0 replies
- 257 views
-
-
கென்டக்கி மாகாண பிரைமரி: ஹிலாரி கிளிண்டன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான உட்கட்சி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளில், கென்டக்கி மாகாணத்துக்கு நடந்த பிரைமரி சுற்றில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிலாரி கிளிண்டன்: வெற்றி முகம் பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஹிலாரி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு ஒன்றை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், ''கென்டக்கியில் வெற்றி பெற்றுவிட்டோம். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஒன்றுபட்ட அணியாக நாம் என்றும் பலமாக இருப்போம் ‘’ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பிர…
-
- 0 replies
- 257 views
-
-
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற தாக்குதலில் பதிமூன்று பேர் கொல்லப்பட காரணமாக இருந்தவர் யூனஸ் அபு யாகூப் என்று ஸ்பேனிஷ் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர், சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க கடற்படை கப்பலும், எண்ணெய் கப்பல் ஒன்றும் மோதியதில் பத்து மாலுமிகளை காணவில்லை மற்றும் அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதல் முறையாக தெரியவுள்ள பூரண சூரிய கிரகத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 257 views
-
-
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ட…
-
- 0 replies
- 257 views
-
-
ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா சன்மானம் By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 04:28 PM அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொ…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
டிரம்பின் தடையுத்தரவு ஆணைக்கு எதிராக உலகத் தலைவர்கள் கருத்து ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொ ள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீ…
-
- 0 replies
- 257 views
-
-
யுக்ரேன் சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல் மேட் மர்ஃபி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் என்பவர் யுக்ரேனின் டோன்பாஸ் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. டோன்பாஸ் பகுதியில் உள்ள யுக்ரேனிய குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ரோசியா 1 என்ற அரசு ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். 'டோனட்ஸ்க் மக்கள் குடியரசு' என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான ஏரியல் ஷரோன் காலமானார். அவருக்கு வயது 85. அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த காலத்தில், திடீரென்று தாக்கிய மூளை ரத்தக்கசிவு- ரத்த உறைவினால் ஏற்பட்ட பக்கவாதத்தால் 2006-ம் ஆண்டிலிருந்து ஏரியல் ஷரோன் கோமா நிலையிலேயே இருந்துவந்தார். சிறுநீரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான உடல் உறுப்புகள் செயலிழந்துபோயிருந்த நிலையில் அண்மைய நாட்களாக அவரது நிலை மோசமடைந்தது. இஸ்ரேலிய வரலாற்றில் ஏரியல் ஷரோனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. இராணுவ ஜெனரலாக இருந்தவர், பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மாறினார். எனினும் மிகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் ஏரியல் ஷரோன் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140111_arialsharon.shtml
-
- 1 reply
- 257 views
-
-
அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய ஆயுத கடத்தல்காரர் விக்டர் பௌட்டும் கைதிப் பரிமாற்றத்தின் மூலம் விடுவிப்பு By SETHU 09 DEC, 2022 | 10:53 AM போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டனி கிறைனர் கைதி பரிமாற்றத்தன் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனி கிறைனரை விடுவிப்பதற்காக, 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுவித்தது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலுள்ள விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை வைத்து இக்கைதிகள்; பரிமாற்றம் நடந்தது, …
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர் முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். ஜெர்மன் நீதவான்கள் மற்றும் அரச வழக்குரைஞர்கள் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கருத்துச் சுதந்திரம் என்பது வதந்திகளையும், சேறு பூசல்களையும் நியாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தில் போலியான செய்திகளை வெளியிடுவோருக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தண்டனை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 257 views
-
-
பட மூலாதாரம்,MAXINE COLLINS/BBC கட்டுரை தகவல் எழுதியவர், கேட்டி ரஸ்ஸல் பதவி, கல்ச்சர் & மீடியா ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேர்காணலின் இறுதியில்தான் பில்கேட்ஸ் இத்தனை ஆண்டுகளில் எவ்வளவு பணத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் என்று கூறினார். அவரின் தொண்டு நிறுவனம் மூலம், நோய்களைத் தடுக்க, வறுமையை ஒழிக்க அவர் நன்கொடை அளித்துள்ளார். ''நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதியை நான் கொடுத்திருப்பேன். என்னிடம் கொடுக்க இன்னும் நிறைய உள்ளது'' என்று கூறுகிறார் பில் கேட்ஸ். பல்கேரியா நாட்டின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு இது. இதை வைத்துக் கொண்டு லண்டனையும் பர்மிங்காமையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் சேவையான எச்.எஸ்.2 என்ற ரயில்வே லைனையே முழுமையாகக் கட்டிவிடலாம். …
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்... பாகிஸ்தானுக்கு நோ ஸ்வீட்ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று எல்லைப் பாதுகாப்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஜோரியில் கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை ஒருவித அச்சத்துடனேயே கொண்டாடினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…
-
- 0 replies
- 257 views
-
-
நீங்கள் போருக்குப் பயப்படுகிறீர்கள், போலந்துக்கு சென்ற நீங்கள் ஏன் கீவ்-க்கு வரவில்லை – இங்கிலாந்து பிரதமரிடம், கண்ணீருடன் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பும் கேள்விகள் மனதை உருகியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். நீங்கள் கியூவுக்கு வரவில்லை… ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை …
-
- 0 replies
- 257 views
-
-
டொன்பாஸ் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டம் – இரகசிய ஆவணத்தை வெளியிட்ட ரஷ்யா கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு இடங்கள் மீது தாக்குதல் நடத்த கியூவ் திட்டமிட்டுள்ளதாக இரகசிய ஆவணங்களை மேற்கோளிட்டு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஆறு பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமைச்சு வெளியிட்டுள்ளது. இருப்பினும் உக்ரேனிய மொழியில் எழுதப்பட்ட குறித்த ஆவணங்களை மொழிபெயர்க்க முடியவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக கடந்த மாதம், ஜனாதிபதி புடின் அறிவித்தார். …
-
- 0 replies
- 257 views
-
-
நீரவ் மோதி மோசடி: வாராக்கடனாகிறாதா 8,000 கோடி ரூபாய்? முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து படத்தின் காப்புரிமைFACEBOOK/NIRAVMODI Image captionநீரவ் மோதி பண உத்தரவாதக் கடிதம் மூலம் நீரவ் மோதி, மெகுல் சோக்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 12,700 கோடி ரூபாய் கடனில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மொத்த பணத்தையும் வாராக்கடனாக அறிவிக்க வேண்டும். தற்போது 8,000 கோடி அளவிலான…
-
- 0 replies
- 257 views
-
-
இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் 17 FEB, 2023 | 04:29 PM இந்தோனேசியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/148458
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
ரமதான் நோன்பை முன்னிட்டு இந்து அறக்கட்டளை வாரியம், சிங்கப்பூரிலுள்ள சில பள்ளிவாசல்களுக்கு 2 டன் அரிசியை நன்கொடையாக வழங்கவிருக்கிறது. சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்துடன் இணைந்து நன்கொடை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் ஆண்டாக அந்த நன்கொடையை இந்து அறக்கட்டளை வாரியம் வழங்குகிறது. அப்துல் கஃபூர் (Abdul Gafoor) பள்ளிவாசல், அன்-நஹ்டா (An-Nah’dah) பள்ளிவாசல், பா-அல்வி (Ba’alwi) பள்ளிவாசல், ஜாமியா சூலியா (Jamia Chulia) பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு அரிசி நன்கொடையாக வழங்கப்படும். ரமதான் போன்ற அர்த்தமுள்ள, புனிதமான காலத்தில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முயற்சியை அந்த நன்கொடை நடவடிக்கை காட்டுவதாகக் கூறப்பட்ட…
-
- 0 replies
- 257 views
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 257 views
-