உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26602 topics in this forum
-
ஊடகங்களில் தமிழ்க்கொலை கவிஞர் காசி ஆனந்தன் சாட்டையடி அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தலைமையுரை ஆற்றிய உலகப் பெருந் தமிழர் காசி ஆனந்தன் அவர்கள் உரை யாற்றும் பொழுது தமிழ்நாட்டில் தமிழ் எவ் வாறு கொச்சைப்படுத்தப்படுகிறது - தமிழ் மொழி எங்ஙனம் சீரழிக்கப்படுகிறது எனக் குமுறினார். ஒரு விபத்து பற்றி தகவல் கூறிய ஒருவன் மறைமலை அடிகள் பிரிட்ஜ் கிட்டே விபத்து என்று சொல்கிறான். வட மொழியை எதிர்த்துப் போராடிய மறை மலையடிகள் பெயரால் உள்ள பாலத்தை பாலம் என்று சொல்ல முடியவில்லை என்ற உதாரணத்தை முன்வைத்து நாம் ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்து கொண்டு இருக்கிறோம் அதனால் தான் தமிழ் மொழி இப்படியெல்லாம் அழிந்து கொண்டு இருக்கிறது எனக் கூறினார். நாட்டில் ஒரு தலைவருக்கே…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழக அரசின் வட்ட திட்டமான அறிவிப்பு ஆதாரம் வீரகேசரி என்னதான் நடந்தாலும் விழல்காரணங்கள் கூறி தொடர்ந்தும் ஆரியருக்கு தமிழன் ......................கழுவுவான்...
-
- 8 replies
- 2.1k views
-
-
சென்னை: தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்தையும், மதுரையில் மதிமுக மாநாட்டில் வைகோ பேசியதையும் நேரடியாக ஒளிபரப்பியதால் திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். நாளை சென்னையில் நடைபெறவுள்ள தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டையும் சன் டிவி ஒளிபரப்பலாம் என்பதால், அதற்குள் தயாநிதி மாறன் திமுகவை விட்டு நீக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை தினகரன் அலுவலகம் மீதான அழகிரி ஆதரவாளர்களின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன். இருப்பினும் அவர் திமுகவிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
பஙய்கரவாதமா ?? விடுதலைப் போராட்டமா? டென்மார்க்கில் நீதிமன்றில் இன்று தீர்ப்பு! Danish Court About to Decide on FARC and the EU Terror Lists Copenhagen from September 3rd: The highly controversial trial on Danish support for FARC ’T-shirts and terrorism’ is about to reach it’s final point. If the Eastern High Court decides to follow up the acquittal from the City Court of Copenhagen, Denmark could be the first country in the European Union to dismiss the EU terror list. Denmark’s Eastern High Court is examining the case from September 3rd to September 11th. The trial is already making headlines in Danish news papers and national radio. http://www.fightersa…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுமார் 7000 வருடம் மனித எலும்புகூடு கொடவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுமார் 7000 வருடம் பழமை வாய்ந்த மனித எலும்புகூடு மற்றும் மற்றும் ஆதிமனிதன் பாவித்த ஆயுதங்கள் உட்பட பல பொருட்கள் அம்ப்பாந்ததோட்டை கொடவெவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது http://www.virakesari.lk/
-
- 2 replies
- 1k views
-
-
பிபிசி 9/13/2008 - ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அந்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோரின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகம் என்று கடைசியாக எடுக்கப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. ஜப்பானில் மக்களின் நீடித்த ஆயுளுக்கு,அவர்களுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வலிமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள் என்று பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நன்றி வீரகேசரி
-
- 10 replies
- 1.7k views
-
-
டில்லியில் 5 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி : 90 பேர் காயம் புதுடில்லி: டில்லியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியாயினர். 90 பேர் காயம் அடைந்தனர். டில்லியின் மேற்கு பகுதியில் கரோல் பாக் என்னும் பகுதியில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் காயமுற்றவர்கள் ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்னர். கப்பார் மார்க்கெட், கிரேட் கைலாஷ், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட் 5 இடங்களில் குண்டு வெடித்துள்ளது. டில்லி குண்டு வெடிப்பு: பிரதமர் கண்டனம் புதுடில்லி: டில்லியில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.தொடர் குண்டு வெடிப்பை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் …
-
- 6 replies
- 1.2k views
-
-
'வாய்ஸ்' தான் ரஜினிகாந்த் 'சாய்ஸ்' : வரிந்துகட்டி காத்திருக்கும் ரசிகர்கள் அக்டோபர் முதல் வாரத்தில் ரசிகர்களை நேரில் சந்திப்பதாக உறுதியளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட மாட்டார். அதற்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சிக்கு தனது ஆதரவு "வாய்ஸ்'சை மட்டுமே கொடுப்பார் என, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன."நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்திற்கு கண்டிப்பா வருவேன்' என்று நடிகர் ரஜினிகாந்த், ஒரு படத்தில் பேசும் வசனம் தான் இன்றுவரை அவரது ரசிகர்களின், அரசியல் ஆசை என்ற "பல்ஸ்'சை குறையவிடாமல் செய்துவருகிறது. ஆந்திர சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் அமர்க்களமான கட்சி துவக்கம், ரஜினி ரசிகர்களையும் அதிகமாகவே உசுப்ப…
-
- 0 replies
- 534 views
-
-
சென்னை: சொந்த உபயோகத்திற்காக தனி விமானம் ஒன்றை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு பயணமானார். அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலா நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், உடனடியாக மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்திலிருந்த மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் சசிகலா மீண்டும் திரும்பி விமான நிலையத்திற்குள் சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பினர். உள்ளே சென்ற சசிகலா, பழைய விமான நி…
-
- 3 replies
- 1.4k views
-
-
தை 1 நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்த விவகாரம் : தமிழக அரசுக்கு "நோட்டீஸ்" தை 1 நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிற்கு "ஐக்கோர்ட்" "நோட்டீஸ்" அனுப்பி உள்ளது. தை 1 முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து "டிராபிக்" ராமசாமி என்பவர் "ஐகோர்ட்டில்" வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசின் இந்த ஆணை கலாச்சார தலையீடானது என்றும், பாரம்பரிய வழக்கங்களை மாற்றும் விதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதனை விசாரித்த "ஐக்கோர்ட்", 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் "நோட்டீஸ்" அனுப்பி உள்ளது. ஆதாரம் தினமல…
-
- 1 reply
- 899 views
-
-
டெல்லி: இணைய தளம் மூலம் புலிகளை வாங்கலாம் என அறிவிப்பை வெளியிட்ட http://www.buytigers.com/ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, 'பெடா' (People for the Ethical Treatment of Animals) அமைப்பு கோரியுள்ளது. இதுகுறித்து பைடைகர்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1984ம் ஆண்டு முதல் புலிகளை உலகெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த பூமியின் மிகவும் அழகான, ஸ்டைலான விலங்கினை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். உலகின் எந்தப் பகுதியில் எங்களது வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அவர்களைத் தேடி எங்களது புலிகள் பத்திரமாக வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியுள்ள பெடா, இதுகுறித்து மத்திய…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி…
-
- 20 replies
- 6.6k views
-
-
திருமணமான முதல் வாரத்திலேயே பணத்துக்காக கணவனால் விரட்டியடிக்கப்படும் பெண்கள். தினமும் குடித்துவிட்டு வருகிற கணவனிடம் அடிவாங்கும் அபலைகள். கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தால் திட்டம்போட்டு தீர்த்துக் கட்டப்படும் மனைவிகள். இவர்களைப் போன்ற துரதிர்ஷ்டக்காரப் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் குடும்ப வன்முறைச் சட்டமும் வரதட்சணை தடுப்புச் சட்டமும். இந்தச் சட்டங்களால் பல பெண்களின் வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்திருக்கின்றது. ஆனால் இன்று வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. பல பெண்கள் தங்கள் அப்பாவிக் கணவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். உதாரணத்துக்கு ஒரு சின்ன தகவல். 2005-ம் ஆண்டு மட்டும் இந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
உலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்…
-
- 1 reply
- 915 views
-
-
சென்னை: ரோபோ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் சந்திக்கிறார் ரஜினிகாந்த். வழக்கம் போல ஹேஷ்யமாக இல்லாமல், ரஜினி மன்றங்களின் தலைவர் சத்யநாராயணாவே இதை அறிவித்துள்ளதால் செய்திக்கு கூடுதல் முக்கியம் கிடைத்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் படியாக, தனது மன்றத்தின் அதிகாரப்பூர்வமான கொடியை அக்டோபர் சந்திப்பின்போது ரஜினி அறிவிக்க உள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டுக்கு முன்பும் பின்பும், அவை வென்றாலும் தோற்றாலும் தவறாமல் விவாதிக்கப்படும் விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா... வழக்கமாக இந்தக் கேள்வி படம் ரிலீசான சில வாரங்களில் கரைந்து போகும். கேள்விக்கு பதிலும் கிடைக்…
-
- 20 replies
- 3.2k views
-
-
பாங்காக்: டிவியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த தாய்லாந்து பிரதமர் சமக் சுந்தரவேஜ் பதவி விலக வேண்டும் என தாய் அரசியல் சட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து சட்டப்படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் லாப நோக்கில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாதுஎன்பது விதியாகும். ஆனால் அதை மீறி தாய்லாந்து பிரதமர் சமக், அந்நாட்டு டிவி ஒன்றில் சமையல் நிகழ்ச்சிக்கான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாகவே இவர் தொகுப்பாளராக இருக்கிறார். ஆனால் பிரதமர் பதவிக்கு வந்த பிறகும் தொகுப்பாளர் பணியை விடவில்லை. தொடர்ந்து தொகுப்பாளராக செயல்பட்டு வந்தார். இதைக் கண்டித்து ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் எதர்க்கட்சியினர் பிரதமர் அலுவலகம் முன்புதொடர் போராட்டத்தில் ஈடுபட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
திருச்சி: சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் இதுவரை 11 மீட்டர் ஆழத்திற்கு தோண்டியாகி விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே தோண்டப்பட வேண்டியுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திர திட்ட பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்ட வேண்டும். தமிழகத்தில் நடந்து வரும் தங்க நாற்கரசாலைப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண்.7-ல் உள்ள பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை தவிர மற்ற அனைத்து 4 வழிச்சாலைகளும் வரும் டிசம்பர் 31ஆம் …
-
- 0 replies
- 699 views
-
-
இந்தியப் படையும் மாவோயிஸ்ட்டுகளும் சிறாரை படையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது. தாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவ…
-
- 0 replies
- 617 views
-
-
சென்னை: தன்னைப் பற்றியும், தனது தோழி சசிகலா குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்ஸ் வார இதழ்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு பத்திரிகைக்கு தனது வக்கீல் நவநீத கிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதா அனுப்பியுள்ள நோட்டீஸில், கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான்; போடுங்கள் கையெழுத்து என்று சசிகலா கூறியதாக சசிகலா அரங்கேற்றிய பவர்கட் பிளான் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு விஷமத்தனத்துடன் உண்மைக்கு புறம்பாக புனையப்பட்ட தகவல்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனது அரசியல் எதிரியான கருணாநிதி உத்தரவுபடியே அந்த செய்தி வ…
-
- 0 replies
- 766 views
-
-
வீரகேசரி நாளேடு - பிரித்தானிய பக்கிங்ஹாம் மாளிகை காவலாளிகளின் தொப்பிகளானது சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றத்துக்குள்ளாகிறது. கரடிகளின் தோலால் உருவாக்கப்பட்ட இந்த நீண்ட கறுப்பு தொப்பிகளானது, மேற்படி அமெரிக்க கருங்கரடிகளைப் பாதுகாக்கும் முகமாக மாற்றத்திற்கு உள்ளாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் தொழில் பாதுகாப்புக்கான அமைச்சர் பாரோனஸ் டெய்லர், மிருக பாதுகாப்பு அமைப்பான பெடாவைச் சேர்ந்த பிரதிநிதிகளை நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் கரடித் தோலுக்குப் பதிலாக அனைத்து காலநிலைகளுக்கும் பொருந்தக் கூடிய உயர்தராதரமுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்படி தொப்பிகளை தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் த…
-
- 3 replies
- 1k views
-
-
பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவைக்கு வந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து ஜிம்ஆர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் ரக தனி விமானத்தில் சோனியாவும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கோவை வந்தனர். பெங்களூரில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் ஒரு பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, உடனே விமானத்த…
-
- 0 replies
- 612 views
-
-
வீரகேசரி நாளேடு - கனடாவின் ஆர்க்டிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, 4500 ஆண்டுகள் பழைமையான "மார்கம்' பனிப்பறையில் 19 சதுர மைல் பரப்பளவுள்ள பகுதி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி பனிப்பாறைப் பகுதியானது கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் திடீரென மாயமாகியுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக கனடாவின் ஒன்டாறியோவிலுள்ள ரென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேசமயம் "வார்ட் ஹன்ட்' பனிப்பாறை தொடர்ந்து உருகி சிதைவடைந்து வருவதாக இவ்விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் 170 சதுர மைல் பரப்பளவு கொண்ட "வார்ட் ஹன்ட்' பனிப்பாறையில், 7 சதுர மைல் பரப்பளவான பகுதி கடந்த மாதம் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 1 reply
- 1k views
-
-
கியூபாவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் குஸ்தவ் எனப்பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வலுப்பெற்று வருகின்றது.மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சென்றவாறு வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சூறாவளி அபாய வகையில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக மியாமியில் இருக்கும் அமெரிக்க தேசிய சூறவாளி மையம் தெரிவித்துள்ளது. முதன்முதலாக சூறாவளி தாக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள கியூபாவின் மேற்கு பகுதியில் இருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். நன்றி வீரகேசரி
-
- 2 replies
- 1.1k views
-
-
உலக தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், உலகமயமாதல் என்ற அகில உலக சுனாமியிலிருந்து நாம் மீள வேண்டுமானால் இனம், மொழி இரண்டையும் பாதுகாக்கும் பெரும்பணியை நாம் இப்போதே தொடங்க வேண்டும். காலப்போக்கில் வட்டார மொழிகளும், குறுமொழிகளும் அழிந்து போகும் அபாயமிருக்கிறது. தமிழ் அப்படி அழிந்து போகக்கூடாது. தமிழ் அழியவும் அழியாது. உலகில் இன்று பல ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அடுத்தடுத்து வரும் நூற்றாண்டுகளில் ஆறே ஆறு பெரிய மொழிகள் மட்டும்தான் தப்பிப் பிழைக்கும் என்று ஆய்வு சொல்கிறது. சீனம், ஆங்கிலம், இந்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பாகல்கோட்: கர்நாடகத்தில் தெய்வ நம்பிக்கை காரணமாக கர்நாடகவைச் சேர்ந்த முதியவர் தனது ஒரு தோண்டி எடுத்து முக்தி அடைந்த ஞானிக்கு நேர்த்தி கடன் செலுத்தினார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்தார். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார். தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்கா…
-
- 7 replies
- 1.9k views
-