உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்: தங்கள் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியா வேண்டுகோள்! ஊடகவியலாளரும் பெலாரஸ் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை கைதுசெய்வதற்காக பெலராஸ் எடுத்த விபரீத முடிவு, உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என பிரித்தானியா தங்கள் விமான நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானங்கள் பெலாரஸ் வான்வழியை பயன்படுத்த வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். வெளிநாட்டுத்துறை செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘பயணிகள் விமானத் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பெலாரஸின் லூகாஷென…
-
- 0 replies
- 236 views
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 236 views
-
-
"செவெரோடொனட்க்ஸ்" இரசாயன ஆலையில்... சிக்கியுள்ள பொதுமக்கள், வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்துவதாக... ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த…
-
- 1 reply
- 236 views
-
-
அமெரிக்காவுக்கு எதிர்ப்பு: தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி! அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. எனினும், பயிற்சிகளின் நேரம், பங்கேற்பாளர்கள் மற்றும் இடம் பற்றிய எந்த விபரங்களையும் அது வெளியிடவில்லை. தங்களை மீறி தைவானுடன் பிற நாடுகள் தூதரக உறவு கொள்வதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், தாய்வானுடன் அதிகாரபூர்வமற்ற தூதரக மற்றும் இராணுவ நட்ப…
-
- 0 replies
- 236 views
-
-
நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை... வழங்குவதில், நட்பு நாடுகள்... தாமதிப்பதில் நியாயமில்லை: உக்ரைன் ஜனாதிபதி! உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என்ற நிலையில் அவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முக்கிய நகரங்களை கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்யாவின் ஏவுகணைகள், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் நகரில் கடைசி பாலத்தையும், ரஷ்ய படைகள் தகர்த்தபின், அங்குள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அப்புறப்படுத்த…
-
- 0 replies
- 236 views
-
-
ஐரோப்பா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் - அமெரிக்கா ஐரோப்பா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதம் 10ம் திகதி முதல் அடுத்த மாதம் 10ம் திகதி வரையில் பிரான்ஸில் கால்பந்தாட்ட சாம்பியன் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடரை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படக் கூடுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸில் நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டியை கண்டு ரசிக்க ஒரு மில்லியன் வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்குள் வருகை தருவார்கள…
-
- 0 replies
- 236 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்வு! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், பிரான்ஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 327ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 108பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் 1861இனால் அதிகரித்து மொத்மாக 10,995ஆக உயரந்துள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் மக்களில் பலர் நிலைமையின் ஆபத்தை உணராமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அதிருப்தி கொண்டுள்ளார். உள்ளிருப்பு உத்தரவை மீறிப் பலர் வீதிகளிலும், கடற்கரையிலும், பூங்காவிலும் திரிவதாகவும், இது நிலைமையின் தீவிரத…
-
- 0 replies
- 236 views
-
-
பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை! பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபர், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரித்தானிய அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் கணொளி சமூக வலைதளங்களில் பரவியது. இந்தக் காணொளியில் தன் பெயர் டர்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபர் கூறுகிறார். இந்த காணொளி ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடர்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்க…
-
- 0 replies
- 236 views
-
-
கனேடிய தேர்தல் செய்தி - ஓக்ரிடஜ்-மார்க்கம் [Oak Ridges and Markham] பிரதேச மக்களிற்கான வாக்களிப்பு பஸ் வசதிகள்: [Thursday 2015-05-07 19:00] தொகுதியில் இன்று இடம்பெறவுள்ள புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தேர்தலில் அங்கத்துவர்கள் வாக்களிப்பதற்கான பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத் தொகுதியில் அங்கத்துவர்களாகப் பதிவு செய்த உறுப்பினர்களில் ஏறக்குறைய 80 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பகுதியில் வாக்களிப்பு நிலையம் இல்லாமல் மிக நீண்ட தொலைவில் வைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணமாகும். Bus schedule: [1] From Markham Babu Catering (McCowan and Bur Oak): First bus leaves at 2:30 pm 2nd bus leaves at 4:30 p…
-
- 0 replies
- 236 views
-
-
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக 'ஊடுருவல்' ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிலரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கணினி வலைஅமைப்புகள் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல் நடவடிக்கை குழுக்கள் ஆகியவைகளும் இந்த ரஷிய குழுக்களின் இலக…
-
- 0 replies
- 236 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி தான் வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்காதது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லி சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவேன். அந்த பணத்தை வைத்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று நரேந்திர மோடி கூறினார். அது என்ன ஆனது?. ஒபாமா வருகையின்போது மோடி ரூ.10 லட்சம் மதிப்ப…
-
- 0 replies
- 236 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நெப்போலியன் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 13 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 14 மே 2025 வாட்டர்லூ போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஐரோப்பாவில் தனக்கு வருங்காலம் இல்லை என்று முடிவு செய்த நெப்போலியன், அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார். ஆனால், ஃபிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரையை பிரிட்டனின் போர்க்கப்பல்கள் சூழ்ந்து இருந்ததால் அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியமானது. பிரிட்டன் கடற்படையிடம் சரணடைந்து, பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் பெறலாம் என்று முடிவு செய்தார் நெப்போலியன். ஆனால், நெப்போலியனுக்கு எந்த சலுகையும் காட்டும் முடிவில் பிரிட்டன் இல்லை. "பிரிட்டன் பொதுமக்களின் பார்வையில் பார்த்தால் நெப்போலியன் ஒரு குற்றவாளி. பாதிக…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பாகிஸ்தானிலிருந்து டொரன்டோவிற்கு வந்த விமானத்திலிருந்து சுமார் 17 கிலோகிராம் Heroin போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டுபிடிக்கப்ட்ட இந்தப் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் மிகவும் முக்கியமானது என கனேடிய எல்லைப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 16ம் திகதி விமானத்திலிருந்து பொதிகள் இறக்கப்படும்போது, ஒரு பொதி மிகவும் பாரமாக இருந்ததாகவும் அதனைப் பரிசோதனையிட்டபோது போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பொதிக்குள் ஆறு கற்கள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அதில் போதைப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/37172.html#sthash.aOdH…
-
- 0 replies
- 236 views
-
-
தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. தேர்தல் நன்கொடை: பிற தேசிய கட்சிகளை முந்திய பாஜக படத்தின் காப்புரிமைPTI தேர்தல் சீர்திருத்தங்களுக்கான அமைப்பு எனும் அரசு சாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2016-2017ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா…
-
- 0 replies
- 236 views
-
-
காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் பலி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது. இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை 8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/175105/க-ப-ல-தற-க-ல-த-த-க-க-தல-ல-ப-ர-பல-#sthash.RQuMHRTu.dpuf
-
- 0 replies
- 236 views
-
-
சர்வதேச கால்பந்து போட்டியில் நடத்தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த செளதி அரேபியா செளதி அரேபியாவில் உள்ள ஜெடாவில் சர்வதேச கால்பந்து போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடந்த திட்டமிடப்பட்ட சதியை முறியடித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கோப்புப்படம் செளதி அரேபியாவின் தேசிய அணி மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியில் கார் குண்டு ஒன்றை வைக்க சதி செய்யப்பட்டதாக செளதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், போலிஸ் அதிகாரிகளை கொல்ல திட்டமிடப்பட்ட இரண்டாவது சதியையும் முறியடித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை சிரியாவில் உள்ள ஐ.எஸ் குழுவின் தலைவர் ஒருவர் வழிநடத்தியதாகவும் செளதி அமைச்சகம…
-
- 0 replies
- 236 views
-
-
லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் தாக்கி 3 போலீஸார் காயம்: தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி ந…
-
- 0 replies
- 236 views
-
-
அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீதான துப்பாக்கிச்சூடு: பல நகரங்களில் தொடரும் போராட்டம் அமெரிக்காவில் கறுப்பின ஆண்கள் மீது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து பல நகரங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டல்லஸ் நகரில் நிகழ்ந்த கொடிய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து போலிசார் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனையும் மீறி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான ஆர்ப்பாட்டாங்கள் அமைதியாகவே நடைபெற்றன. அதில், கலந்து கொண்டவர்கள், ''கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்'' மற்றும் ''கைகளை உயர்த்து, சுட்டுவிடாதே'' போன்…
-
- 0 replies
- 236 views
-
-
ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர் பலி பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionமருத்துவமனைக்கு வெளியே உறவினர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionவாக்களிப்பதற்கு தங்களை பதிவு செய்வதற்கு நின்றிருந்த மக்களை குறி வைத்து …
-
- 0 replies
- 236 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்யாவின் அணு ஆயுத தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிஸ்டிக் ஏவுகணை எழுதியவர், வில் வெர்னோன் பதவி, பிபிசி செய்திகள் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன். "அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர். "கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக்-31 போர் விமானங்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும்…
-
- 2 replies
- 236 views
- 1 follower
-
-
படைவிலக்கல் மற்றும் நடுநிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் யுக்ரேனில் மேற்கொள்ளப்படும் ரஷ்ய ராணுவ நடவடிக்கையின் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிடம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங் இன்று தொலைப்பேசியில் உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. ரஷ்ய படையெடுப்பு: “ராணுவ நடவடிக்கையின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்” – புதின் - தமிழில் செய்திகள் (bbc.com)
-
- 0 replies
- 236 views
-
-
அமெரிக்காவால் சர்வதேச வர்த்தகப் போர் உருவாகுமா? நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 மாணவிகளின் நிலை என்ன? பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 236 views
-
-
பட மூலாதாரம்,RILEY FORTIER படக்குறிப்பு, 'ஷனாய்-டிம்பிஷ்கா' அல்லது 'லா பாம்பா' என்றும் அழைக்கப்படும் கொதிக்கும் ஆறு கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் பரானியுக் பதவி, பிபிசி ஃபியூச்சர் கொதிக்கும் நதி வழக்கமாகவே 86 டிகிரி செல்சியஸை அடைகிறது. இது சுற்றியுள்ள மழைக்காடுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெருவின் கொதிக்கும் ஆற்றை நோக்கி, சமதளம் நிறைந்த, நான்கு மணி நேரம் பயணம் செய்து, மழைக்காடு வழியாகச் சென்று, நிலப்பரப்பில் உள்ள முகடுகளைத் தாண்டிய பிறகுதான், அதை உங்களால் பார்க்க முடியும் என்று, சுவிஸ் ஃபெடரல் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் லொசேனில் (EPFL) தாவர சூழலியல் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் அலிசா குல்பெ…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…
-
- 0 replies
- 236 views
-