Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Thamilthangai,

    ஆடிக்கலவரம்- கறுப்பு ஜீலை ஓடி ஓடிச் சிங்களம் ஈழத்தமிழரைக் கொன்று குவித்த நாளாம் அம்மா சொன்னாள்! கண்டதில்லை கலவரத்தின் நிலவரம் ஆனால் கண்டவர் உணர்ந்தவர் யாவரும் சொன்னார் "வாழை" போலே வெட்டிச் சாய்த்தார்களாம் நம் உறவுகளை தலைமுறைத் தளிர்களை" நாவினை அறுத்தால் கோஷங்கள் அடங்கலாம் தமிழீழம் எனும் உணர்வுகள் அடங்குமா?! கைகளை அறுத்தால் வேறு கதி இன்றி அடங்குவோம் என்று நினைத்தால் நம்பிக்கை அறுபட்டுப்போகுமா? அடிபட்டுப் போகுமா?! ஆண்ட பரம்பரை நாங்கள் என்று சொல்லித் திரிந்தால் போதுமா? மீண்டும் ஆளவேண்டும் என்று நினைப்பது தமிழனே தவறென்று ஆகுமா? கொன்று குவிப்பவன் காலைப் பிடித்தொரு கோழை பிழைப்பு இங்கு வேண்டுமா?! வென்று எங்கள் கொடி நாட்டுதல்…

    • 3 replies
    • 1.1k views
  2. Started by nunavilan,

    நிறமற்றவன் எதில்தான் இல்லை வர்ணம் இலையில் பூக்களில் மரத்தில் பூச்சிகளில் மனிதர்களில் எதில்தான் இல்லை வர்ணம் மனங்களில் சோதியில் சாதியில் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் முஸ்லீமாய் இந்துவாய் கிறித்துவனாய் சீக்கியனாய் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் புத்தனுக்கென்று ஒரு நிறமில்லை எந்த வர்ணத்தையும் அவன் வரைந்து கொள்ளவில்லை அதனால் தான் நம்மிடமிருந்து புத்தனையே துடைத்தோம் நம் வர்ணத்துக்கு புத்தன் ஆக மாட்டான் இம்சையே நம் இயல்பின் வண்ணமாயிருக்க நம் நிறத்தை மறுத்தார் ஒருவர் அஹிம்சையின் நிறத்தினை துப்பாக்கியால் துடைத்தோம் நம் குரூரத்தின் வர்ணத்தினை அவரிலிருந்து வெளியாக்கினோம் வெண்புறாக்கள் பறக்கும் …

    • 3 replies
    • 892 views
  3. Started by Jil,

    யாழிற்காக இது யாழிற்காக இந்த ஆக்கம் சொந்த ஆக்கம் யாழிற்காக கொப்பி பேஸ்டே போ போ சுய ஆக்கமே வா வா எச்சரிக்கை என்ற தூது வந்தது அது மட்டுநுறுத்தினர் வடிவில் வந்தது நரகமாக நான் நினைத்தது சொர்க்கமாக மாறிவிட்டது யாழிற்காக இது யாழிற்காக

  4. Started by nedukkalapoovan,

    அழகே என்றேன்.. அருகே வந்தாள் கண்களால் பேசினாள் கருத்தைக் கவர்ந்தாள் கதைகள் பேச முதலே.. கன்னத்தில் தந்தாள்..! டேய் நாயே.. வெளவாலா தேடுறாய் போர்த்திக் கொண்டே ஓடினாள்..! என் கண்களின் வாக்கு அவள் அறியாள்..!

  5. மலருக்கு மட்டுமல்ல……. ஊருக்குள் புகுந்த இராணுவத்தால் உருக்குலைந்த தெருக்கள் ஊமையாய் அழுதன தெருவில் தேடுவாரற்ற ஒரு கட்டாக்காலி நாயின் தீனமான ஊளைஒலி நிலவுகூட முகம் மறைத்து முக்காடிட்டக் கொண்டது விண்மீன்கள் மட்டும் விட்டுவிட்டு விழிமலர்த்தி என்னை நோட்டமிட்டன சோதிக்கவென்று கொண்டு சென்ற ஏன் அண்ணன் வேலிக்கு அருகில் பிணமாக பள்ளிக்குச் செல்லவென துள்ளிச் சென்ற என் தங்கை வெள்ளி முளைத்த பின்னும் வீடு திரும்பவில்லை வேலைக்குச் சென்ற வேளையில் என் அப்பா ஸெல் அடியில் சிக்கி சிதறிப் போய் விட்டார் அடுப்பங் கரையினிலே ஆரவாரமேதுமின்றி அடுத்த வீட்டுப் பூனையின் அமைதியான தூக்கம் அங்கு அம்மா மட்டும் அசைவதிலிருந்து இன்னும் உயிரிருப்பதை…

  6. இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம் சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம் மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம் பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம் மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும் பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம் கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின் (************** ) விரும்பியதை போட்டு வாசிக்க தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம் தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம் பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம் வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம் ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம் மனிதருக்கு இன்…

    • 13 replies
    • 2.3k views
  7. வந்தது கடிதம் முத்தான எழுத்துக்கள் கொண்டு முத்தங்கள் பல இட்டு சுருக்கமாக நீ எழுதிய மடல் சுணக்கமாக கிடைத்தது இன்று விரித்து வாசித்த வேளை சிரித்தது என் உதடு சின்ன சின்ன சொல்லெடுத்து செதுக்கிய அழகிய காதலை உன் கடிதத்தில் கண்டதும் கண்கள் சந்தோசமாக கண்ணீரை உதிர்த்து நன்றி சொன்னேன் மனசுக்குள் நான் உனக்கு எத்தனை தடவைகள் அன்பான உன் மடலை வாசித்தேனோ நானறியேன்... என் மென்மையான நெஞ்சத்தில் அவ்வரிகள் ஆழமாக பதிந்தன "அன்பே என் நிலா உன் காதல் விண்ணப்பத்தை இன்று நான் ஏற்றுக்கொண்ட்டென் உன்னையே என் இதயவீட்டில் குடியேற்றிவிட்டேன் ஆதலால் ஓடி வா என்னிடம் நீ.. முத்தங்கள் பல தந்து முடிக்கின்றேன் இம்மடலை. என்றும் உன்னவன் ...........…

  8. என் கண்களே எனக்குப் பிடித்த ஒளிப்பதிவுக் கருவி காரணம் அதற்கு உன்னை மட்டுமே பிடிக்கத் தெரியும் * என் பல முத்தங்களுக்கு சில முத்தங்களையே திருப்பித் தந்திருக்கிறாய் நீ உன்னை என்னிடம் இழப்பதற்காகவா முத்தக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் * கவிதை என்று யார் கேட்டாலும் உன் பெயர் சொல்வேன் உன் பெயர் என்னவென்று எவர் கேட்டாலும் நான் எழுதாத காவியம் என்பேன் * என்னை எழுத வைத்தவள் நீ என்றாலும் நான் கவிஞனானது உன்னை அழைத்து அழைத்துத்தான் * உன்னைப் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுதிக் கொண்டேயிருந்தேன் உன்னை விட எழுத நினைத்தேன் எழுதுவதையே மறந்துவிட்…

  9. "காதல் கனியும் நேரம் கவிதைகளோடு உன்வாசலில்..". எரிமலையின் உச்சியிலும் ஏற்றிடும் எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும் பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப் பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும் முன்னெவரும் கண்டிராதது போலவே முதல் உன்னை சிந்திக்க வைத்திடும் நித்திரையின் போதும் உன் நினைவுகளை நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும் சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும் எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில் எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும் இன்னுமதைச்சொல்லப் போனால்-உன் இரவுகளை சுட்டெரித்துவிடும் பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம் பட்டப்பகலிலும் வான்வெள…

    • 7 replies
    • 1.7k views
  10. என் காதல் ...............................தோற்கவேண்டும் நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம் மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன் கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம் வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம் நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும் குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும் குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியன…

    • 8 replies
    • 2k views
  11. சிங்காரி சரக்கு…….. சின்னத் திரை என்னும் வண்ணத்திரை வனிதையவள் கன்னிப் பெண்ணாக கருத்திற்கு விருந்தாக எண்ணத்தில் இனிக்கின்ற கன்னற் சுவையாக கொட்டும் கண்ணீரில் சொட்டும் அமிலத்தால் பந்தமென்றும் சொந்தமென்றும் பாசமென்றும் நேசமென்றும் ஆனந்தம் சொரிகின்ற அழகு வசந்தமென்றும் கெட்டிமேளம் கொட்டிவிடும் மெட்டிஒலி மகளென்றும் செல்லமடி நீ என்றம் செல்வத்தின் மனைவி என்றும் அத்திப் பூ அரசி என்றும் கஸ்தூரி மானென்றும் எத்தனைதான் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றாள் செற்றிக்குள் இருந்தபடி இச் செப்படி வித்தைகளை கண்டு மனம்கசிந்து கைக் குட்டை நனைக்கின்ற கண்ணான எம்மவரின் புண்ணான நிலை கண்டு எண்ணத்தின் கோலத்தை எழுத்தில் வடித்திட்டேன் மென்மைக்கும் பெண்மைக்கும் மெய்ப் பொருளை…

  12. மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…

    • 42 replies
    • 6.5k views
  13. வெற்றியின் சரித்திரம் முழங்குது பார் தேன் சுவை ஊறும் செந்தமிழ் ஈழம் வான் புகழ் கொண்டு வளருது பார் எழிலது பொங்கிடும் எம்முயிர்த் தமிழால் எங்கணும் மங்களம் பொங்குது பார் ஈழமண் மீட்பில் எரிகின்ற தீபம் எட்டுத்திக்கும் சுடர் வீசுது பார் மங்களமாய் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மாண்புறு ஈழமண் மகிழுது பார் செங்களம் ஆடிடும் செங்குருதிப் புனல் எங்கள் உணர்வினில் தெறிக்குது பார் எத்தனை எத்தனை வேங்கைகள் மண்ணில் ஈகம் செய்த உயிர் எழுகுது பார் விதைகளாய் விழுந்த உயிர்களின் தாகம் விருட்சமாய் இங்கு வளருது பார் தேசத்தின் நேசம் நெஞ்சில் நிறுத்திய புhசத்தில் தமிழினம் பொங்குது பார் வடக்கிலும் கிழக்கிலும் வளமது பெருகி வறுமைகள் இன்றுடன் ஒழியுது பார் கனவுகள் மெய்…

  14. சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை ****…

    • 7 replies
    • 6.4k views
  15. கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல். காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும், கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு. “அன்று, நான் அவள் மனதிலும், அவள் என் மனதிலுமாய் எங்கள் காதலை வளர்த்தோம் கம்மங்காட்டின் கடைசியிலும் காளியம்மன் கோயிலிலும் சோளக்காட்டின் சந்தினிலும் செம்மண் புழுதியிலும். கதிராய், காவியமாய், செங்கரும்பாய், செந்தாமரையாய் செழித்து வளர்ந்த காதல் சூழ்நிலைச் சூறாவளியால் சொந்தமின்றி போனது. இன்று, அவள் அவளின் வீட்டில் கணவனுடன் நான் என் வீட்ட…

  16. 1 ‘சே’ சொன்னார் ஒரு புரட்சிகாரனின் தகுதிகள் வலிய கால்கள் எளிய சுமை பசித்த வயிறு என்னிடமோ மூன்றும் இருக்கின்றன நான் என்ன புரட்சிக்காரனா, பாட்டாளியா, பிச்சைக்காரனா? எது நான்? சம்பூரிலிருந்தும், காசா பள்ளத்தாக்கிலிருந்தும், துரத்தியடிக்கப்பட்டவர்களின

  17. தமிழீழமே தமிழர் தாயகம் தமிழீழமே புலிகளின் தாகம் தமிழீழமே தலைவன் இலட்சியம் தமிழீழமே மாவீரர் மூச்சு தமிழீழமே வீழ்ந்த எம் மக்கள் கனவு தமிழீழமே எங்கள் தாய் மடி தமிழீழமே எங்கள் விளை நிலம் தமிழீழமே எங்கள் எதிர்காலம் தமிழீழமே எங்கள் வாழ்வு தமிழீழமே தமிழர் எங்கள் ஒளி..! தலைவன் வழியில் தங்கத் தமிழீழம் விடிந்திட பொங்குவோம் எழுவோம் தகர்ப்போம் தடைகள்..! தாங்குவோம் புலிக்கொடி வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..! அதுவரை.. சீறுவோம் பாய்வோம் வீறு கொண்ட புலிகளாய் வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! பெற்றது : http://kuruvikal.wordpress.com/

  18. காவல் தெய்வங்களே சாவை தழுவி சந்தண மாலை சூடியோரே இமைக்கும் பொழுதினில் எரிமலையாய் வெடித்தீரோ ஈழத்தின் விடியலிற்காய் எமக்காய் எரிந்தீரோ எங்கே சென்று மறைந்தீரோ கடலில் கரைந்தீரோ களத்தில் எரிந்தீரோ விண்ணேறி விடியல் தேடி சென்றீரோ கண் முன்னே வாரும் கனவு தேசம் நாளை கைகொட்டி மகிழ்வோம் கனவு சுமந்து களம் வென்றவரே கடலெல்லை காத்து மீண்டவரே எங்கே சென்றீரோ எப்போது வருவீரோ விழியில் ஓளி ஏற்றி உம் விரல் தொடுகைக்காய் விரதம் இருக்கின்றோம் எம் ஈழத்தின் அரசிற்காய் உம் இதயத்தில் இடம் தந்தீரோ தாயை காப்பதற்காய் தவிப்பெல்லாம் எமக்களித்தீரோ புலியாகி சென்றீரே எம் புகழதை வென்றீரோ வெற்றிக் கிண்ணம் நம்கையில் கொட்டி மகிழ்வோம் ஒடி வாரு…

    • 1 reply
    • 776 views
  19. எம் கரும்புலிகள்! சருகாகி மிதிபடோம் தமீழீழப்பயிருக்கு உரமாவோம் என்றெழுந்த உயிர்கள் காற்றாகிக் கரைந்து களமாடி வென்ற எம் கரும்புலிகள் மண்மீட்க உயிரம்பாய் பாய்ந்த எம் புலிகள் தம்மையே கொடுத்து தமிழீழத்தாய்க்கு வலுச்சேர்க்கும் உயிர்பூக்கள் ! உயிர்கொடுத்து வளர்த்த பெற்றோரை விடவும் மண் மீட்பே தன்மானம் என்று உணர்ந்த உன்னதங்களே! தீயிலே எரிந்தாலும் சுடராகி ஒளிர்கின்ற தங்கங்களே!! உங்களை எப்படிப் பாடுவோம் எங்கள் வேங்கைகளே காற்றாகி கடலாகி களத்திலே எரிமலையாகி ஒளித்தீபம் ஏற்றும் சூரியச் சுடர்களே! அச்சமது துச்சமென்று துணிவு ஒன்றே ஆடையென்று கொண்டு மானம்விட்டு உயிர் வாழ்வதுவா என்று சொல்லிச் சென்றீர்களே பாடம் இங்கு நன்று! விதையாகி விழுந்தவர் எ…

    • 4 replies
    • 1.4k views
  20. கலி முத்திப் போச்சு இன்னும் மேலே மேலே எட்டாத உயரத்தைத் தொட்டுவிடும் துடிப்புடன் இறக்கைகளை அடித்து எழும்பிட முயல்கிறாய் ஆயினும் வாடையின் வேகம் உன் ஆடையை உரசி கட்டுக்குள் அடங்காத உன் கனத்த இறக்கைகளை முறித்திட முயல்கையில் ஏதிர்க் காற்றை முறியடித்து நீயோ எத்தனை தவிப்புடன் காற்றின் திசை நோக்கி வேகம் பிடிக்கிறாய் வேகம் அதைவிட வேகம் ஆனாலும் நீ பெட்டைக்குருவி பேதமை உன்னுடன் கூடப் பிறந்த புpறவிக் குணமா? ஏனோ தெரியவில்லை ஏகிறி எகிறி உன் சிதறிய கனவுகளுடன் கீழே கீழே இன்னும் கீழே மண்ணோக்கிய உன் மனச் சிதைவுகளுடன் வலியின் வேதனையை மிடறுக்குள் விழுங்கியபடி மனப் புதிருக்குள் மண்டிக் கிடக்கின்றாய் விதியின் கையிலோர் விளையாட்டு…

  21. எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…

    • 5 replies
    • 1.3k views
  22. என் செல்லத்துக்கு ஒரு மடல் ......ஒரு தாயின் கண்ணீர் ... காலங்களுக்கு தான் எத்தனை வேகம் . மழலையாய் , தவழ்ந்து ,எழுந்து ,நடந்து , நின்று , ஓடி , துள்ளி விளையாடி ,என் செல்ல மகளாகி (மகனாகி ) படித்து ,பல்கலை புகுந்து ,பட்டம் பெற்று.... இன்று மேற் படிப்புக்காய் ,வெளி நாடு செல்கிறான் (செல்கிறாள் ).பிரிவு என்றும் துன்பம் தான் நீ மேலே வர வேண்டும் என்று நான்,,,,, கீழே ......,பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன் .நானும் ஒரு மகளாய் ,மேல் படிக்க சென்றபோது , என் தாய் என kகு சொன்னதை நான் இன்று....... தாயaக உனக்கு சொன்ன போது... நெகிழ்ந்து தான் போனேன் . கண்மணி கவனமடி , கல்லூரி வாழ்க்கை , மலர்கள் உள்ள தோட்டம் மணம் உண்டு ,அழகு உண்டு ,முள…

    • 3 replies
    • 2.6k views
  23. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........

  24. காகம் இருந்தும் கற்றுக்கொள்ள கிளிகளுக்கு கர்வம் அதிகம் நிறம் சரியில்லை என்றது ஆந்தைக்கு முழி சரியில்லை என்றது பிலக்கொட்டை குருவிக்கு துள்ளல் துடிப்பு அதிகம் என்றது உன் சத்தம் மெத்தக் கூடிப்போச்சு என்று செண்பகம் சொன்ன போது உனக்கு சோர்வு அதிகம் என்றது அடக்கி வாசி என்று அடைக்கலக் குருவி சொன்ன போது உடைத்து விடுவேன் மூக்கை என்று பேச்சுரிமை பேசியது பொந்துக்குள் கிளிகள் பத்திரமாக தனித்தனியே குந்தியிருக்கின்றது பொழுது சாயும் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக தென்னோலைகளை கிழித்து விடுவதுடன் அடங்கி விடுகின்றது அது மார்கழியின் கெற்போட்டம் இல்லை கார்த்திகையின் கனமழை காற்றும் வேகமாக வீசி முன் வேலி முருங்கை முறிந்து விழ…

    • 9 replies
    • 2.8k views
  25. Started by nedukkalapoovan,

    கண்ணின் மணியாய் கனிந்தவளே கனக்குதடி இதயம் காணத்துடிக்குதடி உன்னை.. கண்ணோடு கண் கொண்டு கதைகள் பேசி கணங்கள் மறந்து களித்திருந்த நினைவுகள்..! கனவுகள் கூட கணமும் காட்டுதடி உன்னை கனக்கும் பிரிவுக்குள் கண்கள் சிவக்குதடி தினமும். கண்ணீரின் நிறையது கடல் தாண்டிப் போனதடி கனக்கும் சோகம் கட்டிலில் நோயோடு கட்டியதடி என்னை. கனவாகிப் போனதுவே காளையிவன் களிப்பு..! கணமும் ஏங்குதடி கண்ணில் உன் விம்பம் நாடி. கதறுகிறேன் இன்று தனிமையில்.. கனிந்த உன் நினைவுகள் கனக்குதடி மனசெங்கும்.. கழுத்தில் ஒரு சுருக்கு களிப்புடன் தா கனவில் உன்னைக் கண்டபடி கழற்றி விட என் உயிரை கழன்று விடுகிறேன் உலகை விட்டே கண்களால் நீ என்றும் என்னைக் காணாதிருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.