கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சேய்கள் நாங்கள் வளர்ந்தோம்-தமிழ்த் தாய் வயிற்றில்தானே பிறந்தோம்.. நாய்கள் போல்தான் குரைப்போம்-நம் தூய்மை ஒன்றே உரைப்போம்... தேய்கின்ற நிலவை நகைப்போம்-ஒரு பேய் உள்ளிருக்கும் மறைப்போம்.. பாய்களில் தூங்கிய உடலம்-வெயிலில் காய்ந்ததே ஊரில் மறந்தோம்.. ஏய்ப்பதும் நகைப்பதும் திறமை-அடச் சீய் எனவுரைத்தால் பெருமை ஓய்ந்திடும் பொழுதினும் உயிரே-நம் வாய் ஓய்வதென்பது அரிதே.. செய்வதற்கினியென்ன பாவம்-வேகும் மெய் தொட்டு விழிமையிட்டு வாழ்வோம்.
-
- 11 replies
- 2.1k views
-
-
தெரியாம போச்சுதே...( திபாவளி) ஜயோகோ அரியரோ வந்தனரோ...??? எம் தமிழை அன்று வந்து ஆண்டனரோ....??? தீபாவளியை கொண்டு வந்து தினித்தனரோ....??? எம் தமிழர் அன்று என்ன பல் இழித்தனரோ....??? ஆண்டாண்டாய் ஆடி படி கழித்தனரே.... அந்த காலமிதை சொல்ல ஏனோ மறந்தனரோ....??? இன்று மட்டும் எப்படியோ கண்டனரோ....??? ஒடி வந்து எங்களிற்கு சொல்லினரோ....??? ஒப்பாரி வைத்து இங்கு காத்துறாரே..... எம்மை மாறும்படி வந்துயிங்கு கெஞ்சிராரே.... ஆதியந்தம் கேட்டுப்பிட்டா முழிசிறாரே.... அந்த ஆய்வுகளை சொல்ல ஏனோ மறுக்கிறாரே....??? ஆண்ட எங்கள் மன்னனையோ அழித்தனரோ....??? அட…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- அன்பனே உன் தோழியைவிட துப்பாக்கியை நேசிக்கும் தோழனே என்னோடு மெழுகுவத்திகளும் அழுதுகொண்டிருக்கும் இந்த மெல்லிய இரவில் கடிதத்தில் விழும் என் கண்ணீர்ச் சொட்டு கடிதத்தில் அழிவது மெல்லினமும் வல்லினமும்தான் கண்ணீரில் அழிவது தமிழினமே அல்லவா? நாங்கள் நட்சத்திரங்களைப் பார்த்து நாளாயிற்று எங்கள் வானத்தைப் புகைமண்டலம் போர்த்திருக்கிறது மனிதன் மட்டும்தான் சிரிக்கும் ஜீவராசியாம் அப்படிப் பார்த்தால் இப்போது இங்கு யாரும் மனிதராசி இல்லை. காதலா நீயும் நானும் ரகசியமாய் நடந்து போகும் ராத்திரிச் சாலை இப்போது - வெடிகுண்டுகளின் விதைப் பண்ணையாகிவிட்டது …
-
- 5 replies
- 1.2k views
-
-
ஏன் கொன்றாய்....??? வீதியலே நின்றவரை வீனாக ஏன் சுட்டாய்....??? என்ன தவறிழைத்தார் என்றவரை நீ கொன்றாய்....??? அட உன் குற்றம் நீ மறைக்க ஊமையதை ஏன் கொன்றாய்...??? அவன் பார்த்து நின்றான் என்றா மா பாவி நீ கொன்றாய்....??? சாட்சியாகி நின்றிடுவான் என்றென்னியா நீ கொன்றாய்....??? பிறப்பினிலே வாய் கட்டி இறைவனவனை தான் படைத்தான்.... மொழிகளதை அறிந்தும் அவன் பேச முடியா அவன் துடித்தான்.... திங்கின்றி கிடந்தவனை தீண்டி வந்து ஏன் கொன்றாய்....??? உன் பீத்தல் நீ மறைக்க அந்த உத்தமனை ஏன் கொன்றாய்....??? என்ன கெடுதல் இழைத்தான் என்று இன்றவனை நீ கொன்…
-
- 0 replies
- 878 views
-
-
நீ புனிதன்... ( நிமலராஜன் ) தோழனே... ஆண்டுகளோ ஆறாச்சு எம்மை நீ பிரிந்தாச்சு.... ஆனாலும் எம் மனசில் நீ நீங்காத நினைவாச்சு.... எங்கள் மண்ணில் நின்று பகை எம் தமிழை கொல்லையிலே... உந்தன் பேனா நீ எடுத்து உண்மைகளை நீ உரைத்தாய்... எம் தமிழர் அவலங்களை எங்கனுமே நீ உரைத்தாய்... அச்சமில்லை என்றென்னி உன் உயிரை துச்சமதாய் நீ நினைத்து உந்தன பணி நீ செய்தாய்... செம்மணியின் கொலைகளையும் செம்மையாக நீ உரைத்தாய்.... அம்மணியின் ஆட்சியதின் அவலங்களை நீ உரைத்தாய்.... ஜயோகோ பொறுக்கலையே அவர்தனைக்கு... பாய்நதடித்து வந்துந்தன் பாவி உயிர் குடித்தனரே.…
-
- 0 replies
- 770 views
-
-
லண்டனுக்குள் என் வீடு... என் வீட்டுக்கு முன்பாக...ஒரு பேரூந்து தரிப்பிடம்.. நான் வேலைக்கு செல்லும் நேரங்களில்.. அந்த சோதரி.. அங்கே.. பேரூந்துக்காக காத்திருப்பாள்.. ஒழுக்கமான.. உடை.. நீறிட்ட நெற்றி.. மண்வாசனையோடிருப்பாள்... ஒரு காத்திருப்பின் போது சில காலிப்பையன்கள்.. சுற்றிக் கலாட்டா.. கலங்கிக்கொண்டிருந்தாள்.. நானும்..என் நண்பனும்..அவர்களை... விரட்டியதும்.. நன்றி அண்ணாவென்றாள்.. தினசரி சிரிப்பாள்.. வணக்கம் சொல்லுவாள்... காலம் போய்க்கொண்டிருந்தது.. ஆடை மாறிக்கொண்டிருந்தது.. அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது... நவநாகரீக நங்கையானாள்.. ஒருபோது..வைபத்தில்.. மது அருந்திக்கொண்டிருந்தாள்.... அருவருப்பையும்... முகம் சுளிப்பையும்.…
-
- 125 replies
- 13.7k views
-
-
புலிக்கு வைத்த பொறியில் மாட்டிய பகை... மேசையின் கீழொரு வெடி குண்டு அமர்ந்தால் புலியது பல துண்டு... பார்த்தே இருக்குது பகை இரண்டு... அதில் பாய்ந்தே உண்ணும் கழுகொன்று... கூரிய நீள சொண்டொன்று அதலால் குத்தியே உண்ணும் புலி துண்டு... கூடியே செய்து சதியங்கு எடுக்கவே காத்திருக்கு புலி பலியங்கு... இவரை நம்பியே போகுமா புலியங்கு....??? பதுங்கியே எடுக்குது தற்காப்பு இதுவே புலிக்கு முதற்காப்பு... மேசையை மாற்றி குந்திடுங்க வருகிறோம் பேச்சில பங்கெடுக்க....!!! 16-10--6 இந்த இணையத்தில் பார்த்த கேலிசித்திரம் இவ்வாறு சொல்கிற(தா)து... www.webeelam.com
-
- 0 replies
- 1.3k views
-
-
தன்வினை தன்னை சுடும்...(நொருங்கிய கிபிர்) முகில்கிழித்து வானதிர உள் நுழைந்தாயே.... எம் தமிழர் உயிர் குடித்து நீ மகிழ்ந்தாயே.... காலையிலே வந்து வேறு குண்டடித்தாயே... கணப் பொழுதில் உடல்கிழிந்து நீ அழிந்தாயே.... செருக்கோடு வந்துயன்று நீ திரிந்தாயே.... அந்த செஞ்சோலை உயிர்களையும் நீ குடித்தாயே.... வெறிபிடித்து உயிர்குடிக்க நீ அலைந்தாயே... இன்றோ பார் உடல் சிதறி நீ விழுந்தாயே....!!! - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :P :P :P :P
-
- 0 replies
- 1.1k views
-
-
நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
ஏன் மௌனமானாய்....??? சிங்களவன் அழிகையிலே சீறி எழும் உலகமே... எம் தமிழ் அழிகையிலே ஏன் உனக்கு மௌனமோ...??? பயங்கர வாதியேன்றேன் பயங்கரமாய் தூற்றுகிறாய்...??? பயங்கரமாய் வந்து அவன் பயங்கரங்கள் ஆடுகிறான்... பார முகமாய் ஏனோ நீ பாரினில் இருக்கிறாய்...?? ஏழை என்றா எம் தமிழை ஏறி இன்று மிதிக்கிறாய்....??? நடு நிலை என்றேன் நா வறள கத்துகிறாய்... இன்று நடு நிலை மறந்தேன் நரகத்திலே கிடக்கிறாய்...??? நா நனைந்து எம் தமிழர் நாட்கணக்காய் ஆச்சு... நலிவடைந்து உடலதுவோ உயிர் பிரியும் நிலை போச்சு.... நின்மதி இன்றியவர் நிர்கதியாய் ஆச்சு... எண் கணக்கில் பயங்கரங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
கூலிப் படையே உனக்கு இரக்கம் இல்;லையா....??? பகை முகாம்கள் காலடியில் எம் சிறார்கள் பிச்சைகேட்டு.... பட்டினியால் தவிக்கையிலே பாவம் அவர் கையேந்தி.... நீ உண்டெறிந்த மிச்சம் கேட்டு உந்தன் முன்னால் நிரையடுக்கில்.... ''பிஞ்சு வந்து கேட்கையிலே எட்டி எட்டி உதையிறியே....'' ஈவ் இரக்கம் இன்றியவரை எள்ளி நடை ஆடுறியே..... முட்டி விழியில் நீர் கொட்ட முண்டியடித்து நிக்கையிலே.... திட்டி திட்டி வந்தவரை எட்டி எட்டி உதையிறியே.... அவர் விட்ட கண்ணீர் கூட உந்தன் இதயமதை கரைக்கலயா....??? ''வறுமை என்று தானே வந்து படையில் நீயும் இணைந்தாயே...'' அட உந்தன் மனம் கூட கொஞ…
-
- 1 reply
- 970 views
-
-
இந்த மண்ணின் மைந்தர் நீங்கள் ( காயப்பட்ட ஆமி சொல்லுறான்) என் கைகளில் இரண்டும் கட்டு.... வழியினால் கண்ணீர் சொட்டு.... உண்ணவே முடியல உணவு... கெஞ்சிறேன் உனை நான் கேட்டு.... புலியே வந்தெனக்கு ஊட்டு... எந்தன் கடமைகள் யாவையும் தொட்டு.... செய்கிறாய் இனப்பாகு விட்டு... மனிதத்தை நெஞ்சதில் கூட்டி.... செய்கிறாய் பணியதை சுட்டி.... உன்னையா வந்தேன் நான் கொல்ல....??? இந்த உணர்வதை எங்கே நான் சொல்ல....??? வெறியதை ஊட்டியே வளர்த்தார்.... உன்னை கொல்லவே எம்மையே வைத்தார்..... உம்மை பார்த்ததும் இன்றே அறிந்தேன்... மனிதத்தை இன்றே உணர்ந்தேன்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
''பயந்தோடிய படைகள் சிதைந்ந நிலை.....!!!'' கிழக்கின் மீது ஏறி ஆடி சிரிச்சு முடிச்சீக... இப்போ உங்க கிழிஞ்ச உடலை கண்டு ஏனோ வழி பிதுங்கி நிண்டீக....??? கண்ணை மூடி கணைகளை தான் ஏவி விட்டிக.... எண் கணக்கில் புலிகள் பலி என்று சொன்னீ;க.... வெற்றி கள நாயகராய் உம்மை உரைத்தீக.... இன்று வேண்டி கட்டி வாயடைத்து ஏன் நீண்டீக....??? முகமாலை முன்னரணில் முதுகுடைத்தீக... முறிந்து விழுந்த படைகளையே பொதியில் ஏற்றீக.... கனரகங்கள் கொண்டு வந்து கை அளித்தீக.... கரிகாலன் படையணியை பலமாக்கி விட்டிக.... இனி ஏறி வரும் களங்களிலே வேண்டி கட்டுங்க.... ஜயா மகிந்த ஆட்சிக…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஓப்ரா கவுசில் ஒரு மாலை பொழுது ஒலித்தது ஒரு கணீர் குரல் ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான் ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில் ஒப்ரா கவுசில் தேனிசை மழை ஒமந்தையில் குண்டு மழை ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு ஓசி தமிழன் நாம் ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம் ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள் ஓப் போடுகிறோம் நாம் ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
-
- 12 replies
- 1.9k views
-
-
அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது.. அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது... இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
Shine தமிழ் இளைஞர்களின் படைப்புகள்... கேட்டுப்பாருங்கள்.... பாடல்கள்(ஒலி வடிவம்) Right click and select "Save as.." to download http://www.roughrhythm.com/filestore/Shine...heendoftime.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...nwillwerise.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...meflywithme.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...swillchange.mp3 பாடல்(ஒளி வடிவம்) http://www.roughrhythm.com/Artister/Shine/Video/ மேலதிக தகவல் http://www.roughrhythm.com/Artister/Shine/ நன்றி சாணக்கியன்
-
- 12 replies
- 2.7k views
-
-
போதும் என்ற மனம்.. பொன்னான மனம்.. இனிப் பொறுத்தது போதும்.. என பொங்கிய மனமே.. தமிழுக்காய் போர்க்களமாடும்.. மனம்.. போருக்கும் மனமில்லை.. தாய் ஊருக்கும் ஒட்டில்லை உயிருக்குப் பயந்தோடி வந்தேன்.. புகழுக்கும் பொன்னுக்கும் தான் ஆசை கொண்டேன்.. தாய் மண்ணுக்காய் போராடும் அண்ணா.. உன்தம்பி ஒரு கோழை எனை மன்னிப்பாயா அண்ணா எனை மன்னிப்பாயா...
-
- 2 replies
- 1k views
-
-
மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?
-
- 35 replies
- 4.8k views
-
-
[color=darkred] தப்பி ஓடிய படைகள்..... பறையடித்து படையெடுத்த பகை அழிந்தது.... பனிச்சங்கேணி பறிக்க வந்த படை சிதைந்தது.... அடியெடுத்து வைக்கையிலே அடி விழுந்தது.... எண் கணக்கில் ஜம்பதுகள் அங்கு முடிந்தது..... பொறுத்திருந்த புலியணிகள் பொங்;கி எழுந்தது.... போர் முரசு கொட்டி பகையை பிணமாய் எடுத்தது.... உயிரோடு ஒருவனையும் உடனெடுத்தது.... போர் கருவிகள் போட்டெறிந்து படை ஓட்டம் எடுத்தது.....!!! - வன்னி மைந்தன் - பனிச்சங்கேணி போர் ... 06- 10-06 :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
-
- 3 replies
- 1.6k views
-
-
வரும் தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. பெருந் தமிழ்நாடும் தமிழ்நாடும் பக்கந்தான்.. இனியேனும் தணியாதோ யுத்தந்தான்... இளங்காற்றோடு இசைகேட்டேன்.. சந்தந்தான்.. மழலை சிரிக்க... மான்கள் குதிக்க... மண்ணெல்லாம் மலரோடு ஜொலிக்க...முற்றங்களெல்லாம்.. மங்கையர்.. கரங்கள்.. வளையல் குலுங்க.. மாக்கோலம்..போட்டிருக்க... இமயங்கள் காண.. இளைஞர்கள் யாவரும்.. ஞானஒளி ஏற்றிவைக்க.. ஏழ்மையில்லை..இனி ஒரு பயமுமில்லை.. நள்ளிரவில்.. மின்விளக்கு சிரிக்க... வரும்... தமிழீழம் தமிழீழம் சொர்க்கந்தான்.. மண்ணின் வளத்துக்கு உரமான உள்ளங்கள் வாழ்க.. மண்ணின் வளத்துக்கு உரமான உதிரங்கள் வாழ்க...
-
- 20 replies
- 2.9k views
-
-
நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி
-
- 22 replies
- 4.8k views
-
-
இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி இழந்து விட்டோம் பிஞ்சுகளை சீதையிட்ட கண்ணீர் அங்கே இன்னுமா ஆறாய் ஓயவில்லை யார் இட்ட சாபம் அங்கே ஏன் இந்த அவலக்கோலம் வெந்தபுண்ணின் காயங்கள் இன்னும் அங்கே மாறவில்லை சொந்த மண்ணில் தமிழன் வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை? இறைவன் படைத்த மண்ணில் தமிழனுக்கு ஏன் இறமையில்லை புத்தனின் பெயரினாலே கொடுமைகள் நடக்குது அங்கே புத்தனும் உயிர்த்து எழுந்து வந்தால் தமிழனுக்காக விம்மி அழுதிடுவான் தொப்பிள் கொடி உறவுகளும் தூங்கிப் போய் இருந்தனவே செஞ்சோலை படுகொலையால் உயிர் பெற்று எழுந்தனவே பிஞ்சுகளின் இழப்புத்தான் அங்கே மீண்டும் உறவுப்பாலம் அமைத்தனவோ இழப்புக்கள் இனி எமக்கு வேண்டாம் உறவுகளே இ…
-
- 26 replies
- 4k views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-