Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. படங்கள் ஆறு.. அத்தனையும் ஜோரு? மொத்தம் படமும் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் பின் தங்கிவிட்டன. முட்டி மோதி தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள் ஆறே ஆறு. இதில் எவையெல்லாம் ஜோரு என்கிற விஷயத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் ரலீஸ் ஆகிற படங்களின் லிஸ்டை பார்ப்போம். பீமா - கடைசிநேரத்தில் கூட யாராவது தடை வாங்க கூடும் என்ற அச்சத்திலேயே ரிலீஸ் ஆகிற படம். நினைத்த மாதிரியே தெலுங்கு ரிலீசில் சிக்கல். இப்படி தடையாகிற படங்கள் எல்லாம் வெற்றியை குவிக்கும் என்பது தமிழ்சினிமா சென்ட்டிமென்ட். அந்த வகையில் பார்க்காவிட்டாலும், சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமி, விக்ரம்-த்ரிஷா என்ற அட்ராக்ஷன் அதிகம்! சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதாநாயகியை…

  2. பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என்று தனது ஆதங்கத்தை ‘அய்யா வழி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே சீற்றத்தோடு வெளிப்படுத்தி, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர் புலமைப்பித்தன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகம், சினிமா, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கி வரும் இவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். அவரிடமே பேசினோம். உங்களுக்கு ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது அப்படி என்ன கோபம்? ‘‘ ‘ரீமிக்ஸ்’ செய்வதன் மூலம் அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரிஜினல் பாடலில் உள்ள அழகைக் கெடுத்து காட்டுமிராண்டித்தனமான இசையைச் சேர்க்கிறார்கள…

    • 10 replies
    • 2.4k views
  3. அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், அண்மையில் தமிழகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்காக காண்பிக்கப்பட்ட காதல் கடிதம் திரைப்பட காட்சியின் பின்பு இன்று தமிழ்சினிமா இணையத்தளம் இப்படி ஒரு விமர்சனத்தை எங்களுக்காக வழங்கியிருக்கின்றது. நீங்களும் வாசித்து பின் திரையரங்கத்திற்கு வரத் தயாராகுங்கள். நோர்வேயில் 02.02.2008 அன்று வெளிவரும். தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளின் பின்பும். இலங்கையில் இந்த மாத இறுதியிலும் வெளிவரும். திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன். காதல் கடிதம்-விமர்சனம் குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பா…

  4. பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது. புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின. இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் …

  5. ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ரோபோ படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு சிவாஜியை ஏ.வி.எம். நிறுவனம் ரூ.80 கோடி செல வில் தயாரித்து உலகம் முழுவதும் திரையிட்டப்பட்டு ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஷங்கரின் அடுத்த படம் என்ன? ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் என்ன? என்பது கேள்வியாக இருந்தது இந்நிலையில் சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.ரோபோவை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே.கருணா மூர்த்தி, ஈரோஸ் மல்டி மீடியா கிஷோர் லுல்லா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகி…

  6. வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…

  7. நடிகர் பாண்டியன் மரணம்! மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். புதுமைப் பெண், கிழக்க…

  8. சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர். சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள…

    • 2 replies
    • 1.9k views
  9. ஆச்சி மனோரமாவிற்கு பாராட்டுவிழா உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒய்யாரமாக அமர்ந்துள்ள ஆச்சி மனோரமாவின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டும் வகையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு ஜனவரி 14ம் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து ஆச்சியை பாராட்டவுள்ளது. மணிமகுடம் என்ற நாடகத்தின் மூலம் கலை உலகுக்கு அறிமுகமானவர் மனோரமா. 1957ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கைதான் மனோரமா நாயகியாக, நடிகையாக நடித்த முதல் திரைப்படம். இவர் திரையுலகிற்கு நடிக்கவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற உலக ச…

  10. கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…

    • 10 replies
    • 3.7k views
  11. அல்டிமேட் ஸ்டார் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிற…

    • 13 replies
    • 4.5k views
  12. Movie : Before the devil knows you're dead (2007) Director : Sidney Lumet Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்க…

    • 0 replies
    • 1.3k views
  13. http://www.wmmfilm.com/ - New uppdates and New trailer attached. காதல் கடிதம் திரைப்படம் 11-01-2008 Kadhal kaditham movie coming soon (for other countries) யாழ்கள உறவுகளுக்காக முதன் முதலாக காதல் கடிதம் திரைப்படத்தின் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இணையத்தளத்தை இங்கே இணைக்கின்றேன். இந்தக் காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஆனால் திரைக்கு வருவதற்கு படாத பாடு பட்டு ஒரு மாதிரி திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு தாய் தந்தைக் பிள்ளையை பெற்று வளர்த்து பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப…

    • 16 replies
    • 3.5k views
  14. ஒன்பது ரூபாய் நோட்டு - சுந்தர் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை வாழவைக்கும் ஒர் உன்னத மனிதர், குடும்பச் சூழல் காரணமாக ஒன்பது ரூபாய் நோட்டாக (செல்லாத நோட்டு) மாற நேரும் நிலையை இயல்பு மீறாமல் பதிவு செய்திருப்பதே இப்படம்! தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவர் படையாட்சி (சத்யராஜ்). பூமியையே சாமியாக நினைத்து வாழும் அவர், மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, ஒரு வருத்தம் மிகுந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கட்டியத் துணியோடு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன் (அர்ச்சனா). சுய கெளரவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலையில், தன் நண்…

  15. Started by சுவைப்பிரியன்,

    பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த (தாஜ்மகால் இல்லை)வேறு படங்களின் யெர்களை யாராவது தந்து உதவுங்கள்.அவர் நடித்த படம் ஒன்றில் நல்ல பாடல் ஒன்று உள்ளது.அது இப்ப நினைவில் இல்லை.எந்தப்படம் என்றும் தெரியாது.அது தான்.நன்றி.

  16. ராமேஸ்வரம் திரை விமர்சனம் உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம். கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர். தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுப…

  17. செந்தில் நாயகி மீனா? கலக்கல் காமெடியனாக தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்பட்ட செந்தில், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆதிவாசியும் அதிசயபேசியும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பார் என்று கூறப்படுகிறது. மாளவிகாவும் படத்தில் இடம் பெறுவார் என்றும் தெரிகிறது. கவுண்டமணியிடம் அடி வாங்கியே அப்பருக்குப் போனவர் செந்தில். தனித்தும் பல படங்களில் கலக்கியுள்ளார். நீண்ட நெடுங்காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வகுத்துக் கொண்டு கலக்கி வந்த செந்தில் முதல் முறையாக நாயகனாக நடிக்கவுள்ளார். படத்தின் பெயர் ஆதிவாசியும் அதிசய பேசியும். இந்தப் படத்தில் செந்திலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார் இயக்குநர் மாலன். இதுகுறித்து அவர் கூறுகையில்,…

  18. இராமேசுவரம் படத்தைப் பார்த்தேன்.ஈழத்தமிழர் பற்றி தமிழ்சினிமா நினைப்பு என்ன என்று குழப்பமாக தான் இருக்கிறது.எங்கள் பிரச்சனைய மையமாக வைத்து சுயலாபம் தேடுவதற்கு இயக்குனர் செல்வம் முயற்ச்சி செய்கிறாரா.இராமேசுவரம் படத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து 36 km என்று இருக்கிறது .ஆனால் படத்தைப்பார்த்தால் 3600 km போலல்லவா இருக்கிறது........... "இராமேசுவரம் படம் பற்றி இயக்குனர் சீமான்" (இலங்கைப் பிரச்சனையை படமாக்கக் கூடாது) இலங்கைப்பிரச்சனையை அரைகுறையாக சொல்வதை விட அதை படமாக்காமல் இருக்கலாம் என்கிறார் இயக்குனர் சீமான். இலங்கை அகதிகளைப்பற்றி இராமேசுவரம் படத்தில் கூறியிருப்பதாக சொன்னார்கள்.ஆனால் படத்தில் இலங்கையில் இருந்து வரும் அகதி இங்குள்ள பண்ணையார் பெண்ணைக் காதலிக்கிறா…

    • 5 replies
    • 2.7k views
  19. Started by kurukaalapoovan,

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். மிகவும் புகழ்பெற்ற திறமையான இசையமைப்பாளர் Wilhelm Furtwangler நாசி யேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிட்லரின் ஆட்சிக்காலத்தில் யேர்மனியர்கள் யார் யார் கிட்லரின் ஆட்சி உயரப் பலமாக இருந்தார்கள் என்ற விசாரணையில் துருவப்படுவதை மய்யப்படுத்தியது. நேசநாட்டுத்தரப்பின் யேர்மனியில் பாசிசவாதத்தை நீக்கும் நிகழ்ச்சி நிரலின் (de-nazification) அங்கமாக கிட்லர் காலத்தில் பிரபலமானவர்களாக இருந்தவர்களிற்கும் கிட்லரின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றி கடுமையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் இனங்காணப்படாது புதிய யேர்மனியில் இலைமறைகாயாக இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு பிரபலமானவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ…

  20. கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…

    • 0 replies
    • 2.9k views
  21. ஓபனிங் கிங் நான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அஜித். இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் 'பில்லா' முதல் மூன்று நாட்களில் மற்ற அனைத்துப் படங்களையும் விட அதிகம் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சென்றவார இறுதிவரை, சூர்யா நடித்த 'வேல்' சென்னையில் மட்டும் 1.8 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது தனுஷின் 'பொல்லாதவன்'. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்' ஐந்துவார இறுதியில் 1.28 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை திரையரங்கு நிலவரம் இது. அஜித்தின் 'பில்லா' முதல் மூன்று நாள் ஓபனிங்கில் தீபாவளிப் படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை சிட்டியில் இப்படம் முதல் மூன்று நாளில் ஐம்பது லட்சத்திற்கு மேல் வசூலித…

  22. கெட்டவன் படத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாக சிம்பு தெரிவித்துள்ளார். வழக்கமாகவே பெரிய ஹீரோயின்களுக்கு வலைவீசும் சிம்பு, ஜோதிகா, நயன்தாரா, ரீமாசென்னை தொடர்ந்து அசினை குறிவைத்துள்ளார். லேகா நீக்கப்பட்டுவிட்டதை தொடர்ந்து அந்த பாத்திரத்திற்கு அசினை கேட்டிருக்கிறார்களாம். ஆனால் அசினிடமிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். இந்தியில் பிசியாக இருக்கும் அசின், சிம்புவிற்கு ஜோடியாவாரா என்று தெரியவில்லை. சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடிக்க சினேகா மருத்துவிட்டதை தொடர்ந்து அவரைப் போலவே இருக்கும் புதுமுக நடிகையை தேர்வு செய்துள்ளார்கள். எதற்கும் அசினை போலவே ஒரு புதுமுக நடிகையை தேர்வுசெய்து வைப்பது நல்லது நன்றி நக்கீரன்

    • 3 replies
    • 2.5k views
  23. 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் அறிமுகமாகி அப்போது இருக்கும் இளம் உள்ளங்களை அள்ளிக் கொண்டவர் ரம்பா. விஜய், அஜித், பிரசாந்த் என ஒரு சுற்று வந்தவர், ரசிகர்களால் 'தொடையழகி' என்ற பட்டமும் பெற்றார். கசாப்புக் கடைகளில் 'ரம்பா ஸ்பெஷல்' என எழுதி வைத்துத் தொடை கறியை வியாபாரம் செய்து வந்தது ஒரு காலம். சிம்ரன், ஜோதிகா என புது முகங்கள் அறிமுகமாக, பழையமுகம் ஆனார் ரம்பா. பின் சத்யராஜ், பார்த்திபன் என சீனியர் நடிகர்களோடு காலம் தள்ளினார். அந்த காலமும் முடிவுக்கு வர ரம்பா ஓரம் கட்டப்பட்டார். அதை தொடர்ந்து குஜராத்தி படங்களிலும், மராத்திப் படங்களிலும் திறமை காட்டி வந்தவர் 'சின்ன வீடு' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கும் ரம்பா, வ…

    • 2 replies
    • 1.6k views
  24. Started by nunavilan,

    விஜய் --அசின் பேட்டி

    • 1 reply
    • 1.5k views
  25. இளம் இயக்குநர்களில் தமிழ்ப்பற்று உடைய ஒரே ஒரு இயக்குநர் சீமான் என்பது தெரிந்ததே. தற்போது தமிழில் வரும் பல படங்கள் தமிழ் படங்களாகவே இருப்பதிலை என்பது இவரின் பெரிய வருத்தம். இவர் மாதவன், பாவனாவை வைத்து இயக்கி வரும் படம் வாழ்த்துகள். இப்படத்தில் ஆங்கில வசனங்களே இல்லை என்பது தெரிந்த விஷயமே. 'ஹலோ, குட் மார்னிங்!' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டும் படத்தில் ஒரே ஒரு முறை வருகின்றனவாம். படப்பிடிப்பு தளத்தில் கூட சீமான் தமிழையே பயன்படுத்துகிறார். ஸ்டார்ட் கேமரா, கட் என்பதையும் ஆரம்பி, நிறுத்து என்றே சொல்லி வருகிறார். இதனால் பாவனா ஒன்றும் புரியாமல் இருந்து வருகிறார். இப்படியாவது நாயகிகள் நல்ல தமிழை தெரிந்து கொள்ளட்டும். (நல்ல விஷயம்தானே!) நன்றி நக்கீரன்

    • 0 replies
    • 958 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.