வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்? பட மூலாதாரம்,TWITTER/ GETTY IMAGES நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது. வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்…
-
- 0 replies
- 396 views
-
-
பிரபு மகனுக்கு திருமணம் பிப்ரவரி 08, 2006 சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…
-
- 0 replies
- 925 views
-
-
கல்லூரி - திரை விமர்சனம் http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3241.htm http://movies.sulekha.com/kalloori/wallpap...4/image3239.htm 'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன். கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான். பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள். பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர். கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல…
-
- 0 replies
- 2.9k views
-
-
சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை. இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது. Cinesouth…
-
- 0 replies
- 897 views
-
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 911 views
-
-
தெலுங்கு பட உலகில் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிப்பில் வெளியான கப்பர் சிங் படம் சூப்பர் ஹிட். இதை அடுத்து இளம் கதாநாயகிகளில் தெலுங்கு பட உலகம் சுருதி ஹாசனுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி உள்ளது. சுருதியும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று படங்கள் ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் விளம்பரப் படங்கள் வேறு குவிகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், மனதை மாற்றிக் கொண்ட இயக்குனர் சுருதி ஹாசனை ராம் சரண் ஜோடியாக நடிக்க வைக்க விருப்பம் கொண்டு, சுருதியை அணுகிய போது, ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம் சுருதி. இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாலும் 2 வார காலம் தயாரிப்பாளர், சுருதி, மற்றும…
-
- 0 replies
- 664 views
-
-
பெர்லின் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் முதன்முறையாக தமிழ் குறும்படம் இடம்பெறுகிறது.பிரதீபன் என்பவர் இயக்கி உள்ள குறும்படம் ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’. இலங்கையில் போரினால் தமிழ் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருவாக கொண்ட இப்படத்திற்கு சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா அர்ஸ் எடிட்டிங் செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் பங்கேற்கிறது. தென்னிந்திய படம் ஒன்று இங்கு போட்டி பிரிவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=458 -தினகரன்
-
- 0 replies
- 1.4k views
-
-
சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும் 9 மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. இதுமாதிரி இன்னும…
-
- 0 replies
- 453 views
-
-
A film without a story::
-
- 0 replies
- 570 views
-
-
அன்புள்ள ரஜினிகாந்த், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழ் ரசிகன் எழுதுகிறேன். நலமா? இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2-ம் தேதி உங்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக செய்திகள் படித்தேன். அதில் நீங்களும், கமல்ஹாசனும் கலந்துகொள்வீர்கள் என்ற 'சிறப்பு செய்தி'யையும் படித்தேன். நல்லது. நீங்கள் வர வேண்டும் எனவே விரும்புகிறேன். இப்போது மட்டுமல்ல... எப்போதுமே நீங்கள் இத்தகைய போராட்டங்களில் முன் நிற்க வேண்டும் என்றும், நீங்களே முன்வந்து தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதை செய்ய வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் யதார்த்தம் எ…
-
- 0 replies
- 767 views
-
-
வாத்தி - சினிமா விமர்சனம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ் சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு போலீசில் மனு T சொத்துக்களை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார். நடிகர் கஞ்சா கருப்பு திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:- கடந்த வருடம் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் டைரக்டராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது. இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் …
-
- 0 replies
- 403 views
-
-
முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…
-
- 0 replies
- 509 views
-
-
இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…
-
- 0 replies
- 967 views
-
-
தமிழில் பாலுறவு சினிமா - யமுனா ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இன்று உலக சினிமாவிலும் முக்கியமான பிரச்சினை பள்ளிக் கூட விடலைப் பிள்ளைகளின் காமம் தொடர்பான பிரச்சினைதான். இங்கிலாந்தில் பள்ளிக் கூட ஆசிரியர்களும் ஆசிரியைகளும் தமது மாணவ மாணவிகளோடு பாலுறவு கொண்டிருந்தார்கள் எனும் பிரச்சினை வெகுஜன ஊடகங்களில் பரவலான விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்திலும் இவ்வாறான நடத்தை தவறிய ஆசிரியர்கள், மாணவிகளைப் பாலுறவுக்கு உட்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்படுகிறார்கள் எனும் செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் மாறிவரும் பாலுறவு மதிப்பீடுகள் தொடர்பாக இந்தியா டுடே பத்திரிக்கை ஒரு சிறப்பிதழும் வெளியிட்டது. …
-
- 0 replies
- 7.4k views
-
-
குழப்பமான என் வாழ்க்கையை மாற்றியவர் நாக சைதன்யா - சமந்தா 2016-09-26 10:49:16 தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளோம் என்றும் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நடிகர் யார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைத் தான் அவர் காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் பரவின. அதை மெய்ப்பிக்கும் விதமாக இருவரும் பட விழாக்களுக்கும், விருந்து நிகழ்ச்சிகளுக்கும் ஜோடியாக சென்று வந்த படங்களும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன…
-
- 0 replies
- 271 views
-
-
ஆர்.எஸ்.கார்த்திக், அஞ்சலிராவ் நடிக்கும் படம் ‘பீச்சாங்கை’. அசோக் இயக்குகிறார். அவர் கூறியது: விபத்தில் சிக்கும் ஹீரோ, ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோரம் என்ற ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். இதில் அவரது பீச்சாங்கை அவர் சொல்படி கேட்காமல் மாறுபட்டு செயல்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், அரசியல் சட்டையர், கடத்தல் என வெவ்வேறு களத்தில் கதை பயணிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பகலில் நடத்துவதற்காக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தும் அனுமதி தரவில்லை. இரவில் ஷூட்டிங் செய்து கொள்ளுங்கள் என்றனர். எனது கதை பகலில் நடப்பது. அதை எப்படி இரவில் எடுக்க முடியும். இதுபோல் பல படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மட்டும் பகலில் பெரிய …
-
- 0 replies
- 275 views
-
-
நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) - இரமணிதரன் கந்தையா - முகநூல் குறிப்புகள் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபத…
-
- 0 replies
- 489 views
-
-
"ஆமாம்... கிளாமர்தான் என் ப்ளஸ்னு நிறைய விஜய் படங்கள்ல கமிட் பண்ணாங்க!" - சங்கவி "என் பூர்விகம் மைசூர். பேமிலி, கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. என் பேமிலி மெம்பர்ஸ் சிலபேர் கன்னட சினிமாவுல இருந்தாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே சினிமாமேல ஆர்வம் வந்துடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது எக்ஸாம் லீவ்ல நானும், அம்மாவும் ஒரு பேமிலி ஃபங்கஷனுக்காக சென்னை வந்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில என்னைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் சார், அவரோட படத்துல நடிக்க என்னைக் கேட்டார். அப்போ எனக்கு சுத்தமா தமிழ் பேசத் தெரியாது. எங்க அம்மாவோ, பாக்யராஜ் சாரிடம், 'இவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்'னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட கேட்டப்போ, 'இல்லை, பொண்ணு படிக்கணும். இப்போ நடிப்பெல்லாம் வேணாம்'…
-
- 0 replies
- 871 views
-
-
மனிதர்கள் மடியலாம்... மண் மடியக்கூடாது! - 'தேன் கூடு' சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை! ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர். தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார். 1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னம…
-
- 0 replies
- 749 views
-
-
[size=4]பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் 'டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.[/size] [size=4]மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.[/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 0 replies
- 593 views
-
-
அடுத்தடுத்து அண்ணன்கள் மரணம்; பாலியல் தொல்லை; வாழ்க்கையை மாற்றிய படம்: கடந்து வந்த பாதை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்வு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வாழ்க்கை அனுபவங்களை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. டெட் (TED) என்ற அமெரிக்க ஊடக நிறுவனம், உலகம் முழுவதும் டெட் எக்ஸ் டாக்ஸ் (Ted x talk) என்ற பெயரில் பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்து சாதித்தவர்களும், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்வார்கள். இப்படியான நம்பிக்கை உரைகள் பல இணையத்தில் வைரலாகியுள்ளன. இந்த உரைகள் மூலமாக வெளி உலகுக்குக் தெரியாத பலரது முகங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் திர…
-
- 0 replies
- 619 views
-
-
வேற லெவல் நமீதா...வேர்ல்டு டிரண்ட் நெருப்புடா! #க்விக் - செவன் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்படத்தை முடித்த கையோடு விக்ரமுடன் சாமி இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார் ஹரி. இதற்கான அறிவிப்பை இன்று 'இருமுகன்' பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ஹரி. இருமுகன் பட தயாரிப்பாளர் ஷபுதமீம்ஸ் தான் சாமி 2 படத்தைத் தயாரிக்கவிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ப்ரியன், விக்ரம் இருவரையும் மேடைக்கு அழைத்து, ரசிகர்கள் முன்னிலையில் அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. அப்போ த்ரிஷா இருக்காங்களா பாஸ்? #VikramIsCop ராம், மிஸ்கின், பூர்ணா நடிக்கும் 'சவரக்கத்தி' படத்தை ஆதித்யா இயக்கிவருகி…
-
- 0 replies
- 723 views
-
-
எப்போதாவது மணிரத்னம் படங்கள் மட்டும் இந்தியாவுக்கு வெளியே நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும். இன்று அந்த நிலைமையில் நல்ல முன்னேற்றம். அட்டைக்காப்பியான தெய்வத்திருமகள்கூட ஐப்பானில் விருது வாங்கியதாக ஃபிலிம் ஓட்டினார்கள். முன்னேற்றம்தானே…? அடுத்த மாதம் 16 முதல் 19 ஆம் தேதி வரை பாரிஸில் தெற்காசிய திரைப்பட விழா நடக்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள் போன்ற நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நல்லவேளையாக இந்தமுறை காப்பி படங்களை அனுப்பாமல் தமிழிலிருந்து வழக்கு எண் படத்தையும், பீட்சாவையும் அனுப்பியிருக்கிறார்கள். இரண்டுமே நல்ல படங்கள், அசலானவை. ஏதாவது விருது கிடைத்தால்கூட ஆச்சரியமில்லை. http://123tamilcinema.com/2013010223410.ht…
-
- 0 replies
- 451 views
-