வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்! 14 Jun 2025, 1:18 PM நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
-
- 2 replies
- 304 views
-
-
பட மூலாதாரம்,ILAIYARAAJA_OFFL/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்? தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும்…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
மாமன் படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம். விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள சூரியின் மாமன் திரைப்படம் அடுத்த மாதம் OTT தளத்திலும் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாமன் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியு…
-
- 0 replies
- 288 views
-
-
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். . சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார். 47 ஆண்டுகளுக்கும் மேலாக 'கன்னிப் பருவ…
-
-
- 27 replies
- 1.2k views
- 2 followers
-
-
பணத்துக்காக நான் படம் பண்ண வரல -- மணி ரத்தினம்
-
- 0 replies
- 174 views
-
-
பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN படக்குறிப்பு,'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 25 மே 2025, 02:01 GMT தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன். டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். இன்று (மே 15) காலத்தால் அழிய…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம். Tourist Family review தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை. இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறத…
-
-
- 6 replies
- 641 views
-
-
பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையம…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்! தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார். இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும். ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது. மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சி…
-
- 0 replies
- 239 views
-
-
பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம் | மருத்துவர் துரைராஜா வரதராஜாவுடன் ஓர் சந்திப்பு
-
- 0 replies
- 254 views
-
-
ரெட்ரோ : விமர்சனம்! 1 May 2025, 8:37 PM வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!? ’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே. சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’? காதலே அடிநாதம்! பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது. அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றன…
-
- 0 replies
- 251 views
-
-
பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷண் விருதைப் பெறுகிறார் அஜித் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 19 ஏப்ரல் 2025 ஆண்டு தோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கலை, பொதுசேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்தவர்களை கெளரவிக்க மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் பட்டியலில் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டியக் கலைருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் இருந்தனர். டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து நடிகர் அஜித் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது தவிர கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் தாமு ஆகியோரும் பத்மஸ்ரீ விரு…
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 'சிவ ஸ்துதி…
-
-
- 15 replies
- 841 views
- 1 follower
-
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்! 17 Apr 2025, 5:18 PM இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கர்நாடகாவில் பிறந்தவரான இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தனது நீண்டநாள் நண்பரான பிரவீன் குமாரை கடந்த 2016ஆம் ஆண்டு மணந்தார். எனினும் அடுத்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரவீன் குமாரை விவாகரத்து செய்தார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூச…
-
-
- 23 replies
- 1.2k views
-
-
’மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரனும், ‘விடாமுயற்சி’ தோல்விக்குப் பிறகு அஜித்தும் இணைந்திருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்களுக்கான நாஸ்டால்ஜியா துளிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் ஆன்ட்டி-ஹீரோ அவதாரம் என டீசர், ட்ரெய்லரின் இப்படத்துக்கு பயங்கர ஹைப் ஏற்றப்பட்டது. அப்படி ஏற்றப்பட்ட ஹைப்புக்கு இப்படம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியதா என்பதை பார்ப்போம். ஊர், உலகமே பார்த்து நடுங்கும் மிகப் பெரிய கேங்ஸ்டர் ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்), தனது மனைவியின் (த்ரிஷா) பேச்சுக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் விட்டு சரண்டர் ஆகிறார். புதிதாக பிறந்த தன் குழந்தையிடமும் அவனது 18-வது பிறந்தநாளன்று உன் பக்கத்தில் இருப்பேன் என்று வாக்குறுதி அளிக்கி…
-
-
- 16 replies
- 755 views
-
-
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்
-
- 4 replies
- 409 views
- 1 follower
-
-
படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி. ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உண…
-
-
- 16 replies
- 771 views
- 1 follower
-
-
ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, …
-
- 0 replies
- 250 views
-
-
நடிகரும் கராத்தே நிபுணருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்! தென்னிந்திய நடிகரும், கராத்தே மற்றும் வில்வித்தை நிபுணருமான ஷிஹான் ஹுசைனி (Shihan Hussaini) இன்று அதிகாலையில் இரத்தப் புற்றுநோயுடன் போராடி காலமானார். அவரது மறைவுச் செய்தியை அவரது குடும்பத்தினர் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினர். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின்னர், அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுசைனி தனது சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ந்து புதுப்பிப்புகளை வழங்கி தனது புற்றுநோய் பயணத்தை ஆவணப்படுத்தி வந்தார். அவரது பதிவுகளைப் பார்த்த தமிழக அரசு…
-
- 1 reply
- 286 views
-
-
ஒரு தலை ராகம் .......................... ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்... 1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்... கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்... அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு... கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ. இந்தத் திரைப்படம் வெளி வந்த உ…
-
-
- 4 replies
- 367 views
- 1 follower
-
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657
-
-
- 17 replies
- 823 views
-
-
இளையராஜாவின் சிம்ஃபொனி வெளியீடு எப்போது? நேரில் கண்டு பரவசமடைந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 12 மார்ச் 2025, 04:41 GMT புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர் தான் உருவாக்கிய சிம்ஃபொனி இசைக் கோர்வையை லண்டனில் அரங்கேற்றிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள், பின்னணி இசைக் கோர்வை, 7000க்கும் அதிகமான பாடல்கள் என்று பல சாதனைகளைப் படைத்திருக்கும் இளையராஜா தமிழ் சினிமா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய திரை இசை ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். வேலியன்ட் (VALIANT) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிம்ஃபொனி, அவரது இசைப் பயணத்தில் மற்றும…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. "கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண மு…
-
- 3 replies
- 241 views
- 1 follower
-
-
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை. சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்…
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…
-
- 0 replies
- 304 views
-