Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒளிரும் நட்சத்திரம்: செல்வராகவன் ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர் 1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர். 2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். ச…

  2. ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணமாம் ; மருத்துவரா மாப்பிள்ளை நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு, ஜீவா, விஷால், சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், விஷால் என மூன்றாம் கட்ட நடிகர்களுடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பு, தனுஷ் என இரண்டாம் கட்ட நடிகர்களுடன் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், கவர்ச்சி என்றால் இவருக்கு ஆகவே ஆகாது. இதனால், கவர்ச்சி காட்சிகள் …

  3. ஏ.ஆர் ரகுமானை பாராட்டிய இளையராஜா

    • 0 replies
    • 401 views
  4. சினிமா விமர்சனம்: ஸ்பைடர் மென் - ஹோம்கமிங் திரைப்படம் : ஸ்பைடர் மென் - ஹோம்கமிங் நடிகர்கள்: டாம் ஹாலண்ட், மிச்செல் கீடன், ராபர்ட் டானி ஜூனியர், மாரிஸா டொமெய்; காமிக்ஸ் கதை வடிவம்: ஸ்டான் லீ, ஸ்டீவ் திட்கோ; இயக்கம்: ஜான் வாட்ஸ். ஸ்பைடர் மேன் படங்களுக்கேன்றே ஒரு துவக்கம் உண்டு. கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட ஒரு சிலந்தி, பீட்டர் பார்க்கரைக் கடித்துவிட அவனுக்கு சிலந்தியைப் போல பல சக்திகள் கிடைத்துவிடும். இந்தத் துவக்கம் பல படங்களில் பார்த்து சலித்துப்போன ஒரு துவக்கம். ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் Spiderman - Home Coming, முற்றிலும் வேறு மாதிரியாகத் துவங்குகிறது. …

  5. ‘அந்த’ இடத்தில் சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட அஜித் பட நாயகி திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக அழகிற்கு இடையூறாக இருந்த மூக்கை கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தன்னுடைய மூக்கை சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவிக்கும் போது, ‘50 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்களுக்கு என்னுடைய முகம் பிடிக்…

  6. பாஞ்சாலியாக நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக, அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துக்கொண்டு பிஸி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது கன்னடத் திரைப்படமொன்றிலும் நடிக்கவுள்ளார். கன்னட சினிமாவில், குருஷேத்திரா என்ற சரித்திரத் திரைப்படமொன்று பிரமாண்டமாக உருவாகவுள்ளது. நாகண்ணா இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தின் துரியோதணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தர்ஷனும் கர்ணனாக ரவிச்சந்திரனும், பீஷ்மர் வேடத்தில் மூத்த நடிகர் அம்ரீஷும் நடிக்கவுள்ளனர். இந்தத் திரைப்படத்தில், நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பஞ்ச பாண்டவர்களின் மனைவியான பாஞ்சாலி கத…

    • 1 reply
    • 342 views
  7. திரை விமர்சனம் : இவன் தந்திரன் திரைப்படம் இவன் தந்திரன் நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி, சூப்பர் சுப்பராயன் இசை எஸ்.எஸ் தமன் இயக்கம்; ஒளிப்பதிவு ஆர். கண்ணன், பிரசன்ன குமார் சில வாரங்களுக்கு முன்பாக கௌதம் நடித்து வெளிவந்த ரங்கூன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்த படமும் வெளியாகியிருக்கிறது. ரங்கூன் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இந்தப் படத்திலும் தக்கவைத்த…

  8. திரை விமர்சனம்: யானும் தீயவன் திரைப்படம் யானும் தீயவன் நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா இசை அச்சு ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர். புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம். …

  9. ஒளிரும் நட்சத்திரம்: ஸ்ரீதேவி * இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளை உருவாக்கி அளித்திருக்கிறது. அவர்களில் ஸ்ரீதேவியின் சாதனைகளை முறியடிக்க யாருமில்லை. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன் – ராஜேஸ்வரித் தம்பதியின் மகளாக 1963, ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர் ஸ்ரீதேவி. 54 வயதில் அடிவைக்கக் காத்திருக்கும் ஸ்ரீதேவிக்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தர விரும்பிய அவருடைய கணவர் போனி கபூர், ஸ்ரீதேவியின் 300-வது படத்தைத் (மாம்) தயாரித்து, அதை ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்கிறார். * கறுப்பு வெள்ளைக் காலத்தில், 4 வயதுச் சிறுமியாகத் தமிழ்க் கடவுள் முர…

  10. தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன் – அமலாபால் இயக்குநர் விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதற்கு தனுஷ்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் விஐபி 2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், ‘முதல் பாகத்தில் எனது கேரக்டரை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் தனுஷூக்கு நன்றி. வேலையில்லா பட்டாதாரி 2 ஆம் பாகத்த்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘விஐபி’ 3ஆம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெ…

  11. ''எந்த நாட்டுக் குடியுரிமையும் இல்லை எனக்கு!’’ - கலங்கும் 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' டிசாதனா! ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்' நிகழ்ச்சியில் ரன்னராக வந்தவர், டிசாதனா. ஆறாம் வகுப்பு படிக்கும் அவருக்கு, குழந்தையிலிருந்தே இசையின் மீதான ஆர்வம் ஊற்றெடுத்துள்ளது. தானும் குடும்பத்தாரும் இலங்கையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், சந்திக்கும் வலிகளைப் பகிர்ந்துகொண்டார்கள் டிசாதனாவும் அவரது தாயாரும். டிசாதனாவின் அம்மா கமலேஷ்வரி, ''நாங்கள் இலங்கையில் பட்ட வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல. அப்போது எனக்கு வயசு 11. ஆறாம் வகுப்பு படிச…

  12. “ஸ்ருதிக்கும் கோபம் வரும்!” ஆர்.வைதேகி ``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன். `` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’ ‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது. வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம்…

  13. கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான். அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’. இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கி…

    • 8 replies
    • 1.4k views
  14. ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம் காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’. கார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா…

  15. திரை விமர்சனம்: தங்கரதம் சந்தைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ வேன் ஓட்டு நர்களிடையே நடக்கும் மோத லும், அதில் மலரும் ஒரு காதலும்தான் தங்கரதம். சித்தப்பாவை (‘ஆடுகளம்’ நரேன்) நம்பி வாழ்க்கையை ஓட்டும் நாயகன் வெற்றி. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காய்கறி களை ஏற்றிவரும் டெம்போ ஓட்டுநர் வேலை. அதேபோல காய்கறிகளை ஏற்றி வரும் சவுந்தரராஜாவுக்கும் வெற் றிக்கும் தொழில் போட்டி. இருவருக்குமிடையேயான மோதலுக்கு மத்தியில் சவுந்தரராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவை காத லிக்கிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் தொழில் போட்டி பெரிதாகி வெற்றியைக் கொல்ல திட்டம் போடுகிறார் சவு…

  16. திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் நடிகர்கள் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, வி.டி.வி.கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, கஸ்தூரி இசை யுவன் சங்கர் ராஜா இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன். எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த இதயக்கனி போன்ற படங்களில் படத்தின் முதல் பாதி ஒரு விதமாகவும், அந்தக் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டாவது பாதியும் இடம்பெற்றிருக…

  17. ஒளிரும் நட்சத்திரம்: நாசர் ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. தமிழ் சினிமாவில் அரிதாரம் அற்ற அரிதான கலைஞர்களில் முக்கியமானவர் ம.நாசர். கதாபாத்திரத்தின் குண இயல்புகளை ஆழமாக உள்வாங்கி, அதை அளவான, இயல்பான உணர்ச்சிகளாக வெளிப்படுத்தி ‘நடிப்புக்கொரு நாசர்’ என்று பெயர் பெற்றவர். 05.03.1958-ல் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகேயுள்ள மேலேரிப்பாக்கம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, மகபூப் பாட்ஷா- மும்தாஜ் பேகம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். 2. கிராமத்திலிருந்து செங்கல்பட்டு நகருக்குக் குடிபெயர்ந்த நாசரின் பெற்றோர், அங்கிருந்த புனித மேரிஸ் தொடக்கப்பள்ளி, பின்னர் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அவரைப் படி…

  18. விஜய்யின் "மெர்சல்" : 61 ஆவது படத்தின் தலைப்பு விஜய் நடிக்கும் 61 ஆவது படத்திற்கு "மெர்சல்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100 ஆவது படமாகும். படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்து வந்தனர். படத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், டுவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கை ஏற்படு…

  19. திரை விமர்சனம்: உரு ஓர் எழுத்தாளர் தனது படைப்புக்காக உருவாக்கும் சைக்கோ கில்லர் கதாபாத்திரம், நிஜமாகவே உருப்பெற்று, மனிதர்களை கொல்வதுதான் உருவின் கரு! நாயகன் கலையரசன், மேகமலையில் அமைந் துள்ள ஒரு வீட்டில் தங்கி தன் புதிய திகில் நாவலை எழுதத் தொடங்குகிறார். கதையின் முதல் அத்தியாயத்தில், முகமூடி அணிந்த மர்ம மனிதனைக் குறித்து அவர் எழுதிக்கொண்டி ருக்கும்போது, நிஜத்தில் அப்படி ஒரு முகமுடிக் காரன் ஜன்னலுக்கு வெளியே நின்று அவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் நுழைந்து கலையரசனைக் கொல்ல முயற்சிக்கும் போது, அவரது மனைவி சாய் தன்ஷிகா வந்து விடுகிறார். அவரைப் பார்த்ததும் முகமூடிக்காரன் மறைந்துகொள்கிறான்.…

  20. திரைப்பட விமர்சனம்: பீச்சாங்கை திரைப்படம் பீச்சாங்கை நடிகர்கள் ஆர்.எஸ். கார்த்திக், அஞ்சலி ராவ், எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், பொன்முடி இசை பாலமுரளி ராஜு ஒளிப்பதிவு, இயக்கம் கௌதம் ராஜேந்திரன், அசோக் தமிழில் கடந்த சில ஆண்டுகளில் சற்று வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. பீச்சாங்கை படத்தை மிகச் சிறந்த படமென்று சொல்ல ம…

  21. திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன். திரைப்படம் மரகத நாணயம் நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ் இசை திபி நினன் தாமஸ் ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண். …

  22. ஷங்கர்: உருமாறும் உடல்களின் அழகியல் ஆர். அபிலாஷ் சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா காலத்தில் இருந்தே மனித வாழ்வின் சீரழிவு, மீட்சி, மலர்ச்சி ஆகியவற்றை உடல்களில் நிகழ்த்திப் பார்க்கும் ஆர்வம் நமக்கு இருந்துள்ளது. அதனாலேயே திறமையும் அழகும் மிக்க நாயகன் நோய் (ரத்தக்கண்ணீர் (1954), தெய்வமகன் (1969)) அல்லது வறுமை (பராசக்தி (1952), கப்பலோட்டிய தமிழன் (1961), நல்ல நேரம் (1972)) அல்லது சதியால் (பராசக்தி, பாசமலர் (1961), உத்தம புத்திரன் (1958), அடிமைப்பெண் (1969), ஆயிரத்தில் ஒருவன் (1965), நாடோடி மன்னன் (1958), எங்க வீட்டுப் பிள்ளை (1965), குடியிருந்த கோயில் (1968), மலைக்கள்ளன் (1954), மதுரைவீரன் (1956)) நொடிந்து, உருமாறி சீரழிந்து போன நிலையில் தோன்றி போராடுவது அல்லத…

  23. சினிமா காட்சிகளுக்கு கிராமத்து மக்களையே நடிக்க வைத்து சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் சினிமா கிராமம் பற்றிய சிறப்புத் தொகுப்பு! www.ns7.tv | #சினிமாகிராமம் | #CinemaVillage

  24. “விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive ‘‘ ‘தெறி’யைத் தொடர்ந்து விஜய்யை அட்லி மீண்டும் இயக்கும் படம், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம், எஸ்.ஜே.சூர்யா வில்லன்... இப்படி விஜய்யின் 61-வது படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவற்றுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் படம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய படங்களின் காமெடிகளைப் பார்த்தவர்களால் இந்த காம்பினேஷனின் எதிர்பார்ப்பை உணர்ந்துகொள்ள முடியும். விஜய்யும் வடிவேலும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘வசந்த வாசல்’. பிறகு, இவர்கள் நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘சித்தப்பு நேசம…

  25. 'இன்னொரு கல்யாணம்... நிச்சயம்!’ அமலாபால் பெர்சனல் ‘‘நிச்சயமா அது எனக்கு மிகப்பெரிய வருத்தம். அந்தக் கேரக்டருக்கு என்னை மனசுல வெச்சுதான் நிறைய டிஸ்கஸ் பண்ணி வடிவம் கொடுத்திருந்தாங்க. என்னை வெச்சு கொஞ்சம் ஷூட் பண்ணியிருந்தாங்க. பிறகு, நான் தந்த தேதிகள்ல அவங்களால் ஷூட் பண்ண முடியலை. அப்புறம் அவங்க `ஷூட் பண்ணணும்'னு கூப்பிடும்போது நான் நிறைய கமிட்மென்ட்ஸ்ல இருந்தேன். என்கிட்ட தேதிகள் இல்லை. நான் வெற்றி மாறனின் மிகப்பெரிய ரசிகை. அவர் படத்தில் நடிக்க முடியலைங்கிறது வருத்தம்தான். இருந்தாலும் நான் பண்ணவேண்டிய கேரக்டர்ல ஐஸ்வர்யா நடிக்கிறாங்கனு கேள்விப்பட்டேன். அவங்களும் சரியான சாய்ஸ்தான். வெற்றி சார்கூட எனக்கு நல்ல ஒரு புரிதல் இருக்கு. அவருக்கும் ரொம்ப கஷ…

    • 12 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.