Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயக்குநர் மகேந்திரன் நாற்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ இரண்டு படங்களும் வெளியாகி. ஆனாலும், சலிக்கவே சலிக்காமல் தமிழ்த் திரையுலகமும் ரசிகர்களும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் இன்னமும். ஜூலை 25 அன்று தனது 77-வது வயதைப் பூர்த்திசெய்தார் மகேந்திரன். இன்னமும் ஓர் இளம் இயக்குநருக்கு உள்ள அதே துடிப்போடு பேசுகிறார். இன்று புதிதாக வரும் இயக்குநர்களும் உங்களை ஆதர்சமாகக்கொண்டிருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த சினிமாவை நான் எடுத்தேன். அது இத்தனை கொண்டாடப்படுவது உண்மையில் எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எனக்குப் பள்ளி நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்கள் மீது ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது.…

    • 0 replies
    • 341 views
  2. இசைத்துறையில் 50வது வருடத்தை கடந்து செல்லும் மாமேதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசைவாழ்வின் வெற்றியை கொண்டாடும் இசைப் பெருவிழாவும் சுப்பர் சிங்கர் இசைக் கொண்டாட்டமும். - கனடாவில் தனித்துவம் மிக்க இசை நிகழ்ச்சிகளை வழங்கி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட ஆர்யா கனடா நிறுவனம் எதிர்வரும் ஆகஸ்ட் 13 - 14 ம் திகதிகளில் கனடாவின் மார்க்கம் பெயர் கிரவுண்ட் மைதானத்தில் இரண்டு பிரம்டமாண்டமான இசை நிகழ்வுகளை நடத்தவுள்ளது. 13ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை வல்லுனர் வெங்கடே~; பட் அவர்களுடன் ரொரன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேர் தமது சமையல் திறமையினை வெளிப்படுத்தும் சமையல் போட்டி நிகழ்ச்சி நடைபெறவ…

  3. `கபாலி' மலாய் மொழி பதிப்பில் கிளைமாக்ஸ் மாறியது ஏன்? ரஜினிகாந்த் நடிப்பில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட கபாலி திரைப்படத்தின் மலாய் மொழி பதிப்பில், இறுதிக் காட்சிகள் மாற்றப்பட்டதால் மலேசிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மலாய் மொழியில் வெளியான கபாலியில் மாறுபட்ட கிளைமேக்ஸ் மலேசிய செய்தித்தாளான 'தி மலாய் மெயில்' பத்திரிக்கையில், மலேசியவில் வெளியான கபாலி மலாய் பாதிப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவுடன் கூடியதாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, பிபிசி மானிட்டரிங் பிரிவு தகவல் கூறுகிறது. கபாலி திரைப்படத்தின் மூல பதிப்பான தமிழில், கபாலி என்ற தாதா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த்தை சுட்டுவிடுமாறு ஒரு கதாப…

  4. படத்தின் கதாநாயகன் ஜெராட் மற்றும் கதாநாயகி மிதுனா தம்­பி­ஐயா தேவதாஸ் பாடசாலை மாணவர்களாக தோன்றும் நடிகர்கள் தமிழ்ச் சினி­மாவை ரசிக்கும் ரசி கர்கள் இப்­பொ­ழுது உலகம் எங்கும் பரந்­தி­ருக்­கி­றார்கள். அத்­தனை பேருக்கும் தீனி­போட்ட தமிழ் சினிமா உலகம் சென்­னையில் இருக்­கி­றது என்­பதை நாம­றிவோம். பெரும்­பா லான தமிழ்த் திரைப்­ப­டங்கள் இப் பொழுதும் சென்­னையில் இருந்து தான் வெளிவரு­கின்­றன. ஆனாலும் இப்­பொ­ழுது தமிழ்ப்படங்கள் பிற நக ரங்­க­ளி­லி­ருந்தும் வெளி­வரத் தொடங் கு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. தமிழ்ப்­ப­டங்கள் லண்டன், டொரண்டோ, பாரிஸ், கொழும்பு போன்ற நக­ரங்­க ளி­லி­ருந்து தயாரிக்கப்பட்டு வெளி­வ­ரு வதை சாதா­ரண­மாக அவ­தா­னிக்கக் கூடி­ய­…

    • 1 reply
    • 448 views
  5. வெளியானது “கோமாளி கிங்ஸ்” தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படம் கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படத்தை இலங்கையின் பிரபல இயக்குனர் கிங் ரட்ணம் எழுதி, நடத்தும் மற்றும் இயக்கியும் உள்ளார். …

    • 1 reply
    • 534 views
  6. 'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்! அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைரமுத்து, கபாலி படம் பற்றிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்து வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ கடந்த ஞாயிறு, என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ, எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். கடவுளை ஏற்றுக் கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான்…

  7. மும்பை, நடிகர் ரஜினிகாந்துக்கு மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே வலியுறுத்தினார். மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ., அனில் கோடே பேசியதாவது:- இந்த மண்ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடி தமிழ்நாடு சென்றார். இன்றைக்கு திரைத்துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிகரான அந்தஸ்தை பெற்றிருக்கிற…

  8. அமலாபால் - விஜய் விவாகரத்து காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவைச் நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்ளிட்ட பல தமிழ் தரைப்படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'கிரீடம்' திரைப்படத்தின் ம…

    • 9 replies
    • 1.1k views
  9. நயன்தார காட்டில் கோடி மழை அறிமுகமாகி 10 வருடங்களுக்கு மேலாக நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.4 கோடியாக அதிகரித்துள்ளமை கோலிவூட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நயன்தாரா மார்க்கெட் முன்னிலையில் உள்ளதுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியபோது திரைப்படங்கள் குறையும் என்று சிலர் சொன்னதை நயன் பொய்யாக்கினார். அதிக திரைப்படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகளாலும் கூட நயன்தாராவை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அறிமுகமான புதிதில் நயன்தாராவின் சம்பளம் இந்திய ரூ.40 மற்றும் 50 இலட்சங்களாக …

    • 2 replies
    • 808 views
  10. 'கபாலி' பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த 'அவன்தான் மனிதன்'- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் ''மகிழ்ச்சி'' சிவாஜியின் ’அவன்தான் மனிதன்’ படம் திரையிடப்பட்டுள்ள திருச்சி கெயிட்டி திரையரங்குக்கு வெளியே மாட்டியுள்ள ஹவுஸ்புல் போர்டு. நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.…

  11. டூயிங் ஸ்டைல்: யூத் அண்ட் மாஸ் மீடியேஷன் இன் சவுத் இந்தியா': ரஜினியின் ஸ்டைல்களை புத்தகமாக்கிய அமெரிக்க பேராசிரியர் புத்தகத்தின் முகப்புத் தோற்றம் (இடது) ; கான்ஸ்டன்டைன் வி. நகாசிஸ் (வலது) அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் வி.நகாசிஸ். பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது மானுடவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக 2004-ம் ஆண்டு மதுரையில் சில ஆண்டு கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ் மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ் கற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏராளமான ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதுவரை தமிழகத் தில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கள், அனுபவங்கள் அடிப்படை யில் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். தற…

  12. மலேசியா, ரஜினியின் ‘கபாலி’ வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி அந்நாட்டு விதிமுறைகளை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் கபாலி. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தியா மட்டுமல்ல உலகம்முழு வதும் ரஜினியின் கபாலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களை கட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். ரசிகர்களிடம் மட்ட…

  13. பாகிஸ்தான் நடிகைகள் நடிப்பதற்காக இந்தியாவை நோக்கி பலவித தயாரெடுப்புகளோடு படைஎடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். முன்பு வீணா மாலிக், மீரா, சாரா லோரன் போன்ற சில பாகிஸ்தான் நடிகைகள்தான் இந்திப் படங்களில் நடித்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை பத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தி சினிமாவில் அறிமுகமானவர், மாவ்ரா ஹோகன். அதற்கு முன்பு, ‘பாக் மில்கா பாக்’ படத்தில் மீஷா ஷபி தோன்றினார். ‘ராஜா நட்வர்லால்’ படத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் காதல் செய்தார், ஹுமைமா மாலிக். மற்றொரு பாகிஸ்தானிய நடிகை மகிரா கான், ஷாருக்கானுடன் ‘ரேஸ்’ படத்தில் தோன்றுகிறார். ‘‘கணவன்– மனைவிக்கு இடையிலான அன்பு சார்ந்த குடும்பப் படத்தில் நான் இர்பான் கானுடன் நடிக்கிறேன்’’ என்று அ…

  14. உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணுவின் ப்ரோமோஷன் அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் நேற்று வெளியான இப்படத்திக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. பல இடங்களில் அதிர வைக்கும் டிக்கெட் விலையால் ரசிகர்கள் கடுப்பாகினர். இப்படத்துக்கு யு சர்ட்டிபிக்கெட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பல வெளிநாடுகளில் இப்படத்துக்கு 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் தான் அனுமதிக்கின்றனர். இதுபற்றி டிக்கெட் புக்கிங் செய்யும் போதே சரியான தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது எந்த தகவல்களும் கொடுக்கப்படாததால் பிரி…

  15. கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன. ஆனால், நேற்று கபாலியில் ரஜினி வரும் ஒப்பனிங் காட்சி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இது வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவியது. பின்னர் இணையதளங்களில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்பட…

  16. கபாலி – திரைவிமர்சனம் 25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டத…

  17. கபாலி பற்றியவோர் பார்வை கபாலியைச் சென்ற வாரம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. படம் ரிலீஸாகும்வரை அதுபற்றிய விமர்சனத்தைப் போடக்கூடாது என்பதால் தற்போது போடுகிறேன். கபாலி வழமைபோல சாதாரணமானவோர் கதை ஆனால் சற்று வித்தியாசமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்கிறது. சிறிது சென்னைக்கும், புதுவைக்கும் நகர்ந்து பின்னர் மீண்டும் மலேசியாவிலேயே சரண்டராகி அங்கேயே முடிவடைகிறது. கபாலியாக வரும் ரஜனிக்கு அவரது வயதுக்கும் தோற்றத்திற்குமேற்ற பாத்திரம் கொடுக்கப்பட்டு இடையிடையே கபாலியின் இளமைக்காலத்தை மிகைப்படாமல் காட்டுவது பாத்திரப் பொருத்தத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. மலேசியாவில் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபடும் 43 என்றவோர் சமூகவிரோதக் கும்பலுக்கெதிராக ஆரம்பத்தில்…

  18. சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் தமிழ் அடையாளம் ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்: தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது. இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டு…

  19. ஒன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க. அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோ…

  20. ஆஸ்கர் விருதையோ கிராமி விருதையோ வெல்வேன் என்று நான் நினைத்ததில்லை. உள்ளார்ந்த ஈடுபாடு, என்னை அந்த விருதுகள் வரை கொண்டு சென்றுள்ளது என்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். மேலும் அவர், இந்திய விளையாட்டு வீரர்களும் அத்தகைய ஈடுபாட்டுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ”ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு” என்ற தலைப்பில் அவர், வெளியிட்டுள்ள பதிவின் முழு விபரம்: ”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருகின்றன. அந்த வகையில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். …

  21. தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்! ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு, பரபரப்பு எல்லாம் சகஜம்தான். இம்முறை சற்று கூடுதலாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1,000 வெளிநாட்டுத் திரைகளில் தோன்றப் போகிறார் ‘கபாலி’. இன்றைய சினிமா வர்த்தகத்தில் வெளி நாட்டு வசூல் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. சல்மான் கானின் ‘சுல்தான்’ இந்திப் படம் உள்நாட்டில் 350 கோடிகள் வசூல் சாதனை என்றால் வெளிந…

  22. அமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு த…

  23. கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.