Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு திமோர், நேபாளம் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேசம் தலையிட வேண்டும் பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்பாக ஒரு தரப்பை குற்றஞ்சாட்டுவதும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதும் நாளாந்த நிகழ்வாகிவிட்டமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே கிழக்கு தீமோர் மற்றும் நேபா ளத்தில் செயற்பட்டதைப்போன்று சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்திலும் தலையிட வேண்டும் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பொது மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள், படுகொலை முயற்சிகள், எறிகணை வீச்சுக்கள், பகடைக்காய்களாக பயன்படுத்தல் போன்ற அனைத்துச் சம்பவங்களும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் போன்ற அனைத்து உரிமைகளைய…

    • 0 replies
    • 732 views
  2. Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி கனடியப் பாராளுமன்றத்தில் சிறி லங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு பெற கனடிய என் டி பி கட்சி தொடர்ந்தும் கடும் முயற்சி !கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு யக் லேற்றன் (Hon. Jack Layton) அவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை இன்று வன்கூவரில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணக் காணொளி தொடர்பாகப் போர்க்குற்ற விசாரணைகள் சிறி லங்காவில் நடைபெற வேண்டிக் கனடியப் பாராளுமன்றத்தில் தகுந்த நடவடிக்கையை வரும் நாட்களில் எடுக்கப் போவதாக அவர் கனடியத் தமிழர் பேரவைக்கு உறுதியளித்தார். மாண்புமிகு யக் லேற்றன் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆதரவாளராக எப்போதுமே இருந்து வருக…

  3. ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியல் அமைப்பை மீறி தான் செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜூட்ஜெயமகவிற்கான பொதுமன்னிப்பு அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். 2005 இல் அத்துருகிரியவில் உள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. 2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார். அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிரு…

    • 1 reply
    • 228 views
  4. [Thursday, 2011-06-23 10:09:48] சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது. கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என…

  5. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த யானைக்குட்டிகளுக்கு சரித்த, சாரிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதில் சாரிகா என்ற யான…

  6. தேசத்தின்விடுதலைக்கா தமது உயிரை ஈகம்செய்த தமிழீழமண்ணின் மைந்தர்களின் நினைவாக வல்வை நலன்புரிச்சங்கம் இங்கிலாந்துக்கிளையும், வல்வைபுளுஸ் இங்கிலாந்துகிளையும் 26.06.2011 அன்று லண்டனில் நடாத்திய மாபெரும் நிகழ்வான கோடைவிழாவின் போது சரியாக மதியம் 1:30மணிக்கு அனைத்து உதைபந்தாட்டபோட்டிகளும்,மற்றையபோட்டிகளும் இடைநிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மேடைக்கு முன்பாக குழுமச்செய்தனர். பலஆயிரம் மைல்களுக்கு அப்பால்சென்னையில் மெரீனாக்கடற்கரையில் அதே நேரம் (இந்தியநேரம் மாலை6) முள்ளிவாய்க்கால் இன்ப்படுகொலையான எமது உறவுகளுக்காக மே பதினேழுஇயக்கம் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வுடன் நாமும் ஒன்றிணையும் ஒரு உணர்வுரீதியான நிகழ்வாக இது லண்டனிலும் நடாத்தப்பட்டது. வானுயர்ந்து பறந்துகொண்டிருந்த பலூன…

  7. கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (26.04.07) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: வழக்கானது பொத்துவில் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நிலைமைகள் நீதிமன்றத்ததின் தீர்ப்பிலேயே தங்கியிருக்கின்றன. கருணா குழுவினர் தங்கியிருந்த பழைய கட்டடம் ஒன்றை பொத்துவில் பிரதேச சபையினர் இடிக்க முற்பட்டதனைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் உருவாகியிருக்கின்றன. பிரதேச சபை பணியாளர்களை ஆயுதம் தாங்கிய கருணா குழுவின…

  8. கிழக்கில் தேசிய அரசு குறித்த கூட்டமைப்பின் முடிவை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப் போகிறாராம் சம்பந்தன்! [Wednesday 2015-02-11 07:00] கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசு அமைக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்புத் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும்,இது தொடர்பில் கூட்டமைப்பின் இறுதி முடிவை திருகோணமலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி அறிவிப்போம்." என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சிமைக…

    • 3 replies
    • 492 views
  9. பதினொராயிரத்து எண்பத்து ஆறு அபாயகரமான வெடிபொருட்கள் ஸார்ப் நிறுவனத்தால் அகற்றம் October 21, 2018 இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் நிதியுதவி நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ஸார்ப் (Sharp) 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 ஒக்டோபர் ; மாதம்; 15 ஆம் திகதி; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் ஆறு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று பதின்மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் (649,613ள…

  10. சிறையில் 56 மதகுருக்கள்; 48 பேர் பிக்குகள் துஷ்பிரயோகம், பெண் பாலியல் வல்லுறவு நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 48 பேர் பௌத்த பிக்குகள் என்று நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது சுயாதீன எதிரணி எம்.பி.டலஸ் அழகபெருமவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார். 2023 ஜூன் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச் சாட்டுக்களின் கீழ் 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளி…

  11. பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு : 07 ஜூலை 2011 பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் சயிட் யூசுப் கில்லாணி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசாட் பதியூதின் தலைமையிலான குழுவினர் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இந்தக் குழுவிடம் பாகிஸ்தான் பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் போது ஜனாதிபதியை சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாக, கில்லாணி மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ…

  12. வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 10 பிரதேச சபைகளுக்குரிய வாகனங்கள் இன்று வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் கரு ஜயசூரிய இந்த வாகனங்களை வழங்கினார். வலிகாமம் வடக்கு, நெடுந்தீவு, காரைநகர், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, வெங்கலவெட்டிக்குளம், பூநகரி, வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன. http://seithy.com/breifNews.php?newsID=126667&category=TamilNews&language=tamil

  13. Published By: VISHNU 17 AUG, 2023 | 08:03 PM குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்கும…

  14. மலையக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் [01 - May - 2007] பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் 90 சதவீதமான சிறுவர், சிறுமியர்கள் பல தரப்பட்ட துன்புறுத்தல்களுக்குள்ளாக்

  15. 27 AUG, 2023 | 10:50 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். மேலும், 2017 – 2019 ஆண்டுகளில் வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளா…

  16. அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தம்மீது சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று முன்னாள பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அதேவேளை, வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராண…

  17. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் ரணில் விக்ரமசிங்க. அந்தப் பேட்டியிலிருந்து: கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா? ப. இந்த…

  18. சிறிலங்கா அரசுக்கு இடைவிடா நெருக்கடியை ஏற்படுத்தும் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் ! அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் திரையிடப்பட்டது. [Tuesday, 2011-07-19 09:11:40] சிறிலங்கா அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கடும் நெருக்கடியைக் தோற்றுவித்துவரும் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம், அமெரிக்க கொங்கிரஸ் Capitol Hill மண்டபத்தில் திரையிடப்பட்டது. Human Rights Watch, Amnesty International-USA, the International Crisis Group, and Open Society Foundations ஆகிய சர்வதேச அமைப்புக்களின் கூட்டிணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டளர்கள், அரசியல் அறிவியல்பீட பல்கலைக் கழக மாணவர்களோடு உள்ள…

  19. ஒரு அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை வைத்திருக்க முடியும், எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் சில அமைச்சர்கள் வசம் 20க்கும் அதிகமான வாகனங்கள் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என, அமைச்சரவை பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 300க்கும் அதிகமான வாகனங்கள் மீள ஒப்படைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீதி நிர்மாணப் பணிகள் மூன்றை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை இடைக்கால வரவு செலவுத்திட்டத…

  20. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன் VanniNov 12, 2018 by in செய்திகள் தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போது அவர், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், வடமாகாண மரநடுநகை மாத நிகழ்விலும் பங்கேற்றிருந்தார். நேற்றிரவு அவர் முல்லைத்தீவுக்குச் சென்று இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்காலில், அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் வணக்கம் செலுத்தினார்.…

  21. 16 SEP, 2023 | 10:27 AM கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில், கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர். அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ…

  22. கோமாளிகள் நாட்டின் தலைவர்களாக வர முடியாது: ரணில் மீது டலஸ் அழகப்பெருமா சாடல் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:12 ஈழம்] [ந.ரகுராம்] கோமாளிகள் சிறிலங்காவின் தலைவர்களாக வரமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா சாடியுள்ளார். காலி அக்மீமனையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் டலஸ் அழகப்பெருமா பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் செயற்படவில்லை. அரசியல் நாகரீகம் இன்றி பயனற்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் நாகரீகம் இன்றி செயற்பட்ட தலைவர்களை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரணில் விக்கிரமசிங்க செய்துகொண்ட உடன்படிக்கையால் புலிகளின…

  23. புதிய பொதுச்சின்னத்தில் போட்டியிட கூட்டமைப்பு, ஈபிடிபி அல்லாத கட்சிகளை அழைக்கிறார் விக்கி ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் – தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும், ஈபிடிபி தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், க.வி.விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்த மாதம் 24 ஆம் நாள், சிறப்பு பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அ…

  24. நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். எம்மை வளப்படுத்தி செழுமைப்படுத்துவது வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தற்கால நலனும் வருங்கால நலனும் கொண்டதாகும். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 26 ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக்கருத்தினை முதலமைச்சர் சபையில் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகம் ஒன்றிற்கு நான் வழங்கியுள்ள செவ்வியில் உண்மைக்கு புறம்பான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அது குறித்த விளக்கத்தை சபையில் வழங்க …

  25. கொடிகாமம் ஏ-9 பாதையில் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல். ஏ-9 பாதையில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சிறீலங்கா படையினர் மீது திங்கட்கிழமை மாலை 4.30ற்கும் 5.30 ற்கும் இடையில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த படையினரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு சென்றதை பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து படையினர் ஏ-9 வீதியை கொடிகாமத்திற்கும் சாவகச்சேரிக்கும் இடையில் மாலை 4.30 மணியில் இருந்து மூடியுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்த மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. -Pathivu-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.