Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘எதிலும் நான் தலையிடவே இல்லை’ - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார் “கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார். சிங்கள மக்கள் வாக்களித்தனர் இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நாட்டின் 69 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் என்னை உங்கள் புதிய ஜ…

  2. மட்டு பண்ணையாளரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் – பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் November 18, 2020 மட்டு பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு; மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்க உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டரை மாதங்களாக ப…

  3. மாவீரர் தினத்தில் எவ்வாறு அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்வது? மாவை தலைமையில் 10 கட்சிகள் ஆராய்வு November 18, 2020 சிறு சிறு குழுக்களாகச் சென்று மாவீரர் தின அஞ்சலியைச் செலுத்துவதற்கான ஏற்படுகளைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய 10 தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினமான 27 ஆம் திகதி காலையிலிருந்து மாலை வரையில் இவ்வாறு குழுக்களாகச் சென்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அஞ்சலி செலுத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவீரர் தினத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்பது குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது. …

  4. கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார். குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே அனுமதிக்கப்பட்டது. இறுதியில் 80 மில்லியன் நிதியே எமக்கு கிடைத்தது. அதில் விவசாயிகளின் வேலை இடைநிறுத்தப்…

  5. கட்டாயப்படுத்தி கலியாணம் செய்ய முடியாது..! கஜேந்திரன்கள் குறித்து உறுதியான தீர்மானம் எடுங்கள், தமிழ் தேசிய கட்சிகள் கூட்டத்தில் காரசாரம்.. தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் கூடி தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை அனுட்டிப்பது தொடர்பாக இன்று மாலை ஆராய்ந்துள்ள நிலையில் குறித்த கூட்டத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கட்சிகள் சிலர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இந்தச் செயற்பாட்டிற்கு தமது கடுமையான கண்டனத்தை தொிவித்திருக்கின்றனர். குறிப்பாக யாரையும் கட்டாயப்படுத்தி கலியாணம் செய்து வைக்க முடியாது. கஜேந்திரன்களின் உறுதியான தீர்மானம் என்ன என்பதை அறியுங்கள். அவர்களுக்காக…

  6. கொரோனாவால் மரணித்த இஸ்லாமியர்களின் சடலங்களை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அடக்கம் செய்யும் நோக்கத்தினை அரசாங்கம் கைவிடவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவத்துள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/124336/selvam.jpg கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் சடலங்களை தலைமன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடிவருவதாக அறியக்கிடைத்துள்ளதாக தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றினால் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் வாத பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரவர் மத அனுஸ்டானங்களை மதித்து இற…

  7. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் சுரங்க அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/138803/DSC_2397_new.jpg அண்மையில் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்டத்தில் சட்டவிரோத மணல் சுரங்கமானது முக்கிய பகுதிகளில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொது பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நேரத்தில், ஆளுநர், சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டவர்களை, தரத்தை பொருட்படுத்தாமல் கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்படும் …

  8. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார். அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், http://cdn.virakesari.lk/uploads/medium/file/138857/sss.jpg கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நாட்டில…

  9. அடுத்த நான்கு வருடத்தில் இலங்கையின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும்- சம்பிக்க ரணவக்க கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அடுத்த நான்கு வருடங்களில் நாட்டின் கடன் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக அடுத்த நான்கு வருடங்களில் இலங்கையின் கடன் 28 டிரில்லியனாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதால் மக்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களிடமிருந்து தரவுகளை மறைக்காமல் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும் என சம்பிக்க ரணவக்க வேண்டுகோ…

  10. நினைவேந்தல் நிகழ்வை தடை செய்யாதிருக்க மனு எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை மேற்கொள்ளவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட வுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்ப டுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி அந்த நினைவேந்தல் நிகழ்வை தடைசெய்யக்கூடாதென மனுவின் ஊடாக கோரப்படவுள்ளது. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரியே இந்த மனுக்கள், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளன. போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பே…

  11. மக்களுக்காக மரணித்தவர்களை நினைவுகூரும் உரிமையையும் தார்மீகக் கடமையையும் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிசக் குடியரசா? சுரேஷ் கேள்வி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தம் இன்னுயிரை ஈந்த போராளிகளையும் பொது மக்களையும் நினைவுகூர்வதென்பது தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமையாகும். அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமக்காக மரணித்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பதுதான் ஜனநாயக சோசலிச குடியரசு ஆட்சியா என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: யுத்தத்தினால் மடிந்து போன மக்களை போராளிகளை…

  12. மட்டக்களப்பை வெள்ள அனர்த்தத்திலிருந்தும் பாதுகாக்க முன் ஆயத்த நடவடிக்கை! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/11/download-1-3.jpg நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏட்படவிருக்கும் வெள்ள அனர்த்தத்திற்கான முன் ஆயத்தங்களை ஆராய்வதுடன் டெங்கு பரவலினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கரணாகரன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் டெங்கு நோய் பரவலையும் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் வேளையில் மக்…

  13. மண்ணில் மறைந்திருந்து கையையும் கண்ணையும் பறித்த கைக்குண்டு-பி.மாணிக்கவாசகம் 38 Views “காலைப் பிடிச்சு விடுங்கோ… அப்பா… காலை பிடிச்சு விடுங்கோ…..” என்றான் வைத்தியசாலை கட்டிலில் குறுகிப் படுத்துக் கிடந்த அந்தச் சிறுவன். அருகில் கதிரையொன்றில் அமர்ந்திருந்தவாறே அந்த சிறுவனின் கால்களை அவனது தந்தை பிடித்து அமத்திக் கொண்டிருந்தார். “நல்லா அழுத்திப் பிடிச்சு விடுங்கோ…” குரலில் தாளாத வலி கலந்த கெஞ்சல் இழையோடியது. அந்த தந்தையின் பிடியில் அழுத்தம் கூடியது. காலைப் பிடித்து விடுவது மகன் விநோதனுக்கு இதமாக இருக்கும். ஆனால் அழுத்திப் பிடித்தால் நோ கூடி விடுமே என்ற எண்ணம் குறுக்கிட்டு அவரை அலைக்கழித்தது. காய வலியின் வேதனையைத் …

  14. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் குழு மோதல் – பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபை இன்று கூடவுள்ளது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கென வணிக முகாமைத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான எம். நடராஜசுந்தரம் பேரவையினால் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் கடந்த 21 ஆம் திகதி முதல் தனது விசாரணைகளை நடாத்தி, சம்பவம் தொடர்பில் 130 பக்கங்களைக் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையைச் சமர்பித்திருந்தார்.இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைககளை மேற்கொண்ட தனிநபர் ஆயத்த…

  15. பிரதேச சபை உறுப்பினர்களை நீக்க இடைக்கால தடை November 18, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவாளர்கள் என கூறி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரை நீக்கும் காங்கிரஸின் முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டி, சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான சி.கஜன் மற்றும் ஜெ.நிதர்சன் ஆகிய இருவரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சாட்டி இருவரையும…

  16. மக்கள் மீது சுமைகளை இறக்கும் வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிக்கவோ, நாடாக மீளவோ இந்த வரவு செலவு திட்டமானது கைகொடுக்காது எனவும், மிகவும் பலவீனமான வரவு செலவு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை முன்வைத்த கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில். அரசாங்கம் முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது அரசாங்கத்தின் மோசமான நிலைமைகளை வெ…

  17. மன்னாரில் 30 குளங்கள் புனரமைப்பு - மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 36 குளங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதில் 30 குளங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மிகுதி 6 குளங்களின் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தெரிவித்தார். குளங்களின் புனரமைப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 40 குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் சுமார் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் வரிகள் போக 233 மில்லியன் ரூபாய் நிதியே அனுமதிக்கப்பட்டது. இறுதியில் 80 மில்லியன் நிதிய…

  18. துயிலும் இல்ல சிரமதானத்தில் ஈடுபடுவோருக்கு உதவினால் சூடு – புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை 37 Views மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவோருக்கு தண்ணீரோ, தேநீரோ வழங்கவேண்டாம். அவ்வாறு வழங்கினால் சுடுவோம் என்று இராணுவப் புலனாய்வு என்று தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் எச்சரித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதையொட்டி தமிழர் தாயகம் எங்கும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லம் அருகேயுள்ள வீடுகளுக்குச் சென்றசிலர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர…

  19. வெளியானது விசேட வர்த்தமானி Daya Dharshini November 18, 2020வெளியானது விசேட வர்த்தமானி2020-11-18T07:49:08+05:30 FacebookTwitterMore துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்த மானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்டிப இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. …

  20. வலி கிழக்கின் வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது 46 Views வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் மேலதிக பெரும்பான்மை பலத்துடன் இன்று நிறைவேறியது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (17) சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களின் விவாதங்களுக்கு தவிசாளரால் அனுமதியளிக்கப்பட்டது. விவாதத்தில் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் வேலைகள் உரிய காலத்தில் நிறைவுறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதே…

  21. வடக்கு விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையில் விதை உருளைக் கிழங்குகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூரில் ரின் மீன் உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்கும் வகையிலான எந்தவகையான தீர்மானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.யாழ். மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு விதை உருளைக் கிழங்குகளை வழங்குவற்காக சுமார் 60 மில்லியன் ரூபாய் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிதி ஒதுக்கப்பட்டமைக்காக நேற்றைய …

  22. உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்டோருக்கு, உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்…. November 17, 2020 உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16.11.20) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்க…

  23. மாவீரர் வாரத்திற்கு தடைவிதிக்க கூடாது என கோரி மனு… November 17, 2020 பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவற்துறை மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. போரில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் தமது சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடாக இந்த நீதிப்பேராணை மனுவை வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவுள்ளனர். …

  24. யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையம் மூடப்படவுள்ளதா..? தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கூறியது என்ன..? யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணங்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் மூடப்படலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (TNA) சிலர் இந்தியாவுக்குத் தெரிவித்ததாக மவ்விம சிங்கள பத்திரிகை இணையம் செய்திவெளியிட்டுள்ளது. அண்மைக் காலங்களில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கு (சென்னை) இடையே சுமார் 130 தடவைகள் விமான சேவைகள் நடந்துள்ளன, இதில் 4,325 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் -கொழும்பு (இரத்மலானை) இடையே 906 பயணிகள், 60 தடவ…

  25. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் பிரவேசித்த யானைகள் பயன்தரும் தென்னம்பிள்ளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளது. அதேவேளை வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளன. வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் தற்போது பகல் நேரங்களிலும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து பயன்தரும் மரங்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. இந் நிலையில் கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.