ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
அமைச்சரவை செயலாளர் மற்றும் 25 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (13) நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு அமைச்சின் செயலாளர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விபரம், மேஜர் கமால் குணரத்ன – பாதுகாப்பு செயலாளர். அட்மிரல் ஜயநாத் கொலம்பகே – வெளிவிவகார செயலாளர். மேஜர் சஞ்சீவ முனசிங்க – சுகாதார செயலாளர். மேஜர் சுமேத பெரேரா – விவசாய செயலாளர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க – சுற்றுச்சூழல் செயலாளர். W. M. D. J.பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர். R. W. R.ரத்னசிறி – நிதி செயலாளர். எஸ்.ஆர்.ஆட்டிகல – பொது சேவைகள் செயலாளர். ஜகத் விஜேவீர – வெகுஜன ஊடக செயலாளர். ரவீந்திர ஹேவவித்தாரண –…
-
- 0 replies
- 468 views
-
-
(நா.தனுஜா) புதிதாக ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினால் நாம் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், எம்மோடு இருக்கின்ற பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்ற பயம் மேலோங்கியிருக்கிறது. மீண்டும் ஒரு இன அழிப்பு ஏற்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோன்று நாட்டில் போர்க்குற்றங்கள் நடக்கவேயில்லை என்றும் காணாமல்போனோர் எவருமில்லை என்று கூறியவர்களுமே இப்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும் என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தலைவி கனரஞ்சனி யோகதாஸன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 264 views
-
-
மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்? மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமைத்துவத்தின்கீழ், கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது, கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் பெறுபேறுகளை ஆராய்ந்த பின்னர் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துகள் முன்வைக…
-
- 1 reply
- 490 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் நாட்டு மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் எமது முயற்சியை சிலர் விரும்பவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் அவ்வாறானவர்கள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி தீவிரவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அலிஸ் சப்ரி தெரிவித்தார். கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அந்த விடயங்களைக் குறிப்பிட்டார். தாம் அமைச்சு பொறுப்பை ஏற்றுள்ளமை ஒரு பிரிவை சார்ந்த மக்களுக்காக மாத்திரம் அல்ல என்றும் அனைத்து நாட்டு மக்களுக்குமே ஆகும் என்றும் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ தீவிரவாதம் தொடர்பி…
-
- 1 reply
- 426 views
-
-
சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே நோக்கம் – தினேஸ் வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே தனது இலக்கு என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியமாகும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அமைச்சர்கள் பலரும் இன்று உத்…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழ் தேசியத்தை அழிக்கும் திட்டம் கச்சிதமாக முன்னெடுப்பு: இலட்சிய பயணம் தொடரும்- சிவசக்தி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் இலட்சியப் பயணத்தில், உரிமையுடன் உண்மையாய் தொடர்ந்தும் பக்கபலமாக செயற்படுவோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நடைபெற்று நிறைவடைந்த பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த, வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபெற்று நிறைவடைந்த 9ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கான …
-
- 1 reply
- 492 views
-
-
இன்னும் 10 ஆண்டுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவை மலரும் யார் எதை சொன்னாலும் எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு இந்த புதிய அரசாங்கத்துடன் ஊடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பணியை முன்னெடுத்து செல்லும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தனது 26 வது இளம் வயதில் பாராளுமன்றத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு தெரிவாகி நுவரெலியா மாவட்டத்தில் இலட்சத்திற்கு அதிகமான விருப்பு வாக்குகளை பெற்ற ஜீவன் தொண்டமான் கண்டியில் நேற்று (12) இராஜாங்க அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதனையட…
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “கட்சிக்கு எதிரான நான் நடந்துகொள்பவன் அல்ல. எனினும், சக வேட்பாளர்கள் எனக்கு எதிராக பரப்புரை செய்தார்கள். நான் ஒருபோதும் அப்படி செய்யவில்லை. எனக்கு ஆதரவாக சிறீதரன் மட்டுமே இருந்தார். இதனால் இறுதியில் அவருக்கு எதிராகவும் பரப்புரை செய்தார்கள். இறுதியில் நானும், சிறீதரனுமே வெற்றிபெற்றோம். எமக்கு எதிராக சதி செய்தவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்கள் தீர்ப்பின்படி சிறீதரனும், நானும் வெற்றிபெற்றிருக்காவிட்ட…
-
- 64 replies
- 5.8k views
-
-
மைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டிருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் கண்டியில் இன்று இடம்பெற்றிருந்த அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவில் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார் என்பது…
-
- 17 replies
- 2k views
-
-
திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லை- அதிகாரி வாக்குமூலம் August 13, 2020 திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரி…
-
- 1 reply
- 494 views
-
-
இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இரா-சம்பந்தன்-ரணில்-உள்ள/
-
- 3 replies
- 945 views
-
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.! "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
19 ஆவது திருத்தத்தை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் அடிபணியப்போவதில்லை: அலி சப்ரி August 13, 2020 19 ஆவது சட்ட திருத்தினை முழுமையாக ஒழிப்பேன்; யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன் என்று நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று புதன்கிழமை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: அனைத்து மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன். 19 ஆவது திருத்தச் சட்டம் முற்றாக ஒழித்து அந்தக் குழப்பத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவேன். இதற்கு தேவையான சட்ட வரைபுகள் விரைவில் தயாரிக்கப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பதற்…
-
- 1 reply
- 627 views
-
-
தாயகநிலப்பரப்பில் பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாயகநிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்கொண்டிருக்கின்றன.வன்னிமாவட்டத்தையும் அந்தநிலைக்கு கொண்டுசெல்கின்றார்கள். எனவே இந்த தேர்தலுக்குபின்னர் வரக்கூடியநிலைமையை தொடர்பாக நாம் ஆராயவேண்டும்.இன்று புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவிருக்கின்றது.அது ஒரு ஒற்றையாட்சியாக இருக்கப்போகின்றது.அதனை ஆதரிக்கபோவதாக கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருக்கின்றது என தமிழ்தேசியமக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பாகவும். இன அழிப்பிற்கு நீதிகோரியும் இறுக்கமான செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.பெரும்பாண்மை கிடைத்துள்ள புதிய அரசாங்கம் எங்களை திரும்பி…
-
- 1 reply
- 867 views
-
-
சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியம்; – விக்னேஸ்வரன் August 12, 2020 எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை கொள்கை அடிப்படையில் எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த செயற்பாடுகள் அவசியமாகவுள்ளன என தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்கு ஒத்துழைப்பு வழங்க நானும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இணைந்த வடக்குகிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஸ்டி தீர்வு தரபபடவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றேல் இறுதிதீர்வு தொடர்பாக சர்வதேசமேற்பார்வையின…
-
- 6 replies
- 958 views
-
-
முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடம் 7 மணி நேரம் சி.ஐ.டி. விசாரணை! (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் இன்று சுமார் 7 மணி நேரம் சிறப்பு விசாரணைகள் நடாத்தப்பட்டன. சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் முற்பகல் 9.30 மணியளவில் ஆஜரான முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் மாலை 4.30 மணி வரை விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஏற்கனவே இரு தடவைகள் சி.ஐ…
-
- 2 replies
- 792 views
-
-
புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு தற்போது அரசு நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட, இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர்கள், தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் மாற்றப்படக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதற்கு உரித்தான நியமனங்கள் அந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவால் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான உத்தரவை அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர அனுப்பியுள்ளார். அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையி…
-
- 1 reply
- 500 views
-
-
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்.! தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர். அம்பாறை- கல்முனை பகுதியில…
-
- 104 replies
- 11k views
- 1 follower
-
-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைகிறேன் – நாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பெருமையடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சு பதவி பெற்றமை தொடர்பாக ருவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “அந்தஸ்து உள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதில் நான் பெருமையடைகிறேன். என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு, ஜனாதிபதி…
-
- 1 reply
- 666 views
-
-
28 புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம் – Live Updates 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது. இராஜாங்க அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி காற்று நீர்மின் உத்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் …
-
- 9 replies
- 1.7k views
-
-
-சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். 2009ஆம் ஆண்டு, மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனைத் தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர், நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில், இந்தத் தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த 18 உறவுகள் உயிரிழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவி…
-
- 3 replies
- 648 views
-
-
(எம்.மனோசித்ரா) 1977 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்டத்திற்கு காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள தமிழ் பிரதிநித்துவ அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்கென அமைச்சரவையொன்று ஒதுக்கப்படாமை கவலையளிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். கொழும்பு - ரமடா ஹோட்டலில் இன்று புதன்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இலங்கை வரலாற்றில் 43 வருடங்களாகக் காணப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இம்முறை இல்லாமலாக்கப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 479 views
-
-
நா.தனுஜா) புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்றைய தினம் கண்டி மாநகரத்தில் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறங்கள் நீக்கப்பட்ட கொடிகளை உடனடியாக அகற்றுவதற்கு கண்டி மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரலாற்று வெற்றியைப்பெற்று அரசாங்கம் அமைத்திருக்கும் நிலையில், அதன் புதிய அமைச்சரவை நேற்று புதன்கிழமை தலதா மாளிகையின் பார்வையாளர் அரங்கான மகுல் மடுவவில் வைத்துப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கண்டி மாநகரத்தின் பல பகுதிகளிலும் மாநகரசபை ஊழியர்கள் தேசியக்கொடியில் சிறுபான்மையினரைப் பிரதிபலிக்கும் நிறங்கள் நீக…
-
- 5 replies
- 777 views
-
-
அம்பாறை – கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி செய்யப்பட்டுள்ள தவராசா கலையரசன் குறிப்பிட்டார். அவரது அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், “கல்முனை பிராந்தியத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒத்திசைவுடன் தான் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த முடியும். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது. எல்லை விடயங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும். எங்கள் கட்சிக்கு ஜனநாய…
-
- 2 replies
- 1.2k views
-
-
இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். குறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார். மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்து…
-
- 0 replies
- 773 views
-