ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
பலம்மிக்க ஐதேகவின் பிளவு கவலையே – தயாசிறி குமுறல் பலமான ஐக்கிய தேசியக்கட்சி பிளவுபட்டது கவலை அளிக்கிறது. ஏதற்கான பொறுப்பை சஜித் பிரேமதாச ஏற்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் இன்று (19) ஹட்டனில் திறந்து வைக்கப்பட்ட போது இதனை தெரிவித்தார். மேலும், ‘நுவரெலியா மாவட்டத்திலும் இணைந்து பயணித்திருக்கலாம். ஆனால், பொதுஜன பெரமுனவால் இந்த மாவட்டத்தில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதன்காரணமாகவே தனித்து போட்டியிடுகின்றோம். ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால் இரு அணிகளுமே பொதுத்தேர்தலில் படுதோல்வியடையும் என்பது உறுதி. பலம்ம…
-
- 0 replies
- 432 views
-
-
கூட்டமைப்பில் இருக்கும் சிலர் கட்சியை பலவீனப்படுத்துகின்றர்! – செல்வம் குற்றச்சாட்டு by : Vithushagan தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தா…
-
- 1 reply
- 453 views
-
-
யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார். …
-
- 8 replies
- 1.3k views
-
-
பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/பாலித்த-தெவரப்பெரும-வைத்தியசாலையில்/175-251979 பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதி களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப்…
-
- 4 replies
- 992 views
-
-
ஸ்ரீலங்காவின் பூதாகர சக்தியாக வளர்ச்சியடைந்த கோட்டாபய! சூடு பிடிக்கும் அரசியல் களம் ஸ்ரீலங்காவின் பூதாகர இனவாத சக்தியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம் என ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா. கஜதீபன் தெரிவித்திருக்கிறார். ஐபிசி ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தொடர்பில் நமது ஊடகத்திற்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்ததாவது, https://www.ibctamil.com/srilanka/80/145469?ref=imp-news
-
- 0 replies
- 631 views
-
-
திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை! எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும் திறக்கப்படவுள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அறிறுத்தல்களைப்பின்பற்றி திரையரங்குகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். திரையரங்குகளை திறப்பதற்கு முன்பாக கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திரையரங்குகளுக்கு வருகைதருவோர் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகள் கடந்த மார்ச் மாத…
-
- 2 replies
- 467 views
-
-
முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு 3 முக்கிய விடயங்கள் நாட்டில் இருக்க வேண்டும்- மங்கள சுட்டிக்காட்டு by : Litharsan ஜனாதிபதி கூறுவது போன்று முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார சீர்குலைவிற்கு கடந்த 7 மாதங்களாக இடம்பெற்ற முறையற்ற நிர்வாகமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கொவிட்-19 தொற்றும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை மத்திய…
-
- 0 replies
- 366 views
-
-
ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை by : Yuganthini முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்ன…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை அகழாய்வில் ஆதிமனிதர்களின் 48,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆயுதங்கள் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைOSHAN WEDAGE இலங்கையில் சுமார் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் மிருகங்களின் எலும்புகளில் வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு மிருகங்களை வேட்டையடி…
-
- 2 replies
- 635 views
- 1 follower
-
-
சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்…! கொரோனா தொற்றினால் தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது. இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகம் என்பதால் எடை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளா…
-
- 0 replies
- 402 views
-
-
யாழில் மாடுகளைப் பதம் பார்த்த ரயில்! யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் இரு பசு மாடுகளை மோதித் தள்ளியுள்ளது. யாழ். நாவலர் வீதிப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் பசு மாடு அங்கேயே உயிரிழந்துள்ளது. மற்றைய மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் அங்கேயே கிடந்துள்ளது. காயமடைந்து நடக்க முடியாத நிலையில் கிடந்த மாட்டை, சம்பவ இடத்துக்கு வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், கால்நடை வைத்தியர்களான மாறன் மற்றும் பிரியந்தினி ஆகியோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்டு அருகில் உள்ள மர நிழலுக்கு அடியில் கொண்டு சென்று சேர்த்தனர். அத்துடன், காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. …
-
- 0 replies
- 447 views
-
-
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரின் தகுதிகளை ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த சில பிரதிநிதிகள் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்தவர்களும், நாட்டுக்கு போதைபொருள் கடத்தி வந்தவர்களும், ரயிலில் தங்கச் சங்கிலியை பறித்தவர்களுமாகவே இருந்தனரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் மதுபான விற்பனை நிலையங்களுக்கான உரிமங்களை பெற்றிருந்த 100 பேரும், மணல் அகழும் அனு…
-
- 1 reply
- 354 views
-
-
டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா தடுப்பு சிக்கிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர், வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக…
-
- 0 replies
- 466 views
-
-
பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எதிர்காலத்தில் சகல சமூகங்களும் பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் போதைப் பொருட்கள், பாதாள உலக நடவடிக்கைகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பணம் கொள்ளை இல்லாத சமூகத்தை உருவாக்குவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது பாதுகாப்புச் செயலாளர், பாதாள உலகக்குழுக்களின் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது …
-
- 3 replies
- 563 views
-
-
படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள்: வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள் இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன. எதிர்வரும் ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இரு அமைப்புகளும் இலங்கையின் சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்களை சித்திரவதை செய்வதற்காக கடந்த மூன்று தாசப்தகாலமாக இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் படையினருடன் இணைந்து செயற்படும் ஆயுத குழுக்களும் பயன்படுத்தும் 219 இடங்கள் அடங்கிய வரைபடத்தை குறித்த அமை…
-
- 1 reply
- 358 views
-
-
வீடுகள் கையளிப்பு! கிராமத்துக்கு ஒரு வீடு எனும் திட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாஞ்சோலை கிராமத்தில் கட்டப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் இன்று (16) நடைபெற்றது. அத்தோடு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை கிராமத்தில் கட்டப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின…
-
- 1 reply
- 743 views
-
-
பொதுத்தேர்தல்: சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை நிறைவு செய்து,கொரோனாத் தொற்று அற்றவர்கள் என்பதை உறுதி செய்த பின்னரே தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கும் தேர்தல் ஆணையாருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இம்முறையும் பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம்,தென்கொரியாவின் அன்பிறில் அமைப்பு ஆகியவற்றின் சர்வதேசக் கண்காணிப்புப் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்பில்…
-
- 0 replies
- 304 views
-
-
சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வரவிருக்கும் பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். மேலும் இலங்கையில், கொரோனா வைரஸ் என்ற கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கையை முன்னெடுத்தமைக்காகவும் சீன ஜனாதிபதி தமது கடிதத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹூ வை இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த கடிதத்தை பதில் தூதுவர் ஜனாதிபதியிடம் வழங்கினார். கொவிட் 1…
-
- 1 reply
- 642 views
-
-
In இலங்கை June 18, 2020 1:44 pm GMT 0 Comments 1114 by : Vithushagan தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் வெள்ளைவான் கடத்தல் ஆரம்பமாகும் என்று சொல்லி தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு இருந்தனர்.அதே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இப்போது கோத்தபாய…
-
- 2 replies
- 656 views
-
-
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து – ஒருவர் உயிரிழப்பு! by : Vithushagan யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த தீயணைப்பு வாகனத்திற்ன் முன் பகுதி சில்லு திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகிய வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அரியரட்ணம் சகாயராஜா எனும் 37 வயதுடைய தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையி…
-
- 3 replies
- 489 views
-
-
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக இருக்கின்றது.மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டுமெனில் இந்த நாடு உருப்படியாக இருக்கவேண்டும் இனிமேல் மங்கள முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நான் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. மங்கள அரசியலில் இருந்து விலகுவதான திடீர் அறிவிப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக இருக்கின்றது. இந்தநிலையில் நாடாளுமன்ற அரசியலிலிருந்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர விலகியதை நான் வரவேற்கின்றேன். அவர் அவ்வாறு விலகுவது எனக்கு விருப்பம் இல்லை. எனினும்,…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கையில் மீண்டும் வெள்ளைவான் கடத்தல் கலாசாரமும், அடக்குமுறை ஆட்சியும் உருவெடுத்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான தரிஸா பெஸ்டியனின் இல்லத்தில் நுழைந்து இரகசிய பொலிஸார் சோதனையிட்ட விடயத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவரின் முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது, https://www.ibctamil.com/srilanka/80/145391
-
- 1 reply
- 504 views
-
-
In ஆசிரியர் தெரிவு June 18, 2020 6:21 am GMT 0 Comments 1338 by : Litharsan கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆனி 2ஆம் திகதி, 2020ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம், கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்கா…
-
- 0 replies
- 544 views
-
-
இன்றையதினம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்திப்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா செல்லவிருந்தார். இந்த நிலையில் அவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சுமந்திரன் இந்த கூட்டத்தில் பங்குப்பற்றினால் தான் பங்குப்பற்ற மாட்டேன் என கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டதை அடுத்து குறித்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பகுதிக்கான தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் சுமந்திரன…
-
- 5 replies
- 925 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார். அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இ…
-
- 16 replies
- 1.7k views
-