Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு: அமைச்சர் டக்ளஸ் by : Litharsan முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவத்தார். குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளிமாவட்ட மீனவர்களைக் கட்டுப்ப…

    • 0 replies
    • 418 views
  2. ஒரே தினத்தில் இலங்கை வங்கியின் 3 கிளைகள் புதிய இடங்களில் திறப்பு - கே.எல்.ரி. யுதாஜித் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மூன்று கிளைகள், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத் தொகுதிகளுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருமதி. குமுதினி யோகரட்ணத்தினால் இந்தக் கிளைகள் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, ஆரையம்பதி ஆகிய கிளைகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் கிளையும், இவ்வாறு புதிய முகவரிகளில் திறந்து வைக்கப்பட்டன. …

    • 0 replies
    • 436 views
  3. வசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட இன்று (29) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இன்று அவரை ஆணைக்குழுவுக்கு அழைத்துள்ளதாக ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் 11 இளைஞர்களை கடந்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் …

    • 0 replies
    • 420 views
  4. ராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச by : Yuganthini முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஜித சேனாரத்ன 2கோடி ரூபாயும் சரத் பொன்சேகா 3.5 கோடி ரூபாயும் சம்பிக்க ரணவக்க 35 இலட்சமும் அவன்காட் நிறுவனத்திடமிருந்து கப்பம் பெற்றுள்ளனர் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஆனால் விஜயத…

    • 0 replies
    • 447 views
  5. புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டது ஐ.தே.க by : Yuganthini இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசியல் அரங்குகளில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குருநாகல் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டுள…

    • 0 replies
    • 245 views
  6. அதிரடியாக அதிரடிப்படை கைப்பற்றிய 12 துப்பாக்கிகள்! கொழும்பு – ஹோமாகமை, பிட்டிபன பகுதியில் அதிரடி படையினர் முன்னெடுத்த தேடுதலில் ரி-56 தாக்குதல் துப்பாக்கிகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை பொலிஸார் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். https://newuthayan.com/அதிரடியாக-அதிரடிப்படை-கை/

  7. தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகள், ஆதரவாளர்களை தீவிரமாக கண்காணிக்கிறோம்..! அவர்கள் புலிகளுக்கு ஒக்சிசன் வழங்க முயற்சிக்கிறார்கள்.! தமிழீழ விடுதலை புலிகளின் அனுதாபிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, அவர்கள் தொடர்பில் தொடர்ந்து மிக அவதானமாக இருக்கிறோம் இன்னும் இருக்க வேண்டியிருக்கிறது. எனவும் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து துடைத்தெறிந்துள்ளோம். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர். வெளிநாடுகளில் அவர்கள் தொடர்ந்…

  8. இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை! இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. இருப்பினும், இன்றைய இலங்கையர்கள் 13 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 850 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் சிறுநீர் மாதிரிகளில் உள்ள உப்பின் அளவைக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதிக உப்பு நுகர்வு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள…

  9. மலையக மக்களை எவரும் சீண்ட முடியாது: நான் இருக்கிறேன்- திகாம்பரம் மலையக மக்களை, தான் இருக்கும்வரை எவரும் சீண்ட முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். கடந்த நான்கரை வருடங்களில் மக்களை எவரும் சீண்டவில்லை எனவும் சேவைகளைச் செய்துகாட்டிவிட்டே அவர்களிடம் வாக்குக் கேட்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்குத் தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார…

  10. எழுத்தாணிக்கான அலுவலகம் திறப்பு ஊடகத்துறை, இலக்கியத்துறை, சமூகசேவைகள் எனும் மூன்று பிரிவுகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை, தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை, திருகோணமலை மின்சார நிலைய வீதி நேற்று (27) திறந்து வைத்தது. இந்த விழாவில் அதிதிகளாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி ஜீவிதன் சுகந்தினி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கோணேஸ்வரன், திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரும் தளமாகவும், ஊடக மாநாடுகள் நடத்தவும் இவ்அலுவலகம் …

  11. மீண்டும் நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது! கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் (29) மீளவும் திறக்கப்படவுள்ளது. இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால் நாளைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 6ம் திகதி இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மீண்டும்-நாளைய-தினம்-பாட/

  12. கோத்தாபய மீதான தமிழ் மக்களின் பயத்தை நீக்குவது உறுதி – ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘அம்பாறையில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்க பெரும்பாலான மக்கள் முன்வந்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக போட்டியிடுகின்ற என்னை, நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக சிறுபான்மை மக்களாகிய உங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்றால் இனம் தெ…

  13. பாலம் அமைத்து தருவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் வரும்போது பொய்வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தல் அபேட்சகர்கள் மக்களுக்கு அளிப்பது சர்வ சாதாரணமான விடயம். இதற்கு ஒரு சான்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி மண்டூர் படகுத்துறை பாலமேயாகும். பாலம் அமைத்து தருவோம் என நான்கு தசாப்தகாலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது. நான்கு தடவைகள் பாலத்திற்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. அடிக்கற்கள் நாட்டப்பட்ட இடமே தெரியாமல் போய்விட்டது. ஆனால் இம்முறை மக்கள் தெளிவாக உள்ளனர். திடமான கொள்கை கட்சி மாறாத உறுதி பொய் அற்ற வாக்குறுதி அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மக்களோடு மக்…

  14. கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டாதா என்பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பணியக அதிகாரிகள் ஐவரை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். https://newuthayan.com/கைப்பற்றிய-போதை-பொருட்கள/

  15. ஏழாலையில் வீடுடைத்து 14 பவுன் நகை கொள்ளை! யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் இன்று (28) அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில…

  16. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத ஸ்தலங்களின் ஊடாகவும் மத வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்ற…

    • 2 replies
    • 725 views
  17. 13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட June 28, 2020 அரசியல் கட்சிகள் 13 வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் கைவிடுவது குறித்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார். மாகாணசபை முறையை நீக்கவேண்டும்,அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநாகர சபைகள்,நகரசபைகள் போன்ற உள்ளுராட்சி அமைப்புகளிற்கு வழங்கவேண்டும் என அவர் கருத்துவெளியிட்டுள்ளார். இந்த அமைப்புகள் மக்களிற்கு நெருக்கமாக உள்ளதன் காரணமாக சமூகமட்டத்தில் மக்களிற்கு எழும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான சிறந்த நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் ந…

  18. கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி June 28, 2020 கிழக்கு மாகாணத்தில் தமிழ் எம்.பி.க்களின் மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்து அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டியவர் கருணா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது; “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்கள…

    • 36 replies
    • 2.2k views
  19. முஸ்லிம் காங்கிர‌சின் கடந்த. 20 வ‌ருட‌ கால‌த்தில் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் எந்தவொரு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காண‌ப்ப‌டவில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தொட‌ர்ந்தும் வாக்க‌ளித்து வ‌ரும் க‌ல்முனை ம‌க்க‌ள் மிக‌ப்பெரும் பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுத்து வருகின்றனர் எனவும் உலமாக்கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் குற்றம் சாட்டியுள்ளார் அவரது அலுவலக்த்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வாழ்விட‌ ப‌ற்றாக்குறை. ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஏழைக‌ளுக்கு சொந்த‌மாக‌ வீடுக‌ள் இல்லை. ஒரு வீட்டில் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். வீடில்லாமை கார‌ண‌மாக‌ திரும‌ண‌ம் செய்ய‌ முடியாத‌ ஏழைக‌ள் ப‌ல்லாயி…

    • 2 replies
    • 446 views
  20. கொல்லப்பட்டார்கள் என்றால் யார் கொன்றது? – சவேந்திரவிடம் சுரேஸ் கேள்வி காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (28) முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது கருத்தில் சில விடையங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒன்று தாம் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம் என்பதாகும். தொடர்ச்சியாக இங்குள்…

    • 1 reply
    • 491 views
  21. புலிகளில் இருந்து பிரிந்தது வேதனைதான்

    • 0 replies
    • 667 views
  22. புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் – இரா.சம்பந்தன் நாம் பலமான அணியுடன் நாடாளுமன்றம் சென்றால்தான் அரசுடன் காத்திரமான பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் என்றும் எனவே, இம்முறை தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கடந்த முறையையும் விட அதிகரிக்கப்பட வேண்டும்.அந்தப் புனிதமான கடமையை எமது மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகத் தவறாது செய்ய வேண்டும் என்றும் எமது மக்களின் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது.இதேவேளை புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அனைவருடைய ஆலோசனைகளையும் பெற்று அதற்கமையவே பேச்சைத் தொடர்வோம் என்றும் கடந்தகால வரலாறுகளை நாம் மறக்க…

    • 2 replies
    • 452 views
  23. தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை அவ்வாறு செல்ல மாட்டேன். அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றை பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஊடாக-நா/

    • 12 replies
    • 1.1k views
  24. தமிழ் தேசிய கூட்டமைப்பு இயதசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி சரணடைந்த விடுதலைப் புலிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் நீதி கேட்கின்ற பயணத்தை அவர்களாகவே முன்னெடுத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை எந்த இடத்தில் முடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. …

    • 2 replies
    • 508 views
  25. ஆதாரமற்ற தகவல்களை வைத்து பிரச்சாரம் செய்யாதீர்கள் – கபே சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில், ‘தேர்தல் காலப்பகுதியில் பொய்யான பிரசாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாத பிரசாரங்கள் அதிகளவு பேசப்படுகின்றன. இவ்வாறு சாட்சியங்கள் இல்லாத விடயங்களை தேர்தல் மேடைகளிலும் அதேபோன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் முன்வைக்கின்றப்போது வாக்காளர்களின் மனோநிலை திருப்பப்படும். அதாவது இனபேதங்கள், மத பேதங்கள் மற்றும் குல பேதங்கள் உண்டாக்கப்பட்டு தேர்தல் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலை க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.