Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் காயம் யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.குறித்த பகுதியில் இருந்த மர்ம பொதி ஒன்றே வெடித்துள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இதில் காயமடைந்த அதிகாரி இராணுவ முகாமிற்க…

  2. ஜனாதிபதி செயலணியை இணைந்து எதிர்ப்போம்! கிழக்கு மண்ணைக் காவு கொள்ள வரும் ஜனாதிபதி செயலணியை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து எதிர்ப்போம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழர்களுடைய தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கிலே முக்கியமான பகுதி கிழக்கு மாகாணமாகும். இவ் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளில் ஒன்றான தாயகக் கோட்பாட்டோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகக் கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. தமிழர்களின் தாயக பூமியான இக் கிழக்கு மாகாணத்தை அடக்கி ஆள்வதற்கும், ஆக்கிரமிப்பதற்கும், கைப்பற்றுவதற்கும் …

  3. சிறப்புற நடைபெற்ற அந்தோனியார் பெருவிழா அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று (13) வவுனியா – இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில், மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் தற்போதைய சூழல் நீங்கி, மக்கள் சமாதானமானதும் சுதந்திரமானதுமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். https://newuthayan.com/சிறப்புற-நடைபெற்ற-அந்தோ/

  4. இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் விரைவாக அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அரசுடன் விரைவில் இலங்கை அரசு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள இருக்கின்றது. குறித்த உடன்பாட்டை ஏற்கனவே செய்து கொள்வதற்கு திட்டமிடப்படிருந்த நிலையில், கொரோனோ தொற்றினால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறி வருகின…

    • 2 replies
    • 558 views
  5. போலியான பெயரில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற சஹ்ரானின் சகோதரன்- விசாரணையில் முக்கிய தகவல் கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரில்வான் ஹாசிம் உயிரிழந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் போலியான பெயரில் பதிவாகி சிகிச்சை பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் எச்.கே.சந்தன, ஜனாதிபதி ஆணைக்குழுவி…

  6. பெரஹரவுக்கு அனுமதி – எவரும் பங்கேற்க முடியாது! இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (12) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்த ஆண்டு பெரஹெர நிகழ்வுகளை விகாரைகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவறுத்தியுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாதயாத்திரைகளை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குற…

  7. (எம்.நியூட்டன்) தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்பிற்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடாத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் சுமந்திரனுக்கு முன்னாள் போராளிகள் மீது திடீரென பொங்கிய பாசம் தேர்தல் நெருங்குகின்றது தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தினையே தொக்கி நிற்கின்றது. தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்…

  8. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற வேட்பாளரான முன்னாள் ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்கவும் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். தனது விலகல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கட்சியின் தலைவர் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இவருடன் இதுவரை சஜித் அணியின் மூன்று வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலயகியுள்ளதுடன், அவர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் பக்கம் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/சஜித்-கட்சியின்-அடுத்த/

  9. விடுதலைப் புலிகள் தொடர்பான ஏ.எம்.சுமந்திரனின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதென முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்தி…

    • 1 reply
    • 498 views
  10. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்கள் நடாத்தப்பட்ட நிலையில், 2019 ஏப்ரல் புத்தாண்டுக்கு முன்னர் தாக்குதல்கள் தொடர்பில் உளவுத் தகவல்கள் கிடைந்திருந்ததக கூறப்பட்ட நிலையில், அந்த தகவல் உளவுத் தகவலே இல்லை என பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று சாட்சியமளித்தார். நேற்று இரவு சாட்சியமளித்த அவர், கடந்த 2019 ஏபரல் 11 ஆம் திகதி தான் கொழும்பு பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமைகளை முன்னெடுத்த போது, தனது கைகளுக்கு 5 பக்கங்களைக் கொண்ட ஆவணம் கிடைத்ததாகவும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள், அவ்வாவணத்தின் இறுதி இரு வசனங்கள் ஊடாக முற்றாக மழுங்கடிக்கப்பட்டே கிடைக்கப் பெற்றி…

  11. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய த.தே.ம கூட்டணி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியினரால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு நேற்று (11) கடிதம் ஒன்று அனுப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் உள்ளவை வருமாறு, ‘தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற ஒரு குடையின் கீழ் அண்மையில் கூட்டுச் சேர்ந்திருக்கும் கீழ்க் கூறப்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் 1979ம் ஆண்டு 48ம் இலக்கச் சட்டத்தின் கீழ், 10 – 15 வருடத்திற்கும் மேற்பட்ட காலம் சிறையகப்படுத்தப்பட்டிருக்கும் 91 தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதி வேண்டி இந்த மேன்முறையீட்டை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம். எமக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மேன்மு…

  12. முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறேன் - பெறுபேறுகளை எடுத்துக்காட்டுங்கள் ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று நல்ல பெறுபேறுகளை கொண்டுவருவது ஏற்றுமதியாளர்களின் முன் உள்ள சவாலாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களை தெளிவுபடுத்தவும், ஏற்றுமதி வியாபாரத் துறை முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை இனம்காண்பதற்கும் இ…

    • 0 replies
    • 568 views
  13. குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி. by : Litharsan குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை தற்போதுள்ள சட்டம் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன குத்தகை வழங்கல் மாபியா தொடர்பாக வெளிப்படுத்திய தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கடந்த செவ்வாய்க்கிழமை வாகனங்களைக் குத்தகைக்கு வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றின் முன்னால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்க…

    • 0 replies
    • 289 views
  14. பாராளுமன்றத்தில் 30 வருட காலமாக எமது அரசியல் வாதிகள் தூங்கி விழுந்தார்களே தவிர 30 வருட யுத்ததிற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்க்கையை மீண்டும் கட்டியொழுப்புவதற்குரிய அரசியல் வாதியை இதுவரை காணமுடியவில்லை என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு விகாரையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற பௌத்த மதகுரு என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் தொடர்பாக கூடிய கவனமும் அக்கறையுடன் செயலாற்றி வந்த மதகுரு நான், கிழக்கு வா…

    • 1 reply
    • 542 views
  15. சுனில் படுகொலைக்கு மஹிந்த கண்டனம்! இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய முச்சக்கவண்டி சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்த்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கண்டனத்தை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், ‘தமது சங்க உறுப்பினர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு பெறவும் மற்றும் சுதந்திரமாக தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான பின்னணியை உருவாக்குமாறு மாத்திரமே சுனில் ஜயவர்த்தன கோரிக்கை விடுத்து வந்தார். அத்துடன் குத்தகை முறையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக கடன் வழங்கும் சில நிறுவனங்கள், பொறுப்பின்றி செயற்படுகின்றமை, இந்தச் சம்பவத்தின் மூலம…

  16. கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி எல்லையை ஒட்டிய மாசேரிக்கும் குடத்தனைக்கும் இடையில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், வீடு திரும்பிய நிலையில் தன்னை மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து (08.06.2020) தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது. இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் தப்பித்து வந்…

    • 4 replies
    • 647 views
  17. சுதந்திர சதுக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் சடலம்! கொழும்பு – 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டில் மரணித்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் சடலத்தின் அருகே 9எம்எம் பிஸ்டலும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/கொழும்பு-சுதந்திர-சதுர்க/

  18. மிருசுவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு அராஜகம்! யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது நேற்று (11) இரவு வாள்வெட்டுக் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்புக் கமெராக்களை அடித்து உடைத்துள்ளனர். இதன்பின்னர், அங்கிருந்த பணியாளர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்க…

  19. யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்பட்டது Jun 12, 20200 யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னாக விளங்கிய சங்கிலியனின் 401 ஆவது ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு, இன்று நல்லூரில் உள்ள சங்கிலியன் மன்னனின் நினைவு தூபியில் நடைபெற்றது.இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்துடன் ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-சங்கிலி/

  20. கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மாற்றும் நடவடிக்கைக்கு அக்கராயன் பொது அமைப்புகள் எதிர்ப்பு. இன்று காலை அக்கராயன் பிரதேச 15 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்ததுடன் மனுக்களையும் கையளித்தனர். அக்கராயன் வைத்தியசாலை அருகாமையில் மக்கள் செறிவாக வசித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்தெ பொதுஅமைப்புகள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. https://newuthayan.com/கிளிநொச்சியில்-கொரொனா-வ/

  21. இனவாத சிந்தனைகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்கவும் - காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம்.! இனவாத சிந்தனை கொண்டவர்களுடைய விடயத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேட்டுள்ளது. மட்டக்களப்பு - தாழங்குடா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிரேஷ்ட கல்வி அதிகாரி எம்.ஐ.எம். நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, ஒரு சில தமிழ் சகோதரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தாம் கண்டிப்பதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்மேளனம் இன்று (11) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை பல்லின சமூக, கலாசாரத்தை பின்பற்றக்கூட…

  22. எல்லைப் பிரச்சினையில் முரண்பாடு வேண்டாம் - ச. ராசன் வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லைப் பிரச்சினை தொடர்பில் இரு மாவட்ட தமிழ் மக்களும் முரண்படாமல்பேசி தீர்க்க முன்வர வேண்டுமென, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ச.ராஜன் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை, எந்த அரசியல்வாதிகளும் தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்துவதை தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்பு ஊடக மய்யத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், “அம்பாறை மாவட்டத்தின் எல்லையென்பது, அங்கு வாழும் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கின்ற, தக்கவைக்கின்ற பகுதியாக காணப்படுகின்றது. “இந்த வக…

  23. கல்கிஸ்ஸை கடற்கரை மணல் மற்றும் நீரின் மாதிரிகள் தொடர்பில் மேலதிக ஆய்வு கல்கிசை கடற்கரையில் கழிவுகள் ஒதுங்கியுள்ளமை மற்றும் கடற்கரையில் முன்னெடுக்கப்பட்டிருந்த மணல் நிரப்பும் வேலைத் திட்டத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக சமுத்திர பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நலின் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை சுற்றுச்சுழல் பிரிவால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய துணைவேந்தர் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் விசேட குழுவினர் இன்று (09) கல்கிஸ்ஸை கடற்கரையில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துணைவேந்தர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் குறித்த கடற்கரையில் பிளாஸ்டிக், பொலித்தின் உ…

  24. இணையவழி கருத்தரங்கிற்கு அழைப்பு! நிபுணர்கள் யூகே அமைப்பும் (VMUK), தேசிய ஒற்றுமை மன்றமும் (NUF) ஒருங்கிணைந்து வழங்கும் “எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு இலங்கை என்ற அடிப்படையில் சமூக பொருளாதார நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் பல்துறை நிபுணர்களின் இணையவழி கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை நேரம் பிற்பகல் 6.30 மணிக்கும், பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.00 மணிக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜிய நேரம் பிற்பகல் 5.00 மணிக்கும், அமெரிக்க நேரம் காலை 9.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது. இதன்போது பேராசிரியர் சுஜிரித் மென்டிஸ், முன்னாள் எம்பி பேரியல் அஸ்ரப், நிதி ஆலோசகர் தம்பு செல்வகுமார் மற்றும் பிரிட்டிஷ் கன்செர்வ்டிவ் கட்சி ஆலோசகர் லோர்ட் நாஸ்பே ஆகியோரும் …

  25. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குலை கண்டித்து நாமல் மற்றும் மங்கள டுவிட்டர் பதிவு அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேசைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஆகவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் …

    • 4 replies
    • 571 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.