Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் சிலை ஆ.ரமேஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, நானுஓயா நகரில் உருவச்சிலை வைப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், இன்று (9) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சபை கூட்ட நடவடிக்கையில், இ.தொ.காவின் தல…

    • 1 reply
    • 453 views
  2. ஸ்ரீலங்காவில் தனது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால் உடன் அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்து அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசடிக்காரர்கள் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் எனது பணிப்புரையின் பேரிலேயே கொடுக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாக எனக்கு…

    • 1 reply
    • 425 views
  3. பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு க.பாெ.த (உ/த) பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அத்துவன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/புலமைப்-பரிசில்-பரீட்சை-2/

  4. யாழில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு – சத்தியமூர்த்தி by : Dhackshala யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன அவ்வாறு இடம்பெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக வடக்கில் உள்ளவர்களுக்கு கொரோனா வைர…

    • 0 replies
    • 324 views
  5. ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு by : Jeyachandran Vithushan எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு வர வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி ம…

    • 0 replies
    • 354 views
  6. (நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை …

  7. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2015 இல் தோல்வியடைவேன் என குடும்பத்தாருக்கும், ஏனையோருக்கும் நான் முன்கூட்டியே அறிவித்திருந்தேன். இதன்காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து கௌரவமாக வெளியேறினேன்.ஜோதிடம்மீது அதிக நம்பிக்கை இல்லை. ஆனால்…

  8. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் ஒத்திகை இன்று அம்பலாங்கொடையில் நடைபெற்றது. தேர்தல் ஒத்திகையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய, வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு வரும் போது கறுப்பு அல்லது நீல நிற பேனாக்களை வாக்காளர்கள் எடுத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் வாக்களிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களையும் அழைத்து விளக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144778

  9. அமெரிக்க, சீன தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று(செவ்வாய்கிழமை) அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்தநிலையிலேயே இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளி…

  10. நல்லிணக்கமென்றால் நல்லிணக்கம், கடும்போக்கென்றால் கடும்போக்கு நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம் கண்ட அனுபவங்கள் அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும்போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார். இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்களென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …

    • 9 replies
    • 757 views
  11. அலிசாஹிரின மனு விசாரணைக்கு ஏற்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜர் ஆனா…

  12. இளம் பெண் மீது மண்ணெணெய் ஊற்றி தீ வைப்பு! வவுனியாவில் 29 வயதான இளம் குடும்பப் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் குறித்த இளம் குடும்ப பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா – ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட…

  13. (ஆர்.யசி) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலை…

  14. யாழ். மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ். மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள், கிராமிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார குழுவினரால், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டது. கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற …

    • 0 replies
    • 419 views
  15. மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரஜையான தர்ஷன் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில், ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்றவற்றுக்குப் பொற…

    • 0 replies
    • 691 views
  16. அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பில்…! அஞ்சல் பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர். ஐக்கிய தேசிய அஞ்சல் பணியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் இதனை தெரிவித்துள்ளார். அஞ்சல் பணியாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவை தவிர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/அஞ்சல்-பணியாளர்கள்-நேற்ற/

  17. ம.ம.மு பிரதி செயலாளர் அனுஷா கட்சியில் இருந்து நீக்கம்! மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னணியின் விசேடக் கூட்டமொன்று ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ‘அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர், அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவரின் மகளான அனுஷா சந்திரசேகரனுக்கு பிரதி செயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம். எனினும், சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவருகிறார். இதன்காரணமாகவே அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள…

  18. யாழ்ப்பாணம்- கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம் இன்றுமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.புகையிரதத்தில் பயணம் செய்ய விரும்புவோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தமது ஆசனமுன் பதிவுகள் மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள். இதேவேளை கடந்த மார்ச் மாதம்முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுத…

  19. வன்னி வயல்கள் மண் கடத்தல் காரர்கள் வசம்! விளை நிலங்கள் அழியும் நிலையில்….! கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் காரர்கள் களவாக மணல்களை ஏற்றி வருவதாகவும் இதனால் விளை நிலங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த மணல் கடத்தல் தொடர்பாக தர்மபுரம் பொலிஸில் பல முறைப்பாடுகள் அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இப்பகுதியில் உள்ள பல வயல் நிலங்கள் தோண்டப்பட்டு பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இ…

  20. எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடுகின்றன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமார் இரண்டு மாத கால கொரோனா வைரஸ் விடுமுறையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அந்தவகையில் மருத்துவ பீட இறுதி ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (15) மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவர்களுக்கான பரிட்சைகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து கடும…

  21. வெள்ளாம்போக்கட்டியில் வாள் வெட்டு; மூவர் காயம் – மோ. சைக்கிளும் எரிப்பு! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி பகுதியில் இன்று (07) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வரை சென்ற பழைய பகையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கச்சாய் வீதி கொடிகாமத்தை சேர்ந்த சுரேந்திரன் வெனிஸ்ரன் (19-வயது), வெனிஸ்ரனின் தந்தை வேலுப்பிள்ளை சுரேந்திரன் (53-வயது) மற்றும் வெள்ளாம்போக்கட்டியை சேர்ந்த மகேந்திரன் அஜந்தன் (23-வயது) …

    • 1 reply
    • 428 views
  22. அம்பாறையிலிருந்து மட்டு விவசாயிகளுக்கு நீர் வழங்கல் – அரச அதிபரின் முயற்சி நிறைவேறியது மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக விவசாயிகலான பட்டிப்பளை பிரதேச புளுக்குணாவி குளத்து நீரைநம்பி விசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் கடந்தமாதம் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டதையடுத்து அரசாங்க அதிபரின் தீவிரமுயற்சியினால் அயல் மாவட்டமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உரையாடியதைத் தொடர்ந்து களுகல் ஓயா சமூத்திரத்தில் இருந்து நீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்திற்கு வந்த நீர் விவசாயிகளின் விழைநிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச பொறியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவ…

    • 1 reply
    • 321 views
  23. மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கு இடையே கலந்துரையாடல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (07) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பணிமனையில் வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் என வேட்ப…

  24. சாட்சியங்கள் இறப்பதற்கு முன் சர்வதேசம் நீதி பெற்றுத் தர வேண்டும்… சாட்சியங்களாக உள்ள எங்களுடைய உறவுகள் இறப்பதற்கு முன் சர்வதேசம் எமக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் 1188 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற சாட்சியங்களாக உள்ள தமது உறவுகள் உயிரிழந்து வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.