Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாமனிதர் ரவிராஜின் 58வது ஜனன தினம் சாவகச்சேரியில் அனுஷ்டிப்பு! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58வது ஜனன தினம் இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை முன்னால் இந்த ஜனனதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். htt…

  2. ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு In இலங்கை November 19, 2019 4:56 am GMT 0 Comments 1082 by : Dhackshala சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஒரே-நோக்கம்-ஒரே-பாதை-என்ற/

  3. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி இன்று வெளியீடு? பொதுத் தேர்தலுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் சட்டமா அதிபரின் அங்கீகாரம் பெற்றதன் பின்னர், இன்று வெளியிடப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று அறிவித்திருந்தார். அதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அதிருப்தி வெளியிட்டிருந்தார். அத்தோடு, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமை…

  4. சட்ட ஆலோசகர் பதவி நீக்கம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின், அப்பதவியில் இருந்து, இன்று (24) நீக்கப்பட்டுள்ளார். அவர், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், தனது தேர்தல் பிரசாரங்கள், பேஸ்புக் ஊடாக, மாநகர சபை தொடர்பிலும் அதன் உறுப்பினர்கள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் முன்வைப்பதாக, சபையில், அண்மையில் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவரை மாநகர சபை சட்ட ஆலோசகர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென, கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம…

  5. பௌத்த தேசியவாதத்தை பரப்ப முற்படுவது நல்லிணக்கத்தை முடக்கும்’ நாட்டுக்குள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ஜனாதிபதி பரப்ப முற்படுவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த மாட்டாதென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தைப் பேணுவது தொடர்பிலும் நிர்வாகத் துறைகள், இராணுவ மயமாக்கல் தொடர்பில் மறுபரிசீலனைகளைச் செய்ய வேண்டுமென்றும், அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். மட்டக்களப்பு - நல்லையா வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலி…

  6. யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடி: ’தற்போதே வழமைக்குத் திரும்பியுள்ளது’ என்.ராஜ் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்பிடியானது, தற்போதே வழமை நிலைமைக்குத் திரும்புவதாக, மாவட்ட நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்னர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நாளொன்றுக்கு ச் சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமுக்குக் குறையாத அளவில் கடல் உற்பத்திகள் கிடைக்கப்பெற்றன. இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில், 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் கிலோகிராம் உற்பத்தியைக் கூட எட்டமுடியாத நிலைமை காணப்பட்டது. தற்போது, நாடு வழமைக்கும் திரும்பியதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் கிலோகிராமைத் தாண்டிய உற்…

  7. நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை- மாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்நாட்டில் இராணுவ ஆட்சியொன்று நிறுவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ஷவினுடைய இயல்பு மற்றும் இராணுவத்தில் கடமையாற்றிய அனுபவங்களைக் கொண்டு அவர் ஜனநாயக ரீதியாக ஒரு அரச தலைவராக வந்துள்ளார். அவரை மக்கள் ஆதரித்து இருக்கின்றார்கள். ஆனால், தமிழர் தாயகப் பிரதேசத்தில் 20 ஆயிரம் உளவாளிகளையும் நடமாட விட்டிருப்பதாக ச…

  8. கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு! by : Vithushagan துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்…

    • 5 replies
    • 715 views
  9. புலிகள் அமைப்பில் இருந்து 150 பேருடன் கருணா வெளியேறினார். அவர்களில் 80 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள். எனவே அவர்களுக்கு இராணுவ வலிமை இல்லை என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் பேசுகையில் ‘புலிகளுடன் இருந்து ஆணையிறவு போரின் போது 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றேன்’ என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக எதிர்ப்புக்கள் கிளம்பி விசாரணை வரை குறித்த விவகாரம் சென்றுள்ள நிலையிலேயே இன்று (24) சரத் பொன்சேகா மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், ‘புலிகளிடம் இருந்து விலகிய பின்னர், கருணா தமக்கு தகவலையோ அல்லது தமது இராணுவத்துக்கு இராணுவ வலிமையையோ தரவில்லை என்றும், அவரது கருத்…

  10. பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.. by : Dhackshala பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதற்கமைய அரசியல் ஆய்வாளர்கள் நிலாந்தன், எஸ்.ஏ.ஜோதிலிங்கம், அரச அறிவியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோரின் கருத்துக்கள் காணொளி வாயிலாக… http://athavannews.com/பொதுத்தேர்தலில்-தமிழ்-மக/

    • 3 replies
    • 731 views
  11. In இலங்கை June 24, 2020 5:03 am GMT 0 Comments 1218 by : Vithushagan மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியானது ஒரு பகுதி கடலாலும் ஒரு பகுதி உவர்நீர்கொண்ட மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர். குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக குடிநீருக்காக பயன்படும் கிணறுகள் உவர் நீராக மாறுவதனால் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்…

    • 0 replies
    • 495 views
  12. In இலங்கை June 24, 2020 6:35 am GMT 0 Comments 1228 by : Vithushagan பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமி தொற்று நீக்கல் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் ஒருங்கிணைப்பில் சிறப்பு அதிரடிப் படையினரால் இந்த பணி யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி வரும் 29ஆம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்…

    • 0 replies
    • 421 views
  13. கருணா குறித்து பேசுபவர்கள்.. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்துவிட்டனர் – மஹிந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல, அனைவருக்கும் தெரிந்ததே என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். குளியாப்பிட்டியவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சவால்களை எதிர்கொள்ள மு…

    • 1 reply
    • 444 views
  14. பலாலியில் நடமாடும் பொலிஸ் பிரிவு ஆரம்பிப்பு! யாழ்ப்பாணம் – பலாலி பொலிஸ் நிலைய சேவைகளை பிரிவு மக்கள் பெற்றுக் கொள்ள வசதியாக உயர் பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே வளலாய் அந்தோணிபுரத்தில் தற்காலிகமாக பொலிஸ் நடமாடும் பிரிவு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் வழிகாட்டலில் பலாலி பொலிஸ் நிலைய நடமாடும் பொலிஸ் பிரிவு என்ற திட்டத்தின் கீழ் பொலிஸ் சேவைகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. பலாலி பொலிஸ் நிலையம் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ளது. அதனால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அச்சுவேலி, காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவைகளைப் பெற்று வந்தனர்…

  15. ஊடகவியலாளர் தரிஷாவை பாதுகாக்க சர்வதேச அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை! ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், உட்பட ஐந்து அமைப்புகளே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன. தரிஷா பஸ்டியனிற்கு எதிரான நடவடிக்கைகள் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள், தரிஷா பஸ்டியனை துன்புறுத்துவதை நிறுத்தி அவரது பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. சுவிஸ் தூதர…

  16. இராணுவமயப்படுத்தலால் ஏற்பட்ட விளைவு…! தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும்கூட வடக்கு, கிழக்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் அவநம்பிக்கை மற்றும் அச்சமான சூ…

  17. மன்னாரில் இருந்து 2,500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றம்! by : Litharsan மன்னாரில் இருந்து 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களின் பெயர்கள் மன்னாரில் இருந்த புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது மன்னாரில் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) மன்னார் மா…

    • 0 replies
    • 420 views
  18. மக்களின் அமோக ஆதரவுடன் கொள்கை மாறா அரசியல் பயணம் தொடரும் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழ் மக்கள், இம்முறையும் அமோக ஆதரவை வழங்குவதற்கு தயாராகிவிட்டனர். எனவே, மக்களின் ஆசியுடன் மக்களுக்கான எமது கொள்கைமாறா அரசியல் பயணம் தொடரும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் நேற்று மாலை (22.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கண்டி மாவட்டமென்பது மலையகத் தமிழர்களின் வரலாற்றுடன் தொடர்புடைய மாவட்டமாகும்.கண்டி…

    • 0 replies
    • 417 views
  19. வில்பத்து காடழிப்பு வழக்கின் தீர்ப்பிற்கான திகதி அறிவிப்பு வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற…

    • 0 replies
    • 316 views
  20. சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்ததாக தகவல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது. ஆணைக்குழுவில் நேற்று (22) சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார். இன்று அதிகாலை 1 மணிவரை அவர் ஆணைக்குழு முன் வாக்கு மூலம் வழங்கியதாக அததெரண செய்தியாளர் கூறினார். 2018 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை; இதனை கூறியுள்ளார். அதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால்…

  21. காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம்! காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரை தேடிவந்த வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (69-வயது) என்ற தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று (23) உயிரிழந்துள்ளார். இவரது மகன் 2008ம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றன. https://newuthayan.com/காணாமல்-ஆக்கப்பட்ட-மகனை-4/

  22. நயினாதீவு செல்ல பாஸ் ; தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு June 24, 2020 நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தபெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருவிழாவில் கலந்து கொள்ள மிகச்சொற்பமான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும். பொலிஸ் அனுமதி இல்லாதவர்கள…

  23. கருணாவை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யவேண்டும்- மனித உரிமை கண்காணிப்பகம் June 24, 2020 கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மிகநீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். எனி…

  24. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு Report us Gokulan 4 hours ago வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஞானசாரதேரர் தெரிவித்த கர…

  25. காதலில் ஏமாற்றம்; தவறான முடிவால் தீமூட்டி பலியான யுவதி! காதல் தோல்வியால் மன விரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது-23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார். அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் ஒரு…

    • 1 reply
    • 423 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.