Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கடும் காற்று மழை: இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 150 திருமலை மீனவர்கள் Bharati May 21, 2020 கடும் காற்று மழை: இந்தோனேஷியாவிற்கு அடித்துச் செல்லப்பட்ட 150 திருமலை மீனவர்கள்2020-05-21T07:32:24+00:00உள்ளூர் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 150 மீனவர்கள் இந்தோனேசியா நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதிகளிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற 30 மீன்பிடி படகுகளே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக இவ்வாறு இந்தோனேஷியாவில் கரையொதுங்கிய மீனவர்களை இலங்கைக்குத் திருப்பிக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. …

  2. பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதி செய்யக்கூடிய வகையில், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறும் செயன்முறையை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்ட விடயங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். எனவே, அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயன்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கு தான் மீண்ட…

    • 1 reply
    • 436 views
  3. அடக்குமுறைகள் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் – சிறிநேசன் by : Benitlas அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”இறுதியுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் பதினோராம் ஆண்டு நினைவு தினம் வடக்கு-கிழக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் அனுஸ்டிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட…

    • 1 reply
    • 391 views
  4. முன்னாள் எம்.பி.செல்வத்துக்கு கதிரின் திறந்த மடல் சிங்கள மொழி நேர்காணலொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம். ஏ. சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்ததையடுத்து , தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமிர்தலிங்கம் சகாப்தத்தின் நூலின் ஆசிரியரான கதிர் பாலசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுக்கு திறந்த மடலொன்றை எழுதியுள்ளார். மதிப்பிற்குரிய திரு. செல்வம் அடைக்கலநாதன் கவனத்திற்கு திரு. சுமந்…

    • 5 replies
    • 1.1k views
  5. சர்வதேச அமைப்புகள் அநாவசியமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வோம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, போர் என்பது ரோஜா இதழ்கள் தூவிய மெத்தையல்ல எனவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்றையதினம் 11 ஆவது போர் வெற்றிதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/82356

    • 8 replies
    • 970 views
  6. முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 11 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று சுடர் ஏற்றப்பட்டு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை புதுக்குடியிருப்பில் விசுவமடு தனியார் ஒருவரின் காணியில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள். மே 18 …

    • 26 replies
    • 3.3k views
  7. கிளிநொச்சி வீதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் கண்டனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி வீதிகளில் சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. இன்று அதிகாலை கிளிநொச்சியின் வீதியெங்கும் இத் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. வேண்டாம் …

    • 0 replies
    • 868 views
  8. விவசாய நடவடிக்கைகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ் . வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று, மாமுனையைச் சேர்ந்த எண்மருக்கே இவ்வாறு வயரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலேயே குறித்த சம்பவம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த கடற்படையை ஒத்த சீருடை தரித்த மற்றும் சிவில் உடையில் நின்றவர்களாலேயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளானவர்களது உடல்களில் பலத்த கண்டல்கள் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல…

    • 0 replies
    • 644 views
  9. சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலவாகலை லிந்துளை நகரசபைக்குட்பட்ட தலவாகலை பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர மாணவர்கள் 14 பேருக்கு ஐ.டி வகுப்பு நடாத்தி வந்துள்ளனர். இது தொடர்பில் தலவாகலை லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகரசபைக்கு அழைத்து வி…

    • 1 reply
    • 449 views
  10. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டக்காலத்தில் மோதல்களில் காயமடைந்த 535 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 21ஆம் திகதி முதல் இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 535. இதில் கணவனால் தாக்கப்பட்ட 205 பெண்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுபோதையிலிருந்த கணவன்மாராலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மனைவிமாரிடம் அடிவாங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண்களும், குடிப்பழக்கத்தாலேயே வாங்கிக்கட்டியுள்ளனர். http://eelamnews.co.uk/2020/05/corona-20-05-2020-2/?fbclid=IwAR10_0-axZ8bpcMpYBpdyYisLeS9INdNzGVxqK4PDNu21f_xC5JFKqQIICQ அட மப்பு போ…

  11. ஒரு மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் அங்கு சாட்சியாக நின்ற ஒரு பெண்ணின் அணுபவப் பகிர்வுதான் ‘முள்வேலி நாட்கள்’ என்ற இந்தப் பதிவு. ஒரு கொடூரமான இன அழிப்பின் வாழுகின்ற சாட்சி 'மித்ரா'. முள்ளிவாய்க்காலின் கொடிய அணுபவத்தைப் பெறாதவர்கள் ஒரு தடவை அங்கு சென்று திரும்பலாம் இந்தப் பெண்ணின் சாட்சியைக் கேட்கின்ற பொழுது..

    • 1 reply
    • 736 views
  12. மத்தள, யாழ், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகள் – அமைச்சர் by : Jeyachandran Vithushan கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். “ஆண்டுதோறும், 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள்கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறுகின்றன, இன்னும் இரண்டு ஆ…

    • 1 reply
    • 438 views
  13. 'ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது' முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த ம…

    • 2 replies
    • 572 views
  14. நினைவேந்தலை தடுத்த சீருடையற்ற பொலிசார்/சீருடை பொலிசார் போன்றோர் சமூக இடைவெளியை பேணவில்லை என எம்மை கைதுசெய்ய சுகாதாரப் பிரிவினரை அழைத்தனர் பயமுறுத்தினர் நினைவேந்தத் தடை என்றனர் / பொது இடத்தில் தடை என்றனர் அப்போ இது??

    • 1 reply
    • 658 views
  15. கூட்டமைப்பினர் வந்ததால் பிரதேச சபை அமர்வில் குழப்பம் -க. அகரன் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்து கொண்டதால், குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில், நேற்று (19) நடைபெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்…

    • 0 replies
    • 809 views
  16. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட 11 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்… May 17, 2020 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார். யாழில்.கடந்த தினங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 11 பேரினது பெயர்களை நீதிமன்றில் சமர்ப்பித்த யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர…

  17. இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி- சம்பந்தன் அறிக்கை by : Litharsan தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின்மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பி…

  18. பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி Bharati May 18, 2020 பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி2020-05-18T05:52:17+00:00உள்ளூர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் போராட்டத்தை மகாபாரதப்போருடனும் ஒப்பிட்டுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் க…

    • 5 replies
    • 701 views
  19. சுமந்திரனின் நாக்கு கரி நாக்கு! கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்: மறவன்புலவு க. சச்சிதானந்தன் [ 1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன் சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன். சுமந்திரனின் நாக்கு , கரி நாக்கு. த…

    • 12 replies
    • 1.5k views
  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகின்றவர் என்றால் அது அதன் ஊடக பேச்சாளர் சுமந்திரன்தான். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அவர் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். அந்தவகையில் மிக அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சிக்குள்ளேயே பல விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருக்கின்றார். தமிழர் அரசியல் பரப்பின் சர்வதேச அரசியல் வகிபாகத்தில் சுமந்திரனின் பங்களிப்பு கடந்த காலங்களில் முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில் என்ன நடந்தது என்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வீரகேசரி சார்பில் அவருடன் செய்த பிரத்தியேக செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி - கடந்த சில தினங்களை எவ்வாறு…

  21. பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் பாராளுமன்ற கலைப்பு மீதான உச்சநீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம் பாராளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிப்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர் இவ் வழக்கில் சட்டமா அதிபரை மேலதிக வழக்குரைஞர் நாயகம் இண்டிகா டெமுனி டிசில்வாவும், …

    • 17 replies
    • 2k views
  22. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ? (எம்.எப்.எம்.பஸீர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சட்ட மா அதிபர் ச…

    • 11 replies
    • 1.8k views
  23. நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த 28 புதிய தொற்றாளர்களும் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 569 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 442 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 135 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள…

    • 2 replies
    • 471 views
  24. பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரா…

  25. அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை வென்றுள்ளார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பொறியியல் பிரிவில் 2018 ஆம் ஆண்டு முதல் வகுப்பில் சித்திபெற்ற தமிழ் மாணவி. திருகோணமலை நகரைச்சேர்ந்த தர்சிகா விக்கினேஸ்வரன் என்ற மாணவிக்கே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தநிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எனினும் அவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது அவரது அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்துக்குச் சென்றபோது தர்சிகாவின் திறமையை சவுத் கரோலினாவிலுள்ள கிளெம்சோன் பல்கலை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.