Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நளளரவ-நடளமனறம-கலபப-ஏபரல-25இல-தரதல/150-246313

    • 0 replies
    • 355 views
  2. போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது என்பதை அவர் மறந்துவிட்டார் போல் தெரிகிறது. உரிமைக்காகப் போராடுவதைப் பயங்கரவாதம் என்று குறித்த நபர் கூறப்போய் உலகெங்கணும் உருவாகும் உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமராட்சி தொண்டமானாறு, கெருடாவில் மாயவர் கோவிலடி குடியிருப்பு அருகில் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு …

    • 0 replies
    • 777 views
  3. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று மிக விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தன…

  4. எட்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும். அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் நாளை நள்ளிரவு பாராளுமன்றைக் கலைக்கும் உத்தியோக ப+ர்வமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இதேவேளை,…

    • 4 replies
    • 1.2k views
  5. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை கடந்த வாரம் அறிவித்தது. இந்தநிலையில் ஐக்கிய நாடு களின் ஒழுங்குவிதிகளின்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன் றில் இருந்து நாடு ஒன்று வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்து கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருக்கி…

    • 1 reply
    • 353 views
  6. நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் போட்டித்தன்மையான சூழலே ஏற்படும். இதனால் எவருக்கும் நன்மை கிடைக்காது .என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இபலோகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியினை பெற்றுக் கொண்டோம். இன்று ஜனாதிபதி நம்மவராக இருக்கின்றார். ஆனால் பாராளு…

    • 0 replies
    • 327 views
  7. (செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்திலே பொதுத் தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கட்சியின் யாப்பை மீறும் வகையிலும் செயற்குழுவின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மதித்து, செயற்குழுவின் தீர்மானத்திற்கினங்க செயற்படுபவர்களுக்கு மாத்திரமே கட்சிக்குள் இருப்பதற்கான அனுமதியிருக்கின்றது. இவ்வாறு இருக்க விரும்பாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறல…

    • 0 replies
    • 200 views
  8. (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்தின் இயலாமையே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்படக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாச, புதிய கூட்டணிக்கான தலைவர் மற்றும் செயலாளரை நியமித்து அனைத்து அதிகாரங்களையும் வழங்கிய பின்னர் தற்போது முரண்பாடுகளை உண்டாக்குவது சிறந்ததல்ல என்றும் கூறினார். பாராளுமன்ற குழு அறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் முறையான வாக்கெடுப்பொன்று இடம்பெறவில்லை. வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தால் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்து அனைவரும் பங்குபற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு அழைப்பு எதுவும்…

    • 0 replies
    • 273 views
  9. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுமென, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு, நேற்று (01) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளதாகவும் அந்த நோக்கத்துக்காகவே விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியும் இருந்தார்களெனவ…

    • 0 replies
    • 730 views
  10. மஹிந்தவின் காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தோம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் நிம்மதியாக வாழ்ந்தது போன்று இனிவரும் காலமும் நிம்மதியாக வாழ சிந்தித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியினால் கல்குடா பிரதேசத்திற்கான பொதுத் தேர்தல் தொடர்பாக கட்சி பிரதிநிதிகளுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் வாழைச்சேனையிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள், பல அபிவிருத்திகளை பார்த்தார்…

    • 0 replies
    • 404 views
  11. புதிய மக்கள் ஐனநாயக கட்சியாக நாங்கள் ஒன்றினைந்த செயற்படுவோம் முரண்பாடு அற்ற மிகவும் இயல்பாக நியாயமான ஒரு சமூகபங்கினை வகிக்ககூடிய வகையில் புதிய தலைமுறைகளை வழிவகுக்கின்ற நிலைமையினை எடுத்துக்காட்டுகின்ற வகையில் எதிர்வரும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் உருவாக்க வேண்டும் அது காலத்திற்கு உகந்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்களுக்கு தெரிவுப்படுத்தும் மக்கள் சந்திப்பு நேற்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவ…

    • 0 replies
    • 275 views
  12. யோஷித ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக பொதுஜன பெரமுன கருத்து by : Yuganthini பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க போவதாக இணைய தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அவர் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரத்தகவல்கள், அவ்வாறான எந்தவொரு முன்னேற்பாடும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையே யோஷித ராஜபக்ஷ கடற்படை சேவையில் இருந்து விலகுவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென கூறப்படுகின்றது. http:/…

    • 0 replies
    • 348 views
  13. நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் – யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட்! by : Benitlas நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட், தனது பதவியினை இராஜினாமா செய்திருந்ததுடன், மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். இந்தநிலையிலேயே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய…

    • 0 replies
    • 255 views
  14. -என்.ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனின் முகத்திரையை மக்கள் கிழித்தெறிய வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின்யின் ஏற்பாட்டில் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை” என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு, இன்று மாலை 3 மணியளவில், வடமராட்சி - நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வகனஸவரனன-மகததரய-கழததறய-வணடம/71-246235

    • 3 replies
    • 1k views
  15. ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய் சாட்சியம் வழங்கினார் – ஆசு மாரசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவில் பொய் சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடுதிரும்ப சந்தர்ப்பம் இருந்தும் வராமல் இருந்ததன் மூலம் இதுதொடர்பாக அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா என்ற சந்தேகம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏப்ரல் குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரசாரம் செய்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அரசாங்கம் இதுதெ…

    • 1 reply
    • 313 views
  16. மட்டக்களப்பு - மாந்தீவை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதியாக மாற்றுவதற்கு அனுமதி வழங்குவதில்லையென்று, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, மாந்தீவு பகுதியை தெரிவுசெய்ய இலங்கை வைத்திய சங்கம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அது குறித்து ஆராயும் வகையிலான அவசரக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார…

    • 0 replies
    • 326 views
  17. 6 TNA உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை? March 2, 2020 நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவு கலைக்கப்பட்டால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும் என, தெரிவிக்கப்படுகின்றது. 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. http://globaltamilnews.net/2020/137686/

    • 1 reply
    • 231 views
  18. பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்! பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாட…

  19. கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருள், ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது! கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவி என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் சோதனை செய்தனர். இதன்போது, ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஐம்பது கிராம் ஜஸ் போதைப் பொருளும் ஜி.பி.எஸ். கருவியும் கைப்பற்றப்பட்டதோடு சந்தேகநபரான வாகன சாரதி கைதுசெய்யப்பட்டார். அத்துடன், குறித்த வாகனத்துடன் சாரதி கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு…

  20. தோட்ட தொழிலானர்களின் நாளாந்த ஊதியமாக ரூபாய் 1000 வழங்குவதற்கான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235572/1000-ரூபாய்-அடிப்படை-வேதனம்-கிடைக்கும்-நாள்-அறிவித்த-அமைச்சர் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார்.! மார்ச் முதலாம் திகதி முதல் கிடைக்கும் என கூறப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் ஏப்ரல் மாதம் கிடைக்கும் என தற்போது கூறப்…

    • 2 replies
    • 608 views
  21. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகப் பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக் கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் உறுதியளித்தார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்றுமுன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லட்டை சந்தித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் பங்கேற்க சென்றுள்ள நிலையிலேயே தினேஷ் குணவர்த்தன மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித் துள்ளார். இதன்போது ஐக்கிய நாடுகளின் 40{1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக் கொண்டமைக் கான காரணங்களை அவர் விளக்கியுள் ளார். முன்னாள் வெளியுறவு அமைச்சரும் கூட இந்த யோசனைகளி…

    • 1 reply
    • 460 views
  22. மதமாற்றத்தினால் பௌத்த மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்- மஹிந்த மதமாற்றத்தினால், பௌத்த மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றே ஆக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச சதித்திட்டங்களுக்கு மத்தியில்தான் இடம்பெற்றது. எனினும், தேரர்களின் ஒத்துழைப்பினாலேயே, கடந்த 5 வருடங்களாக நாட்டையே அழிவுக்குட்படுத்திய அ…

  23. ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிப்பதிலேயே தனது நேரங்கள் விரயமாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்பதில் நேரம் போவதால், தேசிய கொள்ளைகள் மற்றும் இராஜதந்திர விவகாரங் கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்ப்பாட்ட பிரச்சினைகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் பொறுப்பேற்று கண்கா ணிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட் டக்காரர்களுக்கு என தனியான இடமொன…

    • 5 replies
    • 911 views
  24. சர்வதேச விசாரணை முடியவில்லையென்பதை தெளிவுபடுத்தியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன். நடந்தது என்ன என்ற உண்மைகளைக் கண்டறியும் செயற்பாடுகளே ஐ.நா. மட்டத்தில் நடைபெற்றுள்ளன. இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றம் ஒன்றின் ஊடாக விசாரணை செய்யும் எந்த ஒரு சர்வதேச விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. சிலவேளை, எவருக்காவது, அவர்களின் கனவில் இது நடைபெற்றிருக்கலாம். ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறுபவர்கள், கல்வியிலும் புத்திக்கூர்மையிலும் சிறந்த எமது மக்களை அந்தளவுக்கு குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களா என்பதுதான் என தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தின் சார்பில் எழுப்பப்பட்டிருந்த கேள…

    • 4 replies
    • 872 views
  25. இலங்கை அரசாங்கம் இந்தி யாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலை க்கு தள்ளப்படப் போகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். பொருளாதாரத்தை முகாமைப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது. கடந்த காலத்தில் மைத்திரி அரசாங் கத்தை விமர்சித்து வந்த ராஜபக்ஷவினருடன் இணைந்து புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மேற்கொண்டது . எனினும் முன்னர் அரசாங்கம் மீது முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் ரணில் சுட்டிக் காட்டினார். இந்தநிலையில் இலங்கையை பிச்சைக்கார நாடாக மாறிவிடக்கூடாது என்று ரணில் குறி…

    • 0 replies
    • 308 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.